வெள்ளி, 8 ஜூன், 2012
விளையாட்டு வீரர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிகளை கொட்டிக் கொடுப்பது நீதியா?
'காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''!
ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆந்திர ஐகோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.
அந்த அப்பீல் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சிபிஐ கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 23-ந்தேதி ஜனார்த்தன ரெட்டியின் விடுதலை உத்தரவை ரத்து செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆந்திரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மதன் தலைமையில் நீதிபதிகள் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை கூடி தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு சிபிஐ கோர்ட்டு நீதிபதி பட்டாபிராமராவை சஸ்பெண்டு செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இது தொடர்பான விசாரணை முடியும் வரை நீதிபதி பட்டாபிராமராவ் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதற்கிடையே நீதிபதி பட்டாபிராமராவின் நடவடிக்கைகளில் ஏற்கனவே சந்தேகம் அடைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அவருக்கு தெரியாமலே அவரது செயல்பாடுகளை கண்காணித்தனர். அவரது போன், அவரது மகன் போன் அழைப்புகள் ஓட்டு கேட்கப்பட்டன.
நாட்டையே உலுக்கிய சுரங்கத்தொழில் முறைகேட்டில் கைதான ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ கோர்ட்டு நீதிபதியே ரூ.10 கோடி பேரம் பேசி பணம் பெற்றது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைதாவது இதுவே முதல் முறையாகும். லஞ்ச லாவண்யமற்ற தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பாஜக ஆளும் கர்நாடகாவில், அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களின் விடுதலைக்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து, நீதியை சாகடிக்க முற்பட்டுள்ளனர். இத்தகையோர் இந்தியாவை ஆண்டால், என்னாகும் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு மதவாத, ஊழல்வாத பாஜகவை வீட்டிற்கு அனுப்ப முயற்சிக்கவேண்டும்.
இரட்டைக் குவளையை இல்லாமல் ஆக்க, இஸ்லாமே தீர்வு.
இது ஒருபுறமிருக்க,கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கரின் பிறந்த தின நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள் பேசும்போது,
''தான் படித்த வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இணையாக குடிநீர் அருந்தக்கூட இயலாத அளவுக்கு தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர். ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக் கூடாது என்ற கருத்தை சமூகம் சகித்துக் கொள்ளாத காலம் அது. இந்திய வரலாற்றில் அவையெல்லாம் கறுப்பு நாள்கள். அந்த சூழ்நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார்.
தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. எனினும், இங்கு இன்னும் சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்வது வேதனை அளிக்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றார் இக்பால்.
அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்கள் பாடுபட்டும் தமிழகத்தில் பிறப்பின் அடிப்படையில் பார்க்கப்படும் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா என்றால் இல்லை. இன்றும் மதுரை மாவட்டத்தில், 149 கிராமங்களின் டீக்கடைகளில் இரட்டைக் குவளைகள் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட, மதுரை, "எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :ஒரு மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட, 149 கிராமங்களில், 463 டீக்கடைகளில், இரட்டை டம்ளர் முறை, தற்போதும் உள்ளது.இதில், 131 கிராமங்களில், இரு சமூகத்தினருக்கு, தனித் தனி டம்ளர் கொடுப்பதும், 12 கிராமங்களில், ஒரே டம்ளர்களை, இரு சமூகத்தினருக்கு தனித்தனியாக வைப்பதும் தொடர்கிறது. ஒன்பது டீக்கடைகளில், குறிப்பிட்ட சமூகத்தினர், டம்ளர்களை சுத்தப்படுத்தி வைக்கின்றனர். 67 கடைகளில், தனித் தனி இருக்கைகளும் உண்டு.இரட்டை டம்ளர் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, 2011 ஏப்ரலில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க, "சமத்துவ தேனீர் விருந்து' திட்டம், அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், கிடப்பில் உள்ளது.டீக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இரட்டை டம்ளர் முறையை கண்காணிக்க, தாசில்தார் தலைமையில் குழு அமைக்க வேண்டும். டீக்கடைகளில் மட்டுமல்ல; ஓட்டல், சலூன், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடியில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் நடக்கும் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில், இரட்டை டம்ளர் முறையை ஒழிப்பது குறித்து விவாதிக்க வேண்டும்'' இவ்வாறு கதிர் கூறியுள்ளார்.
