திங்கள், 13 ஆகஸ்ட், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும் இஃப்தார் [நோன்பு திறக்கும்] நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும்.... 

இஃப்தார் [நோன்பு திறக்கும்] நிகழ்ச்சி!

நாள்;17-8 -12 வெள்ளிக்கிழமை. மாலை 5 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

இடம்; திருச்சி உணவகம் பார்ட்டி ஹால், மிர்காப்- குவைத்

தலைமை; அபூஷிபா[மண்டலச் செயலாளர்]


சிறப்புரை; மவ்லவி. அப்துல்காதிர் மன்பஈ.

[தலைப்பு; மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்]

நன்றியுரை; சாதிக்சதாம் [மண்டலப் பொருளாளர்]

அழைப்பின் மகிழ்வில்;

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்- குவைத் மண்டலம்.

தொடர்புக்கு; 65653431 ,97659759 ,99324815 ,97145046 .

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பஸ் பயணிகளின் தீராத சோகம்!


பஸ் கட்டணத்தைத் தமிழக அரசு சீரமைத்த பின்னர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திலிருந்து கட்டாயம் மீளத் தொடங்கியிருக்கும்.

 இருப்பினும், பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

 விபத்துகள், ஆபத்துகளில் சிக்கும் பயணிகளுக்கு உதவிட பஸ்களில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட வேண்டும் என்பது அரசு ஆணை. இருப்பினும், பெரும்பாலான பஸ்களில் முதலுதவிப் பெட்டிகள் அறவே இல்லை.

 பஸ்களில் குடிநீர் பிடித்து வைக்கப்படுவதில்லை; பயணிகள் பஸ் நிலைய வளாகக் கடைகளில் சில மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படும் குடிநீர் போத்தல்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்தநேர்கிறது.

 பஸ்களில் உள்ள இருக்கைகளில் 2 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியாமல் குறுகலாக இருக்கிறது. 3 மணி நேரத்துக்குப் பிறகு அமரமுடியாதபடி இருக்கை சூடேறி "மூலாதாரத்தையே' பொசுக்குகிறது.

 பக்கத்தில் இருக்கும் கண்ணாடியும் ரப்பர் பீடிங்கும் ஊடலில் ஈடுபட்டு, அவசரத்துக்கு திறக்கவோ மூடவோ முடியாமல் மனைவிமார்கள் முன்னிலையில் கணவன்மார்களைத் தலைகுனிய வைக்கிறது.

 பஸ்களின் தரைப் பகுதியில் பலகைகள் பெயர்ந்தும் ஆணிகள் நீட்டிக்கொண்டும் பயணிகளையும் அவர்களுடைய லக்கேஜுகளையும் பதம் பார்க்கின்றன. சில பஸ்களில் புட்ஃபோர்டுகள் என்று அழைக்கப்படும் படிகள் சரிந்தும் உடைந்தும் பக்கவாட்டுத் தகரம் கிழிந்தும் காணப்படுகின்றன. இவை பயணிகளின் வேட்டி, சட்டைகளை மட்டும் அல்லாமல் கை, கால்களையும் கிழிக்கின்றன.

 தொலைதூரப் பயணங்களில் பயணிகள் நல்ல உணவுக்காக அல்லல்படுகின்றனர். அரசியல் செல்வாக்கு மிக்கப் பிரமுகர்களால் நடத்தப்படும் உணவகங்களில், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

 தரமும் இல்லாமல் விலையும் கூடுதலாக இருக்கும் இந்த உணவகங்களுக்கு மக்களைக் கொண்டுபோய்த் தள்ளும் சேவையை எந்த ஆட்சி வந்தாலும் தவறாமல் செய்கின்றனர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள். பயணிகள் சங்கம் மூலம் நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடுத்தால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தோன்றுகிறது. போக்குவரத்துத்துறை செயலாளரோ போக்குவரத்து அமைச்சரோ இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

 போக்குவரத்துக் கழகமே ஹோட்டல் நடத்தலாம் என்று யோசனை கூறலாம் என்றால் அந்தச் சாப்பாடு, சிற்றுண்டிகளும் 3 விதமாகப் பிரிக்கப்பட்டு ""சாதாரணம்'', ""சொகுசு'', ""வயிற்றில் நில்லாதது'' என்று தயாரித்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. பஸ் சேவையை ஒழுங்காக நடத்தினாலே போதும்.

