வெள்ளி, 25 நவம்பர், 2011

"வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்'

புது தில்லி, நவ. 24: வளைகுடா நாடுகளில் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

 வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, அங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் வயது 30க்குக் குறையாமல் இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பணிக்கான ஒப்பந்தம் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளோம். முன் கட்டணத்துடன் கூடிய கைத்தொலைபேசியை பணிப் பெண்ணிடம் அவரை வேலைக்கு வைத்திருப்பவர் தர வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பணிப் பெண்ணை வேலைக்கு அமர்த்தும் ஒருவர், பிணைத் தொகையாக ரூ. 1.3 லட்சத்தை இந்தியத் தூதரகத்தில் அந்தப் பெண்ணின் சார்பில் செலுத்த வேண்டும் என்றும் வயலார் ரவி குறிப்பிட்டார்.
 
நன்றி; தினமணி 25 Nov 2011
 
 
 

வெள்ளி, 18 நவம்பர், 2011

தேசிய கொடி அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான்- சுஷ்மாவுக்கு வாரண்டு!

மத்திய பிரதேச மாநிலம் செகோர் என்ற இடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார பாரதீய ஜனதா தலைவர் நஸ்ருல்லா கஞ்ச் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதையொட்டி பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி பாரத மாதா போல் வேடம் அணிந்து இருந்தார். பின்னர் அவர் மேடையில் ஏறி சுஷ்மாசுவராஜ், முதல்- மந்திரி சவுகான் மற்றும் பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அப்போது சிறுமி தேசிய கொடியை தலை கீழாக பிடித்து இருந்தார். இதை தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை.
 
இதுபற்றி செகோர் நகரைச் சேர்ந்த துவாரகாஜாட் என்பவர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் சுஷ்மா சுவராஜுக்கு நடந்த பாராட்டு விழாவில் தேசிய கொடியை தலை கீழாக பிடித்து அவமதிக்கப்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் செய்தேன். ஆனால் எனது புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர். எனவே சுஷ்மா சுவராஜ், சவுகான், அப்போதைய கலெக்டர், வட்டார தலைவர் ஆகியோர் மீது தேசிய அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  
 
நீண்ட காலமாக வழக்கு விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாபர்இக்பால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரி சவுகான், கலெக்டர் வட்டார தலைவர் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத வாரண்டு பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
 
இதையடுத்து முதல்- மந்திரி சவுகான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஊப்ளியில் தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக அப்போதைய முதல்-மந்திரி உமா பாரதிக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு கூறிய போது அவர் பதவி விலகினார். அது போல் சவுகான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மானக் அகர்வால் கூறினார்.
 
நன்றி;மாலைமலர்.

பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி

பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். "பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது" என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர்,
 
''பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது.
 
மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.
 
ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.
இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களை போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை. 
ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.
 
எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
 
இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்...'' என்றார் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர், பத்திரிகையாளர்களுக்கு யாத்திரைக்கான ரதத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த மீடியாக்களும், புகைப்படக் கலைஞர்களும் தங்கள் கேமிராக்களால் ரதத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினர்.
 
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் அபு பக்கர், மாநிலச் செயலாளர்களான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல், கலிமுல்லாஹ், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தக்வா மொய்தீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், முஹம்மது இஸ்மாயில் மற்றும் தென் சென்னை மாவட்டநிர்வாகிகளான ஆசாத் நகர் சேட், அமைந்தகரை யூனுஸ், ஹபீப், அலுவலக உதவியாளர் மதுக்கூர் முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அவரது கட்சி பிரச்சார வாகனத்தை ரத யாத்திரையுடன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


உஷார்! உஷார்!! உஷார்!!!

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வாரஇதழ்.

வியாழன், 17 நவம்பர், 2011

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில்....

 

அதிகாரம் அறியாத எதிர்கட்சித் தலைவர்.

''இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும்.,  என்ற குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அரசர் எனும் ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அவருக்கு 'இடித்துரைத்து' புரியவைப்பவர் இல்லையெனில் அரசரை தனியாக எவரும் கெடுக்கவேண்டியதில்லை. அவரே கெடுவார் என உணர்த்தும் மேற்கண்ட குறளை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி ஆட்சியாளரை செம்மைப் படுத்த வேண்டியவர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அவரது சகாக்களுமாவர்.
 
ஆனால் தமிழகத்தில் சமீபத்திய இருபது ஆண்டுகளில் அப்படி ஒரு சிறந்த எதிர்கட்சித் தலைவரை நம்மால் பார்க்கமுடியவில்லை. ஒன்று எதிர்கட்சித் தலைவர் ஆட்சியாளரின் எதிரிக்கட்சியாக நடந்துகொள்கிறார். இல்லையேல் யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று சட்டமன்றம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. கருணாநிதி முதல்வரானால் எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றம் செல்வதில்லை. ஜெயலலிதா முதல்வரானால் கருணாநிதி சட்டமன்றம் செல்வதில்லை. ஆனால் இவர்களுக்கு மாற்று என்று அறியப்பட்ட தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் சட்டமன்றம் செல்வதில்லை. செல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், தான் அவைக்கு செல்லாமல் இருப்பதற்கு அவர் கூறும் காரணம் அதைவிட  மட்டமானது.  
 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், ''இன்றைக்கு நான் சட்டமன்றத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் (ஜெயலலிதா) அன்றைக்கு சட்டசபைக்கு போனார்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்'' என்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் வகுப்புக்கு செல்லாத மகனிடம் 'ஏன்டா பள்ளிக்கு போகல'ன்னு தாய் கேட்க, 'நான் மட்டுமா போகல; போன வருஷம் எதிர்வீட்டு செல்வி பள்ளிக்கு போகலையே? அதுக்கு முந்தின வருஷம் அடுத்த வீட்டு அழகேசன் பள்ளிக்கு போகலையே? அப்பவெல்லாம் நீங்க கேட்டீங்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்'' என்று மகன் சொன்னால் அது எப்படி 'சின்னப்பிள்ளை'த்தனமனதோ அதுபோன்றுதான் விஜயகாந்தின் பேச்சு உள்ளது. சட்டசபைக்கு செல்லும் விசயத்தில் கருணாநிதியையும்- ஜெயலலிதாவையும் உதாரணம் கூறும் விஜயகாந்த், ''அதிமுக- திமுக நாட்டை நாசமாக்கிவிட்டது. எனவே எங்களுக்கு வாய்ய்பளியுங்கள். நான் பொற்காலத்தை காட்டுகிறேன்' என்று தேர்தல் நேரத்தில் புலம்பியது ஏன்?
 
