வியாழன், 30 ஜூன், 2011
பல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு
திங்கள், 27 ஜூன், 2011
தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்!
சனி, 25 ஜூன், 2011
மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். [முஸ்லிம்]
இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;
- ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
- அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
- ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
- அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
- ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]
படிப்பினைகள்; எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861
படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
-உங்கள் சகோதரன்; முகவை எஸ்.அப்பாஸ்.
வெள்ளி, 24 ஜூன், 2011
காயிப் ஜனாஸா தொழுகை கூடும்; பீஜே ஜமாஅத்தின் செயல்முறை ஃபத்வா!
இறக்குமதி குப்பைகளுக்கு இந்தியாவில் இடம்; இருக்கும் மக்களின் குப்பைகளை கொட்ட இடமில்லையோ..?
இதற்கு அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடைஉத்தரவு பெற்றுள்ளனர்.
இதன்காரணமாக கீழக்கரை தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு கும்பிடுமதுரை பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து கீழக்கரை நகரசபை தலைவர் பசீர் அகமது தலைமையில் அனைத்துகட்சி பிரமுகர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டதையடுத்து, கும்பிடு மதுரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைகளை கொட்டப்படுகிறது. எனினும் கும்பிடு மதுரை மக்களின் எதிர்ப்பும் தொடர்கிறது.
குடிமக்கள் மீதான ஒரு அரசின் தலையாய கடமை என்பது அம்மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாகும். ஆனால் ஒரு பாராம்பரியமிக்க ஊரை குப்பை மேடாக காட்சியளிக்க செய்வதும், மக்கள் எதிர்ப்பு கிளம்பினால் தற்காலிகமாக தீர்வு காண்பதும் அரசுக்கு அழகல்ல. எனவே கீழக்கரையின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்காத வகையில் சுற்றுப்புற கிராம மக்கள் உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி அவைகளுக்கு தீ வைப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துவதோடு, போக்குவரத்திற்கு இடையூறையும், மக்களுக்கு நோயையும் ஏற்படுத்துவதை தவிர்க்க, வெளிநாடுகள் போல், குடியிருப்புகளுக்கு வெகு தூரத்தில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி அதை மண்ணைப் போட்டு மூடுவதன் மூலம் சுகாதாரத்தை பேணும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
வியாழன், 23 ஜூன், 2011
சனி, 18 ஜூன், 2011
வெள்ளி, 17 ஜூன், 2011
வாஞ்சிநாதன் சுதந்திர போராட்ட தியாகியா?
வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப் பானால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டு நாள் இந்நாள் (17-6-1911).
மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணா சிரம வெறியா?
ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.
''ஆங்கில சத்துருக் கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந் திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ் ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில், கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மத ராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர் களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தா னத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்
இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப் பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்ட வமாடுகிறதா?
கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க் கட்டும் எவரும்.
மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?
பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்களைத்தானே?
அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படு கொலை செய்யப்பட்ட இட மான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக் கத்தைச் சேர்ந்தது?
பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!
- மயிலாடன்
நன்றி; விடுதலை நாளிதழ்.
இதஜ குவைத் மண்டலத்தின் வாராந்திர பிரசுரம்[17-11-2011]
பத்திரிக்கையாளர் சந்திப்பு; 'கடுகடு' கருணாநிதி!
வியாழன், 16 ஜூன், 2011
திங்கள், 13 ஜூன், 2011
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமா? சஷ்டி விநாயகர் கோயிலா?
எம்.எல்.ஏ., அலுவலகத்தின் உட்புற அறையில் பயன்பாட்டுக்கான இடத்தை குறைக்கும் வகையில், சிறிய தடுப்புக்கள் அமைத்து, அதற்குள் அழகிய பூந்தொட்டிகள் வைத்து பல மாற்றங்களுடன் ஜொலிக்கிறது.எம்.எல்.ஏ., அலுவலகத்தின் வாஸ்து பிரச்னைக்கு பூந்தொட்டியும், விநாயகர் சிலையும் முற்றுப்புள்ளி வைக்கும், என்று எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ., அலுவலக வாஸ்து பிரச்னைக்கு பரிகாரம் செய்யப்பட்டதால், ஜூன் 15ல் சந்திரகுமார், அந்த அலுவலகத்தில் தனது எம்.எல்.ஏ., பணியை துவங்குவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு
வெள்ளி, 10 ஜூன், 2011
சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!
