வியாழன், 30 ஜூன், 2011

பல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

 ல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளின் ஜாமின் மனுவை, மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, அங்குள்ள ராந்திக்பூர் என்ற கிராமத்தில் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். பல்கிஸ் பானு என்ற பெண் வீட்டின் மீதும், வன்முறையாளர்கள் தாக்கினர். அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். வன்முறை கும்பல், பில்கிசை கற்பழித்தது.
இது தொடர்பான வழக்கு, மும்பை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு ஜாமின் அளிக்கும்படி மும்பை ஐகோர்ட்டில், குற்றவாளிகள் ஏழு பேர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், "இந்த வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, ஏழு பேருக்கும் ஜாமின் அளிக்க முடியாது' என, உத்தரவிட்டது.
 
நன்றி;தினமலர்.

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்தவார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!

 

திங்கள், 27 ஜூன், 2011

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்!

மிழகத்தில்  அதிமுக  ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர்கள் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம்பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.      
 
இதையடுத்து   மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையாவுக்கு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதித்துவம் இல்லை என்ற குறை ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தில் எதிரொலித்தது. இந்நிலையில்,     
 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் அவர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். இது ஓரளவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ற அளவில் இல்லை. எனவே இன்னும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமிக்கவேண்டும். புதிய அமைச்சரின் பணி சிறக்க, அவரால் முஸ்லிம் சமுதாயம் பலன் பெற பிரார்த்திக்கிறோம்.
 
-முகவைஅப்பாஸ்.

சனி, 25 ஜூன், 2011

மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
 
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
 
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
 
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
 
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
 
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
 
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
 
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. [நூல்;புஹாரி எண் 3207 ]
 
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். [முஸ்லிம்]

இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;
  1. ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
  2. அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
  3. ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
  4. அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
  5. ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.

படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]

படிப்பினைகள்; எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]

இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.

மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861

படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!

அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]

இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

-உங்கள் சகோதரன்; முகவை எஸ்.அப்பாஸ்.



வெள்ளி, 24 ஜூன், 2011

காயிப் ஜனாஸா தொழுகை கூடும்; பீஜே ஜமாஅத்தின் செயல்முறை ஃபத்வா!

நாங்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பவர்கள்; எங்களின் ஒவ்வொரு அசைவும் குர்ஆன்-ஸுன்னாவுக்கு உட்பட்டதுதான் என்று மார்தட்டிக்கொள்ளும் பீஜேயும் அவரை பின்பற்றுபவர்களும் எழுத்தில் ஒரு சட்டமும், பேச்சில் ஒரு சட்டமும், செயலில் ஒரு சட்டமும் என்ற கொள்கையை கொண்டவர்கள் என்பதற்கு பல சான்றுகள் இருந்தாலும் சமீபத்திய சான்றான காயிப் ஜனாஸா குறித்த இவர்களின் முரண்பாட்டை பார்ப்போம்.
 
பீஜே என்பவர் எழுதிய ஜனாஸாவின் சட்டங்கள் மற்றும் ஜனாஸா தொழுகை என்ற இரு நூல்களிலும் காயிப் ஜனாஸா குறித்து அவர் கூறும் விளக்கம்; ''ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாய கடமையாகும். ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது இத்தொழுகையை நடத்தி விட்டால் போதுமானதாகும்''  என்று கூறியுள்ளார்.
 
எழுத்தில் சொல்லியுள்ள இந்த சட்டத்திற்கு மாற்றமாக, ஏற்கனவே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஜனாசாவிற்கு [பிரேதம் இல்லாமல்] காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளனர் பீஜே ஜமாஅத்தினர். இதுபற்றி உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
இப்படி போகிறது உணர்வின் செய்தி. நாம்  கேட்பது,
பீஜேயின் எழுத்து ஃபத்வா பிரகாரம் ஒரு ஜனாசாவிற்கு யாரேனும் சிலர் தொழுகை நடத்தினால் போதுமானதாகும் என்பது சரியா? அல்லது ஜனாஸா தொழுகை  ஒரு சாராரால் நடத்தப்பட்ட பின்னும், மீண்டும் அதே ஜனாசாவிற்கு காயிப் ஜனாஸா தொழுவது சரியா?  நம் கண்ணுக்கு முன்பாகவே ஏற்கனவே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட ஜனாசாவிற்கு மீண்டும் காயிப் ஜனாஸா தொழுவதற்கான ஆதாரத்தை இவர்கள் வைக்க வேண்டும். மேலும், சுன்னத் ஜமாஅத்தினர் நடத்தும் ஜனாஸா தொழுகை குர்ஆன்- ஹதீசுக்கு மாற்றமானது என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். சுன்னத் ஜமாஅத்தினர் ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினாலும், அதே ஜனாசாவிற்கு மீண்டும் காயிப்ஜனாஸா நடத்தப்பட வேண்டும் என்றும் இவர்கள் ஆதாரங்களின் அடிப்படையில் அறிவிக்க வேண்டும். காயிப் ஜனாஸா கூடும் என்றால், இவர்கள் தங்களது முந்தைய நிலைப்பாட்டை அதாவது காயிப் ஜனாஸா தொழுகை கூடாது என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்களா என்றும் தெரிவிக்க வேண்டும்.
 
குறிப்பு; பீஜே என்பவர் பதிலளிக்க வேண்டும். அதிகாரப் பூர்வ இணையதளத்தில் பதிலளிக்க வேண்டும்.
 
 

இறக்குமதி குப்பைகளுக்கு இந்தியாவில் இடம்; இருக்கும் மக்களின் குப்பைகளை கொட்ட இடமில்லையோ..?

