வெள்ளி, 30 செப்டம்பர், 2011

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில்..

 

பரபரப்பான பரமக்குடியும்; பார்ப்போர் இல்லாத கோவையும்!

ரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்து  ஏற்பட்ட மோதலில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஏழுபேர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்த மாத்திரமே தமிழக அரசு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்க்கும், காயமடைந்தோருக்கும் நிவாரண உதவி அறிவித்தது. அதோடு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
 
மேற்படி  சம்பவம் நடந்த நாள் முதல் பரமக்குடி பரபரப்புக் குடியாக  மாறிவிட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைகோ, உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட வடநாட்டு தலைவர்கள்  உள்பட பலரும் பரமக்குடியை நோக்கி படையெடுத்தனர். கலவரத்தில் கொல்லப்பட்டவர் குடும்பத்தாரையும், சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு, உதவித்தொகையும் சில தலைவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
 
அதே போல் இந்த சம்பவம் நடந்த மாத்திரமே சட்டமன்றத்திலும், வெளியிலும் பல்வேறு கட்சிகள் கண்டனக் குரல்கள் எழுப்பின. மேலும் மதவாத பாஜக, இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று சொல்கிறது. கட்சிகளின் இந்த ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் அப்படியே வரவேற்கிறோம். கொல்லப்பட்டவர் குடும்பத்தாருக்கு நீதியும், நிதியும், காயமடைந்தோருக்கு நிதியும், நிவாரணமும் கிடைத்திட இக்கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
 
அதே நேரத்தில், சில ஆண்டுகளை பின்னோக்கி நமது நினைவை செலுத்தி கோவைக்கு சென்றால்,  அங்கே செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டதையடுத்து,
இந்துத்துவ சக்திகளோடு  கைகோர்த்துக்கொண்டு காவல்துறை குருவியை சுடுவது போன்று 19 முஸ்லிம்களை சுட்டுக் கொன்றதே? அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியோ, அவரது மகனோ, அல்லது இன்றைக்கு பரமக்குடியை நோக்கி படையெடுத்த அரசியல் கட்சித் தலைவர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லையே? இன்றைக்கு போலீசாரின் சில தவறான நடவடிக்கையால் ஏழு உயிர்கள் போனதை கண்டிப்பவர்கள், அன்றைக்கு இதே போலீசாரின் காவி சிந்தனையால் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை கண்டிக்க வில்லையே? இது குறித்து சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, ஏன் வெளியில் கூட சன்னமான குரலைக் கூட  இக்கட்சிகள் வெளிப்படுத்த வில்லையே?
 
பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சகோதரர்களை சகோதர வாஞ்சையோடு போய் பார்த்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட அன்று கோவைக்கு வந்து ஆறுதல் சொல்ல முன்வரவில்லையே? இதெல்லாம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், ஆட்சியாளருக்கும் சரி- அரசியல்வாதிகளுக்கும் சரி அது பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதை காட்டுகிறதல்லவா? இன்றுவரை அந்த கோவையில் போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும்- நிதியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறதே? ஏன் இந்த மாற்றந்தாய் மனப்பாண்மை? இது ஒழியவேண்டும். எங்கு யார் அநியாயமாக பாதிக்கப் பட்டாலும் அவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட ஆளும் வர்க்கமும், அரசியல்-சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலை பேணும் அனைவரின் எண்ணமாக உள்ளது.

நம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி  செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[அல்-குர்'ஆன் 5 ;8 ]

சனி, 24 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப் நூலைப் பற்றி பீஜே பேசும் போது, ''எந்த ஒரு மஸாயில்  பிரச்சினையை இந்த நூலில்  பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் வெறுக்கத்தக்கது; இதில் நான் என்ன சொல்றேன்னா தவிர்ந்து கொள்வது நல்லது என்று கிதாபுக்காரர் சொல்வது. ஆக மத்ஹபுங்கிற பேருல இப்பிடி பைத்தியம் வெளையாடுராங்கம்மா என்பார்.
இப்போது சற்றேறக் குறைய உள்ளாட்சித் தேர்தலில் இதே பாணியில் பீஜே பதில் சொல்லியுள்ளார்.
 
* சரியான சொல் பிரகாரம் பைலா படி உறுப்பினர் போட்டியிடுவது கூடும்.
 
*மிகச் சரியான சொல் பிரகாரம்  உறுப்பினரும் ஈமான் இழக்க  கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.[அதாவது ஈமானை  இழக்க நேரிடும் என்பதால் போட்டியிடக் கூடாது]
 
*தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வரலாம்.
 
* இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது என்பதுதான்.
 
உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?என்ற நமது கட்டுரையையொட்டி, உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்துள்ள பீஜே, 
 
''ததஜ விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த பைலாவை ஏற்றுக்கொண்டு தான் உறுப்பினர்கள் அதில்  அங்கம் வகிக்கின்றனர்'' என்கிறார்.
நாம் கேட்பது பைலாவின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், சில ஷரத்துகள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று பைலாவில் இருந்து பீஜே காட்டவேண்டும்.
 
''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது'' என்கிறார்.
நாம் கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும்.
 
''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க  வாய்ப்புள்ள   விதத்தில்  அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்கிறார் பீஜே.
 
நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட  தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி, மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும்.
 
அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவிப்பார்களா?
அதுமட்டுமல்ல,
  • உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் வட்டிவாங்கி சாப்பிடலாம்; அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில்  அன்னியப் பெண்ணுடன்    தணித்திருக்கலாம்;                        அவ்வாறு இருக்கும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
உள்ளாட்சியில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போன்று, மேற்கண்டவைகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுப்பினர்களின் சந்தேகத்தை நீக்குவார்களா?
 
''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது'' என்கிறார்.
 
நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார  மோசடி    செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி?
 
''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை   ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார்.
 
பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த ஆண்டு வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த ஆண்டு போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த ஆண்டுவரை தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா?
 
''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது'' என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே.
 
நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால் ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா?
 
''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்'' என்கிறார்.
 
