செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்

சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.


மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-நன்றி;தினமலர்

திங்கள், 24 அக்டோபர், 2011

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 
அழைப்பு பணியை தன முழு முதற் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய தாஃவா   பணிகளை அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செய்து கொண்டுள்ளது.
இதன் பயனாக கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.
 
அந்த வகையில் கடந்த 21/10/2011  வெள்ளிக்கிழமை ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் நடந்த ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடனமான திருக்கலிமாவை மொழிந்தனர்.இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை விளக்கத்தை அவர்களுக்கு தலைவர் எஸ்.எம்.பாக்கரும், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத்  இக்பாலும் சொல்லிக்கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். சாலை விபத்து, கற்பழிப்பு, திருட்டு போன்ற விஷயங்களுக்கும், இதுபோல் புகார் எழுதலாம்.
 
பொதுவாக ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், நேரில் கண்ட சாட்சி, பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் என்று யார் வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவுடன், போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வர்.அடுத்து, புகார் கொடுத்தவருக்கு ஒரு கிரைம் நம்பர் கொடுப்பர். இந்த நம்பரை, நாம் புகார் கொடுத்ததற்கு ஆதாரமாகக் கருதலாம்.
 
இது தவிர, சில சமயங்களில் புகார் கொடுக்கும் போது, சில வகையான ஆதாரங்களை போலீஸ் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, இருசக்கர வாகனம் தொலைந்து போகும் பட்சத்தில், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தைக் கேட்கலாம். வீட்டில் நகைகள் காணாமல் போனால், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, நகைகள் வாங்கிய பில், ரசீது போன்றவற்றைக் கேட்கலாம்.அவசர உதவிக்கு, 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எந்த ஒரு பகுதியிலிருந்தும், பிரச்னைக்காக புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் உங்களை பாதிக்காது.ரயில்வே பிளாட்பாரம், ரயில் தண்டவாளம் போன்ற இடங்களில் குற்றம் அல்லது பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து, ரயில்வே போலீசிடம் தான் புகார் தர முடியும்.
 
நன்றி; தினமலர்

வியாழன், 20 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள....

ள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்; http://tnsec.tn.nic.in/results/index_result.htm 

அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!

ருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ  ஏற்படுவதை நாம் காண்கிறோம்.  ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும்  சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.
 
அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்'' என்கிறது அந்த செய்தி.
 
இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!

டந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றதாகவும்  அதிகாரிகளின் கடைசி நேர உள்ளடிகளால்
ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டர்கள் என்று ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் சில கருப்பு ஆடுகள் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தேர்தலை நியாயமாக நடத்திடத் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தலில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறியவந்தால் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் உரிமையுண்டு. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் இது குறித்து கூறியுள்ள வார்த்தைகள் அவரது 'பழைய' நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமதாஸ்,
 
''உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், 50, 100 ஓட்டு வித்தியாசம் இருக்கும் பகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்க அறிவுரை வழங்கியதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் அப்படி அறிவித்தால், அவர்கள் வெளியில் நடமாட முடியாது. அந்த அதிகாரிகள் வீட்டின் முன், என்ன நடக்கும் எனத் தெரியாது. வீட்டில் இருந்து ஒருவர் கூட வெளியில் வர முடியாது என எச்சரிக்கிறேன். தமிழகத்தில் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும் என்று பேசியுள்ளார். 
 
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேவர முடியாது என மிரட்டுவதும், புரட்சி வெடிக்கும்; கலகம் நடக்கும் என்றெல்லாம் மிரட்டுவது ஒரு கட்சித்தலைவருக்கு அழகல்ல. இதுபோன்ற வார்த்தைகளை சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயன்படுத்துவார்கள். மருத்துவரும் அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது சமூகத்தில் அவருக்கு உள்ள மதிப்பை குறைக்கவே செய்யும். மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.

'சிறை'யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.