என்னதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவர்கள் மீதான சாதிய முத்திரை மட்டும் அகல்வது போல் தெரியவில்லை. இதனால்தான் சமூக நீதிக்காக சம உரிமைக்காக போராடிய பெரியார் அவர்களே ஒரு கட்டத்தில், 'இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து'' என்ற கருத்தை முன் வைத்தார். ஆம். இஸ்லாம் ஒன்றுதான் ஒருவனது பழைய முகவரியை மாற்றி முஸ்லிம் என்ற ஒரே முகவரியைத் தர வல்லது என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவிய அடுத்த நொடியே பரம்பரை முஸ்லிமின் சகோதரனாகி விடுகின்றான். இவன் நேற்றுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவனாயிற்றே; இவனுடன் நமக்கென்ன உறவு என்று எந்த முஸ்லிம்களும் நினைப்பதில்லை. மாறாக அவனோடு ஒரே தட்டில் உண்டு உறவாட இன் முகத்துடன் முன்வருவார்கள். இந்த பக்குவத்தை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. ஏனென்றால் இஸ்லாம் பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமல்ல. மாறாக மனிதனின் வாழ்வின் அடிப்படையை வைத்து, அவன் இறைவனுக்கு அஞ்சும் தன்மையை வைத்தே அவனை சிறந்தவன் என்று சொல்லும் மார்க்கம்.
எனவே பட்டியலின மக்கள் கவனிக்க வேண்டியது. அம்பேத்கரே இந்துமத தீண்டமையினால் வெறுத்து, பல்லாயிரம் மக்கள் சகிதமாக புத்தமதம் தழுவினார். ஆனாலும் அம்பேத்கார் எதிர்பார்த்த அந்த சுயகவுரத்தை புத்தமதம் வழங்கிவிடவில்லை. அதனால்தான் இன்றும் அந்த இழிவு நீங்கவில்லை. அதே நேரத்தில் பெரியாரின் அறிவுரைப்படி இஸ்லாத்தில் இணைந்த பட்டியின மக்கள் இன்று தங்களின் பழைய பாரம்பரியம் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவர்கள் இழிவிலிருந்து நீங்கி, கவுரவத்துடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார்கள். எனவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீராத இந்த இழிவை ஒரு நொடியில் நீக்கும் அருமருந்தான இஸ்லாத்தை நோக்கி வாருங்கள். இன்முகத்தோடு வரவேற்கிறோம்.
வியாழன், 7 ஜூன், 2012
செவ்வாய், 5 ஜூன், 2012
திங்கள், 4 ஜூன், 2012
கல்வியும்-இஸ்லாமும்!
இந்த ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கியுள்ளநிலையில், நம்முடைய மாணவமணிகள் கல்விச்சாலையை நோக்கி அணியணியாய் செல்லும் அழகுகாட்சிகள். வருங்கால இஸ்லாத்தையும்- வருங்கால இந்தியாவையும் தீர்மானிக்கும் சிற்பிகளான இந்த மாணவமணிகளை அழகுற வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெற்றோர்களுக்கு உண்டு. ஏனெனில், வேறு எந்த சித்தாந்தங்களும் சொல்லாத அளவுக்கு கல்வியை வலியுறுத்துவதோடு, கற்பவர்களுக்கு சிறப்பையும், நன்மைகளையும் வழங்குவதாக இஸ்லாம் பறை சாற்றுகிறது.
கல்வி கற்ப்பித்தவன் இறைவனே!
மனித குலத்திற்கு வழிகாட்டியாக அனுப்பபட்ட மாநபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய முதல் வசனமே 'படிப்பீராக' என்பதாகும்.
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:2)
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (96:3)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96:4)
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:5)
கற்றவர்களே சிறந்தவர்கள்;
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்." (39:9)
உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவை, 'அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்" என்று பதிலளித்தார்கள்.[புஹாரி]
கற்றவர்க்கு கிடைக்கும் பரிசு;
இத்தகைய சிறப்புகளை பெற்றுத்தரும் கல்வி எது என்பதை பார்ப்போம்.
கல்வியில் மூன்று வகை உண்டு;
*மார்க்க கல்வி
*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (20:114)
சுற்றுச்சூழலும்-இஸ்லாமும்!