கையெடுத்து கும்பிடுவது  மட்டும் தான் ஈமானை இழக்கும் காரியமா? ஊராட்சி அலுவலகம்- நகராட்சி- பேரூராட்சி- மாநகராட்சி அலுவலகங்களின் நடைமுறை அனைத்தும் ஈமானை பலப்படுத்தும் காரியம் என்று பீஜே சொல்வாரா? சட்டமன்றத்தில் நடக்கும் கூத்துக்களுக்கு கடுகளவும் குறைவில்லாமல் இங்கும் நடக்குமே? அப்படிப்பட்ட பதவிக்கு தனது உறுப்பினர் போட்டியிடலாம் என்று அனுமதி அளித்து விட்டு, பின்னர் அவர்களை வேறு வழியின்றி சிலகாரியங்களை  செய்யும் நிலைக்கு தள்ளி, பிறகு அதற்காக நடவடிக்கை என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாகாதா?
 
''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? என்னுடைய கருத்து என்னன்னா...? என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே?
 
ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து  சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்'ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்'ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்;
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார்  மவ்லவி பீஜே. பார்க்க;
அதில் நபி[ஸல்] அவர்கள்  ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்'ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள  காரணம்;

அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்;

 நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை  நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும்  காரணம் என்கிறார் பீஜே.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]

அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே  கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம்  செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது  ஹதீஸுக்கு முரணில்லையா..?

மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும்  நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே,  நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில்,  ''நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்'' என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
 நட்பைப்  பலப்படுத்துவதற்கா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே  இஸ்லாத்தை  ஏற்றுகொண்ட  உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த  உறவை   பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை  செய்ய வேண்டிய  நிலைக்கு  ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை  நபியவர்கள் திருமணம் செய்ததை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.
இந்தக் காரணமும் பொருந்தாக்  காரணேமயாகும். 
 
மேலும்,  திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே  இடைவெளி  எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள்  நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும்  அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை  எதிர்பார்க்காது தங்கள் தலைவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.
இந்தக் காரணம் சரியென  வைத்துக் கொண்டாலும்  ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி  வருமேயன்றி அனைத்து  திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும்  ஏற்க இயலாது
.
                                ***************************************
அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்'ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

திருச்சி இடைத்தேர்தல்; திருந்தாத ஜெயலலிதா!

டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமன்றி பத்து மாநகராட்சி மேயர் வேட்பாளர்களில் முஸ்லிம்களில் ஒருவருக்கு கூட ஜெயலலிதா வாய்ப்பளிக்கவில்லை. இதன் மூலம்  ஜெயலலிதா, முஸ்லிம்கள் விசயத்தில் நான் என்றைக்குமே மாறமாட்டேன் என்பதில் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது.
 
அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை பரவலாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் ஜெயலலிதா, அதற்காக பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கி நிறைவேற்றி வருகிறார். ஆனால் எந்த நிதி ஒதுக்கீட்டிற்கும் அவசியமில்லாத ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே செய்யவேண்டிய முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிப்பு பற்றி மட்டும் கண் திறக்க மறுக்கிறார்.
 
நாடெங்கிலும் நிலமோசடி குறித்து நடவடிக்கை எடுக்க தனி பிரிவை உண்டாக்கி, பல்லாயிரம் கோடி நிலங்களை மீட்டு, கோலோச்சிய பல முன்னாள்'களை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடிவக்பு சொத்துக்கள்  ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வக்பு வாரியத் தலைவர் பதவி நாமறிந்தவரை கவிக்கோவின் ராஜினாமாவுக்குப் பின் காலியாக உள்ளது. இவ்வாறான ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால், முஸ்லிம்களின் வாக்கு ஆயுதம் அவரை மாற்றும் வல்லமை கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.  

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன்;
 
''ஜாபர் சேட் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமியர். அதனால்தான் அவருக்கு இடையூறுகள் தரப்படுகின்றது என்கிறார் கலைஞர்.
 
இஸ்லாமியர்களுக்கு தான் ஆதரவானவர்  போன்ற தோற்றத்தையும், எதிரணியில் இருப்போர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவது உங்களுக்கு வழக்கமாகிப் போயிருக்கிறது. உங்கள் ஆட்சியில் ஏராளமான அப்பாவி இஸ்லாமிய  இளைஞர்கள்  கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை அந்த இஸ்லாமிய மக்கள் மறந்து விடுவார்களா?
 
திமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான். இவரும் சிறுபான்மை  சமுதாயத்தைச்  சேர்ந்தவர்தானே. இவரை நீங்கள் தொடர்ந்து களங்கப் படுத்திக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியாதா என்ன?
 
சிறுபான்மை இன இஸ்லாமிய மக்களின் மீது அன்பு கொண்ட நீங்கள், வாஜ்பாய் தலைமையிலான பாஜகவில், இரண்டு வருடம் படுக்கையில் இருந்த மருமகன் மாறனை அமைச்சராக தொடரச் செய்தீர்களே... அது எப்படி..?

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஆழ்வார் திருநகரி'யில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

 

ஆலந்தூரில் இதஜ'வின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

 

இதஜ'வின் ஃபித்ரா விநியோக படங்கள்[part 1]

 

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு அழைப்பிதழ்!

 

திங்கள், 19 செப்டம்பர், 2011

நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதாவைக் கண்டித்து ஐ.என்.டி.ஜே தடையை மீறி ஆர்பாட்டம்! ஏராளமானோர் கைதாகி விடுதலை.

  







உலக அமைதிக்காக உண்ணாவிரதம் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றும் மோடியையும் அவருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியது.

இதில் ஏரளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றனர். ஒரே நாளில் முடிவு செய்து போஸ்டரோ பிட் நோட்டிசோ இன்றி வெறும் எஸ்.எம்.எஸ். மூலம் திரட்டப்பட்டு நடை பெற்ற இந்த போராட்டம் அல்லாஹ்வின் அருளால் அனைத்து ஊடகங்களிளிலும் முக்கிய செய்தியானது. 

மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு என ஊடகங்களால் ஒரு பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போது ' எந்த முஸ்லிமும மோடியை ஆதரிக்க மாட்டான்' எனும் செய்தியை எடுத்து சொல்ல   போராட வேண்டிய தமிழக இயக்கங்கள் இந்த விசயத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும், 'நாங்கள் ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரைக் கூட்டுவோம்' என்ற இயக்கங்கள் எல்லாம் போஸ்டரில்  எதிர்ப்பை தெரிவித்து முடித்துக் கொண்ட நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைதாவோம் எனும் நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தியது அனைத்து தரப்பின் பாராட்டுதலை பெற்றுள்ளது. 

