வியாழன், 28 பிப்ரவரி, 2013

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்!

  • ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

  • வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

  • பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

  • மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

  • கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
    அதில் பிராமணர்கள் 2376 பேர்!
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

  • ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

நன்றி -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

ரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான "அஷ்ஷைக் நபீலுல் அவலி" தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:

நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும்
போது, திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி
, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.

அதற்கவர் அளித்த பதில்: நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
, பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன், உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை, ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர், அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார் இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது.

நான் மிகப் பெரிய செல்வந்தன்
, ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை, ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?

ஒரு நாள் அவரிடம் சென்று நான் உன்னுடன் சற்று உட்கார
வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே அதெப்படி உன்னால் முடிகிறது?. அதற்கவர் சொன்னது: நான் ஒரு முஸ்லிம். "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்.

அதற்கு
நான் அவரிடம் அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா? எனக் கேட்டேன். அதற்கவர் ஆம் என்று பதிலளித்தார். நான் அதெப்படி? என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.

அதற்கவர் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
, அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: "இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும், நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான் அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது, அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை". எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது, துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம், இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும், ஈடேற்றமாகும், இன்பமாகும் என அவர் பதிலளித்தார்.

இது தான் என்னை
இஸ்லாத்தில் நுழைய வைத்தது. "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்

இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?:

சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே!, எனக்கு எழுத முடியாதே!, என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.

புன்முறுவல் பூப்பதற்கு, மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ, வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை, பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே, இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். "முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்".

எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.

எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?:

"உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

"நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை" என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).

"நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை" என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).

தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி





Photo

thanks;
Novshath
G-Tex,
Dammam
.



நம்பியது போதும் நாசக்கரர்களை..................!

 

 
நம்பியது போதும் நாசக்கரர்களை

photo;
Novshath
G-Tex,
Dammam
.
_

சனி, 16 பிப்ரவரி, 2013

நான் ஏன் யூதர்களை அழித்தேன்?

நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும்...    நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள்...    நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள்....    ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அளிக்க பட வேண்டியவர்கள் தான் என்று நிங்களே சொல்விர்கள் -    உலகிலுள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதம் பேரை விட்டுச் செல்கிறேன், நான் ஏன் யூதர்களை அழித்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விட்டு செல்கிறேன்...    - ஹிட்லர்...     இந்த நல்ல கருத்துக்களை நம் நண்பர்கள் மத்தியில் பரப்ப SHARE செயுங்கள் !!  SHARE THIS IF U LIKE !!!












நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும்...

நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள்...

நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள்....

ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள்  அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று நீங்களே சொல்வீர்கள் -

உலகிலுள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதம் பேரை விட்டுச் செல்கிறேன், நான் ஏன் யூதர்களை அழித்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விட்டு செல்கிறேன்...

- ஹிட்லர்... 

வழக்கின் முதல் குற்றவாளிகள் எல்லாம் முன்ஜாமீன் பெற்று முழு சுதந்திரமாக வலம் வரும் நாட்டில், ஜோடிக்கப்பட்ட வழக்கில் 31வது குற்றவாளியாக உள்ள எங்கள் சகோதரன் மவ்லவி. அப்துந்நாசிர் மதானி அவர்களுக்கு உரிய சிகிச்சை பெற ஜாமீன் மறுக்கும் அநீதி.

எங்கள் இறைவா! அதிகார வர்க்கத்தின் ''வர்க்க'பேதத்திற்கு இரையாகி, உடல்நலக்குறைவால் வாடும் எங்கள் சகோதரனுக்கு பூரண நிவாரணம் அளித்திடுவாயாக! அநியாயத்தின் சிறைக்கதவை உடைத்தெறிந்து அவரை சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வாயாக!!

முஸ்லிம் இயக்க சகோதர்களே! மதனியும் ஒரு அப்சலாகி அஸ்தமம் ஆவதற்குள் அவரது விடுதலைக்கான குரலை ஓங்கி ஒலித்திட களமிறங்குவோம் இன்ஷா அல்லாஹ்.

அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்

அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

இந்திய பாராளுமன்றத்  தாக்குதல் வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருந்த அப்சல்குருவிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திபடுத்துவதற்காக என்ற வகையில்  
கடந்த 2002 டிசம்பர் 18 அன்று அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். 

இதனைத்  தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவை அப்சலின் மரண  தண்டனையை உறுதி செய்த நிலையில், அப்சல்குருவின்  மனைவியான தபசும்   ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பின் அப்சல்குரு மீண்டும் சட்டத்தின் உதவியை நாட வழியிருந்தும் அதற்கான வாய்ப்பை அப்சலுக்கு வழங்காமல் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த ஒரு வாரத்திற்குள் எவ்வித முன் அறிவிப்புமின்றி அவசர கதியில் கடந்த பிப் 9 அன்று ரகசியமாக அப்சல்குருவை தூக்கில் போட்டுள்ளது மத்திய அரசு.

மேலும் தூக்குத் தண்டனைக்கு  முன் பேணப்படவேண்டிய விதிமுறைகள் அப்சல் விஷயத்தில் பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சிந்தனையாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அப்சலின் தண்டனை நிறைவேற்றம் குறித்து அப்சலின் மனைவிக்குஅனுப்பப்பட்ட கடிதம் அவரது தண்டனை நிறைவேற்றத்திற்கு பின்பு இரு நாட்கள் கழித்து சென்றடைந்துள்ளதைக்  குறிப்பிடலாம். மேலும் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சலின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்க முயற்சிக்காமல் ரகசியமாக சிறையிலேயே அடக்கம் செய்துள்ளது சிறை நிர்வாகம்.

எனவே அப்சல்குரு விஷயத்தில் மத்திய அரசு பேணத்தவறிய விதிமுறைகளுக்குப் பரிகாரமாகவும் கருணை அடிப்படையிலும் அப்சல் குருவின்  மனைவி தபசுமுக்குஅவரது தகுதி அடிப்படையில் மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்.மேலும் அவரது  மகனின் முழு கல்விச் செலவையும் மத்திய அரசோ, அல்லது காஷ்மீர் மாநில அரசோ ஏற்கவேண்டும்.இது அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு ஆறுதலாகவாவது இருக்கும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

                                                                                  இப்படிக்கு 

                                                                                                                முஹம்மது ஷிப்லி 
                                                                                                                  மாநிலச் செயலாளர் 
                                                                                                         இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 


புதன், 13 பிப்ரவரி, 2013

அப்ஸல் குருவுக்கு தூக்கு: சட்ட விதிகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு!

afsal guru

புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பொது சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் படி அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் சட்ட விதிகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மத்திய செயலகம் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, புதிதாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு குற்றவாளிக்கு வழங்குவது உள்பட நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது சட்ட விதிகளை ஒட்டுமொத்தமாக மீறிய செயல் ஆகும். குற்றவாளியை தூக்கில் போடுவது தொடர்பான தகவல் அவரது உறவினருக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. திட்டமிட்ட இந்த செயல் காரணமாக, குற்றவாளியை அவரது குடும்பத்தினர் இறுதியாக சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்லாமல் மனித உரிமையை மீறிய செயல் ஆகும்.

எதிர்காலத்தில் இது போன்று சட்ட விதிகள் மீறப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மரண தண்டனைக் கைதியின் இறுதிச் சடங்குகளைக் கூட விதிகளின் படி மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி;http://www.thoothuonline.com/

காக்கியும் ஈரமும்...!

சமூக விரோதிகளையும், தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளையும் காவல்துறை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், அதற்காக அவர்களும் காக்கி சீருடையில் உலவும் குண்டர்களாக மனிதாபிமானமே இல்லாத கொடுமைக்காரர்களாக ஆகிவிட வேண்டும் என்று சட்டமா என்ன? சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்கள் என்பதால் சட்டத்தை அவர்களே கையில் எடுத்துக்கொள்வது முறையல்ல. தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன.


அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, சிறைத் துறையின் மெத்தனமும் காவல்துறையின் அதிகார வரம்புமீறலும் ஒருங்கே வெளிப்பட்டு, அனைவராலும் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமைக்குக் காரணம்- குற்றம் செய்யாத சாதாரண மனிதர்களையும், குற்றவாளிகளின் உறவுகளையும் இன்னொரு மனிதராக நினைக்காமல் தங்களை வெறும் காக்கிச்சட்டையாக மட்டுமே பார்ப்பதுதான்.
கணவர் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, அவரது மனைவி தபஸýம் ஒரு கருணை மனுவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். பிப்ரவரி 3}ஆம் தேதி அவரது கருணை மனு நிராகரிக்கப்படுகிறது. இத்தகவலை தபஸýமுக்கு தெரிவிக்கும் கடிதம் பிப்ரவரி 6}ஆம் தேதி திகார் சிறை கண்காணிப்பாளரால் கையெழுத்திடப்படுகிறது. 8-ஆம் தேதிதான் விரைவு அஞ்சலில் அனுப்பப்படுகிறது. அடுத்தநாளே அப்சல் குரு தூக்கிலிடப்படுகிறார்.
சட்டப்படி பார்த்தால் இதில் தவறு காண முடியாது. தூக்கு தண்டனைக்கு நீதிமன்றத் தடை கிடைத்துவிடக் கூடாது என்று அரசு கருதி செயல்பட்டிருந்தாலும் அதில் சட்டப்படி தவறு காண முடியாது. அரசின் நிர்வாக முடிவு அது. அதற்கான எதிர்ப்பை அடுத்த தேர்தலில்தான் காட்ட முடியும்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அதே நேரத்தில், காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் கட்சியொன்றின் தலைவரான சையத் அலி ஷா கிலானியின் மகள், மருமகன் இப்திகார் கிலானி இருவரையும், தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு சுமார் 5 மணி நேரம் தங்கள் நேரடி கண்காணிப்பில் சிறைபிடித்திருந்தது. இதற்கான காரணம்கூட அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. இவர்கள் மட்டுமின்றி, இவர்களுடைய பள்ளிசெல்லும் குழந்தைகளும் தனியறையில் அடைக்கப்பட்டனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சரே தெரிவித்துவிட்ட பிறகு, எந்தக் குற்றமும் செய்யாத இவர்களிடம் எந்த விளக்கமும் சொல்லாமல் 5 மணிநேரம் சிறைபிடித்த போலீஸின் செயலை இந்தியப் பத்திரிகையாளர் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கண்டித்துள்ளார். இச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். நாஜி ஜெர்மனியின் "கெஸ்டபோ' எனும் ரகசியப் போலீஸ் போல தில்லி போலீஸ் நடந்துகொண்டுள்ளது என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.
இப்திகார் கிலானி, "டிஎன்ஏ' என்கிற ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றுபவர். இந்திய அரசு அவருக்கு "அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்' என அடையாள அட்டை வழங்கியுள்ளது. அவரிடமும் காவல்துறை இந்த அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் என்றால், வரம்புமீறும் என்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதுதான் நமது கேள்வி.
ஒரு குற்றவாளிக்காக, எந்தக் குற்றமும் செய்யாத உறவுகளை இம்சிப்பதும், அதன் மூலம் குற்றவாளியைச் சரண் அடையச் செய்வது அல்லது உண்மைகளைக் கக்க வைப்பது என்பதும் மாறாத நடைமுறை. காக்கிச்சட்டைகளிடம் பரவலாகக் காணப்படும் பெருங்கறை.
அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞருக்காக, அவருடைய தம்பியரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல்நிலையத்துக்குபோய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு, உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறியதால் மனம்வெறுத்த அந்தத் தாய், வீடுவந்து தூக்கில் தொங்கி இறந்தார். இப்திகார் கிலானிக்கு குரல் கொடுக்க பத்திரிகைகள் இருந்தன. ஆனால்,பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை. 
 இரு நாள்களுக்கு முன்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து கணினித்துறை சார்ந்த ஒரு பெண், தனது மோசமான காவல்நிலைய அனுபவத்தை கூறியுள்ளார். ""மடிக்கணினி திருட்டுக்காக புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றோம். "வழக்குப் பதிவு செய்தால் தினமும் காவல்நிலையத்திற்கு வருவீர்களா?' என்று கேட்டபோது, புகார் கொடுக்காமலே வந்துவிட்டோம்'' என்று கூறியுள்ளார். காவல் நிலையங்களுக்கு புகார்களுடன் செல்லும் பெருவாரியான பொதுமக்களின் அனுபவமும் இதுதான்.
காவல்துறை எப்போதும் காக்கிச்சட்டையாக இருக்க வேண்டியதில்லை. மனிதாபிமானம் இல்லாத காவல் துறையும், சர்வாதிகார ஆட்சியும் வேறு வேறு அல்ல. மக்களின் தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின், செல்வாக்கு படைத்தவர்களின் கூலிப்படையாக மாறிவிட்டால் சாமானியக் குடிமகனுக்கு யார் காவல், யார் பாதுகாப்பு?
பொதுமக்களுக்குத் தெரிந்த, அன்றாடம் தொடர்பில் உள்ள அரசின் முகம் காவல்துறையுடையதுதான். இவர்களது செயல்பாடுகள்தான் ஒரு ஆட்சியின் செல்வாக்கை நிர்ணயிக்கும். அதை ஆட்சியாளர்கள் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, காவல் துறையை வழிநடத்தவும் வேண்டும்.
கல்லுக்குள் கூட ஈரம் உண்டு. காக்கிக்கு ஈரம் இல்லாமல் போனால் எப்படி?