'பட்டது போதும் பாஜகவாலே'- பரிதாப நாயுடு!
சாராயக் கடைக்குள் அமர்ந்து கொண்டு சர்பத்'துதான் குடித்தேன் என்று சொன்னாலும் அது பார்ப்பவர்களுக்கு சாராயமாகவே தோன்றும். அதனால் அத்தகையோரை மக்கள் வெறுத்து ஒதுங்குவது இயல்பானதுதான். அதைப் போல் மதவாத பாஜகவோடு உறவு வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசினால் அது மக்களால் புறக்கணிக்கப்படும். உ.பி. யின் முன்னாள் முதல்வரும், மதவாத பாஜகவின் தளபதியும், பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ரதாரியுமான கல்யான்சிங்குடன் ஒரு தேர்தலில் கரம் கோர்த்து மண்ணைக்கவ்விய பின் மண்ணில் புரண்டு புலம்பினார் முலாயம் சிங் யாதவ்.
அதே போல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் அங்கம் வகித்து பாராளுமன்ற சபாநாயகர் பதவிவரை அனுபவித்து பின்பு கூட்டணியிலிருந்து கழன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ""பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது நான் செய்த மிகப்பெரிய தவறு. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்துவிட்டது என்று புலம்புகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் அங்கம் வகித்தது மிகப்பெரிய தவறு என, தற்போது உணர்கிறேன். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நான் இருந்ததால், முஸ்லிம்கள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகும்படி முதல்வர் நரேந்திர மோடியை வற்புறுத்தினோம். ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு நாம் ஆளாக நேர்ந்தது. இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறை செய்ய மாட்டோம். மைனாரிட்டிகளின் நன்மைக்காக பாடுபடுவோம். விவசாயத் துறையிலும் சில தவறுகளை செய்துவிட்டோம். இதெல்லாம் நமது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன என்று பேசியுள்ளார்.
மதவாத பாஜகவுக்கு பால் வார்த்த முலாயம் சிங் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு பட்டபின் தான் தெரிகிறது போலும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜகவை தாங்கிப்பிடித்த ஜெயலலிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைக்க தானாக முன் வந்தபோது சட்டை செய்யாமல் விட்டதால்தான் சிறுபான்மை மற்றும் மனிதநேய மக்களின் வாக்குகளை அவரால் பெறமுடிந்தது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் வியூகத்தை இனியாவது பாஜகவோடு கரம் கோர்க்க நினைப்பவர்கள் பின்பற்றட்டும்.
அழகுக்காக உணவுப்பொருளை வீணாக்குவதா?
மக்களில் ஒருசாரார் பசியோடு வறுமையில் வாடிக்கொண்டிருக்க, டன் கணக்கில் கோதுமை மற்றும் உணவுப்பொருள்களை சேமித்து வைத்த குடோன்களில் வீணாக்கியதால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கானதை நாம் மறந்திருக்க முடியாது. இதற்கு கராணம் உணவுப் பொருட்களை வீணாக்கினாலும் ஆக்குவோம். ஆனால் மக்களுக்கு கிடைக்கவிட மாட்டோம் என்ற அரசியல்வாதிகளின் அலட்சியம்தான்.
அதே போல், ''நம்நாட்டில், 37 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. 50 சதவீதம் பேர், வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் உள்ளனர். பொது சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் இவர்களை வாழ வைக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்காத படி பறிக்கப்பட்டு விடுகிறது என்று மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 50 சதவிகிதம் பேர் வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் மரணத்தை எத்ர்நோக்கியிருக்க, அத்தகைய ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களை ஒரு சாரார் வீணாக்குவதை பார்க்கிறோம். இயற்கையாக விளையும் மாம்பழத்தை உடனடியாக பழுக்க வைக்கும் நோக்கில், இராசயன கற்கள் மற்றும் ரசாயன பவுடர்கள் தூவி பழுக்க வைப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டு டன் கணக்கில் அழிக்கப்படுகின்றன. ஒரு மாம்பழம் கூட வாங்க வசதியற்ற மக்கள் வாழும் நாட்டில் பணத்தாசையால் சிலர் செய்யும் காரியத்தால் இவ்வாறு பல லட்சம் மாம்பழங்கள் அளிக்கப்படுவது கொடுமைதானே! தனி நபர்கள் தான இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் மறுபக்கம் அரசு சார்ந்த துறையினரும் இது போன்ற வீண் விரையங்களில் ஈடுபடுகின்றனர்.