மேலும் லட்சக் கணக்கில் மக்களை திரட்டி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் நிகழ்சிகளுக்கு  கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்த போராட்டத்திற்கு கிடைத்தது  அல்லாஹ் என்னத்திற்கு தான் வெற்றியை தருகிறான் எண்ணிக்கைக்கு அல்ல என்பதும் நமக்கு புரிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
 

நரபலி மோடியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

 

மோடிக்கு எதிரான இதஜ'வின் போராட்டம்- மாலைமலர்.



சனி, 17 செப்டம்பர், 2011

வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;


இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின்  வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.

இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;

''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே.
படிக்க;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/

பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும்  அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார்.

பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்?

இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான  காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.

இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மார்க்கத்தில் நாளுக்கொரு பரிமானம் காணும் அறிஞர் பீஜேயும், அவரை தலைவராக கொண்டுள்ளவர்களும் அரசியல் விசயத்திலும் எடுத்த அவதாரங்கள் ஏராளம்; தாராளம். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு அதை மறந்து வாரியத்தை வாங்கி வீரியம் இழந்து விட்டார்கள். நேரடியான அரசியலில் குதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர் அணியினரை எகிறிக்குதித்து விமர்சித்த பீஜேயும் அவரை தலைவராக கொண்டவர்களும் இதோ அரசியல் எனும் சாக்கடையில்[அவர்கள் பாஷையில்] நீந்த இந்த உள்ளாட்சித் தேர்தலை வெள்ளோட்டம் பார்க்க தீர்மானித்துள்ளார்கள். ததஜவின் இந்த திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பார்ப்பதற்கு  முன்னால், அரசியல் குறித்த இவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை கொஞ்சம் அசைபோடுவது இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

கடந்த 1989 ஜனவரி  அல்ஜன்னத் இதழில் தேர்தல் குறித்து அறிஞர் பீஜே எழுதிய தலையங்கம்;

உங்கள் பொன்னான வாக்குகள்!
இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும்   லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.

நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989,

தேர்தலில் போட்டியிடும் யாரை தேர்ந்தெடுத்தாலும் அது தீமைக்கு துணை போனதாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் அறிஞர் பீஜே. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து தமுமுக தொடங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்  அரசியல் இல்லை. ஆனால் யாரை ஆதரிப்பது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் என்று அறிவித்து அரசியலுக்கு புது அர்த்தம் கண்டார். ஜெயலலிதா கருணாநிதி என தான் ஆதரித்த அணிக்கு பிரச்சாரமும் மேற்கொண்டார்.

திடீரென தமுமுகவிலிருந்து விலகுவதற்கு அல்லது விலக்கப்படுவதற்கு முன்பாக, 'தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய் விடும்' என்று ஏகத்துவத்தில் எதுகைமோனையோடு 2004  ல் எழுத்தோவியம் கண்டார்.

தமுமுகவிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட பின் தனக்கென ததஜவை உருவாக்கியபின், இது கொடி பிடிக்கும் கூட்டமல்ல; இது கொள்கை  கூட்டம் என்று கர்ஜித்தார். பின்னர் கொடி கண்டார்; கோஷமும் கொண்டார். அரசியலில் ஆதரவு நிலைப்பாடு கண்டார். அந்த கட்சிகளின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி, கருணாநிதிக்காக ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்காக கருணாநிதியும் பழுக்க காய்ச்சி பழுத்த அரசியல்வாதியாக கரை சேர்ந்தார்.

இந்நிலையில், இவரின் பரமஎதிரியான தமுமுக அரசியல் களம் கண்டவுடன் 'மண்ணைக் கவ்வ வைப்பேன்' என்று மனுநீதி சிந்தனையில் முழங்கினார். முதல் தேர்தலில் முன்னுரை எழுதிய மமக, அடுத்த தேர்தலில்  இவரை மண்ணைக் கவ்வ வைத்து வெற்றியுரை எழுதியது. சட்டமன்றத்தில் தடம் பதித்தது. இது இவரை ரெம்பவே பாதித்து விட்டது  என்பதற்கு  சான்றுதான் இந்த நேரடி அரசியல் பிரவேச அறிவிப்பு.


"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது."
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிக்கையில், ''ததஜ என்பது நேரடியாகவோ-மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடாது. நாங்கள் சீட்டுக்காக-நோட்டுக்காக சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்; எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உங்களிடம் வரமாட்டோம் என்று இதுவரை சொன்னதற்கு  மாற்றமாக, தனது அமைப்பின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பீஜே தலைமையிலான ஜமாஅத் சொல்கிறது. நாங்கள் பைலா வைத்திருக்கிறோம். அந்த பைலாப் படிதான் எல்லாம் செய்வோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் பீஜேயும், அவரை தலைவராக கொண்டவர்களும் 'உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு வரியை ததஜ பைலாவிலிருந்து காட்டுவார்களா?

இப்படி நாம் கேட்டவுடன் உறுப்பினர்கள் போட்டியிட பைலாவில் தடையிருக்கிறதா என்று வார்த்தை விளையாட்டு விளையாடுவார்கள். பைலாவில் அமைப்பின் செயல் திட்டங்கள் என்ற பகுதியில், 'உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. என்று உள்ளதே! பைலாவின் இந்த சட்டம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதா? உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்று காட்டமுடியுமா?

அடுத்து, இதே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பைலாவில் செயல்திட்டத்தில்  கூறும்போது, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும்  ஆதரவாக கருத்துக் கூறுவதோ, அல்லது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. மேலும் அனைத்து மட்ட நிர்வாகிகளும், அனைத்து மட்ட செயற்குழு-ப்துக்குழு உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தலில்  பிரசாரம் செய்யக் கூடாது'  என்று விதி இருக்கிறது. ஆனால் இதே
உள்ளாட்சி தேர்தலில்  உறுப்பினர்கள் மட்டும் போட்டியிடலாம் என்ற விதி இல்லையே? 

மேலும், ''உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்'' என்று உள்ளதே! எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்பது அமைப்பின் கொள்கையல்லவா? அதற்கு மாற்றமாக தேர்தலில் போட்டியிடுபவர் எப்படி இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும்?
மேலும் சில தவறுகளை செய்தவர்கள் மாநில-மாவட்ட-கிளை நிர்வாகத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறும் பைலா விதி, அந்த தவறுகள் பட்டியலில் 'உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவதையும்' குறிப்பிடுகிறதே?