ங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை. இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
வெளிநாடுகளிலிருந்து இதுபோன்ற இறக்குமதிகள் அவ்வப்போது நடைபெறுவதும், அவை பறிமுதல் செய்யப்படும்போது மட்டும் செய்தியாவதும் தொடர்கிறது. வெளிநாடுகளிலிருந்து இத்தகைய மோசமான கழிவுகள் தனி நபர்களால் இறக்குமதி செய்யப்பட்டு அவைகளை இயன்றவரை பணமாக்கி விட்டு மீதி குப்பைகளை தமிழகத்தின் ஏதேனும் ஓரிடத்தில் கொட்டுகின்றனர். இப்படி வெளிநாட்டு குப்பைகளை கொட்டுவதற்கு இடமுள்ள தமிழகத்தில், பழம்பெரும்  ஊரான கீழக்கரை மக்களின் குப்பைகளை கொட்ட மட்டும் அரசு நிர்வாகத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பது அதிசயமே.
 
கீழக்கரை நகரசபையில் சேரும் குப்பைகள் தில்லையேந்தல் பகுதி அருகே கொட்டப்பட்டுவந்தது.
இதற்கு அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடைஉத்தரவு பெற்றுள்ளனர்.
இதன்காரணமாக கீழக்கரை தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு கும்பிடுமதுரை பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து கீழக்கரை நகரசபை தலைவர் பசீர் அகமது தலைமையில் அனைத்துகட்சி பிரமுகர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டதையடுத்து, கும்பிடு மதுரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைகளை கொட்டப்படுகிறது. எனினும் கும்பிடு மதுரை மக்களின்  எதிர்ப்பும் தொடர்கிறது.

குடிமக்கள் மீதான ஒரு அரசின் தலையாய கடமை என்பது அம்மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாகும். ஆனால் ஒரு பாராம்பரியமிக்க ஊரை குப்பை மேடாக காட்சியளிக்க செய்வதும், மக்கள் எதிர்ப்பு கிளம்பினால் தற்காலிகமாக தீர்வு காண்பதும் அரசுக்கு அழகல்ல. எனவே கீழக்கரையின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்காத  வகையில் சுற்றுப்புற கிராம மக்கள் உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் குப்பைகளை சாலை  ஓரங்களில் கொட்டி அவைகளுக்கு தீ வைப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துவதோடு, போக்குவரத்திற்கு இடையூறையும், மக்களுக்கு நோயையும் ஏற்படுத்துவதை தவிர்க்க, வெளிநாடுகள் போல், குடியிருப்புகளுக்கு வெகு தூரத்தில்  குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி அதை மண்ணைப் போட்டு மூடுவதன் மூலம் சுகாதாரத்தை பேணும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

குவைத் இதஜ'வின் வாராந்திர பிரசுரம்! [24-06-2011]


தூத்துக்குடி-இலங்கை பயணக்கப்பல்; சாதகமா? பாதகமா?




கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி போட்ட உயர்நீதிமன்றம்!


அரசு மருத்துவர்களின் அலட்சியம்; தேவை அதிரடி அருன்ராய்'கள்!!

புதிய தலைமைச் செயலகம்; காதலர்கள் அணிவகுப்பு;கண்டு கொள்ளுமா அரசு!

இறைமறையோடு மோதும் பாக் அதிபர்!

சனி, 18 ஜூன், 2011

மதுரை வில்லாபுரத்தில் நோட்டுப்புத்தகம் வழங்கல் மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

 

இதஜ தாராபுரம் கிளையின் மருத்துவ உதவி!

 

ஆனைமலையில் நடைபெற்ற இதஜ'வின் வரதட்சனை ஒழிப்பு கூட்டம்!

 

உலகப் பொதுமறை அழைக்கிறது; தாராபுரத்தில் இதஜ'வின் நிகழ்ச்சி!

 

வெள்ளி, 17 ஜூன், 2011

வாஞ்சிநாதன் சுதந்திர போராட்ட தியாகியா?

வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப் பானால் திருநெல்வேலி மாவட்ட  ஆட்சித் தலைவர்   ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டு நாள் இந்நாள் (17-6-1911).

மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணா சிரம வெறியா?

ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.

''ஆங்கில சத்துருக் கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந் திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ் ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில்,  கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய  ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட  உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மத ராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம்.  அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர் களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தா னத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்


இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப் பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்ட வமாடுகிறதா?

கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க் கட்டும் எவரும்.

மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்களைத்தானே?

அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படு கொலை செய்யப்பட்ட இட மான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக் கத்தைச் சேர்ந்தது?

பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!

- மயிலாடன்

நன்றி; விடுதலை நாளிதழ்.

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்தவார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!


 

இதஜ குவைத் மண்டலத்தின் வாராந்திர பிரசுரம்[1​7-11-2011]


இதஜ குவைத் மண்டலத்தின் வாராந்திர பிரசுரம்[17-11-2011]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இதஜ குவைத் மண்டலத்தின் வாராந்திர பிரசுரத்தை படிக்க கோப்பை பார்வையிடுக;


பத்திரிக்கையாளர் சந்திப்பு; 'கடுகடு' கருணாநிதி!

முன்னாள் முதல்வரும்  திமுக தலைவருமான மு.கருணாநிதி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல ஒரு பத்திரிக்கையாளரும் கூட. அவரை நிருபர்கள் சந்திக்கும் போது, எடக்கு மடக்காக கேள்வி கேட்டாலும் எதுகை மோனையோடு, சரளமான நகைச்சுவை இழையோட பதிலளிப்பவர் கருணாநிதி. அப்படிப்பட்டவரை தேர்தல்  தோல்வி- கனிமொழி கைது மட்டுமன்றி, தேர்தல் படுதோல்விக்கு  திமுகவே காரணம் என்று சக தோழமை கட்சியான காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டும் போக்கு ஆகியவை பெரிய அளவில் அவரது  மனநிலையில் பாதிப்பை உண்டாக்கியுள்ளன என்பதை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10 -11 -2011 நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி உணர்த்துகிறது. கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் என்ற பெயரில் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் கலைஞர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
 
கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போலச் சொன்னீர்கள். இன்றைய உங்கள் தீர்மானத்தில் அதை ஏன் குறிப்பிடவில்லை?.
 
