செவ்வாய், 18 அக்டோபர், 2011
கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்
வெள்ளி, 14 அக்டோபர், 2011
'நச்'சுன்னு ஒரு கேள்வி!
முதல்வர் ஜெயலலிதா; ''அடுத்தவர் சொத்தை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சென்னையில் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, நான் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். அதற்கு பதிலளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அது மொத்தமே 25 கிரவுண்ட் நிலத்தில் தான் இருப்பதாக பொய் கூறியுள்ளார். உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா?
காவலரை மிரட்டும் காவி சு.சாமி
அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன் அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. ''சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும்.
இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.
இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.
அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்க்கு எதிரான சிந்தனையை விதைத்து, எதிர்கட்சியான பாஜகவின் வெற்றிக்கு ஹசாரே வலுவான அடித்தளம் அமைத்து தனது செஞ்சோற்றுக் கடனை நிறைவேற்றுகிறார். இதன் மூலம் ஹசாரே அரசியலிலும் தடம் பதிக்கிறார்.
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இந்துத்துவாவின் மற்றொரு அங்கமான சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் வேடிக்கையானவை என்று விமர்சித்துள்ளார். "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என பால்தாக்கரே கூற, "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என ஹசாரே பதிலடி கொடுக்க, ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரிக்க இவர்களுக்கிடையில் நடக்கும் கூத்துக்களும் பஞ்சமில்லை. ஹசாரேயின் நாடகத்தில் அடுத்த காட்சி என்னவோ?
வியாழன், 13 அக்டோபர், 2011
சாட்சிகளை மிரட்டிய சங்கராச்சாரி...???
ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி அளித்தேன்
தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்
ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலை வழக்கில் முரண் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தேன் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவரது மனைவி மனு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கோர்ட்டின் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேரம் பேசியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
2009&ம் ஆண்டில் சாட்சி விசாரணைக்காக என்னை புதுச்சேரி கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். Ôசங்கரராமனை பார்த்து பேச வேண்டும்Õ என்று கொலைக்கு முந்தைய நாள் என் வீட்டுக்கு வந்து விசாரித்த சிலரை நான் கோர்ட்டில் அடையாளம் காட்டினேன். சாட்சி சொல்லிவிட்டு மதிய உணவுக்காக அமர்ந்திருந்தேன்.அப்போது 3 பேர் என்னிடம் வந்தனர். உண்மையை பேசினால் உனது மகன், மகளை ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்து விடுவோம். அவர்களின் உடல் கூட உனக்குக் கிடைக்காது என்று மிரட்டினர். பின்னர் மதியத்துக்கு மேல் நடந்த குறுக்கு விசாரணையில் உண்மையை சொல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் முரண் சாட்சியாகிவிட்டது. இதுபோல்தான் பணம் கொடுத்தும், மிரட்டியும் பலர் முரண் சாட்சி அளித்துள்ளனர். எனது மருமகனும் மிரட்டப்படுகிறார். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சனி, 8 அக்டோபர், 2011
குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு.
மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார்.
குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என் றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், தங்களுக்கு எதிரான நபர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய் யும் பாரதிய ஜனதாவின் தத்துவார்த்தத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
ஓய்வு பெற்றகுஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.சிறீகுமார் கூறு கையில், குஜராத்தில் மோடி அரசின் நட வடிக்கை மிக மோச மான வன்கொடுமை ஆகும். 2002 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னர் மோடி அரசு காவல்துறை உள்பட அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக 2 ஆவது சாட்சி நபராக சந்தீப்பட் உள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் ஆதார மாகத் திகழ்ந்தவரான ஹரன் பாண்ட்யா என்ன ஆனார் என்றே தெரிய வில்லை.
நன்றி; விடுதலை 08 அக்டோபர் 2011
வெள்ளி, 7 அக்டோபர், 2011
ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]
இதை கண்டித்து எம்.எல்.ஏ. அப்துல் ரஷித், தனது ஆதரவாளர்களுடன் சட்டசபைக்கு வெளியே ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் சட்டசபைக்குள் செல்ல மறுத்து விட்டார். அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.