அப்படியானால் பைலா எதை  தவறென்று சொல்கிறதோ எந்த தவறை செய்தால் சாதாரண கிளை நிர்வாகி பதவியை கூட பெற தகுதி இல்லை என்று சொல்கிறதோ, அந்த தவறை அதாவது தேர்தலில் போட்டியிடக்கூடிய அந்த தவறை  மாநில நிர்வாகமே செய்யத் தூண்டுவது அமைப்பு விதியை மாநில நிர்வாகமே மீறுவது ஆகுமே?

 ததஜவின் இந்த புதிய அறிவிப்பு பிரகாராம் இன்றைக்கு உறுப்பினர் போட்டியிட அனுமதி; உள்ளாட்சியில் போட்டியிட அனுமதி. நாளை நிர்வாகிகள் போட்டியிட அனுமதி; சட்டமன்றம்-நாடாளுமன்றத்திற்கு போட்டியிட அனுமதி. [மறைவான ஞானமா? என்று கேட்க வேண்டாம். ததஜவின் வெளிப்படையான நடவடிக்கையை  வைத்து செய்யும் கணிப்பு இது]

இதையெல்லாம் விட, பீஜே தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சியில் போட்டியிட்டு மேயரானாலும் தடுக்க முடியாதே? ஒரு வேளை அதற்கான முன்னோட்டம்தான் இந்த வெள்ளோட்டமோ? அல்லாஹ்வே அறிந்தவன்.

உங்கள் ஒட்டு ததஜ'வுக்கே!
-ஆக்கம்; முகவைஅப்பாஸ். 

இவரை[PJ]த் தெரிந்து கொள்ளுங்கள்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இவரை[PJ]த் தெரிந்து கொள்ளுங்கள்!

பீஜே., மார்க்கத்திலும், உலக விசயங்களிலும் முரண்பட்டவைகள், மற்றும் அவரை நோக்கி பலராலும் வீசப்படும் ஆதாரப்பூர்வ விமர்சனங்கள் இங்கே மொத்தமாய்....சத்தமாய்....!

இதோ இணைப்பு; http://mugavaiabbas.blogspot.com/ 

சபாஷ்! சரியான போட்டிதான்.

'விக்கி லீக்'. இந்த பெயரைக் கேட்டாலே நம்மூர் அரசியவாதிகள் முதல் நாடறிந்த நாட்டாமை அமெரிக்கா வரைக்கும் ஒரு கலக்கம் ஏற்படுவது அனைவரும் அறிந்த உண்மையே. காரணம் இந்த இணைய தளம் பல்வேறு நாடுகளின், நபர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் செய்தி எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு செய்தியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்த விக்கி லீக் உரிமையாளர் ஜூலியன் அசாங்சே '' உ.பி. முதல்வர் மாயாவதியின் ஒரு விஷயத்தை சமீபத்தில்வெளியிட்டுள்ளார். ''உத்தரபிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த 2007ம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் பார்த்த தனக்கு பிடித்தமான செருப்பை வாங்க விரும்பினார். அந்த செருப்பு மும்பையில் மட்டும் இருப்பதாக அறிந்து அதை வாங்க ஒரு ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார். அதில் விமானியுடன் மாயாவதிக்கு வேண்டிய அரசு அதிகாரியான மந்திரி சபை செயலாளர் ஷஷாங்க் சேகர் சிங், அவரது கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார். சில நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு செருப்பை வாங்க மாயாவதி பல லட்சம் ரூபாய் செலவிட்டது அவரது ஆடம்பரத்தை காட்டுகிறது''
இதுதான் அவர் சொன்ன தகவல் ஆகும்.
இதுபற்றி அறிந்து கடும் ஆவேசத்துக்கு ஆளான மாயாவதி, ''விக்கி லீக் கூறிய தகவல் ஆதாரமற்றது. என் மீதும், என் அரசாங்கத்தின் மீதும் பழி சுமத்துவதற்காக வேண்டுமென்றே சொல்லப்பட்ட அவதூறு செய்தி என்று கூறியுள்ள மாயாவதி,  ஒரு தலித் அரசாங்கத்துக்கு எதிராக பா.ஜனதா செயல்படுகிறது. அந்த கட்சிக்கு ஜூலியன் அசாங்சே துதிபாடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். அவரை அவரது நாடு (சுவீடன்) அங்குள்ள நல்ல மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இல்லையென்றால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால், ஆக்ராவில் உள்ள எங்களது மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று  ஜூலியன் அசாங்சே  மீது ஆவேச தாக்குதல் தொடுக்க,
 
மறுபுறமோ மன நல காப்பகத்தில் சேரத்தயார் என்றும், உடனடியாக ஜெட் விமானம் அனுப்புங்கள் என்றும்,  வரும்போது இங்கிலாந்தில் பிரபலமான, மிக அருமையான ஒரு ஜோடி செருப்பும் மாயாவதிக்காக வாங்கி வருகிறேன். ஜூலியன் அசாங்சே பதிலடி கொடுத்துள்ளார். சபாஷ்! சரியான போட்டிதான்.

ஊருக்கு உபதேசம் செய்யும் ஜெயலலிதா.

ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நடைபெ‌‌ற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அத்துறையின் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில் அளித்துப் பேசுகை‌யி‌ல், முதல்அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும்போது, 'மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று பேசியுள்ளார்.
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை அதிகம் வலியுறுத்தும் அரசியல் கட்சிகளில் பாமகவும் அதன் நிறுவனர் ராமதாஸும் முதலிடத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் கூற்று மறைமுகமாக ராமதாஸை சாடும் வகையில் உள்ளதாக சில அரசியல் நோக்கர்கள் கருதினாலும், ராமதாஸ் மட்டுமன்றி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய அமைப்புகளும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா, 'யார் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்'களோ அவர்களை குறிப்பிட்டு சொல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சிப்பது மதுவிலக்கை கொண்டு வந்து மனித குலத்தை காக்க நினைக்கும் அனைவரையுமே இழிவுபடுத்தும் வார்த்தையாகும்.
 