பதில்:திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.
கேள்வி: 'கூடா நட்பு' என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?.
 
பதில்: உங்களில் [நிருபர்களில்] ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?
கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை, பிரச்சினை இல்லை என்று கூறுவீர்களா?
 
பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?
கேள்வி:ஜூலை மாதத்தில் நீங்கள் கூட்டுகின்ற பொதுக்குழுவில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
 
பதில்:நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.
கேள்வி:காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2&ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?
 
பதில்:ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இந்தத் தோல்விக்குக் காரணமா இல்லையா?
 
பதில்:இல்லை. தி.மு.க. தோல்விக்கு முக்கியமான காரணம் ஒரு சில 'பார்ப்பனர்களின்' முயற்சிதான்.
கேள்வி:பா.ஜ.க.வுடன் நீங்கள் செல்லப்போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?
 
பதில்:அதைப்பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.
கேள்வி:அடுத்து வரவிருக்கும் சி.பி.ஐ. மூன்றாவது குற்றப் பத்திரிகையிலே தயாநிதிமாறன் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?
 
பதில்: நீங்கள் [நிருபர்கள்] முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சி.பி.ஐ. தான் சொல்ல வேண்டும். சி.பி.ஐ. இதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.
கேள்வி:ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதிமாறனை ஆதரித்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.
 
பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப்போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:நான் அவருக்கெல்லாம்  பதில் சொல்ல மாட்டேன்.
கேள்வி:இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
 
பதில்:எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.
கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
 
பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.
கேள்வி:டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?
 
பதில்:போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.
கேள்வி:உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?
 
பதில்:உயர்நீதி மன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர்நீதி மன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா? அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?
கேள்வி:உங்கள் தீர்மானத்தில் சி.பி.ஐ.யை கண்டித்திருக்கிறீர்கள். சி.பி.ஐ. பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.
 
பதில்:நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மேற்கண்ட பதில்கள், ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்த  பத்திரிக்கையாளர்கள் மீது அவருக்கு கோபம் இன்னும் தீரவில்லை போலும்.
பத்திரிக்கையாளர்களும் அவரை விடுவதாக இல்லை. பரிதாபம் தான் போங்கள். 

திங்கள், 13 ஜூன், 2011

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமா? சஷ்டி விநாயகர் கோயிலா?

டந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தேமுதிக வின் சந்திரகுமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகம் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.,க்களை பாடாய்படுத்தியதால், அலுவலகத்தை வாஸ்து முறைப்படி மாற்ற, புது எம்.எல்.ஏ., உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தில் பரிகார பூஜைகள், வாஸ்து முறைப்படி மாற்றம் என்று பல்வேறு பணிகள் நடந்தன. தற்போது எம்.எல்.ஏ., அலுவலக சுவரில் விநாயகர் படம் வைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., அலுவலகத்தின் உட்புற அறையில் பயன்பாட்டுக்கான இடத்தை குறைக்கும் வகையில், சிறிய தடுப்புக்கள் அமைத்து, அதற்குள் அழகிய பூந்தொட்டிகள் வைத்து பல மாற்றங்களுடன் ஜொலிக்கிறது.எம்.எல்.ஏ., அலுவலகத்தின் வாஸ்து பிரச்னைக்கு பூந்தொட்டியும், விநாயகர் சிலையும் முற்றுப்புள்ளி வைக்கும், என்று எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ., அலுவலக வாஸ்து பிரச்னைக்கு பரிகாரம் செய்யப்பட்டதால், ஜூன் 15ல் சந்திரகுமார், அந்த அலுவலகத்தில் தனது எம்.எல்.ஏ., பணியை துவங்குவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி; தினமலர்

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு

ந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை, மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். டெல்லியில் நடந்த அகில இந்திய ஹஜ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்.
 
ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4-வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என்றார். மேலும் ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
நன்றி;மாலைமலர்
 

வெள்ளி, 10 ஜூன், 2011

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!

ட்டமியற்றும் அவையான சட்டமன்றத்தில் சமுதாயத்தின்  குரல் எதிரொலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி, தேர்தல் களப்பணியாற்றி மமக மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்டது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். அந்தவகையில் சட்டமன்ற மமக கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமுதாயத்தின் குரலை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.
 
வியாழன்று சட்டசபையில்  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவர் பேசியது:

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

 இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.

 திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார். அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.
தொடர்ந்து பேராசியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். 
 
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் சட்டமன்றப் பணியை பாராட்டும் அதே வேளையில், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்துவது  பற்றி  அவர் பேசியதாக செய்திகள் வெளியாகாதது  சற்றே வருத்தமளிப்பதாக
உள்ளது. எனினும் வருங்காலத்தில் இன்னும் வலுவாக சமுதாயத்தின் கருத்தை பதிவு செய்வார் என நம்புகிறோம்.
 

'பட்டது போதும் பாஜகவாலே'- பரிதாப நாயுடு!