 பஸ்களில் டயர் பஞ்சர் ஏற்பட்டால்கூட அதை சரி செய்யத் தேவையான கருவிகள் பஸ்களில் வைக்கப்படுவதில்லை. பழுதுகள் பெரியதாக இருந்தால் பல மணிநேர தவம்தான்! அருகேயுள்ள பணிமனைகளில் இருந்து பழுதுகளை நீக்க ஊழியர்கள் வரும் வரை, பயணிகள் கொளுத்தும் வெயிலிலோ, கொட்டும் மழையிலோ பரிதவிக்க வேண்டும்.

 பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றிவிட ஊழியர்கள் நிறுத்தினால், பல பஸ்கள் நிற்பதில்லை. கோட்டம் வேறு, மண்டலம் வேறு என்று காரணம் கூறப்படுகிறது. எல்லாமே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பஸ்கள்தானே? இதில், ஏன் ஜாதிப்பிரிவினை?

 பழைய பஸ்களுக்கு வண்ணச் சாயம் பூசப்பட்டு, புதிய பஸ்களாகவே வலம் வருகின்றன. இவற்றைச் சீரமைப்பதிலோ, அன்றாடம் பராமரிப்பதிலோ நிர்வாகம் சரிவர அக்கறை காட்டுவதில்லை. தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது பஸ்களைப் பராமரிக்கும் அளவுக்கு, அரசு நிர்வாகமும் மாற வேண்டும். அதுகூட வேண்டாம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இணையாகவாவது சேவை இருக்கலாம் அல்லவா?

 சென்னையிலிருந்து பெங்களூருக்கு தமிழக அரசு விரைவு பஸ்களிலும் கர்நாடக பஸ்களிலும் பயணிப்பவர்களைக் கேட்டால் தர வித்தியாசம் குறித்துச் சொல்வார்கள்.

 தமிழகத்தின் தொலைதூர பஸ்களில், பயணிகள் பார்ப்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், சரியாகப் பராமரிக்கப்படாததால் பல பஸ்களில் இயங்காமல், காட்சிப் பொருளாகவே உள்ளன.

 சில பஸ்களில் எழுதப்பட்டிருக்கும் அந்தந்த பணிமனைகளின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

 பஸ் நிலைய வளாகங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகளில் பயணிகள் சிறுநீர் கழிக்கக் கூட அல்லல்படும் நிலையுள்ளது.

source ;தினமணி.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பிரிவு[CMCELL ]க்கு இணைத்தளம் வாயிலாகவும் இனி புகார் தெரிவிக்கலாம்!


முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு  http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அதிகமாக அழுங்கள் குறைவாகவே சிரியுங்கள்!


அல்லாஹ் கூறுகிறான்: ""இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள்,
அவர்களுக்கு இது இறையச்சத்தை அதிகமாக்கும்''                    (அல்குர்ஆன் 17:109)

உண்மையான இறை விசுவாசிகள், சதா அல்லாஹ்வை அஞ்சி, அவனுடைய தண்டனைகளை நினைத்
துப்பார்த்து தனிமையிலிருந்து அழுது மன்றாடி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருவார்கள்,
மறுமையில் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தில் போட்டு விடுவானோ என்ற அச்சத்தால் கண்கலங்கு
வார்கள். பாவங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவார்கள்.

""ஒருதடவை நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்'' அதுபோன்ற சொற்பொழிவை
நாங்கள் கேட்டதே இல்லை, அப்போது அவர்கள் ""நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாக
சிரிப்பீரிகள், அதிகமாக அழுவீர்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் தங்கள் முகங்களை மூடிக்
கொண்டார்கள், அவர்கள் அழுகின்ற சப்தம் கேட்டது என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

""அவர்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.                  அல்குர்ஆன் 9:82

பரிசுத்த வேதமான திருக்குர்ஆன் வசனங்களில் உள்ள அபூர்வமான விஷயங்களையெல்லாம்
படித்து சிந்திக்காதவர்கள், அதை புறக்கணித்து வாழக்கூடியவர்கள், உள்ளம் இறுகியவர்கள், இந்த
உலக வாழ்க்கையைப் பார்த்து ஏமாறக்கூடியவர்கள், இப்படிப்பட்ட பண்புடையவர்களை வல்ல
அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