அடுத்து, சட்டமன்றத்திற்கு செல்லாதது போலவே விஜயகாந்த் தான் ஜெயித்த தொகுதிப்பக்கமும் தலைவைத்துப் படுக்கவில்லை. கடந்தமுறை வென்ற விருத்தாசலம் தொகுதியை விருத்தியடைய செய்யாத இவர், தோல்வி பயத்தால் ரிஷிவந்தியத்தில் கரையேறினார். வழக்கம் போல இந்த தொகுதி பக்கமும் இவர் செல்லாததோடு அதற்கு அவர் 'சூப்பர்' காரணமும் கூறுகிறார். ''சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு ஒதுக்கவில்லை. இதனால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியவில்லை'' என்கிறார் விஜயகாந்த்.
 
விஜயகாந்த் தனது கூற்றில் உண்மையாளர் என்றால், தொகுதி மேம்பாட்டு நிதியை விரைந்து வழங்கவேண்டும் என்று இவர் எத்துனை முறை சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்? இவரது கட்சியினராவது குரல் எழுப்பியதுண்டா? நாளுக்கொரு அறிக்கையை நாளிதழ்களுக்கு வழங்கும் இந்த நல்லவர், மக்கள் நலனில் அக்கறையற்ற முறையில் தொகுதி மேம்பட்டு நிதியை வழங்காததை குறித்து இந்த அரசு பற்றி வரைந்ததுண்டா? இந்த ஆட்சியை நல்லாட்சி என்று சொல்லி வந்தவர், உள்ளாட்சிக்கு பின்பு தானே ஊழலாட்சி என்று என்று முழங்க தொடங்கியிருக்கிறார். இதற்கு காரணம் கூட்டணியில் ஏற்பட்ட 'முழுக்கு' என்பது மக்களுக்குத் தெரியாதா?
 
மேலும் இப்போது ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விஜயகாந்த் கூறும்போது, ''மழை திடீரென்று தான் வரும். அது சொல்லிக்கொண்டு வராது. எனவே மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'' என்கிறார். இவர் சொல்வது போல, அரசு மழைக்கால முன்னெறிச்சரிக்கை நடவடிக்கையில் மந்தமாக இருந்ததென்னவோ  உண்மைதான். ஆனால் இந்த மழைக்கால நேரத்தில் கூட இவர் தனது தொகுதி அலுவலகம் சென்றாரா என்பதுதான் கேள்வி. விஜயகாந்தின் நிலை இப்படியே செல்லுமாயின் ''உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்த துறையின் மந்திரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை' என்று இவர் அழகிரியை பார்த்து கூறுவது போன்று, தமிழக மக்கள் எதிர்கட்சித் தலைவரை காணவில்லை என்றும், இவரது தொகுதி மக்கள் எங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்றும் தேடும் நிலை ஏற்படும். புரிந்து கொண்டால் அரசியலில் பிழைத்துக் கொள்வார். 

பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?

மது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்' என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்து கொண்டு அந்த நாட்டை இஸ்லாமிய தீவிரவாத நாடாக காட்டுவதில் இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள். 
 
அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை  'இந்து வியாபாரி வெட்டிக்கொலை' 'இந்து மருத்துவர் கொலை' என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும் எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலம் சான்றாக உள்ளது. அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு தன் மதம், தன் இனம், அடுத்த மதம் அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயம் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம்.
 
''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.
 
மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.
 
ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.
 
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8 ]
 

செவ்வாய், 15 நவம்பர், 2011

ஒபாமாவின் அணுஆயுத உளறல்!

ன்னிடம் குவித்து வைத்துள்ள  அணு ஆயுதங்களை மறைத்து, ஈரான்  அணுஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல, அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும்.  தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அலறி வருகிறார். இதுபற்றி தினமணி நாளிதழில் இடம்பெற்றுள்ள அர்த்தமுள்ள 'கார்ட்டூன்' ஐ நன்றியுடன் இங்கே பதிவு செய்கிறோம்.

வியாழன், 10 நவம்பர், 2011

கள்'ளுக்கு மல்லுக்கு நிற்கும் நல்லசாமியை விவாத களத்திற்கு அழைக்கும் குமரிஅனந்தன்!

னைத் தொழிலை பிரதானமாக செய்யும் சமுதாயத்தைச் சேர்ந்தவர் குமரிஅனந்தன். இலக்கியம்-அரசியல்-பேச்சாற்றல் ஆகிய சிறப்புகளை உடைய இவர், கடந்த திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவராகவும் இருந்தார். அந்த காலகட்டத்தில் பதநீர் போன்ற பனைப் பொருட்களை  அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்பது போன்ற பயனுள்ள பல விஷயங்களை வலியுறுத்திய இவர், ஒருபோதும் அந்த பனைமரம் மூலமாக கள் இறக்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று கோரியதில்லை என்பதைவிட கள்ளுக்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடந்த போதெல்லாம் கள்ளுக்கு எதிரான தனது கருத்தை வலுவாக பதிவு செய்தே வந்துள்ளார்.
 