சாராயக் கடைக்குள் அமர்ந்து கொண்டு சர்பத்'துதான்  குடித்தேன் என்று சொன்னாலும் அது பார்ப்பவர்களுக்கு சாராயமாகவே தோன்றும். அதனால் அத்தகையோரை மக்கள்  வெறுத்து ஒதுங்குவது இயல்பானதுதான். அதைப் போல் மதவாத பாஜகவோடு உறவு வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசினால் அது மக்களால் புறக்கணிக்கப்படும். உ.பி. யின் முன்னாள் முதல்வரும், மதவாத பாஜகவின் தளபதியும், பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ரதாரியுமான கல்யான்சிங்குடன் ஒரு தேர்தலில்  கரம் கோர்த்து மண்ணைக்கவ்விய பின் மண்ணில் புரண்டு புலம்பினார் முலாயம் சிங் யாதவ்.

அதே போல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் அங்கம் வகித்து பாராளுமன்ற சபாநாயகர் பதவிவரை அனுபவித்து பின்பு கூட்டணியிலிருந்து கழன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ""பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது நான் செய்த மிகப்பெரிய தவறு. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்துவிட்டது என்று புலம்புகிறார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் அங்கம் வகித்தது மிகப்பெரிய தவறு என, தற்போது உணர்கிறேன். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நான் இருந்ததால், முஸ்லிம்கள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகும்படி முதல்வர் நரேந்திர மோடியை வற்புறுத்தினோம். ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு நாம் ஆளாக நேர்ந்தது. இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறை செய்ய மாட்டோம். மைனாரிட்டிகளின் நன்மைக்காக பாடுபடுவோம். விவசாயத் துறையிலும் சில தவறுகளை செய்துவிட்டோம். இதெல்லாம் நமது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன என்று பேசியுள்ளார்.

மதவாத பாஜகவுக்கு பால் வார்த்த முலாயம் சிங் மற்றும்  சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு பட்டபின் தான் தெரிகிறது போலும். தமிழகத்தில் ஒரு காலத்தில்  பாஜகவை தாங்கிப்பிடித்த  ஜெயலலிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைக்க தானாக முன் வந்தபோது சட்டை செய்யாமல் விட்டதால்தான் சிறுபான்மை மற்றும் மனிதநேய மக்களின் வாக்குகளை அவரால் பெறமுடிந்தது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் வியூகத்தை  இனியாவது   பாஜகவோடு கரம் கோர்க்க நினைப்பவர்கள் பின்பற்றட்டும்.


அழகுக்காக உணவுப்பொருளை வீணாக்குவதா?

க்களில் ஒருசாரார் பசியோடு  வறுமையில் வாடிக்கொண்டிருக்க, டன் கணக்கில் கோதுமை மற்றும் உணவுப்பொருள்களை சேமித்து வைத்த குடோன்களில் வீணாக்கியதால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கானதை நாம் மறந்திருக்க முடியாது. இதற்கு கராணம் உணவுப் பொருட்களை வீணாக்கினாலும் ஆக்குவோம். ஆனால் மக்களுக்கு கிடைக்கவிட மாட்டோம் என்ற அரசியல்வாதிகளின் அலட்சியம்தான்.

அதே போல்,  ''நம்நாட்டில், 37 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. 50 சதவீதம் பேர், வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் உள்ளனர். பொது சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் இவர்களை வாழ வைக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்காத படி பறிக்கப்பட்டு விடுகிறது என்று மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 50  சதவிகிதம் பேர் வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் மரணத்தை எத்ர்நோக்கியிருக்க, அத்தகைய ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களை ஒரு சாரார் வீணாக்குவதை பார்க்கிறோம். இயற்கையாக  விளையும் மாம்பழத்தை  உடனடியாக பழுக்க வைக்கும் நோக்கில், இராசயன கற்கள் மற்றும் ரசாயன பவுடர்கள் தூவி பழுக்க வைப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டு டன் கணக்கில் அழிக்கப்படுகின்றன. ஒரு மாம்பழம் கூட வாங்க வசதியற்ற மக்கள் வாழும் நாட்டில் பணத்தாசையால் சிலர் செய்யும் காரியத்தால் இவ்வாறு பல லட்சம் மாம்பழங்கள் அளிக்கப்படுவது கொடுமைதானே! தனி நபர்கள் தான இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் மறுபக்கம் அரசு சார்ந்த துறையினரும் இது போன்ற வீண் விரையங்களில் ஈடுபடுகின்றனர்.

நீலகிரியில் மே மாதம் முழுக்க நடந்த கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 28, 29ம் தேதிகளில் பழக் கண்காட்சி நடந்தது. இதில், குன்னூர் தோட்டக்கலைத் துறை சார்பில் 25 ஆயிரம் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு, நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தின்  மாதிரி தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தர்மபுரி தோட்டக்கலைத் துறையினர், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் மாதிரி தோற்றத்தை மாம்பழங்களால் வடிவமைத்திருந்தனர். மதுரை தோட்டக்கலைத் துறையினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை, பல வகை பழங்களைக் கொண்டு அழகுபடுத்தியிருந்தனர். திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை சார்பில் திராட்சை பழங்களால் கரடியின் தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இதற்கு அனைத்து பழங்களையும் கம்பிகளால் கோர்த்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்பழங்கள் மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்தது.