""நீங்கள் குர்ஆனிலுள்ள செய்திகளைப் பற்றியா ஆச்சரியப்படுகிறீர்கள்? சிரித்துக் கொண்டும்
இருக்கிறீர்கள், நீங்கள் அழாமலும் இருக்கிறீர்களே?                    அல்குர்ஆன் 53:59,60

இந்த உலக வாழ்க்கை என்பது எல்லாவிதமான பாக்கியங்களையும் அனுபவித்து சிரித்து மகிழ்வதற்காக வழங்கப்பட்ட வாழ்க்கையல்ல, இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு நம்மைப்
படைத்த நாயனிடத்தில் சென்றாக வேண்டுமே அங்கு நாம் வெற்றி பெறப் போகின்றோமா
அல்லது தோல்வியடையப் போகின்றோமா? என்ற பயத்தோடு தான் உண்மையான இறை
நம்பிக்கையாளன் ஒவ்வொரு நேரத்தையும் கழிப்பான். அல்லாஹ்வை அஞ்சி அவனை நினைத்துப்
பார்த்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மக்களை
நினைத்துப் பார்த்து வடிக்கும் கண்ணீர் துளிகளை இஸ்லாம் நன்மைக்குரியதாக கருதுகிறது. இந்த
கண்ணீர்த்துளிகள் மறுமையில் அல்லாஹ்விடத்தில் சாட்சியாக வரும்

""அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர் கறந்த பால் மடுவுக்குள் மீண்டும் நுழையும் வரை
ஒரு போதும் நரகில் நுழையமாட்டார், அல்லாஹ்வின் பாதையில் படிந்த புழுதியும் நரகப்புகையும்
இணைந்திடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   நூல் : திர்மிதி 1633

நன்றி;அல்ஜன்னத்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

திருமணச் சட்டங்களும்; குழப்பங்களும்!


ந்தியாவில் திருமண வயதாக ஆணுக்கு 21 வயதும் பெண்ணிற்கு 18 வயதும் என்று சட்டம் உள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் சட்டம் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்தியாவில் நடக்கும் திருமண வைபவங்களில் அதிகாரிகள் சென்று மணமகன்-மணமகள் பிறப்புச் சான்றிதழை சோதித்துப் பார்த்து அந்த திருமணத்தை நடத்த அனுமதியளிப்பதில்லை. 18 வயதிற்குட்பட்ட பெண்ணிற்கு சர்வசாதரணமாக திருமணங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. எப்போதாவது திருமணம் தொடர்பாக புகார் வந்தால் மட்டுமிங்கே அதிகாரிகள் ஆஜராகி நடவடிக்கை எடுக்கின்றனர். அதிலும் கூடபெண்ணிற்கு 
18 வயதை பேணவேண்டிய சமுதாய திருமணம் என்றால் அந்த திருமணத்தை தடுப்பதோடு நின்று கொள்ளும் அதிகாரிகள், 15 வயது பூர்த்தியாகி விட்டால் இந்திய சட்டப்படி திருமணம் செய்ய அனுமதியுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்தை தடுப்பதோடு மணமகனை கைது செய்யும் இழிசெயலை செய்து தங்களின் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு சம்பவம் கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடந்து அதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தாளிப்பு ஏற்பட்டதை மறந்திருக்க முடியாது. இந்நிலையில் பெண்களின் திருமண வயது குறித்த ஒரு முக்கியமான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் இம்மாதம் முதல் தேதியன்று வழங்கியுள்ளது. 

அந்த தீர்ப்பில், ''16 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் தனது சுதந்திரமான விருப்பத்துடனும்,  எந்தவித வற்புறுத்தல் இல்லாமலும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தால் அவளது அறிவிப்பு சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டு அவரது கணவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363 (கடத்தல்) அல்லது 376 (பாலியல் வன்முறை) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம்' என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பதினாறு வயதை கடந்த பெண் அவளது பரிபூரண சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணம் சட்டப்பூர்வமானது என்று சொல்லும் நீதிமன்றம், கடந்த காலங்களில் இதுபோன்ற திருமணம் செய்த மணமகன் மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்யவேண்டும் என்ற அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், பெண்ணின் திருமண  வயது 18 என்ற சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் அடிபட்டுப் போய்விடுகிறது. ஓடிப்போகும் பெண்களையும் விபச்சாரத்தில் விழுந்து நாசமாகும் பெண்களையும் தடுக்க துப்பில்லாத அதிகாரிகள், முறையாக நடைபெறும் திருமணத்தை வயதைக் காட்டி தடுக்க வந்துவிடுகிறார்கள். இத்தகைய முந்திரிக்கொட்டை அதிகாரிகளின் மூக்கை உடைத்துள்ளது இந்த தீர்ப்பு. 

