வியாழன், 14 ஏப்ரல், 2011

'கள்' இறக்க அனுமதி[?]; ஜெயலலிதாவின் வாக்கு வங்கி அரசியல் நல்லதல்ல.

நாடெங்கும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்  படவேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்து வரும் நிலையில், வாக்குகளை மனதில் கொண்டு,  ''அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மது அருந்துவது குடும்பத் தலைவனாக இருந்தாலும், தள்ளாடுவது அவனது குடும்பமாக உள்ளது. மதுவின் மூலம் கோடிகளை வருமானமாக பெற்று நாட்டு மக்களை குடிகாரர்களாக்கி, அவர்களுக்கு சில இலவசங்களை வீசி அரசு ஏமாற்றி வரும் நிலையில்,  1991ல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் "மலிவுவிலை மதுக்கடைகளை" மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினாரோ, அதே ஜெயலலிதா, கள் இறக்க அனுமதிப்பதன் மூலம்  மீண்டும் வீதிக்கு வீதி மதுக்கடைகளை கொண்டுவரப் போகிறாரா?
மேலும் மலிவு விலை மதுக்கடைகளை மூடினாலும் தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே(டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதும் இவரது ஆட்சியில் தானே! இவரது இந்த முடிவினால்  காமராஜர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றது போல் ஊர் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்த புண்ணியம்(!)  ஜெயலலிதாவைச் சேரும். ஏற்கனவே டாஸ்மாக் மூலம் மக்களை கெடுத்த பாவத்திற்கு ஜெயலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி பரிகாரம் தேடுவதற்கு பதிலாக, சில ஆயிரம் ஓட்டுக்களை கவனத்தில் கொண்டு 'கள்' இறக்க அனுமதி என்பது கடைந்தெடுத்த அரசியலல்லவா?
அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மதுவிலக்கு கொள்கையில் அண்ணா எந்த அளவு உறுதியாக  இருந்தார் என்பதை நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளோம். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்,

"..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார். 
வார்த்தைக்கு வார்த்தை அண்ணா நாமம் வாழ்க  என்று கூறும் ஜெயலலிதா, மதுவிலக்கு கொள்கையில் அண்ணாவை பின்பற்றாதது  ஏன்? அரசின் கஜானாவை பற்றி கவலைப்படாமல் அண்ணா, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தியிருக்கும் போது, வாக்குப் பெட்டியை கவனத்தில் கொண்டு போதைக்கு வக்கலாத்து வாங்குவதுதான் அண்ணா வழியா என்பதை ஜெயலலிதா சிந்திக்கட்டும். 
மேலும் 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதிதான் "மலிவு விலை மதுவை" தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். எனவே ஜெயலலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி அண்ணா வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா? அல்லது சில ஆயிரம் ஓட்டுக்காக கருணாநிதி வழியை தேர்ந்தெடுக்கப்  போகிறாரா? அவரே முடிவு செய்து கொள்ளட்டும்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்-இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள்

ராமநாதபுரம்,ஏப்.8
தமிழகத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தவ்ஹீது ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
துணை ராணுவ படை
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் அ.தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழக போலீசாரை தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கி விட்டு முழுவதுமாக துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும்.
கலவரம் ஏற்பட்டால் கண்டதும் சுட அதிகாரம் வழங்க வேண்டும். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அவர் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். தேர்தல் ஆணையம் தற்போது தான் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியுள்ளது.
வருகிற 13ந்தேதி வன்முறையின் உச்சக்கட்டம் தமிழகத்தில் கட்ட விழ்த்து விடப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடைய சாதிக்பாட்சா வழக்கில் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்தான் முக்கிய காரணம். உளவுத்துறை ஆளும் கட்சிக்கு அரசு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.
மழைநீர் சேமிப்பு
ஆனால் ஆளும் கட்சியாகவே செயல்பட்டதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது போல சோலார் மின் திட்டத்தையும் செயல்படுத்துவார். தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் முசம்மில்ஹார், மாவட்ட செயலாளர் இம்பாலா அலா வுதீன், மாநில செயலாளர் முகைதீன் ஆகியோர் உடனி ருந்தனர்.
 
நன்றி;தினமலர்.