இது குறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி கூறியதாவது: குன்னூர் ரயில் நிலையத்தின் தோற்றம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் ஆகியவை பழங்களால் உருவாக்கப்பட்டிருந்தன. இப்பழங்கள் அனைத்தும் ஊசி, கயிறு, கம்பி போன்ற பொருட்களால் குத்தி, உருவாக்கப்பட்டிருந்தது. அந்த பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி போன்ற பொருட்களை தயாரிக்க முடியாது; கால்நடைகளுக்கும் கொடுக்க முடியாது. எனவே, பழங்கள் அழிக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

அரசுத் துறையின் இந்த செயல்பாட்டின் மூலம் பல லட்சம் மதிப்புள்ள பல லட்சம் பழங்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது விரையம் தானே. உணவுப் பொருளை கொண்டு கண்காட்சி அமைப்பதாக இருந்தால் அவை மீண்டும் மக்கள் உண்பதற்கு ஏதுவாக அமைக்கவேண்டும். அதை விடுத்து அழகுக்காக லட்சக்கணக்கான பழங்களை வீணாக்குவது எந்த வகை அறிவுடமை என்று அரசு சொல்லவேண்டும். ஆப்பிள் போன்ற பழங்கள் எல்லாம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக பணக்காரர்கள் மட்டுமே புசிக்கும் உணவாக மாறிவிட்ட நிலையில், யாருக்கும் பலனின்றி இவ்வளவு பழங்கள் விரயமாக்கப்படுவது சரியா? அரசு விழாக்கள் கூட எளிமையாக நடக்கும் என்று சொன்னதோடு, தனது முதல் பொது நிகழ்ச்சியை எளிமையாக நடத்திக் காட்டி மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ள முதல்வர், தனது அரசின் துறை சார்ந்தவர்கள்  செய்யும் இதுபோன்ற வீண் விரையங்களை தடுக்க முன்வருவாரா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

''ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.[7:31 ]


தமிழர் தலைவரின்[?!] சிந்தனைக்கு...

'ண்மையிலேயே  தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது ' என்ற சொல் வழக்கிற்கு சாலப் பொருத்தமானவர்கள் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள். வீட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க வீட்டையே கொளுத்திய அறிவாளி[!] போன்று, இவர்கள் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன் என்ற பெயரில் கடவுளையே ஒழிக்க முற்பட்டவர்கள். 'கோயில் கூடாது என்பது என் வாதமல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக்கி விடக் கூடாது என்கிறேன்' என்று கி.வீரமணியால் இன்றும் புகழப்படும் மு.கருணாநிதி எழுதிய பிரபல்யமான திரை வசனமாகும். கோயில் கொடியவர்களின் கூடாரமாகாமல் தடுக்கப் புறப்பட்டவர்கள், பின்னாளில்   கோயிலே கூடாது என்று கொள்கை பேசினார்கள். 

சரி அதிலாவது உறுதியாக  இருந்தார்களா என்றால்  அதுவும் இல்லை. பெரியார் நினைவு இல்லம் எழுப்பினார்கள். கல்லால் செய்யப்பட்ட சாமிக்கு மாலை போட்டால் அது காட்டுமிராண்டித்தனம்; அதே கல்லால்  செய்யப்பட்ட பெரியாருக்கு மாலை போட்டு கையெடுத்து கும்பிட்டால் அதற்கு பெயர் பகுத்தறிவு என இவர்களின் இலக்கணம் மாறியது. இவர்களது இந்த கடவுள் மறுப்புக் கொள்கை பெரியாரோடு அடக்கம் செய்யப்பட்டு விட்டது என்பதை விட பெரியார் வாழும் காலத்திலேயே  அதற்கான சவக்குழி தோண்டப்பட்டது என்பதுதான்  உண்மை. பெரியாரின் வழி வந்த அண்ணா, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறி நாத்திக கொள்கையை சவக்குழிக்கு அனுப்பி தனது கையால் ஒரு பிடி மண்ணையும் அள்ளி போட்டார். அண்ணாவிற்கு பின்னால் வந்த, 'ஈரோடு பாசறையில் படித்தவன் என முழங்கும் மு.கருணாநிதி,  `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்`  என்று பகுத்தறிவு பேசி நாத்திக கொள்கைக்கு நாலாந்தர அர்த்தம் தந்தார். மாற்றொரு புறம் அண்ணாவின் வழி வந்த எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலை வணங்கினார். அவரது அரசியல் வாரிசு ஜெயலலிதா, பிரபல்ய மதவாதிகளின் ஆலோசனைப்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். இவ்வாறு பெரியார் வழி வந்தவர்கள் 'பெரியவா' வழியில் சற்றேறக்குறைய பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில், மண்ணோடு மண்ணாக மக்கிப்போன நாத்திக கொள்கையை இருப்பதாக காட்டிக்கொள்ள  அவ்வப்போது பகுத்தறிவு கேள்விகள் என வீரமணியார் அடுக்குவார்.

ஆனால், இறந்து போன பெரியாருக்கு சிலை  வைப்பதும், இறந்து போன பெரியாருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதும், பெரியார் சிலைக்கு மாலையிடுவதும்  எந்தவகை பகுத்தறிவு என்ற சாதாரணக் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் மறைந்து விடுகிறார். இந்நிலையில் விடுதலை நாளிதழில், 'தமிழர்கள் சிந்தனைக்கு... என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவைகள் இந்து-கிறிஸ்தவ மதங்கள் தொடர்பானதாக  உள்ள நிலையில், சில  விஷயங்கள் இஸ்லாம் குறித்தும் உள்ளன. அவைகளுக்கு மட்டும் நாம் பதிலளிக்கிறோம். [சிகப்பு கலரில் உள்ளவைகள் பிரசுரத்தில் உள்ள கேள்விகள் என்பதை நினைவில் கொள்க]

உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்? 