இவர் நிலை இவ்வாறிருக்க, மற்றொரு பக்கம் தமிழக மக்களை மீண்டும் கள்ளுக்கு இறையாக்க துடிக்கும் நல்லசாமி என்பவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவ ஆய்வு மையம் கள் உணவுப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், கள்ளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், காந்தியே கள்ளை உணவுப் பொருள் என்று ஏற்றார் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார். இவ்வாறு நல்லசாமி சொல்வதற்கு ஆதாரங்களை அனுப்புங்கள் என்று குமரிஅனந்தன் கடிதம் மூலமாக கோரியும் நல்லசாமி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அதற்கு மாற்றமாக தனது இயலாமையை மறைக்க,  ''கள் போதைப் பொருள் என்று நிரூபிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக நல்லசாமி அறிக்கை வெளியிட,  நல்லசாமியின் சவாலை  ஏற்ற  குமரி அனந்தன், ''நல்லசாமியின் அறைகூவலை ஏற்று நவம்பர் 23 ஆம்  தேதி கள் இயக்கம் ஏற்பாடு செய்யும் அரங்கில் காந்தி, காமராஜ் வழியில் மதுவை எதிர்த்து பலமுறை சிறை சென்ற நான் விவாதத்தில் கலந்து கொள்கிறேன்''. என்று கூறியுள்ளார்.
 
இந்த விவாதம் ஒரு வரவேற்கதத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் சீமைச் சரக்கு உடம்புக்கு கேடு; நாட்டுச் சரக்கு நல்லது என்று சொல்லி கள்ளுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முகத்திரை குமரியாரால் கிழிக்கப்படும் என்பதோடு, சுய அரசியல் ஆதாயத்திற்காக கள் இறக்க அனுமதி கோரும் அரசியல்வாதிகளும் திருந்தும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். விவாதநாளை மக்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
 

புதன், 9 நவம்பர், 2011

மோடி ஒரு வெறிநாய்; அது இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை; குமுதம் அரசு.

ரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது சற்றே ஆறுதலான விஷயமாகும். ஆனால் இந்த கலவரத்தின் கதாநாயகனான மோடி இன்னும் 'கதாநாயகனாக' வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த மோடி இருக்கவேண்டிய இடம் எனது என்று கடந்த 7 -11 -2007 அன்று குமுதம் அரசு கூறியதை இங்கே நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.

மெஹசானா (குஜராத்), நவ. 9: குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தின்போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விவரம்: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். 2002 பிப்ரவரி 27-ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28- இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்த வன்முறையாளர்கள், பெட்ரோல் ஊற்றி வீட்டுக்குத் தீவைத்தனர். கலவரத்துக்கு பயந்து அந்த வீட்டில் மறைந்து இருந்த 22 பெண்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக 73 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுதான் இந்த வழக்கையும் விசாரித்தது. குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

42 பேர் விடுவிப்பு: இதில், குற்றம்சாட்டப்பட்ட 73 பேரில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி எஸ்.சி,ஸ்ரீவஸ்தவா தீர்ப்பு வழங்கினார். 42 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 31 பேர் சந்தேகத்தின் பலனில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேர் மீது கொலை, கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றத்துக்கான சதி செய்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க தண்டனை பெற்ற 31 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், கூடுதல் அபராதமாக தலா ரூ. 20 ஆயிரமும் விதிக்கப்பட்டது.

சந்தேகத்தின் பலனாக விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது.

தலா ரூ.25 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேரும் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்.

தீர்ப்பு திருப்தி: இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. எங்கள் அதிகாரிகளின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது என்று வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. ராகவன் கூறியுள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மொத்தம் 9 வழக்குகளை விசாரித்தது. இதில் இப்போது முதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

செவ்வாய், 8 நவம்பர், 2011

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை.

 

அகமதாபாத், நவ 7- குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.

குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் நான்கு பேரும் மும்பையிலி ருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்த தாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறை யினரிடமிருந்து தப் பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறை யினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப் பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறி வித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மாஜிஸ்திரேட் விசாரணை

இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக் கையை தாக்கல் செய் தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என் றும், அந்த என்கவுண் டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அரு கிலிருந்து சுடப்பட்டி ருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்தி ருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார் கள் என்று குற்றம் சாட் டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதி காரியால் இந்த போலி என்கவுண்டர் அரங் கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

சிறப்பு புலனாய்வு முழு

இந்த காவல்துறை என் கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசா ரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.

டில்லியில் உள்ள அகில இந்திய மருத் துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப் படையில் சிறப்பு புல னாய்வு குழு தனது விசா ரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையி லிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.

குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.

இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட் டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப் பதை பிரேத பரிசோ தனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக் கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப் படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட் சியங்களும் உறுதி செய் கின்றன.

எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப் பித்த விசாரணை அறிக்கை சரிதான் என் பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய் வில் உறுதி செய்யப் படுகிறது.

மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
நன்றி;விடுதலை.07 நவம்பர் 2011

திங்கள், 7 நவம்பர், 2011

சென்னையில் INTJ பெருநாள் தொழுகை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.                                                                                                                                        
 
ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திருநாள் தொழுகை                                                                  
இந்திய  தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக  சென்னை ராயப்பேட்டை கபுர்ஸ்தான்
 (மீர் சாகிப் பேட்டை) அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் காலை 8.15க்கு நடைபெற்றது.                குத்பா பேருரையை இதஜதலைவர் சகோதரர்  S.M.பாக்கர்  அவர்கள் நிகழ்த்தினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.   அல்ஹம்துலில்லாஹ். 
 

சனி, 5 நவம்பர், 2011

இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஏகத்துவக்  கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,  ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவைஅப்பாஸ்., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!

இசுலாமிய தீவிரவாதம் இந்தியப் பாதுகாப்பிற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

2012--_க்குப்பின் பாகிஸ்தானைத் தலிபான் கைப்பற்றும்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும். இசுலாமிய தீவிரவாதத் தின் இலக்கு அடுத்த இந்து இந்தியா வாகத் தான் இருக்கும்.