மேலும், காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுவது பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையாகும். ஆயிரம் ரூபாயோடு சென்றால் அடுத்தநாள் கார் சாவி கைக்கு வரும் வகையில் அதிகரித்துவரும் மோட்டார் 'லோன்' களால் அவசியமானவர்கள் மட்டுமன்றி, அந்தஸ்த்துக்காகவும் நான்கு-இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல், பூமி சூடாகுதல், வாகனங்கள் விடும் புகையால் காற்று மாசுபடுதல் ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.
மேலும், காற்றை மாசுபடுத்தும் அடுத்தகாரணி புகையை வெளிப்படுத்தும் வேலையை செய்யும் பட்டாசு கொளுத்துதல், போகி கொளுத்துதல் போன்றவைகளாகும். நாமறிந்தவரை, ஒருகாலத்தில் பட்டாசு என்பது பண்டிகை அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மட்டும் கொளுத்தப்பட்ட நிலை மாறி, இன்று காத்து குத்து தொடங்கி கருமாதிவரை; வேட்புமனு தாக்கல் முதல் பதவிக்காலம் முடியும் வரை; தலைவரின் பிறந்த நாள் தொடங்கி, தலைவர் தன் சொந்த கட்சி ஆபீசுக்கு வரும் நாள், பொதுக்கூட்டத்தில் வீர[?] உரையாற்றும் நாள் என்று ஏறக்குறைய எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு மூலையில் வெடி சத்தம் கேட்காத நாள் இல்லை எனலாம். தங்களின் சந்தோசத்திற்காக பட்டாசு கொளுத்துபவர்கள், தங்களின் இந்த செயலால் காற்று மாசுபடுவதை பற்றியோ, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.
அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது ஆலைகளின் கழிவு நீரை ஆறுகளில், ஏரிகளில் கலக்க செய்யும் ஆலைகளை பெரும்பாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால், நீர் மாசுபடுவதால் அந்த நீரில் வாழும் மீன்கள் செத்து மடிவதும், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்ப்பட்டதையும் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பத்திரிக்கைகளில் செய்திகளை காணமுடியும். இந்த நிலை மாற , ஆலைகள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு நீர் நிலைகள் பாதிக்காதவாறு கவனம் செலுத்தவேண்டும்.
அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது மக்கள் தங்களின் கழிவு பொருட்களை தெருவில் போடுவதாகும். நமது வீட்டை நாம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க எண்ணுகிறோமோ, அதுபோல் நாம் வசிக்கும் தெருக்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வருமானால் தெருக்கள் தூய்மையாக காட்சியளிக்கும். அரபுநாடுகள் தூய்மையாக இருப்பதற்கு காரணம், தூய்மை ஈமானில் ஒரு பகுதி என்று இஸ்லாம் வழிகாட்டிய காரணத்தால், தங்கள் வீட்டு கழிவுகளை தெருக்களில் வீசி எரியாமல், பாலிதீன் கவர்களில் கட்டி அதை குப்பை தொட்டியில் போடுகிறார்கள். மேலும் அரசு, ஒவ்வொரு வீட்டு அருகாமையிலும் குப்பை வாளிகளை வைத்து அதில் சேரும் குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் மூலம் தினம் தோறும் அகற்றுவதால், நகரம் தூய்மையாக இருப்பதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டிலோ குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்துவதில்லை. அப்படியே அப்புறப்படுத்தினாலும் ரோட்டில் பாதியை சிதறிவிட்டு செல்லும் வாகனங்களை பார்க்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.
இவைகளுக்கெல்லாம் இஸ்லாம் அற்புதமான வழியை காட்டி அவ்வாறு செய்வதற்கு நன்மையும் தருவதாக கூறுகின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, தூய்மையை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக்கி தூய்மையை ஊக்குவிக்கிறது. அதோடு ஒரு முஸ்லிம் சுற்றுச்சூழல் விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை பாருங்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.[நூல்;புஹாரி]
மரத்தை வெட்டி சுற்றுச்சூழலை கெடுப்பவர்களுக்குமத்தியில், மரத்தை நடுவதை நன்மைக்குரியதாக சொல்லிக்காட்டி மனிதனின் எல்லாவிதமான நல்வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!