இக்கேள்வியை கேட்பது எந்தவகை பகுத்தறிவோ தெரியவில்லை. கடவுள் என்பவன் எல்லா நிலையிலும் மனிதனிலிருந்து மாறுபட்டவனாக இருக்க வேண்டும். அவன் படைப்பு உட்பட. மனிதனை கடவுள் படைத்தது போன்று  கடவுளை வேறொருவர் படைத்தால் அங்கே கடவுள் பிறப்பு விஷயத்தில் மனிதனுக்கு ஒப்பாகி விடுகிறான். அது மட்டுமன்றி கடவுளையே படைத்தவர்கள் சாமான்யர்களாக இருப்பார்களா? அவர்களும் கடவுளாகி விடுவர். இப்படியே கடவுளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போய்விடும். அவற்றின் முடிவு எவராலும் பதில் சொல்ல முடியாத ஒன்றாகிவிடும். வீரமணியாருக்கு புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது இவரின் கொள்கை. அது தவறு என்பது தனி விஷயம். நாம் கேட்பது முதல் குரங்கை படைத்தது யார்? தானாக தோன்றியது என வீரமணியார் கூற வருவாரானால், ஆதி குரங்கு தானாக தோன்றும் போது அதி  பகவான் தோன்றுவது மட்டும் பகுத்தறிவுக்கு இடிக்கிறதோ? 

இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?

முகவரி தேடி வந்து பணத்தைக் கொடுத்து விட்டு கையெழுத்து வாங்கிச்செல்ல கடவுள் ஒன்றும் தபால்காரர் அல்ல. கடவுளை நம்புபவர்கள் மட்டுமன்றி, கடவுளை நம்பாத வீரமணியார்கள் வரை கடவுளால் பலனடைத்தவர்கள் தான். வீரமணி கேட்கலாம் நான் எப்படி பலனடைந்தேன் என்று.? இவரது ஆசான் கடவுளை திட்டியே பிரபல்யமாகி அதனால் கிடைத்தது தானே  பெரியார் நிலையங்களின்  பலகோடி சொத்துக்கள்! அதை இன்றைக்கு வீரமணி அனுபவித்து [அல்லது நிர்வகித்து] வருகிறாரே! இது ஒன்றே கடவுள் தரக்கூடியவர் என்பதற்கு சான்றில்லையா? திட்டியவர்களுக்கே  தரும் இறைவன், தன்னை நம்புபவனுக்கு தரமாட்டானா?

எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும்  எவன் செயல்?

அதுவும் அவன் செயல்தான். மனிதன் வீரமணியார் போன்றவர்களின் வெற்று பகுத்தறிவை கேட்டு வரம்பு மீறி நடக்கும் போது தனது வல்லமையை மனிதனுக்கு காட்ட இறைவன் செய்யும் எச்சரிக்கைதான் அது. அதெல்லாம் கிடக்கட்டும் உங்க பகுத்தறிவை வைத்து இதையெல்லாம் கொஞ்சம் தடுத்து பார்க்க வேண்டியதுதானே?

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

 மாதவிலக்கு நின்ற பெண்கள் குழந்தை  பெறமுடியாது என்பதுதான் மருத்துவம் சொல்லும் உண்மை. ஆனால் மாதவிலக்கு நின்ற வயோதிகமடைந்த பெண் குழந்தை பெற்ற செய்தியெல்லாம் பத்திரிக்கையில் வந்ததை வீரமணியார் படிக்கவில்லையா? இறைவன் நாடினால் வயோதிகர்களுக்கும் குழந்தை தருவான். அவன் நாடினால் வாலிபனையும் மலடாக்குவான்.  குழந்தை  தருவது கடவுளின் செயல் அல்ல என்பது வீரமணியாரின் கொள்கை. அப்படியாயின் குழந்தையை  உருவாக்குவது மனிதன் என்றால், குழந்தை இல்லாத தம்பதிகள் எப்படி உருவாகிறார்கள்? எத்துனை வைத்தியம் பார்த்தும் குழந்தையே பிறக்காதவர்கள் வரலாறு வீரமணிக்கு தெரியாதா? இளமைப் பருவத்தில் இருக்கும் தம்பதிக்கு குழந்தை பேற்றை தடுத்த அந்த  சக்தி யார் என்று வீரமணியார் கூறுவாரா?

சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பலவாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே ஏன்?

சாத்தானை நேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். தீய வழிக்கு அழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வடிவிலும் சாத்தானை அதாவது சாத்தானின் தன்மையை  காண்கிறோம்.  சாத்தனை ஒழிப்பதற்கு கடவுளுக்கு ஆண்டுக்கணக்கில் அவகாசம் தேவையில்லை. அரை நொடி போதும். சாத்தானை அழித்து அனைத்து மனிதர்களையும் வீரமணியார் உட்பட, தன்னை வணங்கக் கூடியவர்களாக மாற்ற கடவுளுக்கு நீண்ட நேரம் தேவையில்லை. ஆனால் இயந்திரத்தனமான மனிதனை இறைவன் படைக்கவில்லை. சிந்திக்கும் அறிவை தந்து, சாத்தானின் வழிகேட்டை புறந்தள்ளி, தன்னை நம்பக்கூடிய அடியார்களை பிரித்தெடுப்பதற்காக சாத்தானுக்கு கடவுள் உலகம் அழியும்  நாள் வரை அவகாசம் அளித்துள்ளான்.  

எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப்  பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?

கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?