அடுத்து இந்த தீர்ப்பில் இப்படி ஒரு பாரட்டாத்தக்க அம்சம் இருந்தாலும் இன்னொரு பாரதூரமான அம்சமும் உள்ளது. அதாவது, ''15 வயதிற்குட்பட்ட  பெண்ணுடன் அவளது சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதும், அவளது விருப்பத்தோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வன்முறைக்குச் சமமானதே. அந்தப் பெண்ணின்  கணவனை அவனது மதத்தின்  பாதுகாப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்க முடியாது.15 வயதிற்குட்பட்ட மனைவியுடன் உடல் உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பிரிவுக்கு எந்த விதி விலக்கும் கிடையாது. அந்த சட்டப்பிரிவை  கடுமையாகவும், பாகுபாடின்றியும் நிறைவேற்ற வேண்டும். அந்த மாதிரி   தாம்பத்திய நிலவரத்தில் பெண்ணின் விருப்பம் ஏற்றுக் கொள்ளத்தக்க தல்ல' என்று கூறியுள்ளது நீதிமன்றம். 

15 வயதுகுட்பட்ட பெண் விரும்பியே திருமணம் செய்தாலும், அவள் விருப்பத்துடன் கணவனுடன் இல்லறம் நடத்தினாலும் அதுவும் தண்டனைக்குரிய குற்றம் என்பது தான் வேடிக்கையாக உள்ளது. 15 வயதுகுட்பட்ட  பெண்ணிற்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறதா? அல்லது அந்த பிராயத்தில் அப்பெண்ணிற்கு உணர்ச்சிகள் ஏற்படாது என்று கருதுகிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதோடு இந்த தடைக்கு நீதிமன்றம் கூறும் விளக்கம் தான் விசித்திரமாக உள்ளது. 15 வயதுக்குட் பட்ட இளம் பெண் உடலுறவை ஏற்றுக் கொள்வதிலும், கர்ப்பம் தரிப்பதிலும் இடர்ப்பாடுகள் உள்ளன என்றும் 15 வயதிற்குட்பட்ட பெண் திருமணம் ஆனவளா- ஆகாதவளா என்ற வேறுபாடு பார்க்க முடியாது என்கிறது நீதிமன்றம். 

என்றைக்கு அப்பெண் பருவமடைகிறாளோ அப்போதே அவள் தாயாகும் தகுதியை பெறுகிறாளா இல்லையா? அப்படியே அந்த வயதில் குழந்தை பெறுவது அவளின் உடல்நலம் பாதிக்கும் என்றால் அதை சம்மந்தப்பட்ட தம்பதிகள் தீர்மானித்து குழந்தை பெறுவதை தள்ளி வைக்கலாமே தவிர அதை சட்டம் போட்டு தடுப்பது எந்த வகையில் நியாயம்? அப்படியே சொல்வதாக இருந்தாலும் குழந்தை பெறுவது குறித்த வயது வரம்பை நீதிமன்றம் சொல்லலாமேயன்றி அந்த திருமணமும் உறவும் சட்டவிரோதமானது என்று சொல்வது புரியாத புரிதாக உள்ளது.