இசுலாமிய வெறியர்கள் இந்தியா வில் தங்கள் பணி இன்னும் நிறைவுற வில்லை என்றே நம்புகின்றனர். இசுலாமியர் வென்றெடுத்த நாடுகளில் எல்லாம் 100 சதவிகிதம் பேர் இசுலாமியராக மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் சூழ்ச்சி இந்தியாவில் மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. இன்னும் இந்தியர்களில் 75 சதவிகிதம் இந்துக் களாக இருப்பதில் இசுலாமிய மத வெறியர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலைக்கு இந்துக்களே காரணம்.

இந்துக்களில் சரிபாதி பேர் தம் சாதிய வேறுபாடுகளை மறந்து இந்துக்களாக வாக்களித்தால், இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் ஒரு தூய்மையான இந்துக்கட்சி ஆட்சிக் கட்டிலேறும்.

தீவிரவாதிகளின் தாக்குதலை, தனி மனிதர் மீதான தனித்தாக்குதலாகக் கருதாமல் ஒரு இந்துவின்மீது, இந்துமதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத வேண்டும்.

இந்நாட்டில் வாழும் இசுலாமி யர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இசு லாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.

இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.

இந்தியர்களிடம் இந்தத் தேசியப் பண்பை உருவாக்க வேண்டும். மன்மோகன்சிங் தனி மனிதர் என்ற அளவில் நல்ல பண்புடையவராக இருக்கலாம்; ஆனால் அரைகுறை கல்வி அறிவைப் பெற்ற சோனியா காந்தியின் சீடனாக இவர் செயற் படுவதற்கு காரணம் மன்மோகனிடம் தேசியப் பண்பு இல்லாமைதான்.

தீவிரவாதிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் இணங்கக் கூடாது. திருப்பியடிப்பதுதான், இந்துக் களின் கொள்கையாக இருக்க வேண்டும். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.

அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக் கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.

ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.

இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க; வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குக. இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந் துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.

ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க: இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது. சாதி பிறப்பினடிப்படையில் அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையில் எனப் பிரகடனப்படுத்துக. இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துவாக மாறத் தடையில்லை.

உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல். இந்தியாவில் எழுந்துள்ள இசுலாமிய தீவிரவாதத்தை மேற்கண்ட யுக்திகளால் அய்ந்து வருடத்திற்குள் தடுத்துவிட முடியும்.

இந்தியாவில் வாழும் இந்துக்கள் 50 சதவிகிதம் பேர், இந்து வாக்காளர்களாக மாறினால் போதும். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கலாம்.

இந்தியாவில் அவ்வப்போது நிகழ்த் தப்பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு இசுலாமியரே காரணம் என்றும், இப்போதும் இன்னும் தொடரப் போவதாகவும் இசுலாமிய மத வெறியர்களின் பணி இந்தியர்கள் அனைவரையும் இசுலாமியர்களாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறாநிலையில், இன்னும் 75 சதவிகித பேர் இந்துக்களாக இருப்பது இசுலாமியர்களின் பணி முடியவில்லை என்பதைக் காட்டுவதாகவும் சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா? விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?

சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத் துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை. நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன. மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. குடிமைச் சமூக அமைப்புகளுக்கு சுப்பிரமணியன் சாமியின் பேச்சின் சாரம் சென்றடைய வில்லையோ என்று எண்ணுமளவிற்கு மவுனம் சாதிக்கின்றன. ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போராட்டப் பேரலையில் சுப்ரமணியன் சாமியின் பகைப்பேச்சுகள் மூழ்கி விட்டனவோ? இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை. தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thoughtஎன்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.

மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி? அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிர மணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?

பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.

மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா? சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

மும்பையில் சூலை 13, 2011 அன்று நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர் வினையாற்றியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இக்குண்டு வெடிப்புகள் இந்துக்களிடம் ஏற்பட வேண்டிய எதிர் வினைகளைச் சுட்டிக் காட்டுகிறார். இக்குண்டு வெடிப்புகள், இசுலாமிய தீவிரவாத யுக்தியின் ஒரு பகுதியே என்று கூறி, தீவிரவாதம் என்றாலே இசுலாமிய தீவிரவாதமாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அய்தராபாத் மசூதி குண்டு வெடிப் பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும், காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வரு கையில், இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது?


- தேவா
(ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)
நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி


 

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன்....


ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தைக் கிளப்பும் அதிகாரிகளின் அலட்சியம்!

ட்டமன்றத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அசூர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த அதிமுக, அதைதொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றிவாகை சூடியது. உள்ளாட்சியில் ஆளும்கட்சியின்  வெற்றி என்பது   கருணாநிதி பாஷையில் சொல்வதாக இருந்தால், இது ஒரு சாதனை அல்ல என்றாலும், அந்த வெற்றியிலும் சந்தேகத்தை கிளப்பும் வகையில் அதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகள் உள்ளது. பொதுவாக என்னதான் விழிப்புடன் கட்சிகள் இருந்தாலும், தேர்தல்  களத்தில் பணியற்றும் அதிகாரிகள் நேர்மை தவறும் பட்சத்தில் அங்கே நடந்த தேர்தலே சந்தேகத்திற்கு இடமளித்து விடும். அப்படி ஒரு அதிகாரியின் நடவடிக்கை பரபரப்பு செய்தியாகியுள்ளது.
 
ஈரோடு மாவட்டம், கோபி ஒன்றியம், நஞ்சைகோபி ஊராட்சியில்  ஆறாவது வார்டில், வடிவேல், குளவிக்கரடு அ.தி.மு.க., கிளைச் செயலர் கோபால் ஆகியோர் போட்டியிட்டனர். வடிவேல், 151 ஓட்டு, கோபால், 108 ஓட்டு பெற்றனர். வெற்றிபெற்ற வடிவேலுவுக்கு, இரவு வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. மறுநாள் காலை சான்றிதழ் வாங்க, பி.டி.ஓ., அலுவலகத்துக்கு வடிவேல் சென்றார். கோபாலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏமாற்றமடைந்த வடிவேல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதனிடையே, வெற்றிச்சான்றிதழ் வாங்கிச் சென்ற கோபால், மனசாட்சி உறுத்தியதால் அக்., 24ல், பி.டி.ஓ.,விடம் சான்றிதழை திருப்பி கொடுத்துள்ளார். செய்வதறியாத பி.டி.ஓ., மீண்டும் வடிவேலுவை அழைத்து, நேற்று சான்றிதழ் வாங்கினார். அவருக்கு, 21ம் தேதியிடப்பட்ட சான்றிழ் வழங்கப்பட்டது.
 