கோயில்கள்-சர்ச்சுகள் எப்படியோ நமக்கு தெரியாது. பெரும்பான்மை மசூதிகளில் இடிதாங்கி வைக்கப்படவில்லை. நவீனமாக கட்டப்பட்ட சிலவற்றில் வைத்திருக்கலாம். இவ்வாறு இடிதாங்கி வைத்துக் கட்டுமாறு கடவுளும் சொல்லவில்லை. இடிதாங்கி வைக்காமல் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய மசூதி இந்தியாவில் இருப்பதை வீரமணியார் அறியவில்லையா? ஒரு கட்டடம் கட்டும் போது எந்தவகையான பாதுகாப்புகளை  செய்வோமோ அதேபோன்றுதான் சில மசூதிகளில் இடிதாங்கி பொருத்தப் பட்டிருக்கலாம். காரணம் மசூதி என்பது அல்லாஹ் குடியிருக்கும் வீடல்ல. அவனை வணங்குவதற்கான ஒரு கட்டிடமே. மேலும் பள்ளிவாசல் கட்டாமல் இறைவனை வணங்க முடியுமா  என்றால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி முடியும். பூமியில் தூய்மையான எந்த இடமும் இறைவனை தொழுவதற்கு ஏற்றவைதான். அதனால்தான் சில போரட்ட களங்களில் முஸ்லிம்கள் ரோட்டில் அணிவகுத்து நின்று தொழுவதை பார்க்கமுடியும். பிறகு ஏன் பள்ளிவாசல் என்றால், அனைவரும் ஓரிடத்தில் குழுமி ஒரு ஒருங்கிணைந்த  வணக்கம் செலுத்த ஒரு இடம் தேவை என்ற அடிப்படையில்தான். அதோடு பள்ளிவாசலில் வீரமணியார் கூறுவது போன்று திருவிழாக்கள் எதுவும் நடத்துவதில்லை. அங்கு தொழுகை மட்டுமே நடைபெறும்.

தெருவில் டேப் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிற பக்கிரிசாக்கள் புனித யாத்திரை (மெக்கா பயணம்) கடமை முடிப்பது எப்போது?
உடலாலும், பொருளாலும் சக்தி பெற்றவர் நீங்கலாக,மற்ற எவருக்கும் மக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிவீராக. 
 
நமக்கு வரும் நோய்களுக்கெல்லாம் பிரார்த்தனை, தொழுகை நேர்த்திக் கடன் செய்தால் மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?
அப்படி இஸ்லாம் சொல்லவில்லை. மருத்துவமும் செய்யுங்கள்- பிரார்த்தனையும் செய்யுங்கள் என்றுதான் இஸ்லாம் கட்டளையிடுகிறது.
 
எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவனை வழிபட சபரிமலை, திருப்பதி, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, மெக்கா செல்லும் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பது எவன் செயல்? தன்னைத் தேடிவருபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இதுதானா?

என்னமோ புனித பயணம் மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே உயிரிழப்பது போலவும், அவர்களை கடவுள் காக்க தவறிவிட்டார் என்பது போலவும் வாதம் வைப்பவரே! வீட்டில் அடைந்து கிடப்பவருக்கும் மரணம் வருகிறதே! அவ்வளவு ஏன்? கடவுளை  நம்பாத நாத்திகர்கள் மரணிக்கக் வில்லையா? அந்த நாத்திகர்களின் மரணத்தை  தடுத்துக் காட்டிவிட்டு பின்னர் சொல்லட்டும் புனித பயணிகளை கடவுள் கைவிட்டு விட்டார்  என்று. அவ்வாறு செய்ய முடியுமா இவர்களால்? முடியாது எனில்,அந்த நாத்திகர்களை எந்த இறைவன் மரணிக்க செய்தானோ அதே இறைவன்தான் புனித பயணம் மேற்கொள்பவர்களையும்  மரணிக்க செய்கிறான். அவர்களை காக்க  முடியாமல் அல்ல. மாறாக மனிதன்  மரணிக்கக் கூடியவனே; அவன் வீட்டில் இருந்தாலும் கோயிலில் இருந்தாலும், மசூதியில் இருந்தாலும் அவனுக்குரிய தவணை வந்துவிட்டால் அவன் மரணிப்பவனே. மரணிக்காமல் இருப்பவன் கடவுளாகிய நான் மட்டுமே என்ற தத்துவத்தை உணர்த்தவே.
 
புதிதாக கார் வாங்குபவர்கள்,  இது கடவுளின் பரிசு என்று எழுது கிறார்கள். பலகோடி பேருக்கு கார் கொடுக்காத கடவுள் இவர்களுக்கு மட்டும் கார் கொடுப்பது நியாயம் தானா?

சென்னை நகரில் ஒண்ட குடிசை இன்றி, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து பிளாட்பாரத்தில் வாசம் கொள்ளும் லட்சக்கணக்கானோர் இருக்கும் நிலையில், என்னை மட்டும் பணக்காரனாக ஆக்கியது நியாயமா? என்று வீரமணியார் கேட்டால் அது நியாயம். மனிதனுக்கு  மத்தியில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருப்பதும் இறைவனின் சான்றாகும். அப்படி இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. எல்லோருக்கும் வீரமணியார் அளவுக்கு காரும்-வசதியும் தந்துவிட்டால் விடுதலை பத்திரிக்கை வேலையை பார்க்க யார் வருவார் என்று சிந்திக்க மாட்டாரா?
 
மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் கோயில்களும், - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?
பெரியாரின் சீர்திருத்த பாசறையில் பயின்ற உங்களுக்குள் எப்படி மோதலும், பிரிவும், சொத்து சண்டையும் வந்ததோ அதே போன்று மதத்தில் உள்ளவர்களிலும் உள்ள சில புரியாத மூடர்களால் தான் கோயில்களும்- மசூதிகளும் இடிபடுகின்றன. மோதலுக்கு காரணம் மதம் என்றால், மத நம்பிக்கையற்ற உங்கள் இயக்கம் பிரிவு- சொத்துச்சண்டை- வழக்குகள் ஏன் உருவானதோ..?
 
மெக்காவிற்குச் சென்றவர்களுக்குப் பணச்செலவு தானே ஆகிஇருக்கும், வேறென்ன பயன் கிடைத்தது?
மத அடிபப்டையில் கிடைக்கும் நன்மையை சொன்னால் நம்ப மாட்டீர். ஆனால் உலகம் நவீனமான பின்னும் ஒழிக்கமுடியாத தீண்டாமையை ஒழித்து, கருப்பனும்-வெள்ளையனும், அரசனும்- ஏழையும் ஒன்று கூடி ஒரே சீருடையில், ஒன்றாக கலந்து, பிறப்பால்  மனிதனுக்கு மத்தியில் உயர்வு- தாழ்வு இல்லை என்ற மிகப்பெரிய படிப்பினை பலன் கிடைத்தது. உங்களது நாத்திக பிரச்சாரத்தால் தமிழகத்தில் கூட  இரட்டைக்  குவளைகளையும், திண்ணியம் சம்பவங்களையும், ஒழிக்க முடியவில்லையே?
 