மேலும், ஜெயலலிதா இவ்வாறு சொல்வது அவரது பலவீனத்தையும் ஒரு சேர காட்டுவதாக உள்ளது. ஒரு புறம் பூரண மதுவிலக்கு பேசிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் ஜெயலலிதா, அத்தகைய இரட்டை வேடதாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை மக்கள் முன் அடையாளம் காட்டுவதை விடுத்து இவ்வாறு பொத்தாம் பொதுவாக புகார் கூறுவது அறிவுடமை அல்ல. ஏனெனில், இதே சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன், "தி.மு.க.வினருக்கு சிறைவாசம் சுகவாசமாக இருப்பதாகவும்,"நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும், பாதிப்பேர் பெயிலிலும் இருக்கின்றனர்" என்று கூறியபோது, குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா,

"தி.மு.க.,வினரிடம் இப்போது ஆட்சி கிடையாது; அதிகாரம் கிடையாது. அவர்கள் எப்படி செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசிகளாக இருக்க முடியும்? அவர்களுக்கு இப்போது என்ன செல்வாக்கு இருக்கிறது? உறுப்பினரின் பேச்சு, சிறைத் துறை அதிகாரிகளை குற்றம்சாட்டுவது போல் இருக்கிறது. பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எந்த சிறையில், எந்தக் கைதி சுகவாசியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, உறுப்பினர் கூற வேண்டும்" என்றாரே. ஜெயலலிதாவின் இந்த அறிவுரையின்படி யார் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இவர் மட்டும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல அல்லவா உள்ளது. எனவே, மதுவிலக்கு விசயத்தில் வெட்டி அரசியல் பேசிக்கொண்டிருக்காமல், அண்ணாவின் வழியில்  தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமுல்படுத்த ஜெயலலிதா முன்வரவேண்டும்.

சனி, 10 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால்,
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான்.

என்று அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா? [நவூதுபில்லாஹ்]. எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related

 

வன்முறைக்கு முடிவு எப்போது?

ந்தியாவில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அதுவும் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலேயே நாடாளுமன்ற வளாகம், உயர்நீதிமன்ற வளாகம் போன்ற கேந்திரமான பகுதிகளிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடை பெறுவது அதிர்ச்சிக்கு உரியதாகும்.

தலை நகரமே பாதுகாப்பு இல்லாத பகுதியாகி விட்டது என்று உள்துறை அமைச்சரே சொல்லும் நிலை என்றால்  - இதன் தன்மையைத் தெரிந்து கொள்ள லாமே!

இத்தகு வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். அதே நேரத்தில் இதற்குமுன் வன் முறையில் ஈடுபட்டவர்கள்மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது மிகவும் முக்கிய மானதாகும்.

குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு; இன்றைக்கு 19 ஆண்டுகள் ஓடி விட்டன. குற்றவாளிகள் புலனாய்வு செய்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; லிபரான் ஆணையம் பட்டியலிட்டே கொடுத்து விட்டது. இதற்கு மேலும் தாமதத்திற்கு என்ன காரணம்? குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றவர்கள் இந்தியாவின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து விட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் லிபரான் ஆணையம் முன்னாள் பிரமதர் அடல்பிஹாரி வாஜ்பேயிக்கு குற்றவாளிகள் பட்டியலில் இடம் கொடுத்துள்ளது.

பி.ஜே.பியும், சங்பரிவார்க் கும்பலும் இதனை ஆட்சேபித்தாலும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் அடித்துச் சொல்லியிருக்கிறாரே - பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயிக்கு நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறியுள்ளாரே!

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது உண்மையென்றால் வாஜ்பேயி, அத்வானி உட்பட குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டாமா?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? அரசு அதிகாரத்தை முற்றிலும் பயன்படுத்தி முண்டா தட்டி சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தவர்தானே நரவேட்டை நரேந்திர மோடி?

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாரா இல்லையா?

உள்துறை அமைச்சர் படுகொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்த குற்றவாளி களுக்குக் கூட தண்டனை வாங்கிக் கொடுக்காதது சரியா?

ஹரேன் பாண்டியாவின் கொலையின் பின்னணி யில் அம்மாநில முதல்வரே இருந்தார் என்று ஹரேன் பாண்டியா குடும்பத்தாரே குற்றஞ்சாட்டியுள்ளனரே!

இதற்கெல்லாம் என்னதான் பரிகாரம்? மாலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் ஏன் இதுவரை தண்டிக்கப்படவில்லை?
மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, ஆஜ்மீர்தர்கா போன்ற இடங்களில் நடைபெற்ற வன்முறை வேலைகளில் முக்கிய பங்காற்றிய சுவாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுடன், இவற்றில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் பேர்வழிகளை அடையாளம் காட்டி விட்டாரே!

ஒப்புதல் தெரிவித்தவர் அசாதாரண மனிதரும் அல்லவே! ஆர்.எஸ்.எசுடன் நீண்ட கால தொடர்புடையவர். அதன் பிரச்சாரகர், வனவாசி கல்யாண் ஆசிரமம் நடத்தி வருபவர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியுடன் பல மேடைகளில் பேசியவர் ஆயிற்றே! இவரின் சாட்சியம் மிக மிக முக்கியமானதல்லவா!

மும்பை தாஜ் ஓட்டல் வன்முறையில் காவல்துறை மேலதிகாரி ஹேமந்த்கர்கரே கொலையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு உள்ளது என்பது இவரின் வாக்குமூலத்தால் அறியப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்து நடந்திருக்கிறது என்பது தெளிவாகவில்லையா?

வெறும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே காலத்தைக் கழிக்கலாமா? தாங்கள் பாதிக்கப்பட்டதற்குப் பரிகாரம் கிடைக்கவில்லையே என்ற அவர்களின் கேள்வியில் நியாயம் இருப்பதை மறுக்க முடியுமா?

நியூட்டன் விதியைப்பற்றி எல்லாம் பேசும் நரேந்திரமோடி அங்கம் வகிக்கும் கட்சியினருக்கு இது தெரிந்திருக்க வேண்டுமே!

எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக வன்முறை யாளர்கள் தண்டிக்கப்படுகிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு வன்முறைகளின் வாலாட்டமும் அடங்கும் என்பது உளவியல் ரீதியான உண்மைதானே?
 
நன்றி;விடுதலை.10 செப்டம்பர் 2011

 

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல்குரு கடும் கண்டனம்

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து,  பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவரது அறிக்கையில்,  ''டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது...' என்று கூறியுள்ளார்.