நீலகிரியில் மே மாதம் முழுக்க நடந்த கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 28, 29ம் தேதிகளில் பழக் கண்காட்சி நடந்தது. இதில், குன்னூர் தோட்டக்கலைத் துறை சார்பில் 25 ஆயிரம் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு, நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தின் மாதிரி தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தர்மபுரி தோட்டக்கலைத் துறையினர், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் மாதிரி தோற்றத்தை மாம்பழங்களால் வடிவமைத்திருந்தனர். மதுரை தோட்டக்கலைத் துறையினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை, பல வகை பழங்களைக் கொண்டு அழகுபடுத்தியிருந்தனர். திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை சார்பில் திராட்சை பழங்களால் கரடியின் தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இதற்கு அனைத்து பழங்களையும் கம்பிகளால் கோர்த்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்பழங்கள் மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்தது.
இது குறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி கூறியதாவது: குன்னூர் ரயில் நிலையத்தின் தோற்றம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் ஆகியவை பழங்களால் உருவாக்கப்பட்டிருந்தன. இப்பழங்கள் அனைத்தும் ஊசி, கயிறு, கம்பி போன்ற பொருட்களால் குத்தி, உருவாக்கப்பட்டிருந்தது. அந்த பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி போன்ற பொருட்களை தயாரிக்க முடியாது; கால்நடைகளுக்கும் கொடுக்க முடியாது. எனவே, பழங்கள் அழிக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.
அரசுத் துறையின் இந்த செயல்பாட்டின் மூலம் பல லட்சம் மதிப்புள்ள பல லட்சம் பழங்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது விரையம் தானே. உணவுப் பொருளை கொண்டு கண்காட்சி அமைப்பதாக இருந்தால் அவை மீண்டும் மக்கள் உண்பதற்கு ஏதுவாக அமைக்கவேண்டும். அதை விடுத்து அழகுக்காக லட்சக்கணக்கான பழங்களை வீணாக்குவது எந்த வகை அறிவுடமை என்று அரசு சொல்லவேண்டும். ஆப்பிள் போன்ற பழங்கள் எல்லாம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக பணக்காரர்கள் மட்டுமே புசிக்கும் உணவாக மாறிவிட்ட நிலையில், யாருக்கும் பலனின்றி இவ்வளவு பழங்கள் விரயமாக்கப்படுவது சரியா? அரசு விழாக்கள் கூட எளிமையாக நடக்கும் என்று சொன்னதோடு, தனது முதல் பொது நிகழ்ச்சியை எளிமையாக நடத்திக் காட்டி மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ள முதல்வர், தனது அரசின் துறை சார்ந்தவர்கள் செய்யும் இதுபோன்ற வீண் விரையங்களை தடுக்க முன்வருவாரா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
''ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.[7:31 ]
தமிழர் தலைவரின்[?!] சிந்தனைக்கு...
'உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது ' என்ற சொல் வழக்கிற்கு சாலப் பொருத்தமானவர்கள் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள். வீட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க வீட்டையே கொளுத்திய அறிவாளி[!] போன்று, இவர்கள் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன் என்ற பெயரில் கடவுளையே ஒழிக்க முற்பட்டவர்கள். 'கோயில் கூடாது என்பது என் வாதமல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக்கி விடக் கூடாது என்கிறேன்' என்று கி.வீரமணியால் இன்றும் புகழப்படும் மு.கருணாநிதி எழுதிய பிரபல்யமான திரை வசனமாகும். கோயில் கொடியவர்களின் கூடாரமாகாமல் தடுக்கப் புறப்பட்டவர்கள், பின்னாளில் கோயிலே கூடாது என்று கொள்கை பேசினார்கள்.