தேர்தல் அதிகாரிகள் குடும்பத்துக்கு ஆபத்து : இந்தியதவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் பேட்டி

ராமநாதபுரம் : ""தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக,'' இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்.,13 தேர்தலை சீர்குலைக்க தி.மு.க., தயாராக உள்ளது. ஓட்டுச்சாவடிகளை கைவசம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்தை சிறை வைத்து காரியம் சாதிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காளிமுத்து ஆர்.டி.ஓ., விவகாரம் இதற்கு சரியான உதாரணம். நேரடி பேட்டி கொடுத்த ஒரு அதிகாரியை அடுத்த மூன்றாவது நாளில் மாற்றி பேச வைத்துள்ளனர். "தோல்வி அடைந்தாலும் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம்' என, கருணாநிதி கூறியிருப்பது, தொண்டர்களை தூண்டிவிடும் வேலை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும். தி.மு.க.,வினரால் காங்.,அனைத்து இடங்களிலும் தோற்கும். சாதிக் பாட்ஷா இறப்பில் உளவுப்பிரிவு போலீசாருக்கு முழு பங்கு உண்டு.

சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டில் தான் அனைத்து ஊழலும் வெளிவருகிறது. மத்திய அரசு பொம்மையாக உள்ளது. புலிகள் பெயரை சொல்லி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தனர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டினர். அப்போது அமைதியாக இருந்த கருணாநிதி, இப்போது சோனியாவிடம் கோரிக்கை வைக்கிறார். "இனி அவர்கள் சுடமாட்டார்கள்' என, சோனியா சொல்கிறார் என்றால், இவரது கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பது உறுதியாகிவிட்டது, என்றார்.

நன்றி;தினமலர்


வியாழன், 7 ஏப்ரல், 2011

புதன், 6 ஏப்ரல், 2011

வினையை கண்டுகொள்ளாமல் எதிர்வினையை பரபரப்பாக்கும் ஊடகங்கள்!

ப்கானிஸ்தானில் வன்முறைக்கு  ஐநா தலைமையகத்தின் ஊழியர்கள் 10 பேர் பலி என்ற செய்தி ஊடகங்களில் சில  நாட்களுக்கு முன்  பரபரப்பாக வெளியானதை நாம் அறிந்திருப்போம். இந்த செய்தியை வெளியிடும் போதுதான் சம்மந்தப்பட்ட வன்முறை எதனால்  ஏற்பட்டது என்ற தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டன. அதாவது அமெரிக்காவில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவு வன்முறை வெடித்து  பத்துப்பேர் கொலையில் முடிந்தது என்ற தகவலை தருகிறது ஊடகம். அமெரிக்காவில் புளோரிடா சர்ச்சின் பாதிரியார் முஸ்லிம்களின் புனித வேதமான  திருக்குர்ஆனை கடந்த 20 -03 -11 அன்று தீவைத்து எரித்து தனது இஸ்லாமிய விரோதத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.
 
ஆனால் தங்களின் புனித வேதம் எரிக்கப்பட்டதை கண்டித்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா தூதரகம் முன்பாக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கனோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வன்முறை தலைதூக்கி  ஐ.நா ஊழியர்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பரபரப்பாக வெளியிடுகின்றன ஊடகங்கள். இதே பரபரப்பை திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட செய்தியை வெளிடுவதில் காட்டவில்லை ஊடகங்கள்.  இஸ்லாமியர்களுக்கு ஒரு இழப்பு என்றால் அதை மூடி மறைப்பதும், ஒரு இழப்பை ஏற்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் அதை பரபரப்பாக்குவதுதான் பத்திரிக்கை தர்மம் போலும்.
 
அதே நேரத்தில் ஆப்கானில் கொல்லப்பட்ட பத்துபேர் கொலை கண்டிக்கத் தக்கதே! எங்கோ ஒரு மூடன் செய்த காரியத்திற்காக சம்மந்தமில்லாத அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அதே  நேரத்தில் இந்த எதிர்வினைக்கு தூண்டுகோல் குர்ஆனை எரித்த அந்த அமெரிக்கக் பாதிரியார் தான்  என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.
 
முஸ்லிம்களின் புனித நூலோடு விளையாடி, முஸ்லிம்களை மனதளவில் காயப்படுத்துவதை அமெரிக்கர்கள் சிலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு  முன்னால்  குவாண்டனாமோ சிறைச்சாலையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் புனித குர்ஆனை கழிவறையில் வீசி இழிவு படுத்தினார். கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக அறிவித்தார் இதே பாதிரியார். உலகெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பையடுத்து  தந்து முடிவை கைவிட்ட இந்த பாதிரியார், மீண்டும் திருக்குர்ஆனை எரித்துள்ளார். பாதிரியாரின் இந்த அயோக்கியத்தனத்தை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் வேதநூலோடு விளையாடுவதன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி பார்ப்பவர்களை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இல்லையேல் அமெரிக்கா முஸ்லிம்விரோத நாடு என்ற முத்திரை நிலைப் பெற்றுவிடும். அது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.
 
