செவ்வாய், 29 நவம்பர், 2011
வெள்ளி, 25 நவம்பர், 2011
"வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்'
வியாழன், 24 நவம்பர், 2011
திங்கள், 21 நவம்பர், 2011
சனி, 19 நவம்பர், 2011
வெள்ளி, 18 நவம்பர், 2011
தேசிய கொடி அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான்- சுஷ்மாவுக்கு வாரண்டு!
பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி
வியாழன், 17 நவம்பர், 2011
அதிகாரம் அறியாத எதிர்கட்சித் தலைவர்.
பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?
செவ்வாய், 15 நவம்பர், 2011
ஒபாமாவின் அணுஆயுத உளறல்!
வெள்ளி, 11 நவம்பர், 2011
வியாழன், 10 நவம்பர், 2011
கள்'ளுக்கு மல்லுக்கு நிற்கும் நல்லசாமியை விவாத களத்திற்கு அழைக்கும் குமரிஅனந்தன்!
புதன், 9 நவம்பர், 2011
மோடி ஒரு வெறிநாய்; அது இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை; குமுதம் அரசு.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.
செவ்வாய், 8 நவம்பர், 2011
இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை.
குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும் மும்பையிலி ருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்த தாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறை யினரிடமிருந்து தப் பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறை யினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப் பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறி வித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மாஜிஸ்திரேட் விசாரணை
இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக் கையை தாக்கல் செய் தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என் றும், அந்த என்கவுண் டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அரு கிலிருந்து சுடப்பட்டி ருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்தி ருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார் கள் என்று குற்றம் சாட் டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதி காரியால் இந்த போலி என்கவுண்டர் அரங் கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.
சிறப்பு புலனாய்வு முழு
இந்த காவல்துறை என் கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசா ரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.
டில்லியில் உள்ள அகில இந்திய மருத் துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப் படையில் சிறப்பு புல னாய்வு குழு தனது விசா ரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையி லிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.
குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.
இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட் டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப் பதை பிரேத பரிசோ தனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக் கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப் படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட் சியங்களும் உறுதி செய் கின்றன.
எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப் பித்த விசாரணை அறிக்கை சரிதான் என் பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய் வில் உறுதி செய்யப் படுகிறது.
மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
திங்கள், 7 நவம்பர், 2011
சென்னையில் INTJ பெருநாள் தொழுகை
சனி, 5 நவம்பர், 2011
இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!
வெள்ளி, 4 நவம்பர், 2011
சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!
இசுலாமிய தீவிரவாதம் இந்தியப் பாதுகாப்பிற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.
2012--_க்குப்பின் பாகிஸ்தானைத் தலிபான் கைப்பற்றும்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும். இசுலாமிய தீவிரவாதத் தின் இலக்கு அடுத்த இந்து இந்தியா வாகத் தான் இருக்கும்.
இசுலாமிய வெறியர்கள் இந்தியா வில் தங்கள் பணி இன்னும் நிறைவுற வில்லை என்றே நம்புகின்றனர். இசுலாமியர் வென்றெடுத்த நாடுகளில் எல்லாம் 100 சதவிகிதம் பேர் இசுலாமியராக மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் சூழ்ச்சி இந்தியாவில் மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. இன்னும் இந்தியர்களில் 75 சதவிகிதம் இந்துக் களாக இருப்பதில் இசுலாமிய மத வெறியர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலைக்கு இந்துக்களே காரணம்.
இந்துக்களில் சரிபாதி பேர் தம் சாதிய வேறுபாடுகளை மறந்து இந்துக்களாக வாக்களித்தால், இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் ஒரு தூய்மையான இந்துக்கட்சி ஆட்சிக் கட்டிலேறும்.
தீவிரவாதிகளின் தாக்குதலை, தனி மனிதர் மீதான தனித்தாக்குதலாகக் கருதாமல் ஒரு இந்துவின்மீது, இந்துமதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத வேண்டும்.
இந்நாட்டில் வாழும் இசுலாமி யர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இசு லாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.
இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.
இந்தியர்களிடம் இந்தத் தேசியப் பண்பை உருவாக்க வேண்டும். மன்மோகன்சிங் தனி மனிதர் என்ற அளவில் நல்ல பண்புடையவராக இருக்கலாம்; ஆனால் அரைகுறை கல்வி அறிவைப் பெற்ற சோனியா காந்தியின் சீடனாக இவர் செயற் படுவதற்கு காரணம் மன்மோகனிடம் தேசியப் பண்பு இல்லாமைதான்.
தீவிரவாதிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் இணங்கக் கூடாது. திருப்பியடிப்பதுதான், இந்துக் களின் கொள்கையாக இருக்க வேண்டும். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.
அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக் கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.
ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.
இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க; வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குக. இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந் துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.
ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க: இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது. சாதி பிறப்பினடிப்படையில் அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையில் எனப் பிரகடனப்படுத்துக. இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துவாக மாறத் தடையில்லை.
உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல். இந்தியாவில் எழுந்துள்ள இசுலாமிய தீவிரவாதத்தை மேற்கண்ட யுக்திகளால் அய்ந்து வருடத்திற்குள் தடுத்துவிட முடியும்.
இந்தியாவில் வாழும் இந்துக்கள் 50 சதவிகிதம் பேர், இந்து வாக்காளர்களாக மாறினால் போதும். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கலாம்.
இந்தியாவில் அவ்வப்போது நிகழ்த் தப்பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு இசுலாமியரே காரணம் என்றும், இப்போதும் இன்னும் தொடரப் போவதாகவும் இசுலாமிய மத வெறியர்களின் பணி இந்தியர்கள் அனைவரையும் இசுலாமியர்களாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறாநிலையில், இன்னும் 75 சதவிகித பேர் இந்துக்களாக இருப்பது இசுலாமியர்களின் பணி முடியவில்லை என்பதைக் காட்டுவதாகவும் சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா? விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?
சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத் துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை. நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன. மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. குடிமைச் சமூக அமைப்புகளுக்கு சுப்பிரமணியன் சாமியின் பேச்சின் சாரம் சென்றடைய வில்லையோ என்று எண்ணுமளவிற்கு மவுனம் சாதிக்கின்றன. ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போராட்டப் பேரலையில் சுப்ரமணியன் சாமியின் பகைப்பேச்சுகள் மூழ்கி விட்டனவோ? இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை. தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thoughtஎன்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.
இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.
மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி? அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிர மணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?
பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.
மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா? சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?
மும்பையில் சூலை 13, 2011 அன்று நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர் வினையாற்றியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இக்குண்டு வெடிப்புகள் இந்துக்களிடம் ஏற்பட வேண்டிய எதிர் வினைகளைச் சுட்டிக் காட்டுகிறார். இக்குண்டு வெடிப்புகள், இசுலாமிய தீவிரவாத யுக்தியின் ஒரு பகுதியே என்று கூறி, தீவிரவாதம் என்றாலே இசுலாமிய தீவிரவாதமாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அய்தராபாத் மசூதி குண்டு வெடிப் பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும், காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வரு கையில், இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது?
- தேவா
(ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)
நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி
ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தைக் கிளப்பும் அதிகாரிகளின் அலட்சியம்!
கூறியுள்ளார்.
மரியம் பிச்சையின் மகன் திருச்சி மாநகராட்சி துனைமேயர்.
மறைந்த மரியம்பிச்சை வென்ற திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் மரியம்பிச்சையின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாற்றமாக சம்மந்தமில்லாத ஒருவரை நிறுத்திய ஜெயலலிதாவின் செயல் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிய நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சியின், 27வது வார்டில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பளித்தது. தேர்தலில் ஆசிக் மீரா வெற்றி பெற்று, கவுன்சிலராகவும் பதவியேற்றார். ஆசிக் மீராவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தது அதிமுக. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள, 65 கவுன்சிலர்களில், 42யை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், துணைமேயர் பதவிக்கு போட்டியின்றி ஆசிக் மீரா தேர்ந்தேடுக்கப்பட்டார். ஆசிக் மீரா துணை மேயரானத்தின் மூலம் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வு மறையும் என முதல்வர் கருதுகிறாரோ?
முஸ்லிம் லீக் பெயரை....
முஸ்லிம் லீக் பெயரை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?- காதர்மொய்தீன் கேள்வி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியாகான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக உள்ளாட்சித் தேர்தலில், காதர் முகைதீனின் தலைமையில் உள்ள இயக்கத்தின் சார்பாக போட்டியிடுபவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பதிவு செய்யக்கூடாது என, நாங்கள் அளித்த மனுவை தமிழக தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளதை வரவேற்கிறோம். காதர் முகைதீன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தினால், அவர்களை தமிழக தேர்தல் கமிஷன் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
'கோமாதா'வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.
''தைரியமிருந்தால் பாதுகாப்பின்றி நடமாடத் தயாரா? ராஜ்தாக்கரேக்கு சவால் வீடும் காங்கிரஸ் எம்.பி.
காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான சஞ்சய் நிருபம், ''மும்பையில் காய்கறி வியாபாரம் செய்வோர், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோர், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும், மும்பை ஸ்தம்பித்து விடும் என்று, நான் கூறியிருந்தேன்.இதை தவறாக புரிந்து கொண்டு, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே போன்றவர்கள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பையில் "பந்த்' நடத்தப் போவதாக நான் கூறியதாக, அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் உத்தவ் தாக்கரே, என் பல்லை உடைக்கப் போவதாக கூறியுள்ளார்.