மேலும், 15 வயதுக்குட்ப்பட்ட பெண் திருமணம் ஆனவளா? ஆகாதவளா? என்று கண்டுபிடிக்க முடியாது என்ற அற்புதமான கருத்தையும் சொல்லியுள்ளது நீதிமன்றம். 16 வயதிற்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் ஆனவளா? இல்லையா? என்பதை அறியமுடியும் போது 15 வயதிற்குட்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் ஆனவளா இல்லையா என்பதை அறியமுடியாது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது. இதோடு நின்றாலும் பரவாயில்லை. 15 வயதிற்குட்பட்ட  பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவனுடைய மத தனியார் சட்டம் பொருந்தாது என்றும் நீதிமன்றம் சொல்லி, இந்த வயதில் உள்ள பெண்ணை திருமணம் செய்யும் முஸ்லிமாக இருந்தாலும் அவன் மீதும் சட்டம் பாயலாம் என்ற அனுமதியை வழங்கி முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கிறது நீதிமன்றம். இதே நீதிமன்றம் தான் 15 வயது நிரம்பிய ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பியவரை திருமணம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியதை மறந்து விட்டதா? அல்லது எந்த மதத்தவராக இருந்தாலும் 16 வயது மேற்பட்ட பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறதா? எது எப்படியோ இனி பதினாறு கடந்து விட்டால் பாவைகள் சிறகை விரிக்க தடையேதும் இல்லை என்பது சந்தோஷமான சமாச்சாரம் தானே!

பாகிஸ்தான் துணை அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம் மத அடிப்படையிலானதா?

பாகிஸ்தான் பெஷாவர்  நகரில் வசித்து வரும் குர்ஷித் கான், துணை அட்டர்னி ஜெனரலாக பொறுப்பு வகித்தவர். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது, சண்டீகரில் உள்ள ஜும்மா மசூதி, அமிருதசரஸில் உள்ள பொற்கோவில் ஆகியவற்றுக்கு சென்று, ஷூ சுத்தம் செய்தல், தரையை பெருக்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்ததாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், குர்ஷித் கானுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஷூ சுத்தம் செய்ததன் மூலம் பாகிஸ்தானை அவமதித்தது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு கோரியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் யாசின் ஆசாத் கூறுகையில்,   ''தனது வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சேவையைச் செய்ததாக குர்ஷித் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானை அவமதிக்கும் இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அரசின் கடமை. எனினும், அவர் துணை அட்டர்னி ஜெனரலாக இருப்பதால், நாங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, குர்ஷித் கானுக்கு பதிலாக மற்றொரு வழக்கறிஞர் துறை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக, பாக்., அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் தெரிவித்துள்ளார். 

இந்த சாதாரண நடவடிக்கையை வழக்கம் போல மதத்தோடு சேர்த்து முடிச்சுப் போட்டு தனது பகுத்தறிவை[?!] பறைசாற்றியுள்ளது விடுதலை நாளிதழ். குர்ஷித் கான் ஷூ துடைத்தது இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமானது என்பதாலும், சீக்கிய மத சம்மந்தப்பட்ட ஒரு சம்பிரதாயத்தை ஒரு முஸ்லிம் எப்படி செய்யலாம் என்பதாலும் தான் அவர் நீக்கப்பட்டார் என்று தனது கற்பனைத் திறனை காட்டியுள்ளது.

குர்ஷித் கான் இந்திய விஜயத்தின் போது குருத்துவாரில் மட்டும் பணிவிடை செய்தாரா? சண்டிகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலிலும் பணிவிடை செய்துள்ளார். எனவே அவரது நீக்கத்திற்கு குருத்துவாரில் ஷூ துடைத்ததுதான் காரணம் என்று கூறுவது தவறாகும். மேலும் அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார்கவுன்சில் அனுப்பிய நோட்டீசில் கூட, ''உங்களின் இந்த செயல் இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது என்று கூறி விளக்கம் கேட்டதா என்றால் இல்லை. மாறாக உங்களின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது என்று தானே நோட்டீஸ் சொல்கிறது. அவ்வாறாயின் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் துணை அட்டர்னி ஜெனரல் என்ற உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அடுத்த நாட்டில் போய் கோவில் வாசலிலும் பள்ளிவாசல் முன்பாகவும் உட்கார்ந்து கொண்டு ஷூ துடைத்துக் கொண்டிருந்தால் அது அவர் வகித்த பதவிக்கும் அவரது நாட்டிற்கும் இழுக்குதானே! அதற்காக அவரை பதவி நீக்கம் செய்வதில் என்ன தவறு? நாளை இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பாகிஸ்தான் சென்று பள்ளிவாசலில் ஷூ துடைத்தால் அதை இந்த விடுதலை ஆஹா! மனிதாபிமான செயல் என்று வரவேற்குமா? அல்லது இந்தியாவின் மானம் கப்பலேறி விட்டது என்று வசை மாறி பொழியுமா? இரண்டு நாட்களுக்கு முன்னால்  தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் கலெக்டர்  கோயிலில் பொங்கல் வைத்ததை பற்றி இந்த விடுதலை செய்த விமர்சனம் என்ன? ''மதசார்பற்ற நாட்டின் பதவியில் இருக்கும் கலெக்டர் இப்படி மதசார்பு பொங்கல் வைக்கலாமா? என்று விமர்சிக்கவில்லையா? கலெக்டர் பொங்கல் வைத்தது அவர் வகித்த பதவிக்கு இழுக்கு என்று விடுதலை சொல்லுமாம். ஆனால் ஒரு துணை அட்டர்னி ஜெனரல், செருப்புத் துடைப்பது அவர் வகிக்கும் பதவிக்கும் நாட்டிற்கும் இழுக்கு என்று பாகிஸ்தான் மட்டும் சொல்லக் கூடாதாம். இது என்ன பகுத்தறிவோ தெரியவில்லை.