மேலும் கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக இதே பாதிரியார் அறிவித்தபோது பொங்கி எழுந்த அரபு நாடுகளும், முஸ்லிம் உலகமும் [ஆப்கான்-வங்கதேசம் நீங்கலாக] இப்போது திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் அலட்டிக்கொல்லாதது ஆச்சர்யமளிக்கிறது. அதோடு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இக்குர்ஆன் எரிப்பை கண்டுகொள்ளவில்லை. 'தேர்தல் நேரம்; 'நோ' இஸ்லாம்...????
 
-முகவைஅப்பாஸ்.
இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 

சனி, 2 ஏப்ரல், 2011

ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை ஒத்துக்கொண்ட தனிநபர் ஜமாஅத்!

             ல்லோரும் சீட்டுக்காகவும்-நோட்டுக்காவும் தான் அரசியல் கட்சிகளோடு கை கோர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் சீட்டு- நோட்டு என எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாய நலனை முன்னிறுத்தி கட்சிகளிடம் கூட்டு சேர்கிறோம் என்று தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக்கொள்ளும் தனிநபர் ஜமாஅத், கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம் மூலமாக ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதை படியுங்கள்;
 
''பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர், தான்.
அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம், கொடிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக லாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவ்து என்று முடிவ்பு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார், உங்கள் பணிகலூக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜ்மாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவ்து தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது
. [பொய்யன் டிஜே]
 
தேர்தலில் போட்டியிடாத தனிநபர் ஜமாஅத்,ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை பற்றி விமர்சனம் கிளம்பும் வரை மக்களுக்கு சொன்னதுண்டா? இது அந்த தனிநபரை நம்பிய மக்களை ஏமாற்றும் செயலல்லவா? அடுத்து ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து கொடிகள் தயாரித்தார்களாம். எந்தக்கொடி? அண்ணாதிமுக கொடியா? இல்லையே! ததஜ கொடி தயாரிக்க ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது எந்த வகை நியாயம்? வாகனப் பிரச்சாரத்திற்கு செலவு செய்தார்களாம்! தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு பிரச்சார வாகனத்தை சம்மந்தப்பட்ட வேட்பாளரே செய்துதருவார் என்பது அரசியலில் பச்சிளம் குழந்தையும் அறியுமே! துண்டு பிரசுரங்கள் அடித்தார்களாம். துண்டு பிரசுர மாதிரியை அண்ணாதிமுகவிடம் கொடுத்தால் எத்தனை லட்சம் நோட்டீஸ் வேண்டுமானாலும் அடித்து தந்திருப்பார்களே! அல்லது கொட்டேஷனை கொடுத்து, இந்த தொகையை இந்த பிரஸ்ஸில் கட்டுங்கள் என்றால் அக்கட்சி கட்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் பணம் பெற்றது எதற்காக? தனது மைத்துனருக்கு அந்த ஆர்டரை   தந்து லாபம் பார்க்கத்தானே! அதோடு இன்னொரு செய்தி என்னவெனில், அப்போது ததஜ அடித்த அந்த மூன்று வகையான பிரசுரங்களை இப்போது வெளியிட்டால், திமுகவை ஆதரிக்கும் தனிநபர் ஜமாஅத்தின் முகமூடியை அந்த பிரசுரமே கிழிக்கும் என்பது தனி விஷயம்.
 
இதோடு ஜெயாவிடம் வாங்கிய பணத்தை வைத்து இன்னொன்றும் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொண்டு கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சில  நடிகர் கூட்டம் கிளம்பும். அதுபோல, கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ததஜவின் முக்கிய  தனிநபர் பிரச்சாரகர் இருவருக்கு ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா? கூலி வாங்கிக்கொண்டு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தனிநபருக்கு துணிவிருந்தால் ஜெயலலிதாவிடம் வாங்கிய தொகை எவ்வளவு? அது எந்தெந்த வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைக்கத் தயாரா?
 