இதுபோல், கோபி ஒன்றியம் வெள்ளாளபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வெற்றி பெற்ற தன்னை, தோல்வியடைந்ததாக, பி.டி.ஓ., சிவபாலன் அறிவித்தார் என, சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி, கலெக்டரிடம் புகார்
கூறியுள்ளார்.
 
கலிங்கியம் ஊராட்சி ஆறாவது வார்டில், சுயேச்சை வேட்பாளர் நஜிமுதின், 124 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனால், 116 ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., ராஜாமணி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கலிங்கியம் நான்காவது வார்டில், வெற்றிவேல், 120 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., பிரகாஷ் என்பவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
 
மேற்கண்ட மூன்று குளறுபடிகளும் கோபி பி.டி.ஓ., சிவபாலனால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிவபாலன் போன்ற அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், ''உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்''. என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதோடு, அதிமுகவின் ஒட்டுமொத்த வெற்றியும் சந்தேகப் பார்வைக்கு இலக்காகியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.  

மரியம் பிச்சையின் மகன் திருச்சி மாநகராட்சி துனைமேயர்.

றைந்த மரியம்பிச்சை வென்ற திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் மரியம்பிச்சையின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாற்றமாக சம்மந்தமில்லாத ஒருவரை நிறுத்திய ஜெயலலிதாவின் செயல் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிய நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சியின், 27வது வார்டில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பளித்தது. தேர்தலில் ஆசிக் மீரா வெற்றி பெற்று, கவுன்சிலராகவும் பதவியேற்றார். ஆசிக் மீராவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தது அதிமுக.  திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள, 65 கவுன்சிலர்களில், 42யை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், துணைமேயர் பதவிக்கு போட்டியின்றி ஆசிக் மீரா தேர்ந்தேடுக்கப்பட்டார். ஆசிக் மீரா துணை மேயரானத்தின் மூலம் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வு மறையும் என முதல்வர் கருதுகிறாரோ?
 


 



முஸ்லிம் லீக் பெயரை....

முஸ்லிம் லீக் பெயரை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?- காதர்மொய்தீன் கேள்வி.

தேர்தல் ஆணையம் செயலை வரவேற்கிறோம்; தாவூத் மியாகான்.,
லீக்குகளின்  குடுமிபிடி.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து உள்ளாட்சியில் களம் கண்டது.394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.  இது பெரிய வெற்றி இல்லை என்றாலும் கணிசமான வெற்றியாகும். ஆனால் லீக்கின் இந்த வெற்றியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பற்றிய செய்தி இடம்பெறவில்லை. இவர்களின் வெற்றியை சுயேட்சைகளோடு  சேர்த்து விட்டார்கள். இதைக் கண்டு கொதித்தெழுந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்,
 
''உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 20 நகராட்சி கவுன்சிலர்கள், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 17 பேரூராட்சிகள் என 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். 41 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி பெற்ற கட்சிகளின் வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் எங்கள் கட்சி இடம்பெறவில்லை. 35 இடங்களை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், 14 இடங்களை பெற்றுள்ள புதிய தமிழகம், 11 இடங்களை பெற்றுள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், ஒரு இடத்தை பெற்றுள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக், ஐ.ஜே.கே., ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு இது பெரும் வேதனையாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் இது பெரும் அநீதியாக தெரிகிறது.இந்த குறைபாடு பற்றி தமிழக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நியாயம் கேட்போம். அந்த உரிமையை மாநில தேர்தல் ஆணையம் நிச்சயம் வழங்கும் என்று நம்புகிறோம்''. என்று  கூறியுள்ளார்.
 
மறுபுறம்  தேர்தல் ஆணையத்தின் இந்த 'கண்டுகொள்ளாமை'யை கடுமையாக வரவேற்றுள்ளார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியாகான்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக உள்ளாட்சித் தேர்தலில், காதர் முகைதீனின் தலைமையில் உள்ள இயக்கத்தின் சார்பாக போட்டியிடுபவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பதிவு செய்யக்கூடாது என, நாங்கள் அளித்த மனுவை தமிழக தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளதை வரவேற்கிறோம். காதர் முகைதீன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தினால், அவர்களை தமிழக தேர்தல் கமிஷன் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
 
தமிழக அரசியல் அரங்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுவதும், பிரிந்தவர்கள் ஒவ்வொருவரும் 'நாங்கள் தான் உண்மையான கட்சி' என்று உரிமை கொண்டாடுவதும், நாளடைவில் இந்த் உரிமை கோஷம மறைந்து அவரவர் வழியில் அரசியல் தொழிலை கவனிக்கத் தொடங்கி விடுவதும் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் ஏற்கனவே முஸ்லிம் லீக் அல்ல; முஸ்லிம் 'வீக்' என்று வர்ணிக்கப்படும் இந்த கட்சியில் மட்டும் இரு பிரிவினரும் உரிமை கொண்டாடும் படலம் ஓய்ந்தபாடில்லை. என்றைக்குத்தான் திருந்துவார்களோ?


'கோமாதா'வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.