மேலும் எவன் எங்கே போய் செருப்பு துடைச்சாலும், கக்கூஸ் கழுவினாலும் அதனால் அவனுக்குத்தான் இழுக்கே தவிர இஸ்லாத்திற்கு எந்த பாதிப்புமில்லை. இஸ்லாம் ஒவ்வொரு மனிதனையும் கவுரவமாக வாழச் சொல்கிறது. ஒரு முஸ்லிம் செருப்புத் தைத்துப் பிழைக்கலாம். செருப்பு துடைத்தும் பிழைக்கலாம். முஸ்லிம்கள் செருப்புக்கடை வைத்திருக்கிறார்கள். அங்கே உள்ள செருப்பை அவர்கள் தான் துடைக்கிறார்கள். இதையெல்லாம் இஸ்லாம் தடுக்கவுமில்லை. கேவலமான தொழில் என்று சொல்லவுமில்லை. ஆனால் அதே முஸ்லிம் தொழில் ரீதியாக அன்றி, முட்டாள்தனமாக இன்னொருவன் செருப்பைத் துடைத்தால் அவன் தனது கண்ணியத்தை தான் இழக்கிறான் என்பதை விடுதலை புரிந்து கொள்ளட்டும். 

அடுத்து உலகம் முழுவதும் இருப்பவர் ஒரே கடவுள் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், ஒரு மதத்துக் கடவுளை இன்னொரு மதத்துக்காரர் ஒப்புக் கொள்வதில்லை. (அந்த வகையில் ஒப்புக் கொள்ளாதவர் இன்னொரு மதக் கண்ணோட்டத்தின் படி நாத்திகர் தானே!) என்று ஒரு மில்லியன் டாலர்[!] கேள்வியைக் கேட்கிறது விடுதலை. 

உலகம் முழுவதும் ஒரே ஒரு கடவுள் என்று இஸ்லாம் சொல்கிறது. அதற்கு மாற்றமாக கடவுளே இல்லை என்றும், பல கடவுள்கள் என்றும் சொல்பவர்களை எப்படி ஏற்கமுடியும்? இஸ்லாமியர்கள் பார்வையில் இஸ்லாத்தை ஏற்காத வீரமணியாக இருந்தாலும், ராமகோபாலனாக இருந்தாலும் நாத்திகர்கள் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. நாம் கேட்கிறோம் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு கடவுள் கொள்கைக்கு எதிராக இருப்பதால் பிறமத கடவுள்களை எப்படி ஏற்பதில்லையோ அதே போன்றுதான், கடவுளே இல்லை என்ற தங்களது கொள்கைக்கு மாற்றமான மத நம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாத்திகர்கள் ஏற்பதில்லையே. கொள்கை முரண்பட்டாலும் மற்ற மதத்து கடவுளையும் முஸ்லிம்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த நாத்திக விடுதலை, தங்களின் நாத்திக கொள்கைக்கு முரணான மதங்களை ஏற்கத்தயாரா?