ஆக, சகோதரர்களே! இவற்றை எல்லாம் எழுதும் எண்ணம் எமக்கு இவ்வளவு காலமாக இல்லை. ஆனால் தொடர்ந்து தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என வேஷம் போடும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். அரசியல் கட்சிகளிடம் சீட்டும்- நோட்டும் வாங்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஜெகவீர பாண்டியனுக்கு ஜெயலலிதாவிடம் சீட்டுக் கேட்டார்கள். அதே ஜெயலலிதாவிடம் பணமும் பெற்றார்கள் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நடுநிலையோடு சிந்தியுங்கள். இன்னும் இவர்களின் வேஷங்களை நம்பாதீர்கள்.
 
குறிப்பு; கடந்த தேர்தலின் போது பாக்கரும் தானே அங்கு இருந்தார் என்று திசை திருப்பக் கூடாது. அந்த காலகட்டத்தில் அந்த ஜமாஅத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் அனைவருமே இந்த விஷயத்தில் பங்காளிகளே!

அம்மாவிடம் சீட்டுக் கேட்ட கதை தெரியுமா?

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமியற்றினால் தான் திமுகவை ஆதரிப்போம் எனக்கூறி வந்த தனிநபர் ஜமாஅத், அதிலிருந்து அந்தர்பல்டியடித்து தேர்தல் அறிக்கையில்  கருணாநிதி பரிசீலிப்போம் என்று கூறிவிட்டார். எனவே திமுகவுக்கு அதரவு  என்று எடுத்த நிலைப்பாடு குறித்து உணர்வு வார இதழில் எழுதும்போது,
 
''ததஜவை  பொறுத்தவரையில் தனக்கோ தனக்கு வேண்டியவர்களுக்கோ தேர்தலில்  சீட்டுகள் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை  எக்காலத்திலும் வைத்தது இல்லை என்று எழுதியுள்ளார்கள். இது அப்பட்டமான பொய்யாகும்.
 
ஆனால் கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த தனிநபர்  ஜமாஅத், அப்போது தங்களை ஜெயலலிதாவோடு 'நெருக்கி' வைத்த ஜெகவீரபாண்டியன் என்பவருக்கு அதிமுக சீட்டு தரவேண்டும் என்று கடிதம் எழுதி, அக்கடிதத்தை  அப்போதைய பொதுச்செயலாளர்  மூலம் ஒ. பன்னீர் செல்வத்தின்  வாயிலாக ஜெயலலிதாவிற்கு அனுப்பப்பட்டதா இல்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை என்று தனிநபர் ஜமாஅத் கூறத் தயாரா?
 
இல்லை வழக்கம் போல,ஜெயலலிதாவிடம் கடந்த தேர்தலில் பணம் வாங்கியது பற்றிய விவகாரம் கிளம்பியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது பாக்கரும்-முணீரும்- அலாவுதீனும் தான். எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று அண்ணாச்சி ஜகா வாங்கியது போல், இந்த கடித விவகாரமும் பாக்கர் செஞ்ச வேலைம்மா; எனக்கு தெரியாது என்று ஜகா வாங்கப்போகிறாரா? அப்படி ஜகா வாங்கினால் ஜமாஅத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத தலைவராகவா இருந்தார் என்ற கேள்வியல்லவா எழும். அதுசரி! அப்படியெல்லாம் அண்ணன்கிட்ட கேள்வி கேட்க ஆளுண்டா?

குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இதஜவின் இரத்ததான முகாம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அணியணியாய் அணிவகுத்துவந்த அவதூறு அலைகளை வென்று, அல்லாஹ்வின் அருளால் அரபகங்களிலும் தடம்பதித்துள்ள  நமது இந்தியதவ்ஹீத் ஜமாஅத்தின்  குவைத் மண்டலம் சார்பாக  01 -04 -2011 வெள்ளிக்கிழமையன்று  இரத்ததான முகாம் சிறப்புடன் நடைபெற்றது. ஜாப்ரியா இரத்தவங்கியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் துணைத்தலைவர் புஹாரிஹசன் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நமது அமைப்பின் ஆதரவாளர் மும்பையை சேர்ந்த சகோதரர் ஷாஹித் அன்ஸாரி அவர்கள் இரத்தம் தந்து முகாமை தொடங்கி வைத்தார்கள். இரு முஸ்லிமல்லாத சகோதரர்கள் உள்ளிட்ட 57 சகோதரர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள். இறுதியில் குருதிகொடை வழங்கிய முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஜாஹித் அன்ஸாரி அவர்கள் மூலம்  திருக்குர்ஆன் பரிசளிக்கப்பட்டது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
-அன்புடன் முகவைஅப்பாஸ்,
மண்டலத் தலைவர் இதஜ.