சரி அதிலாவது உறுதியாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. பெரியார் நினைவு இல்லம் எழுப்பினார்கள். கல்லால் செய்யப்பட்ட சாமிக்கு மாலை போட்டால் அது காட்டுமிராண்டித்தனம்; அதே கல்லால் செய்யப்பட்ட பெரியாருக்கு மாலை போட்டு கையெடுத்து கும்பிட்டால் அதற்கு பெயர் பகுத்தறிவு என இவர்களின் இலக்கணம் மாறியது. இவர்களது இந்த கடவுள் மறுப்புக் கொள்கை பெரியாரோடு அடக்கம் செய்யப்பட்டு விட்டது என்பதை விட பெரியார் வாழும் காலத்திலேயே அதற்கான சவக்குழி தோண்டப்பட்டது என்பதுதான் உண்மை. பெரியாரின் வழி வந்த அண்ணா, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறி நாத்திக கொள்கையை சவக்குழிக்கு அனுப்பி தனது கையால் ஒரு பிடி மண்ணையும் அள்ளி போட்டார். அண்ணாவிற்கு பின்னால் வந்த, 'ஈரோடு பாசறையில் படித்தவன் என முழங்கும் மு.கருணாநிதி, `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்` என்று பகுத்தறிவு பேசி நாத்திக கொள்கைக்கு நாலாந்தர அர்த்தம் தந்தார். மாற்றொரு புறம் அண்ணாவின் வழி வந்த எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலை வணங்கினார். அவரது அரசியல் வாரிசு ஜெயலலிதா, பிரபல்ய மதவாதிகளின் ஆலோசனைப்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். இவ்வாறு பெரியார் வழி வந்தவர்கள் 'பெரியவா' வழியில் சற்றேறக்குறைய பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில், மண்ணோடு மண்ணாக மக்கிப்போன நாத்திக கொள்கையை இருப்பதாக காட்டிக்கொள்ள அவ்வப்போது பகுத்தறிவு கேள்விகள் என வீரமணியார் அடுக்குவார்.
ஆனால், இறந்து போன பெரியாருக்கு சிலை வைப்பதும், இறந்து போன பெரியாருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதும், பெரியார் சிலைக்கு மாலையிடுவதும் எந்தவகை பகுத்தறிவு என்ற சாதாரணக் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் மறைந்து விடுகிறார். இந்நிலையில் விடுதலை நாளிதழில், 'தமிழர்கள் சிந்தனைக்கு... என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவைகள் இந்து-கிறிஸ்தவ மதங்கள் தொடர்பானதாக உள்ள நிலையில், சில விஷயங்கள் இஸ்லாம் குறித்தும் உள்ளன. அவைகளுக்கு மட்டும் நாம் பதிலளிக்கிறோம். [சிகப்பு கலரில் உள்ளவைகள் பிரசுரத்தில் உள்ள கேள்விகள் என்பதை நினைவில் கொள்க]
உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?
இக்கேள்வியை கேட்பது எந்தவகை பகுத்தறிவோ தெரியவில்லை. கடவுள் என்பவன் எல்லா நிலையிலும் மனிதனிலிருந்து மாறுபட்டவனாக இருக்க வேண்டும். அவன் படைப்பு உட்பட. மனிதனை கடவுள் படைத்தது போன்று கடவுளை வேறொருவர் படைத்தால் அங்கே கடவுள் பிறப்பு விஷயத்தில் மனிதனுக்கு ஒப்பாகி விடுகிறான். அது மட்டுமன்றி கடவுளையே படைத்தவர்கள் சாமான்யர்களாக இருப்பார்களா? அவர்களும் கடவுளாகி விடுவர். இப்படியே கடவுளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போய்விடும். அவற்றின் முடிவு எவராலும் பதில் சொல்ல முடியாத ஒன்றாகிவிடும். வீரமணியாருக்கு புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது இவரின் கொள்கை. அது தவறு என்பது தனி விஷயம். நாம் கேட்பது முதல் குரங்கை படைத்தது யார்? தானாக தோன்றியது என வீரமணியார் கூற வருவாரானால், ஆதி குரங்கு தானாக தோன்றும் போது அதி பகவான் தோன்றுவது மட்டும் பகுத்தறிவுக்கு இடிக்கிறதோ?
இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?
முகவரி தேடி வந்து பணத்தைக் கொடுத்து விட்டு கையெழுத்து வாங்கிச்செல்ல கடவுள் ஒன்றும் தபால்காரர் அல்ல. கடவுளை நம்புபவர்கள் மட்டுமன்றி, கடவுளை நம்பாத வீரமணியார்கள் வரை கடவுளால் பலனடைத்தவர்கள் தான். வீரமணி கேட்கலாம் நான் எப்படி பலனடைந்தேன் என்று.? இவரது ஆசான் கடவுளை திட்டியே பிரபல்யமாகி அதனால் கிடைத்தது தானே பெரியார் நிலையங்களின் பலகோடி சொத்துக்கள்! அதை இன்றைக்கு வீரமணி அனுபவித்து [அல்லது நிர்வகித்து] வருகிறாரே! இது ஒன்றே கடவுள் தரக்கூடியவர் என்பதற்கு சான்றில்லையா? திட்டியவர்களுக்கே தரும் இறைவன், தன்னை நம்புபவனுக்கு தரமாட்டானா?
எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும் எவன் செயல்?
அதுவும் அவன் செயல்தான். மனிதன் வீரமணியார் போன்றவர்களின் வெற்று பகுத்தறிவை கேட்டு வரம்பு மீறி நடக்கும் போது தனது வல்லமையை மனிதனுக்கு காட்ட இறைவன் செய்யும் எச்சரிக்கைதான் அது. அதெல்லாம் கிடக்கட்டும் உங்க பகுத்தறிவை வைத்து இதையெல்லாம் கொஞ்சம் தடுத்து பார்க்க வேண்டியதுதானே?
குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?
மாதவிலக்கு நின்ற பெண்கள் குழந்தை பெறமுடியாது என்பதுதான் மருத்துவம் சொல்லும் உண்மை. ஆனால் மாதவிலக்கு நின்ற வயோதிகமடைந்த பெண் குழந்தை பெற்ற செய்தியெல்லாம் பத்திரிக்கையில் வந்ததை வீரமணியார் படிக்கவில்லையா? இறைவன் நாடினால் வயோதிகர்களுக்கும் குழந்தை தருவான். அவன் நாடினால் வாலிபனையும் மலடாக்குவான். குழந்தை தருவது கடவுளின் செயல் அல்ல என்பது வீரமணியாரின் கொள்கை. அப்படியாயின் குழந்தையை உருவாக்குவது மனிதன் என்றால், குழந்தை இல்லாத தம்பதிகள் எப்படி உருவாகிறார்கள்? எத்துனை வைத்தியம் பார்த்தும் குழந்தையே பிறக்காதவர்கள் வரலாறு வீரமணிக்கு தெரியாதா? இளமைப் பருவத்தில் இருக்கும் தம்பதிக்கு குழந்தை பேற்றை தடுத்த அந்த சக்தி யார் என்று வீரமணியார் கூறுவாரா?
சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பலவாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே ஏன்?
சாத்தானை நேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். தீய வழிக்கு அழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வடிவிலும் சாத்தானை அதாவது சாத்தானின் தன்மையை காண்கிறோம். சாத்தனை ஒழிப்பதற்கு கடவுளுக்கு ஆண்டுக்கணக்கில் அவகாசம் தேவையில்லை. அரை நொடி போதும். சாத்தானை அழித்து அனைத்து மனிதர்களையும் வீரமணியார் உட்பட, தன்னை வணங்கக் கூடியவர்களாக மாற்ற கடவுளுக்கு நீண்ட நேரம் தேவையில்லை. ஆனால் இயந்திரத்தனமான மனிதனை இறைவன் படைக்கவில்லை. சிந்திக்கும் அறிவை தந்து, சாத்தானின் வழிகேட்டை புறந்தள்ளி, தன்னை நம்பக்கூடிய அடியார்களை பிரித்தெடுப்பதற்காக சாத்தானுக்கு கடவுள் உலகம் அழியும் நாள் வரை அவகாசம் அளித்துள்ளான்.
எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?
கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?
கோயில்கள்-சர்ச்சுகள் எப்படியோ நமக்கு தெரியாது. பெரும்பான்மை மசூதிகளில் இடிதாங்கி வைக்கப்படவில்லை. நவீனமாக கட்டப்பட்ட சிலவற்றில் வைத்திருக்கலாம். இவ்வாறு இடிதாங்கி வைத்துக் கட்டுமாறு கடவுளும் சொல்லவில்லை. இடிதாங்கி வைக்காமல் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய மசூதி இந்தியாவில் இருப்பதை வீரமணியார் அறியவில்லையா? ஒரு கட்டடம் கட்டும் போது எந்தவகையான பாதுகாப்புகளை செய்வோமோ அதேபோன்றுதான் சில மசூதிகளில் இடிதாங்கி பொருத்தப் பட்டிருக்கலாம். காரணம் மசூதி என்பது அல்லாஹ் குடியிருக்கும் வீடல்ல. அவனை வணங்குவதற்கான ஒரு கட்டிடமே. மேலும் பள்ளிவாசல் கட்டாமல் இறைவனை வணங்க முடியுமா என்றால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி முடியும். பூமியில் தூய்மையான எந்த இடமும் இறைவனை தொழுவதற்கு ஏற்றவைதான். அதனால்தான் சில போரட்ட களங்களில் முஸ்லிம்கள் ரோட்டில் அணிவகுத்து நின்று தொழுவதை பார்க்கமுடியும். பிறகு ஏன் பள்ளிவாசல் என்றால், அனைவரும் ஓரிடத்தில் குழுமி ஒரு ஒருங்கிணைந்த வணக்கம் செலுத்த ஒரு இடம் தேவை என்ற அடிப்படையில்தான். அதோடு பள்ளிவாசலில் வீரமணியார் கூறுவது போன்று திருவிழாக்கள் எதுவும் நடத்துவதில்லை. அங்கு தொழுகை மட்டுமே நடைபெறும்.