ந்துக்கள் வழிபடும் கடவுளர்களின் பட்டியலில் பசுவும் ஒன்று. அதை நாம் குறைகாண முடியாது. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவர் தனக்கு சொந்தமான எந்த ஒரு பொருளையும் விற்கும் உரிமை படைத்தவர். அந்த அடிப்படையில் மாடு வளர்க்கும் ஒருவர், அந்த மாட்டின் மூலம் பலனில்லை என்றால் அதை விற்பதற்கு அவருக்கு அனுமதியுண்டு. அதே போல் அவர் விற்கும் மாட்டை விலைக்கு வாங்கிச்செல்லும் ஒருவர் அதை இறைச்சியாக்கி விற்பதற்கும் உரிமையுண்டு. இதில் அடுத்தவர் தலையிட எந்தவித நியாயமுமில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பசுவதை என்று பசுவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிய 'அவாள்கள்' இப்போது காளை மாட்டிற்கும் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி ''தடை விதத்தால் தான் என்ன?'' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ள தினமணி நாளிதழ் தலைகால் புரியாமல் உளறியுள்ளது.
 
''அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது. கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி'' என்று கூறும் தினமணி, உணவுக்காக கோழிகளின் உயிர்கள் பறிக்கப் படுவதையோ, உணவுக்காக கோழிகள் கேரளாவுக்கு விற்கப்படுவதையோ குறைகாணவில்லை. மேலும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொலைகளால் கிடைக்கும் வருமானத்தை தமிழர்கள் பெறுவதை வரவேற்பதன் மூலம் கோழியை உணவுக்காக கொல்வதை சரி காண்கிறது தினமணி. ஆனால் அடுத்து தனது கடவுளான[?] கோமாதா விற்பனையை பற்றி கூறும்போது,
 
''கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன. 2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர். பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?'' நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது?'' என்று தனது நீண்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தி இறுதியாக இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படக் கூடாது; அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது; அதற்கு தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தனது சங்பரிவார கருத்தை சமயம் பார்த்து நுழைக்கிறது தினமணி.
 
தினமணி இந்த தலையங்கத்தை தீட்டியதன் நோக்கம் ஜீவகாருண்யம் என்றால், அந்த ஜீவகாருண்யம் கோழிகள்-ஆடுகள் விசயத்தில் காணோமே? கோழிகள் ஏற்றுமதியை குதூகலித்து வரவேற்கும் தினமணி, தனது கோமாதா'வின் ஜோடியான காளை விசயத்தில் மட்டும் கண்ணீர் உகுப்பதேன்? உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி தேவஸ்தானமே, 'மாடுகளை பராமரிப்பது சாத்தியமில்லை என்பதால் மாடுகளை காணிக்கையாக பெறுவதை நிறுத்தவில்லையா? கோடிக்கணக்கான ரூபாய்களும், தங்கமும்-வெள்ளியும் நாள்தோறும் கொட்டப்படும் ஒரு கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிப்பது இயலாத காரியம் எனில், ஒரு ஏழை உபயோகமற்ற ஒரு மாட்டை அடிமாட்டிற்கு விற்காமல் அதை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்கிறதா தினமணி?
 
அடுத்து தனது மாட்டு பாசத்தை காட்ட அறிவியலையும் துணைக்கழைக்க தவறவில்லை தினமணி. ''ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை'' என்கிறது தினமணி. 
 
சிந்தித்து பார்த்துத்தான் இதை சொல்கிறதா தினமணி? ''ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன என்ற தினமணியின் கூற்று உண்மை என்றால், இறைச்சிக்கு மட்டுமே பயன்படும் உபயோகமற்ற மாடுகளை சீக்கிரம் அடிமாட்டிற்கு விற்றுவிடுங்கள்; பூமி வெப்பமாவதை தடுங்கள் என்றல்லவா தினமணி சொல்லவேண்டும். ஆனால், உபயோகமற்ற மாட்டை விற்காமல் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால் அதற்காக தினந்தோறும் தாவரங்கள் அழிக்கப்படுமே? அப்போது பூமி வெப்பமாகாதா?  இது தினமணியின் சிந்தனைக்கு எட்டவில்லையா?
 
அடுத்து, ''ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும்'' என்கிறது தினமணி. மனிதனின் தேவையறிந்து இயற்கையே அதாவது இறைவனே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை சமநிலையில் வைத்திருக்கிறான் எனும் போது, அடிமாட்டிற்காக மாடுகள் விற்கப்படுவதால் மாடுகள் எண்ணிக்கை குறைகிறது என மாய்ந்து மாய்ந்து தினமணி எழுதவேண்டிய அவசியமென்ன?
 
இறுதியாக, இப்படியெல்லாம் உளறி, ஜெயலலிதாவை பசுவதை தடைச் சட்டம் கொண்டுவரச் செய்ய  தினமணி முயற்ச்சிப்பதை விட நேரடியாகவே தனது கோமாதா கோரிக்கையை தினமணி வைக்க வேண்டியதுதானே? ஆனாலும் ஏற்கனவே கோயிலில் கோழி ஆடு மாடு வெட்டக்கூடாது என சட்டம் போட்டு அதனால் ஏற்பட்ட விளைவை  உணர்ந்துள்ள முதல்வர், தினமணியின் கழுத்து மணி ஒலிக்கும் ஓசையை காதில் வாங்கமாட்டார் என்றே நம்புகிறோம்.

''தைரியமிருந்தால் பாதுகாப்பின்றி நடமாடத் தயாரா? ராஜ்தாக்கரேக்கு சவால் வீடும் காங்கிரஸ் எம்.பி.