அப்சலின் அறிக்கையை படிக்கும் போது, தீவிரவாதத்தையோ, அப்பாவிகள் கொல்லப்படுவதையோ  அவர் விரும்பக்கூடியவர் அல்ல என்பதை உணர்த்துகிறது. ஆயினும் அவர் நாடாளுமன்றத் தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளியாக கருதப்படுகிறார். அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு பற்றிய தனது தீர்ப்பின் போது உச்சநீதிமன்றம், ''மரணதண்டனை விதிக்கப்பட்டால் தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்'' என்று கூறித்தான் அப்சலுக்கான மரணதண்டனையை உறுதிப்படுத்தியதேயன்றி, அப்சலுக்கெதிரான  வலுவான சான்றுகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் உலகறியும். எனவே உண்மை எல்லா நேரமும் உறங்காது. உண்மை ஒருநாள் விழிக்கும்; அப்போது உண்மைக் குற்றவாளிகள் உலகின் பார்வையிலிருந்து மறையமுடியாது. 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அப்சல் குரு பற்றிய பேச்சு: என் மீது வழக்கு போட தயாரா? பா.ஜனதாவுக்கு உமர் அப்துல்லா சவால்

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அடைந்த 3 பேரின் தண்டனையை குறைக்க தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல, நாங்களும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக, காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக்கொள்வீர்களா?' என்று காஷ்மீர் முதல்வர்  உமர் அப்துல்லா சமீபத்தில் பேசி இருந்தார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில்  உமர்  அப்துல்லா நிருபர்களிடம் பேசுகையில், 'நான் ஒரு இந்திய பிரஜை. எனவே எனக்கு இந்தியாவில் நடக்கும் காரியங்கள் பற்றி கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. எனது கருத்து தவறு என்றால், என் மீது பா.ஜனதா கட்சியினர் கோர்ட்டில் வழக்கு போட தயாரா?என்று கேட்டார்.
 
நன்றி; தினத்தந்தி செப்.5 -2011

சிறை'யூரப்பாவாக மாறப்போகும் எடியூரப்பா...?

ர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கடவுள் பக்தியும் அதையும் தான்டி ஜோதிடத்திலும் மூட நம்பிக்கைகளிலும் அவருக்குள்ள பற்று அலாதியானது. கோயில்களுக்கு இவர் ஆட்சியில் இருந்தபோது தாரளமாக அள்ளி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் அவரது பதவியை அவரால் வணங்கப்பட்ட எந்த கடவுளாலும்[?] காப்பாற்ற  முடியவில்லை. இப்போது 'முன்னாள்' ஆகியிருக்கிறார்  எடியூரப்பா.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் வழங்கப்பட்டது. இந்த பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று  செய்திகள் கூறுகின்றன.
 
சனிஸ்வரபகவான் கோவிலுக்கு மட்டுமன்றி, எடியூரப்பா கோயில்களுக்கு அள்ளி வழங்கிய  நன்கொடைகள் அனைத்தும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதா? அல்லது அரசு மற்றும் ஊழல் நிதியிலிருந்து வழங்கப்பட்டதா என்பதை சட்டம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இப்போது எடியூரப்பா அள்ளி வழங்கிய பட்டியலை பார்ப்போம்;
  • பெங்களூர் அருகே இருக்கும் மாதா அமிர்தானந்தமாயி நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி மற்றும் 15   ஏக்கர் நிலம்.
  • வொக்கலிக்கர்களின் அடிச்சுச்சங்கிரி என்ற தளத்திற்கு ரூ. 5 கோடி.
  • எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.
  • ஆந்திராவில் திருப்பதியில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • கேராளவில் சபரிமலையில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • திபெத்தில் மானசேராவர் செல்லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.
  • குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.
  • சிக்மகளூர் ரம்பாபுரி ஸ்ரீ சோமேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.
  • சிக்மகளூர் ஹரிஹரபுரா மடத்திற்கு ரூ. 1 கோடி.
  • 15 ம் நூற்றாண்டு துறவி கவிஞர் கனகதாசாவின் பிறந்த ஊரான காகிலேனேவிற்கு ரூ. 10 கோடி.
  • சிரவனபெலகோலா பாஹுபலி கோவில் வளாகத்திற்கு ரூ. 5 கோடி.
  • சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா பிறந்த குடலசங்கமாவில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 5 கோடி.
  • மந்த்ராலயா விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • ஹரித்வார் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
மேற்கண்ட பட்டியல் மொத்த தொகை 59 .75 கோடியாகும்.
[புள்ளி விவரங்கள் நன்றி; இந்தியாடுடே டிசம்பர் 2010 ]
 
இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசும்- சி.பி.ஐயும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். மேலும் கோடிகளை கொட்டியும் 'எடி'யின் நாற்காலி தப்பவில்லையே? அதோடு போனாலும் பரவாயில்லை. நிலமோசடி வழக்கில் எடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளதால் எப்போது சிறைக்கதவு உள் வாங்குமோ என்ற கவலையில் வேறு இருக்கிறார் பரிதாபமான நிலைதான் எடியூரப்பாவுக்கு. 

மாவோயிஸ்ட்'களின் ஆட்சியில் மனுநீதிச் சட்டமா?

லகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டுகளின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச்சார்பற்ற பாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத்தான் அவர்களும் இருக்கிறார்கள். இப்போது அங்கே மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.
 
ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.
இந்த மசோதாவுக்கு  பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2001-2006) இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது - பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் கூட, இச்சட்டம் வெற்றிபெற முடியவில்லை என்பதால் இந்துத்துவாக்களே இக்கோரிக்கையை என்றாவது ஒருநாள் உச்சரிக்கும் 'ஸ்லோகமாக' மாறிவிட்ட நிலையில், சின்ன நாடான அதுவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி நடைபெற்று  வரும் நாடான நேபாளத்தில், அதுவும் மதசார்பற்ற கொள்கை என்று கூறப்படும் கம்யூசத்தின் மறுபதிப்பான
மாவோயிஸ்டுகள் ஆட்சியில் மனுநீதி சட்டமா? என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். நேபாள ஆட்சியர் இந்த விஷப் பரிட்சையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கிறார்கள். நேபாளம் கவனிக்குமா?



புதன், 7 செப்டம்பர், 2011

இதஜ'வின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்!

இதஜ சார்பாக மதுரை மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம்!

மரணதண்டனை மாய்க்கப்பட்ட வேண்டுமா?

1991  மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இறுதியாக  உச்ச நீதிமன்றம் நளினி,  முருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். முதலில் இவர்களின் கருணை மனு ஆளுனரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் நளினி நீங்கலாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து இந்த மூவருக்கும் செப்டம்பர் 9 ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாயின.
 
