"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார்.
வியாழன், 14 ஏப்ரல், 2011
'கள்' இறக்க அனுமதி[?]; ஜெயலலிதாவின் வாக்கு வங்கி அரசியல் நல்லதல்ல.
"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார்.
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்-இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள்
தமிழகத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தவ்ஹீது ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
துணை ராணுவ படை
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் அ.தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழக போலீசாரை தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கி விட்டு முழுவதுமாக துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும்.
கலவரம் ஏற்பட்டால் கண்டதும் சுட அதிகாரம் வழங்க வேண்டும். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அவர் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். தேர்தல் ஆணையம் தற்போது தான் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியுள்ளது.
வருகிற 13ந்தேதி வன்முறையின் உச்சக்கட்டம் தமிழகத்தில் கட்ட விழ்த்து விடப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடைய சாதிக்பாட்சா வழக்கில் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்தான் முக்கிய காரணம். உளவுத்துறை ஆளும் கட்சிக்கு அரசு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.
மழைநீர் சேமிப்பு
ஆனால் ஆளும் கட்சியாகவே செயல்பட்டதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது போல சோலார் மின் திட்டத்தையும் செயல்படுத்துவார். தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் முசம்மில்ஹார், மாவட்ட செயலாளர் இம்பாலா அலா வுதீன், மாநில செயலாளர் முகைதீன் ஆகியோர் உடனி ருந்தனர்.
தேர்தல் அதிகாரிகள் குடும்பத்துக்கு ஆபத்து : இந்தியதவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் பேட்டி
காளிமுத்து ஆர்.டி.ஓ., விவகாரம் இதற்கு சரியான உதாரணம். நேரடி பேட்டி கொடுத்த ஒரு அதிகாரியை அடுத்த மூன்றாவது நாளில் மாற்றி பேச வைத்துள்ளனர். "தோல்வி அடைந்தாலும் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம்' என, கருணாநிதி கூறியிருப்பது, தொண்டர்களை தூண்டிவிடும் வேலை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும். தி.மு.க.,வினரால் காங்.,அனைத்து இடங்களிலும் தோற்கும். சாதிக் பாட்ஷா இறப்பில் உளவுப்பிரிவு போலீசாருக்கு முழு பங்கு உண்டு.
சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டில் தான் அனைத்து ஊழலும் வெளிவருகிறது. மத்திய அரசு பொம்மையாக உள்ளது. புலிகள் பெயரை சொல்லி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தனர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டினர். அப்போது அமைதியாக இருந்த கருணாநிதி, இப்போது சோனியாவிடம் கோரிக்கை வைக்கிறார். "இனி அவர்கள் சுடமாட்டார்கள்' என, சோனியா சொல்கிறார் என்றால், இவரது கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பது உறுதியாகிவிட்டது, என்றார்.
நன்றி;தினமலர்
வியாழன், 7 ஏப்ரல், 2011
இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!
புதன், 6 ஏப்ரல், 2011
வினையை கண்டுகொள்ளாமல் எதிர்வினையை பரபரப்பாக்கும் ஊடகங்கள்!
சனி, 2 ஏப்ரல், 2011
ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை ஒத்துக்கொண்ட தனிநபர் ஜமாஅத்!
அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம், கொடிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக லாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவ்து என்று முடிவ்பு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார், உங்கள் பணிகலூக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜ்மாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவ்து தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது. [பொய்யன் டிஜே]







