சனி, 30 மார்ச், 2013

குவைத்தில்.....

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


குவைத்தில்.....

தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு சார்பாக....

இலங்கை தமிழினப் படுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறிப் போக்கை கண்டித்தும், மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டனக்கூட்டம்& கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி.


நாள்; 05.04.2013
வெள்ளிக்கிழமை மாலை சரியாக 7;00 மணிக்கு இன்ஷா அல்லாஹ்.

இடம்; பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரையும் அன்போடு அழைக்கிறது.
தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு- குவைத்.
federation for islamic tamil organization-kuwait. (FITO_KUWAIT)

தொடர்புக்கு; 66490687, 65653431, 55428835

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு உதயம்!


குவைத்தில்.....

தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு உதயம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 6 வது  கலந்தாய்வுக் கூட்டம் 28.03.2013 அன்று மிர்காப்பில் உள்ள தஞ்சை  உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஜமாத்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த அமர்வில் பைலா தாக்கல் செய்யப்பட்டதன தொடர்ச்சியாக, பைலாவின் அடிப்படையில் தலைமை ஒருங்கிணைப்பாளராக முஹம்மதுபந்தர் முஹம்மது பாரூக் அவர்களும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முகவை அப்பாஸ் மற்றும் நெல்லை பீர்மரைக்காயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுபோக 7 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் 3 ஆலோசகர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பின் பிரதான கொள்கை கோட்பாடுகள்;

  • இஸ்லாமிய ஷரியத் மற்றும் முஸ்லிம்களுக்கு பாதகமான, பாதிப்பை உண்டாக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக இந்த கூட்டமைப்பு செயல்படும். இதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள், பிரசுரங்கள் உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளையும் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்துவது. 
  • இந்த கூட்டமைப்பு கருத்துவேறுபாடுகள் கொண்ட இஸ்லாமிய மசாயில்களில் தலையிடாது.
  • கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் குவைத்தில் செயல்படும் எந்த ஒரு இஸ்லாமிய இஸ்லாமிய இயக்கங்களும், ஊர் ஜமாத்துகளும் கூட்டமைப்பில் இணைந்து செயல்பட முன்வரலாம்.
  • இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க, எவரும் தான் அங்கம் வகிக்கும் இயக்கத்தை கலைக்கும் அவசியமில்லை. 

இக்கூட்டமைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், காயிதேமில்லத் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா(MISK), தமிழ்நாடு இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட இயக்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

தமிழகத்தில் கூட்டமைப்பின்  மூலம் நம் வலிமையை அரசு மட்டத்திலும் ஆதிக்க வர்க்கத்திற்கும் உணர்த்தி அல்லாஹ்வின் உதவியால் சில வெற்றிகளை ஈட்டியது மேலும் தொடர குவைத்திலிருந்து நமது குரலும் ஒனறினையட்டும். சமுதாய களத்தில் அங்கம் வகிக்க அனைத்து இயக்கத்தவரையும், ஜமாத்தினரையும் அன்போடு அழைக்கிறோம்.

இவண்;

முஹம்மது பாரூக் - முகவை அப்பாஸ் - பீர் மரைக்காயர்.

மேலதிக தொடர்புக்கு; 66490687,  65653431, 55428835


தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு- குவைத்.

செவ்வாய், 19 மார்ச், 2013

Makkal Report 4-27 Poster



மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி


இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். 


இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். 


இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.




தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும். 


நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள். 



வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)


 

 


 

ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு

Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section


ஃபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்

 

Palestine's 'mother of martyrs' Mariam Farhat dies in Gaza

காஸ்ஸா: 'உயிர் தியாகிகளின் அன்னை' என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார். ஞாயிற்றுக் கிழமை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் ஃபலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்பியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.

2002-ஆம் ஆண்டு இவரது மகன் முஹம்மது ஃபத்தாஹ் நடத்திய தாக்குதலில் 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆறு பிள்ளைகளில் 3 பேர் இஸ்ரேலுடன் நடந்த போராட்டத்தில் உயிர்தியாகி ஆனார்கள். ஒரு மகன் 11 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தனது மகன்கள் கொல்லப்பட்ட வேளையில்; "எனது மகன்கள் உயிர் தியாகிகளாக மாறியதில் நான் அபிமானம் கொள்கிறேன்" என்று மர்யம் ஃபர்ஹாத்தின் பதில் அமைந்தது,

2005-ஆம் ஆண்டு செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மர்யம் ஃபர்ஹாத் "அப்பாவிகளை கொலைச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால், இஸ்ரேலிகளுக்கு தயவு கிடையாது. நாங்கள் அனுபவிப்பது அல்ல சமாதானம். நாங்கள் விரும்பும் சமாதானம் என்பது அனைத்து ஃபலஸ்தீன் மக்களின் சுதந்திரமாகும். ஜோர்டான் நதி முதல் மத்திய தரைக்கடல் வரையிலான ஃபலஸ்தீனின் சுதந்திரம். அவர்களுக்கு(இஸ்ரேல்) சமாதானம் தேவையென்றால் இதற்கு அவர்கள் தயாராகவேண்டும். சுதந்திர ஃபலஸ்தீனின் கீழ் அவர்கள் அமைதியாக வாழலாம். இந்த சுதந்திரம் கிடைக்கும் வரையில் நாங்கள் போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." இவ்வாறு கூறினார்.

'உம்மு நிதால்' 'ஃபலஸ்தீனின் கன்ஸா' போன்ற புனைப்பெயர்களில் ஃபலஸ்தீனில் பிரபலமானவர் மர்யம் ஃபர்ஹாத். ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மற்றும் உயர் ஹமாஸ் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மர்யம் ஃபர்ஹாத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மர்யமின் மரணம் குறித்து ஹமாஸ் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
 

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்!

  • ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

  • வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

  • பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

  • மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

  • கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
    அதில் பிராமணர்கள் 2376 பேர்!
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

  • ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

நன்றி -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

ரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான "அஷ்ஷைக் நபீலுல் அவலி" தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:

நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும்
போது, திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி
, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.

அதற்கவர் அளித்த பதில்: நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
, பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன், உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை, ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர், அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார் இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது.

நான் மிகப் பெரிய செல்வந்தன்
, ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை, ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?

ஒரு நாள் அவரிடம் சென்று நான் உன்னுடன் சற்று உட்கார
வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே அதெப்படி உன்னால் முடிகிறது?. அதற்கவர் சொன்னது: நான் ஒரு முஸ்லிம். "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்.

அதற்கு
நான் அவரிடம் அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா? எனக் கேட்டேன். அதற்கவர் ஆம் என்று பதிலளித்தார். நான் அதெப்படி? என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.

அதற்கவர் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
, அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: "இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும், நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான் அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது, அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை". எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது, துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம், இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும், ஈடேற்றமாகும், இன்பமாகும் என அவர் பதிலளித்தார்.

இது தான் என்னை
இஸ்லாத்தில் நுழைய வைத்தது. "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்

இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?:

சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே!, எனக்கு எழுத முடியாதே!, என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.

புன்முறுவல் பூப்பதற்கு, மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ, வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை, பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே, இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். "முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்".

எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.

எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?:

"உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

"நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை" என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).

"நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை" என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).

தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி





Photo

thanks;
Novshath
G-Tex,
Dammam
.



நம்பியது போதும் நாசக்கரர்களை..................!

 

 
நம்பியது போதும் நாசக்கரர்களை

photo;
Novshath
G-Tex,
Dammam
.
_