இந்த நிலையில், ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் இந்த மூவரையும் தூக்கிடக் கூடாது என்ற கோஷத்துடன் களமிறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விஷயத்திற்காக தீக்குளித்து மாண்ட சம்பவங்களும் நடந்தேறின. இந்த தூக்குத் தண்டனை கைதிகள் விஷயத்தில் எனக்கு எந்த அதிகாரமுமில்லை என்று ஆரம்பத்தில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் 'நமக்கேன் வம்பு' என்ற பாணியில், இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் ஆர்வலர்களின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.
 
காஷ்மீர் மாநில முதல்மந்திரி உமர் அப்துல்லா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
''ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினரும் மற்றவர்களும் மவுனமாக இருப்பார்களா? இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்'' என்று அவர் டுவிட்டர் இணைய தளத்தில் கேட்டு உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றால், உமர்  அப்துல்லாஹ் கேள்வியும் நியாயம் தானே?
மற்றொருபுறம்  இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இவர்களின் தண்டனையை  எட்டு  வாரங்களுக்கு  தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவர் தூக்குத் தண்டனை விஷயத்தில் மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக தூக்குத்   தண்டனையே  கூடாது என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.
 
முதலாவதாக தூக்குத் தண்டனை கூடாது என்று இன்று கோஷம் போடுபவர்கள் உண்மையில் தூக்குத் தண்டனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானால், அவர்களின் கோஷம் இவ்வளவு நாள் எங்கே மறைந்திருந்தது? ஏனெனில் இந்தியாவில் தூக்குத் தண்டனை முதன் முதலாக இந்த மூவருக்குத் தான் விதிக்கப்பட்டுள்ளதா? இதுவரை எவருக்குமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வில்லையா? அந்த தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதில்லையா? சமீபத்தில் கூட குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதே! அப்போது இந்த மனித உரிமை போராளிகள்[?], '' தூக்குத் தண்டனையா? கூடாது. இந்த தீர்ப்பு செல்லாது. நீதிமன்றமே! தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று குதிக்கவில்லையே? காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா? தகுந்த சான்றுகளின்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குரு கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதே! அந்த வகையில் அப்சலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத்தண்டனை உறுதிப் படுத்தப்படும்போது இதே போன்று இந்த மனிதநேயர்கள்[?] அப்சலை தூக்கில் போடாதே என்று போராடுவார்களோ?
 
மேலும் ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தூக்கு கயிறை எதிர்நோக்கியிருக்க, இவர்களோ இந்த மூவரை மட்டும் முன்னிலைப் படுத்தி போராடுவதன் மூலம் இவர்களின் நோக்கம் என்பது தூக்குத்தண்டனையை ஒழிப்பதல்ல; மாறாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான மூவரை காப்பதே என்று புலப்படுகிறது. மேலும் இந்த மூவரின் உயிர் பற்றி இரக்கம் காட்டும் இவர்கள், இந்த மூவரின் தலைவரான பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இலங்கையில் முஸ்லிம்களை கருவருத்தபோது, இன்று மனிதநேயம் பேசும் இந்த வைகோ சீமான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வாய்திறந்ததுண்டா? ஏன் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா? அப்போது இவர்களுக்கு தமிழ் உணர்வு எங்கே போனது? ஒரு விசயத்தில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்படுவது தமிழனே என்றாலும் அவன் இந்துவாக இருக்க வேண்டும் அல்லது விடுதலைப் புலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தமிழ் ஆர்வலர்கள் ஆர்த்தெழுவார்கள். ஏனெனில் இவர்களில் ஒருவர், பால்தாக்கரேயை வைத்து 'இலங்கை இந்துத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' நடத்தியவர்தானே!
 
அடுத்து இந்த மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்னவெனில், இந்த மூவரும்  ஏற்கனவே இருபது ஆண்டுகளை கடந்து சிறையில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் தூக்குத் தண்டனை என்பது அவர்களுக்கு விதிக்கும் இரண்டாவது தண்டனையாகும் என்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், இந்த தாமதம் என்பது அவர்கள் சட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கருணை மனுக்கள்  அனுப்பியதால் ஏற்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். சரி! குற்றவாளிகள் என்றும் அதிலும் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட இம்மூவரின் சிறை ஆண்டை கணக்கிடும் இவர்கள், வெறும் விசாரணைக் கைதிகளாக முஸ்லிம்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்ததை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? மேலும் இந்த மூவரின் தண்டனை நிறைவேற்றப்படும் விசயத்திலே ஏற்பட்ட தாமதம் குறித்து, ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன், ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,          
 
'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?

'1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஏதோ இந்த மூவர் விசயத்தில் தான் இரண்டு தண்டனை என்ற தோற்றம் உண்டாக்கப் படுவதை இந்த அதிகாரியின் கூற்று தவிடு பொடியாக்குகிறது.

அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கே கவனிக்கவேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விசயத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணைமனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தால், தாமதமின்றி உரிய தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்தால் அன்றைக்கு மக்களும் ஏற்றிருப்பார்கள். காலம் மனிதனை மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால் ராஜீவ்காந்தி மட்டுமன்றி 15 பேர் படு கோரமாக ரத்தச் சகதியாக கொல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து, இன்றைக்கு குற்றவாளிகள் மீது இரக்கப்படும் மனநிலையை உண்டாக்கி விட்டது. ஜனாதிபதியின் கூடுதல் தாமதம் சிலரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசவும்- போராடவும் வாய்ப்பை உண்டாக்கி தந்துள்ளது. மனிதர்களுக்கு இரக்கம் காட்டலாம் அது மனிதநேயம்; ஆனால் மனிதம் மறந்து மனிதனைக் கொல்லும் எவருக்கும் கடுகளவும் இரக்கம் காட்டக் கூடாது. அதனால்தான் இஸ்லாம் பாதிக்கப்படவன் இடத்திலிருந்து ஒரு செயலை அணுக சொல்கிறது. ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டால் அந்த உயிரைக் கொன்ற கொலைகாரனையும்  கொலை செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். ராஜீவோடு கொல்லப்பட்ட 15 பேரின் குடும்பத்தாரிடம், உங்கள் குடும்ப நபரை கொன்றவர்களுக்கு என்ன தண்டனையளிக்க  வேண்டும் என்று அன்றைய தினம் கேட்கப்பட்டிருக்குமானால் அவர்கள் சொல்வார்கள்; இவ்வளவு கொடூரமாக கொன்ற அந்த பாவிகளை பொது இடத்தில்  கண்டம் துண்டமாக  வெட்ட வேண்டும் என்று. அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.