அடுத்து இன்னொரு மதக் கடவுளையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்; இன்னொரு மதத்தின் சம்பிரதாயங்களை ஏற்றுக் கொள்வார்களா? என்று மீண்டும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியினை உதிர்க்கிறது விடுதலை. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. அந்த வகையில் ஒரு மதத்தின் சம்பிரதாயத்தை இன்னொரு மதத்தவர் அங்கீகரிப்பதில்லை. அப்படி அங்கீகரித்தால் பல மதங்களாக இருக்காது எல்லாம் ஒரே மதம் என்றாகிவிடும் என்ற சாதாரண உண்மை கூட இந்த பகுத்தறிவு புலிகளுக்குத் தெரியவில்லையா? 

இவ்வளவு பேசும் இந்த நாத்திக விடுதலை, திகவும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறும் விடுதலை, திமுகவின் சம்பிரதாயங்களை ஏற்காதது ஏன்? தேர்தல் போட்டி- கூட்டணி-ஆட்சி அதிகாரம் என்ற திமுகவின் சம்பிரதாயங்களை திகவினர் பின்பற்ற வேண்டியதுதானே! அற்ப அரசியல் நடவடிக்கைகளில் கூட இவர்களுக்கு நெருக்கமான ஒரு கட்சியின் சம்பிரதாயங்களை ஏற்க மாட்டார்களாம். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் இன்னொரு மத சம்பிரதாயங்களை சரி காண வேண்டுமாம்.

அடுத்து ஒருபடி மேலே சென்று ஒரு மதக்காரன் இன்னொரு மதத்தின் கடவுளை உடைத்துத் தூள் தூளாக்குகிறான் (நாத்திகர்கள் இந்த வேலையைச் செய்வ தில்லை) என்கிறது இந்த நாத்திக விடுதலை. முஸ்லிம்கள் மற்ற மதத்தின் கடவுள்களை கருத்தால் உடைத்தெறிவார்களே தவிர கடப்பாரையால் அல்ல. இந்த நாத்திகப் பெரியார் போல் பிள்ளையார் சிலையை உடைப்போம் என்று திரியவில்லை. இதுல நாத்திகர்கள் இந்த வேலையை செய்வதில்லை என்று போய் வேறு. ஆக, ஒருவரின் சாதாரண பதவி நீக்கத்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி, இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் உளறியுள்ள நாத்திக விடுதலை நா காப்பது நன்று.



இஸ்லாமாபாத்தில் இந்துக்கோயில் கட்ட அனுமதி; பாகிஸ்தான் அரசின் மதசார்பின்மை!


பாகிஸ்தான் என்றாலே இந்தியாவை பிரித்து உருவான நாடு என்றும், இந்தியாவை அச்சுறுத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை செய்யும் நாடு என்றும், தனது நாட்டில் உள்ள இந்துக்களின் வழிபட்டு உரிமையை நசுக்கும் நாடு என்றும் தான் செய்திகள் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் தாண்டி பாகிஸ்தானின் உண்மை முகம் உலகுக்கு வந்தவண்ணம் உள்ளது. 

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் உள்ள சில கோயில்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன.  அந்த கோயில்கள் உடனடியாக பாகிஸ்தான் அரசால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. அதே போல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒன்றை நினைவூட்டுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். 

''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்த இந்த கோயில் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்ததையடுத்து, விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது. 

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப்படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.

இப்போது கூட பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் அனுமதியளித்துள்ளார்.இதற்கான இடத்தினை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான முறையான உத்தரவை  பிரதமர் அலுவலகத்திலிருந்து இஸ்லாமாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த இந்து எம்.பி.யான ரமேஷ்லால், பிரதமர் அஷ்ரப்பினை சந்தித்தார்.அப்போது தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இந்து கோயில் கட்ட அனுமதியளிக்குமாறு கோரிக்கைவிடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், தலைநகரில் இந்து கோயில் கட்ட தகுந்த இடத்தினை தேர்வு செய்திடுமாறு இஸ்லாமாபாத் மேம்பாட்டு ஆணைய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இஸ்லாமாபாத் நகரில் பழைமையான சில இந்துக்கோயில்கள் இருந்தாலும், அவை பயன்பாட்டில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின்  ஆளுங்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ரமேஷ்லால் என்ற இந்து எம்.பி.யாக உள்ளதும், அவரது வேண்டுகோளை ஏற்று தலைநகரில் அதுவும் 'இஸ்லாமாபாத்' என்று பெயரிலேயே இஸ்லாத்தை தாங்கியுள்ள நகரில் கோயில் கட்டிக்கொள்ள பிரதமர் இடம் அளிப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 
 
ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடமும், அரசிடமும் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.
 