'மராட்டியம் மராட்டியர்களுக்கே'  என்ற மொழிவாரி உணர்ச்சி அரசியல் நடத்தி வரும் சிவசேனை பால்தாக்கரே அவரது அரசியல் வாரிசு ராஜ்தாக்கரே, உத்தவ் தாக்ரே வகையறாக்கள், அவ்வப்போது வடமாநிலத்தவருக்கு எதிராக விஷம் கக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வேலைவாய்பு விசயமாக மும்பை வந்த வட மாநிலத்தவரை இந்த பால்தாக்கரே வகையறாக்கள் தாக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்நிலையில் ஒரு காங்கிரஸ் எம்.பியை இந்த கும்பல் விமர்சிக்க,  ''என்னை வடமாநிலத்தவர் என விமர்சனம் செய்து வரும், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றவர்கள், தைரியம் இருந்தால், பாதுகாப்பு இல்லாமல் எங்காவது செல்லட்டும் பார்க்கலாம்,'' என, அவர் சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான சஞ்சய் நிருபம், ''மும்பையில் காய்கறி வியாபாரம் செய்வோர், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோர், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும், மும்பை ஸ்தம்பித்து விடும் என்று, நான் கூறியிருந்தேன்.இதை தவறாக புரிந்து கொண்டு, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே போன்றவர்கள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பையில் "பந்த்' நடத்தப் போவதாக நான் கூறியதாக, அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் உத்தவ் தாக்கரே, என் பல்லை உடைக்கப் போவதாக கூறியுள்ளார்.

 
நான் சவால் விடுகிறேன். உத்தவ், ராஜ், ஆதித்யா போன்றவர்கள், பாதுகாப்பு இல்லாமல், எங்காவது நடமாடத் தயாரா? நான் எப்போதுமே பாதுகாப்பு கேட்டது இல்லை. போலீஸ் கமிஷனரை சந்தித்து, எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
 
இந்தியா ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சொந்தம். நாமறிந்தவரை காஷ்மீர் நீங்கலாக வேறு எந்த மாநிலத்திலும், எந்த மாநிலத்தவரும் வசிக்கவோ, சொத்து வாங்கவோ, பணியாற்றவோ, தொழில் தொடங்கவோ எந்த தடையுமில்லை. அதனால் தான் எல்லா மாநிலங்களிலும் அடுத்த மாநிலத்தவர் வசிப்பதை காணலாம். ஆனால்  மகாராஷ்டிரம் என்பது மராட்டியர்களுக்கு மாத்திரம் என்று விஷம் கக்கும் பால்தாக்கரே வகையறாக்கள் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய இந்தியர்களுக்கான உரிமையை அவமதிக்கிறார்கள். ஆனாலும் அரசு இயந்திரங்கள் அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனாலும் இத்தகைய பிர்வினைவாதிக்ளுக்கு சொரணை வரும் அளவுக்கு சஞ்சய் நிருபம் சவால் விட்டுள்ளார். சவாலை ராஜ்தாக்கரே ஏற்பாரா?


மூவர் தூக்கு; முதல்வரின் வியூகம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி 12.8.11 அன்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் 9.9.11 அன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று 26.8.11 அன்று சிறை நிர்வாகம் தீர்மானித்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் ஆள்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராக இருப்பதாகவும், எனவே வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் எம்.ரவீந்திரன் வாதிட்டார்.
 
கொலையாளிகள் தரப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த வக்கீல்கள் தேவதாஸ், நன்மாறன், ராம.சிவசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். கொலை கைதிகளின் மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், ''ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. 
 
''மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றே பதிலளித்துள்ளது. மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது என்று அர்த்தமாகிறது'' என்கிறார் வைகோ.
 
''தமிழக அரசின் இந்த முடிவு குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது'' என்கிறார் ராமதாஸ்.
 
ஆனால் அரசியல் பார்வையாளர்களோ இந்த விஷயத்தை ஜெயலலிதாவின் அரசியல் ராஜதந்திரமாக கருதுகிறார்கள். முதல்வராக பதவியேற்ற அடுத்த மாதமே ராஜீவ் கொலையாளிகள் தூக்குத் தண்டனை பிரச்சினை கிளம்புகிறது. இதில் காங்கிரஸ் போல, அவர்களை தூக்கில் போடுங்கள் என்று ஜெயலலிதா நேரடியான வார்த்தையில் சொல்லியிருந்தால், அன்றைக்கு தமிழ் ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ராஜீவ் கொலையாளிகள் மீது இரக்கம் கொண்ட தமிழர்களின் விரோதத்தை ஜெயலலிதா சந்தித்திருப்பார். அது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்திருக்கும். அதை உணர்ந்த ஜெயலலிதா, ஜனாதிபதியால் கருணைமனு நிராகரிக்கப் பட்டவர்களுக்காக, மாற்று வழிமுறை காண முதல்வருக்கு  அதிகாரம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் விடுவதாக இல்லை. பிறகு காசா- பணமா? ஒரு தீர்மானம் தானே என்று சட்டமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை  கொண்டு வந்து வைகோ-சீமான்-ராமதாஸ் போன்ற தமிழ் ஆர்வலர்களின் ஆதரவை அள்ளியதோடு, கொந்தளிப்போடு இருந்த மக்களையும் இந்த தீர்மானத்தின்  மூலம் அமைதிப்படுத்தினார்.  சட்டமன்றத்தில்  இயற்றப்பட்ட தீர்மானம் உப்புச் சப்பில்லாதது; இது யாரையும் கட்டுப்படுத்தாது என்று அன்றைக்கே ஒரு மத்திய அமைச்சர் சொன்னார். ஆனாலும் சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கு பாராட்டுமழை பொழிந்து விட்டார்கள். இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலும் முடிந்து பெருவாரியான வெற்றியையும் ஈட்டிய ஜெயலலிதா, தனது பரம வைரிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான இந்த மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வகை செய்யும் வகையில் அரசு பிளீடர் மூலம் அந்தர்பல்டி அடித்து சாதித்து விட்டார். வெளிப்படையாக  பார்க்கும் போது இது ஜெயலலிதாவின் துரோகம் என்றாலும், அரசியலில் இது ராஜதந்திரம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
 
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்.

மதக்கலவர தடுப்புச் சட்டமும் மதவாதிகளின் சலசலப்பும்!