ரு இமாலய தவறை தாங்களே செய்துகொண்டு அதற்கு எதிராக போராடுவது போல் மக்கள் முன்பாக நாடகம் ஆடுவதில் கைதேர்ந்தவர்கள்  சங்பரிவாரங்கள். சவபெட்டி ஊழல் வரை சளைக்காமல் செய்த கட்சி பாரதீயஜனதா என்பது சாமான்யனுக்கும் தெரியும். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியோ, ஊழல் எதிர்ப்பு மற்றும் கருப்புப் பண மீட்பு என்று ரதயாத்திரை தொடங்கி நாட்டை வலம்வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா ஊழல் வழக்கில் 'உள்ளே' போய் விட்டார் என்பதுதான் பரபரப்பு செய்தியாகும்.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இதுபோக,   இவரது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக ( அரசுக்கு 40 கோடி இழப்பு ) லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . சிராஜின் பாட்சா, பால்ராஜ் என்பவர் இந்த புகாரை தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என எடியூரப்பா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. மற்றும் மாஜி அமைச்சர் கிருஷ்ணய்யா ரெட்டி ஜாமினும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வாரன்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை வரும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
பாஜக ஆளும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன என்று பாஜக தலைவர்கள் அவ்வப்போது முழங்குவர். ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து சிறையையும் சந்தித்துள்ள எடியூரப்பா போன்றவர்கள் தான் முன்மாதிரி என்றால் இதை விட இந்தநாட்டிற்கு வேறு கேவலம் உண்டா? இந்த லட்சணத்துல ஊழல் ஒழிப்பு ரதயாத்திரை வேறு அத்வானி நடத்துகிறார். முடியுமானால் எடியூரப்பாவின் படத்தையும் அத்வானி ரதத்தில் வைத்துக் கொள்ளட்டும். மக்கள் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?

டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். இது தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஜெயலலிதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத போக்கை எதிர்கட்சியான திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஒரு நாடகம் ஆடியது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ''ஒரு காலத்தில் எனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அகால மரணம் அடைந்ததன் காரணமாக இடைத் தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக பொய்யாமொழியின் சகோதரர் பெரியசாமியை தலைவர் நிறுத்தினார். அது போல் இப்போது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இறந்துபோனவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நமது தலைவர் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்க மாட்டார். அதுதான் தலைவரின் மாண்பு. ஆனால், ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை நிறுத்தி இருக்கிறார்'' என்று பேசியுள்ளார்.
 
ஸ்டாலினின் பேச்சு மேலோட்டமாக பார்த்தால் சரிதானே என என்னத்தோன்றும். ஆனால் இதை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டா என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஏனெனில் இந்த தேர்தலில் திமுகவிற்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. ஸ்டாலினுக்கோ அவரது தந்தைக்கோ உண்மையில் முஸ்லிம்கள் மீது பற்று இருந்திருக்குமானால், ஜெயலலிதா செய்யத்தவறியதை செய்துவிட்டு, அதாவது திமுக சார்பாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி விட்டு ஜெயலலிதாவை விமர்சித்தால் அதில் அர்த்தமிருக்கும்.  ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கம்போல நேருவை நிறுத்தி விட்டு, முஸ்லிம்கள் விசயத்தில் ஜெயலலிதாவை மட்டும் விமர்சிப்பது ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல் உள்ளதை ஸ்டாலின் உணரவில்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலினை போல சிந்தித்த ஒரு இயக்கம் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டப் போகிறோம்[!] என்று ஓடிப்போய் நேருவுக்கு அதரவு என்று சொல்லி ஒட்டிக் கொண்டது தனிக்கதை. இவர்களின் அரசியல் ஆட்டத்திற்கு முஸ்லிம்களின் தலையை  உருட்டுவதுதான் வேதனைக்குரியது.

புதன், 19 அக்டோபர், 2011

இறைமறை வழங்கும் விழாவாக மாறிய இருமணம் இணையும் நிகழ்ச்சி!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலச் செயலாளர் சகோதரர் சாதிக் அவர்களின் திருமணம் 16 -10 -2011 ஞாயிறன்று அவரது சொந்த ஊரான கூனிமேட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வெறுமனே திருமண மேடையாக மாறிவிடாமல் இறைமறை வேதத்தை மக்களிடம்   சேர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகவும், அதில் ஒருபகுதியாக தனது திருமண நிகழ்வையும் அமைத்திட விரும்பிய சகோதரர் சாதிக், அவ்வாறே அல்லாஹ்வின் அருளாளால் நடத்தி முடித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்;

இப்போது விற்பனையில் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!