நல்லறிவாளர்களே!  கொலைக்குப் பழி  தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [அல்-குர்'ஆன் 2:179 ]

அதே நேரத்தில் இன்னொரு வழிமுறையையும் இஸ்லாம் காட்டித்தருகிறது;

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.[அல்-குர்'ஆன் 2:178]

அதாவது கொல்லப்பட்டவரின் வாரிசுகள் உரிய நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்தால் அந்த கொலையாளியை தண்டிக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இஸ்லாம். இறைவேதத்தின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மற்றும் 15  பேரை கொன்ற கொலையாளிகளை மன்னிக்கும் தகுதி ராஜீவ் குடும்பத்திற்கும், கொலையுண்ட ஏனையவர்களின் குடும்பத்திற்கும் மட்டுமே உரித்தானது. ஆனால் இந்திய சட்டப்படி கொலையுண்டவருக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாத ஆளுநருக்கும்- ஜனாதிபதிக்கும் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் வழங்கியதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும், பிரச்சினைகள் உருவாவதற்கும் பிரதான காரணமாக உள்ளது.

எனவே என்ன  தான் மனிதன் மூளையை கசக்கி சட்டம் இயற்றினாலும், அது எல்லா நேரத்திலும் உரிய தீர்வைத் தராது. எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டமே எல்லாநேரமும், எல்லா விசயத்திற்கும் முழுமயான தீர்வை தரும் என்பது  ராஜீவ் கொலை வழக்கு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேலும், மரணதண்டனை நடைமுறையில் இருக்கும்போதே பயமின்றி ஒரு பிரதமரை கொத்துக்கறியாக கொடூரமாக கொன்றவர்கள் இருக்கும் நாட்டில், மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் நாடு என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே மரணதண்டனை விஷயத்தை அரசியலாக்கி குளிர்காயும் அரசியல் சூழ்ச்சியை இனங்கண்டு மக்கள் விழிப்படைவது  நல்லது.

சனி, 3 செப்டம்பர், 2011

முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!

بسم الله الرحمن الرحيم
றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன்  அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம்,
''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம்.
 
இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,
 
ஒரு சட்டத்தில்  ஒரே வசனத்தை ஆதாரமாக  வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில்  சத்தமில்லாமல் மாற்றியது.
 
குர்'ஆனிலும் ஹதீஸிலும்  இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது.
 
இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இமாம்கள் மாற்றினார்களே  என்கிறார்கள்.  எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில்  மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட  சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை  சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள்.  அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில்  சகோதரர்கள்  கேட்பதுதான் சரியானது. 
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்புடன் முகவைஅப்பாஸ். 
 

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
 
பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?

நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர்.

பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.

யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-

நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)

இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.

ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.

அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.

தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.

தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி,
 
''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 
மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;
  • தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். 
  • முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே  ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
  • இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
  • முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.

சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

தனி இட ஒதுக்கீட்டால் பலனில்லை; பீஜே ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக குடந்தையிலும், சென்னையிலும் அப்பாவி முஸ்லிம்களின் கோடிகளை கொட்டி மாநாடு நடத்திய பீஜே, ''இடஒதுக்கீடு நமக்கு கிடைத்து விட்டால் நமது சமுதாயம் எங்கோ போய்விடும் என்று அளந்து விட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இட ஒதுக்கீட்டால் எந்த பலனுமில்லை என்று அவரே சொல்லும் காட்சி. சில மாதங்களுக்கு முன்னால் மூன்டிவி'யில் பாஜகவின் தமிழக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உடன் நடந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்;  

பீஜே; தலித் சமுதாயத்திற்கு தனி ரிசெர்வேஷன் இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் தந்துவிட்டால் அந்த  தொகுதியில் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் முஸ்லிமைத் தான் நிறுத்த முடியும். அதில் எந்த கட்சி ஜெயித்தாலும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றுவிடுவார்.

தொகுப்பாளர்; நீங்க சொல்ற மாதிரி யாராவது ஒரு கட்சி சார்பா வர்ற முஸ்லிம்கள் அந்த கட்சித் தலைமை சொல்றதைத் தானே கேட்பார். அப்புறம் எப்பிடி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நன்மை செய்வார்?

பீஜே; நன்மை செய்ய முடியாது. அரசியல பொருத்தவரைக்கும் கூட்டணில நிண்டு நம்மலே போட்டியிட்டாலும்...

தமிழிசை  குறுக்கிட்டு; அந்த கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்தாலும் கட்சி தலைமையை மீறி அவரால் தடுக்க முடியாதே?

பீஜே; தடுக்கமுடியாது. அதுல எந்த டவுட்டும் கெடையாது.  நாங்க என்ன சொல்றம்னு கேட்டா இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது. அதுவும் அந்த அர்த்தத்துல தான் வரும்.

தமிழிசை; அப்ப அதுல பயன் என்ன?

பீஜே; முஸ்லிம்களுக்கு பங்கு இருக்குன்றதுதான். அதுல ஒரு திருப்தியே தவிர அவங்களால சமுதாயத்துக்கு ஒன்னும் இல்ல.

பார்க்க வீடியோ; http://www.youtube.com/watch?v=QxTu28tlJQU&NR=1

அன்பு சகோதர்களே! நமக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்துவிட்டால் நம்ம சமுதாயம் சார்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் சென்றால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பார்கள் என்று முழங்கிய பீஜே, இந்த விவாதத்தில் ரிசெர்வேஷனில் ஜெயிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் ஏற்படாது என்கிறார். வெறும் திருப்திக்குத் தான் என்கிறார். வெறும் திருப்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஏன் மாநாடு நடத்தினார்?

அடுத்து மமக கட்சி, கலவரத் தடுப்பு மசோதா- இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதாவிடம் வாய் திறக்க முடியவில்லை என்று சாடும் பீஜே, இந்த வீடியோவில் 'இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது என்கிறார் . அப்படியானால் இவர் ஜெயிச்சுப் போனாலும் இதுதான் நிலை எனும்போது மமகட்சியை மட்டும் ஏதோ ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது போன்று விமர்சிப்பது சரியல்ல என்பது இவரது வாதத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். ஆக இவரது மாநாடுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்தரக் கூடியது அல்ல என்று அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இதற்கு பிறகாவது 'தீவுத்திடல் மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமருக்கு ஒரே வாந்தி பேதி; அண்ணனுக்கு உடன் அழைப்பு' என்ற அலட்டல் செய்திகளை அனுப்பும் அவரது அபிமானிகள் திருந்தட்டும்.