என்னமோ புனித பயணம் மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே உயிரிழப்பது போலவும், அவர்களை கடவுள் காக்க தவறிவிட்டார் என்பது போலவும் வாதம் வைப்பவரே! வீட்டில் அடைந்து கிடப்பவருக்கும் மரணம் வருகிறதே! அவ்வளவு ஏன்? கடவுளை நம்பாத நாத்திகர்கள் மரணிக்கக் வில்லையா? அந்த நாத்திகர்களின் மரணத்தை தடுத்துக் காட்டிவிட்டு பின்னர் சொல்லட்டும் புனித பயணிகளை கடவுள் கைவிட்டு விட்டார் என்று. அவ்வாறு செய்ய முடியுமா இவர்களால்? முடியாது எனில்,அந்த நாத்திகர்களை எந்த இறைவன் மரணிக்க செய்தானோ அதே இறைவன்தான் புனித பயணம் மேற்கொள்பவர்களையும் மரணிக்க செய்கிறான். அவர்களை காக்க முடியாமல் அல்ல. மாறாக மனிதன் மரணிக்கக் கூடியவனே; அவன் வீட்டில் இருந்தாலும் கோயிலில் இருந்தாலும், மசூதியில் இருந்தாலும் அவனுக்குரிய தவணை வந்துவிட்டால் அவன் மரணிப்பவனே. மரணிக்காமல் இருப்பவன் கடவுளாகிய நான் மட்டுமே என்ற தத்துவத்தை உணர்த்தவே.
சென்னை நகரில் ஒண்ட குடிசை இன்றி, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து பிளாட்பாரத்தில் வாசம் கொள்ளும் லட்சக்கணக்கானோர் இருக்கும் நிலையில், என்னை மட்டும் பணக்காரனாக ஆக்கியது நியாயமா? என்று வீரமணியார் கேட்டால் அது நியாயம். மனிதனுக்கு மத்தியில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருப்பதும் இறைவனின் சான்றாகும். அப்படி இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. எல்லோருக்கும் வீரமணியார் அளவுக்கு காரும்-வசதியும் தந்துவிட்டால் விடுதலை பத்திரிக்கை வேலையை பார்க்க யார் வருவார் என்று சிந்திக்க மாட்டாரா?
வியாழன், 9 ஜூன், 2011
புதன், 8 ஜூன், 2011
தயாநிதியை பதவி விலக இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் வலியுறுத்தல்
அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு, இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நீக்கம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு நிலங்களை கையகப்படுத்தி முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரினோம். இது சம்பந்தமான அறிக்கை, கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. இது மனவருத்தத்தை அளித்தாலும், அதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெ., விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
முதல்வராக ஜெ., பொறுப்பேற்ற பின், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீராக்கப்பட்டுள்ளது. நாட்டில், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணம் மீட்கப்பட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், "ஸ்பெக்ட்ரம்' ஊழலை ரகசியமாக வெளியே கொண்டு வந்தவர் தயாநிதி. அவரால் செய்யப்பட்ட சதி, தற்போது அவருக்கு எதிராக திசை மாறி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.எம்.பாக்கர் கூறினார்.
நன்றி; தினமலர்
செவ்வாய், 7 ஜூன், 2011
முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்; பரோலில் விடுதலையாகி பட்டதாரி பெண்ணை மணந்தார்!
கோவை குனியமுத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் காஜா உசேன். இவருடைய மகன் அமானுல்லா (வயது 29). கடந்த 1996ம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற அலிம்ஜார்ஜ் என்பவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமானுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அமானுல்லா, திருமணம் செய்ய முடிவு செய்தார்.கோவை பி.கே.புதூரை சேர்ந்த முகமது ரபி என்பவருடைய மகள் ரிசானா பானுவுக்கும், அமானுல்லாவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
திங்கள், 6 ஜூன், 2011
மக்களுக்காக அதிகாரிகளை தேடிச்செல்லும் எம்.எல்.ஏ.,
நன்றி;தினத்தந்தி