தக் கலவரத்தைத் தடுக்க, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக முதல்வர்  ஜெயலலிதா  ஆரம்பத்திலேயே எதிர்க்க தொடங்கினார். அதுமட்டுமன்றி காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு இச்சட்டத்தை எதிர்க்குமாறு கடிதமும் எழுதினார். ஜெயலலிதாவின் வழியில்  10 மாநில முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு பாஜக, இந்துமுன்னணி என எல்லாப்பெயரிலும் இயங்கும் இந்துத்துவா அமைப்புகள இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இந்துத்துவாக்களின் இந்த எதிர்ப்புணர்வே நாட்டில் மதக்கலவரங்களை செய்பவர்கள் தாங்கள்  தான் என ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிலையில், இம்மசோதா, "தேவையானது தானா, தேவையில்லையா' என்பது குறித்து, தர்ம ரக்ஷன சமிதியின், தர்மம் காக்கும் வழக்கறிஞர்கள் பிரிவின் சார்பில், சென்னையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில்  தலைமை வகித்து துவங்கி வைத்த, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஜோகிந்தர் சிங்,
 
''மத்திய அரசு கொண்டுவரவுள்ள வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா தேவையில்லை. இருக்கும் சட்டத்தில், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குத் தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இந்நாட்டில், முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளில் இருந்துள்ளனர். ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். எல்லோராலும் சகோதரர்களாகப் பாவிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்ல முடியாது'' என்று பேசியுள்ளார்.
 
ஒரு முன்னாள் சி.பி.ஐ.யின் இயக்குனரின் மேற்கண்ட பேச்சை ஊன்றி கவனித்தால் அவரில் மறைந்திருக்கும் காவி பளிச்சென வெளிப்படுவதைக் காணலாம். இப்படிப்பட்டவர் சி.பி.ஐ.யில் பணியில் இருக்கும் போது, முஸ்லிம்கள் தங்களின் பாதிப்பிற்காக சி.பி.ஐ. விசாரணை கோரினால் கூட நீதி கிடைக்காது என்பதே உண்மை. இவரது கூற்றுப்படி , ''ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர் என்பதால் மட்டும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது சரியா? முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், சுதந்திர இந்தியாவில் இனக்கலவரத்தால் இன்னுயிரை ஈந்தவர்கள் 90  சதவிகிதம் முஸ்லிம்களாக இருப்பது எப்படி? ஒரு மாநிலத்தின் முதல்வரே முஸ்லிம்களை கருவறுக்கும் இந்துத்துவாக்களை கண்டுகொள்ளாதீர்கள் என்று கட்டளையிட்டதையும், அதனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, அனாதையாக்கப்பட்ட, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்ட வரலாறு ஒரு முன்னாள் சி.பி. ஐ. இயக்குனருக்கு தெரியவில்லை என்றால், இவரால் இயக்கப்பட்ட  சி.பி.ஐயின் கடந்த கால செயல்பாட்டை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
அடுத்து இந்நிகழ்ச்சியில் பேசியுள்ள  ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ், சுதந்திரத்திற்கு முன், இந்தியா பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, கஷ்டப்பட்டு அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே இந்தியாவாக ஆக்கியிருக்கிறோம். இப்புதிய மசோதா சட்டமானால், சதந்திரத்திற்கு முன்பு இருந்த மாதிரி, இந்தியா பல மாகாணங்களாகி விடக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு விடும். சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு, தற்போதைய சட்டமே போதுமானது'' என்று பேசியுள்ளார்.
 
மதக்கலவர தடுப்பு  சட்டம் வருவதால், மதத் தீவிரவாதிகள் அவர்கள் எந்த மதத்தவராக  இருந்தாலும் அடக்கப்படுவார்கள். இதன் மூலம் நாட்டில் அமைதி
ஏற்படும் என்ற நிலையிருக்க, இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் நாடு துண்டாகும் என்று ஒரு முன்னாள்  நீதிபதியே பேசுவது ஆச்சர்யம் தானே! மேலும் இப்போதுள்ள சட்டமே சிறுபான்மை  மக்களுக்கு போதுமானது  என்று கூறும் இவர், இப்போதுள்ள சட்டத்தின் மூலம் சிறுபான்மை  மக்களை கருவறுத்த எத்தனை தீவிரவாதிகளுக்கு இவரது பதவிக் காலத்தில் தண்டனை கொடுத்தார்? எல்லாம் முடிந்த பின்னால் கண்துடைப்பு தீர்ப்பு தானே இன்றைக்கு பெரும்பாலான நீதிபதிகளால் வழங்கப்படுகிறது. இது இந்த முன்னாள் நீதிபதி அறியாத ஒன்றா?
 
அடுத்து, பேசிய தர்ம ரக்ஷன சமிதி துணைத் தலைவர் குருமூர்த்தி, ""தேசிய ஆலோசனைக் குழுவின் இணையதளத்தில், மதக்கலவரம் குறித்த சில அறிக்கை விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்தால் யாரால், எத்தகைய சம்பவங்கள், எந்தெந்த வகையில் நிகழ்ந்துள்ளன என்று தெரியும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், யார் கலவரங்களைத் தூண்டினார்களோ அவர்களுக்கே இம்மசோதா பாதுகாப்பானதாக அமைந்துவிடும்'' என்கிறார்.
 
அய்யா! குருமூர்த்தி அவர்களே! இணையதளத்தை பார்ப்பது  ஒரு புறமிருக்கட்டும். சுதந்திர இந்தியாவில் யாரால், எங்கே, எப்போது, எப்படி இனக்கலவரம் நடந்தது? அதில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுதாயம் எது என்ற ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் தயாரா? மேலும், இப்போது இருக்கும் சட்டமே போதும் என்று இப்போது கொக்கரிக்கும் இவர்கள், சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட தடா மற்றும் பொடா சட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்களே! இதைத்தான் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பார்களோ?
 
மேலும், மத்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது என்னவெனில், இதுபோன்ற சலசலப்பை கண்டு சட்டத்தை கிடப்பில் போட்டுவிடாமல், விரைவாக இந்த சட்டம் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதன் மூலம்  இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்க அரசு முன் வரவேண்டும் என்பதுதான்.

ரதயாத்திரை குறித்த தேசியத்தலைவரின் பேட்டி. [தினத்தந்தி]