இறுதியாக மூடநம்பிக்கைகளை சாடுகிறோம் என்ற பெயரில் போகிற போக்கில் இஸ்லாத்தின் மீது கல்லெறியும் வேலையை விட்டுவிட்டு, இஸ்லாம் குறித்த ஐயப்பாடுகளை திறந்த மனதுடன் கலந்துரையாட வீரமணி அவர்களோ, அவரது கொள்கை வாதிகளோ முன்வந்தால், இஸ்லாம் குறித்த நாத்திகர்களின் எந்த சந்தேகம் குறித்தும் உங்களுடன் கலந்துரையாடல் நடத்திட, சமுதாய மக்கள் ரிப்போர்ட் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

இதஜ குவைத் மண்டலத்தின் வாராந்திர பிரசுரம்[1​0-06-2011]


புதன், 8 ஜூன், 2011

தயாநிதியை பதவி விலக இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் வலியுறுத்தல்

கீழக்கரை : "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மத்திய அமைச்சர் தயாநிதி பதவி விலக வேண்டும்' என்று, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார்.
அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு, இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நீக்கம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு நிலங்களை கையகப்படுத்தி முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரினோம். இது சம்பந்தமான அறிக்கை, கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. இது மனவருத்தத்தை அளித்தாலும், அதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெ., விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

முதல்வராக ஜெ., பொறுப்பேற்ற பின், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீராக்கப்பட்டுள்ளது. நாட்டில், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணம் மீட்கப்பட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், "ஸ்பெக்ட்ரம்' ஊழலை ரகசியமாக வெளியே கொண்டு வந்தவர் தயாநிதி. அவரால் செய்யப்பட்ட சதி, தற்போது அவருக்கு எதிராக திசை மாறி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.எம்.பாக்கர் கூறினார்.

நன்றி; தினமலர்


சிதிலமடந்த பாலம்; அரசின் சிந்தனையை கவர சீரிய முயற்சி!




ஆனைமலையில் வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்!

இதஜ சார்பாக வெயிலுக்கு இதமான தண்ணீர் பந்தல்!

செவ்வாய், 7 ஜூன், 2011

முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்; பரோலில் விடுதலையாகி பட்டதாரி பெண்ணை மணந்தார்!

கோவை, ஜூன்.7
கோவை குனியமுத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் காஜா உசேன். இவருடைய மகன் அமானுல்லா (வயது 29). கடந்த 1996ம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற அலிம்ஜார்ஜ் என்பவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமானுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அமானுல்லா, திருமணம் செய்ய முடிவு செய்தார்.கோவை பி.கே.புதூரை சேர்ந்த முகமது ரபி என்பவருடைய மகள் ரிசானா பானுவுக்கும், அமானுல்லாவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
ரிசானாபானு பி.ஏ. பட்டதாரி பெண், ஆயுள் தண்டனை கைதியான அமானுல்லாவை திருமணம் செய்ய முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெற இருப்பதையொட்டி  பரோலில் விடுவிக்க அனுமதிக்குமாறு அமானுல்லா, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அவருக்கு வருகிற 21ந் தேதி வரை பரோல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 ;30 மணி அளவில் கரும்புக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் அமானுல்லாவுக்கும், ரிசானா பானுவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது 2 1/2 பவுன் தங்கநகையை மணப்பெண்ணுக்கு திருமண கொடையாக அமானுல்லா வழங்கி, திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
திருமணம் முடிந்த பின்பு அமானுல்லா கூறும்போது, இருவரின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த எனக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை கைதிகளை விடுவிப்பதில் முன்பு பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. புதிய அரசு இந்த விஷயத்தில் கருணை காண்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். பரோல் விடுதலை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வருகிற 21ந்தேதி அமானுல்லா மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை கைதியின் திருமணத்தையொட்டி  கரும்புக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  
 
நன்றி; தினத்தந்தி.
மணமக்களுக்கு மண வாழ்த்தை தெரிவிக்கிறோம். , மணமகன் விரைவில் விடுதலையாக பிரார்த்திக்கிறோம்.

திசையெங்கும் உதயமாகும் இதஜ கிளைகள் 'திசையன்விளையிலும்...

சட்டம் பயிலும் மாணவர்களுக்கு இதஜ'வின் கல்வி உதவி!

திங்கள், 6 ஜூன், 2011

இதஜ'வின் அழைப்புப்பணி; இஸ்லாத்தை நோக்கி அணியணியாய்...

அரசியல் தலைவர்களுக்கு அல்-குர்ஆன் பரிசளிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திருக்குர்'ஆன் அளிக்கும் இதஜ தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள்.

மக்களுக்காக அதிகாரிகளை தேடிச்செல்லும் எம்.எல்.ஏ.,

ரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் சுந்தர்ராஜ். இவர் தனது தொகுதிக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும், அரசு திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய வேண்டும், மக்களும் அரசு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவாய், மின்சாரம், பொதுப் பணித்துறை போன்ற அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்கிறார். அவரது இந்த அணுகுமுறை அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல தன்னை நாடி வரும் மக்களிடமும் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரைகளை கடைபிடித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பொதுமக்கள் அவர் மீது நம்பிக்கையுடன் உள்ளனர்.  

நன்றி;தினத்தந்தி