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8 ] 


புதன், 8 ஆகஸ்ட், 2012

ஈமு கோழிப்பண்ணை; 200 கோடி மோசடி, உஷார்!


ரு காலத்தில் நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் பெருகி மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் ஏப்பம் விட்டு மாயமாய் மறைந்த செய்தி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நிதி நிறுவனங்கள் கவர்ச்சியான வட்டிகளை சொல்லி கவர்ச்சி நடிகைகளை  வைத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்ற முற்படுகையில் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு சினிமா போலீஸ் பாணியில் 'எல்லாம்' முடிந்த பின்பு சில ஏனோதானோ நடவடிக்கைகளை மேற்கொண்டு சிலருக்கு பணத்தை பெற்றுத் தந்தது. இன்றுவரை தங்களது முதலீட்டைப் பெற போராடிக்கொண்டு இருப்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள். 

இது ஒருபுறமிருக்க, நிதிநிறுவன பாணியில் சமீபகாலமாக ஈமு கோழிப்பண்ணை முதலீடு; பன்மடங்கு லாபம் என்ற பெயரில் மக்களை நோக்கி கிளம்பின பல நிறுவனங்கள். இவைகள் தங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலைக்கு அதாவது மக்கள் பணத்தை ஏப்பமிட்டுவதற்கு தோதாக சில நடிகர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தியதோடு கவர்ச்சியான பரிசுகளையும் அளித்து முதலீட்டாளர்களை கவர்ந்தார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி என்ற புகாரை தொடர்ந்து பெருந்துறையில் உள்ள சுசி ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து நிர்வாகிகள், பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஈமு கோழிப்பண்ணை மோசடி குறித்து மேலதிக விபரங்களுக்கு இந்த கட்டுரையை படியுங்கள்;
நாம் விழிப்புடன் இல்லையென்றால் வேட்டி கூட மிஞ்சாது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஹிஜ்ரி ஆண்டு தோன்றியது எப்படி?


நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)

உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
நூல்: ஹாகிம் (4287)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
(பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)

நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'
என்று குறிப்பிட்டார்கள்.
(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)

இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

நன்றி; அல்ஜன்னத் மாத இதழ்.

கவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே
நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், 
அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவரிடத்தில் ``அபூஉமாமாவே
தொழுகையில்லாத இந்த நேரத்தில் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கிறீரே என்ன
விஷயம்? என்று கேட்டார்கள். 

அதற்கு அவர் என்னோடுள்ள கவலைகளும் என்
மீதுள்ள கடனும் தான் யா ரசூல்லாஹ் என்று கூறினார். நான் உனக்கு
சிலவார்த்தைகளைச் சொல்லித் தரட்டுமா அதை நீர் கூறிவிடுவீரானால்
அல்லாஹ் உம்முடைய கவலையைப் போக்கி, உம்முடைய கடனையும் தீர்த்து
விடுவான் என்று கூறினார்கள்" சொல்லித்தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!
என்று அவர் கூறினார். காலையிலும் மாலையிலும் இந்த துஆவை ஓதுவீராக என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

``யாஅல்லாஹ் கவலை துக்கத்தை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்புத்
தேடுகிறேன். இயாலாமை, சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கோழைத்தனம், கஞ்சத்தனத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கடன் தொல்லை மனிதர்களின் அடக்குமுறையை விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்''.

இதை நான் கூறி வந்த போது அல்லாஹ் என்னுடைய கவலையைப் போக்கி,
என்னுடைய கடன் தீர வழிசெய்தான் என அபூஉமாமா(ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி[ரலி]
நூல் : அபூதாவூத்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காண்பித்து தந்த பிரகாரம்
அல்லாஹ்விடத்தில் உள்ளம் உருகி பிரார்த்திக்கும் போது அவன் எல்லாவிதமான
கஷ்டங்களையும் இலேசாக்கிவிடுகின்றான். அவனுடைய அருளை நம்மீது
சொரிந்து விடுகின்றான். அவனிடமே முற்றிலும் நம்முடைய முறையீடுகளை
வைக்க வேண்டும்.