-By தினமணி
First Published : 13 February 2013 01:54 AM IST


செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மக்கள் வரிப்பணம் விரையமாவது பற்றி கருணாநிதி பேசுவதா?(news)

டந்த திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 550 கோடி செலவில், கருணாநிதியால் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்ததைப் போன்று, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் , பழைய தலைமைச்  செயலகத்தில் தான் நான் கோலோசசுவேன் என்றும் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை சந்தித்தது.

முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரபட்ட வழக்கு தள்ளுபடி ஆன நிலையில், தான்  நினைத்தபடி புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக திறந்துவைத்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதி, மக்களின் வரிப் பணத்தை ஜெயலலிதா வீணடிப்பதாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த மருத்துவமனை விவகாரத்தை நாமும் கண்டிக்கிறோம் அதே நேரத்தில் மக்களின் வரிப்பணம் வீணாவது பற்றி கருணாநிதி பேசுவது ஆச்சர்யமானதாகும்.   இறந்து போன தலைவர்கள் பெயரால் தமிழகத்தில் உள்ள மணிமண்டபங்கள, சிலைகள் யாவும் பெரும்பாலும் இந்த திருக்குவளையார் திறந்து வைத்ததுதான். இதற்காக மக்களின் வரிப்பணம் கருணாநிதியால் பல்லாயிரம் கோடி விரையமாக்கப் பட்டதே! இந்த மணிமண்டபங்கள் இப்போது பெரும்பாலும் காதலர்கள் ஒதுங்குமிடங்கலாகவே பயன்படுகிறது என்று மக்கள் பேசிக்கொள்வதை கருணாநிதி அவர்களால் மறுக்க முடியுமா?

பருவமழை பொய்த்து, கர்நாடகாவும் காவிரி நீரை கை விரித்த காரணத்தினால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயலும் வயிறும் காய்ந்த போது கவலைப்படாத கருணாநிதி, மத்தியில் அமைந்துள்ள தனது கூட்டணி கட்சித் தலைமையை வலியுறுத்தாத கருணாநிதி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தாத கருணாநிதி, குமரியிலே தான் திறந்து வைத்த வள்ளுவர் சிலை பராமரிப்பின்றி கிடக்கிறதே என கண்ணீர் வடித்தார். இந்த வள்ளுவர் சிலையை கடலிலே அமைக்க கருணாநிதி கொட்டிய தொகை 10 கோடி. இந்தப் பணமெல்லாம் கருணாநிதிக்கு வீண் விரையமாக தெரியவில்லையா?

ஆக கருனாநிதியாரே! மக்கள் வரிப்பணத்தை விரையமாக்கி புகழ் பெறுவதில் ஜெயலலிதா உங்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார் என்றாலும்  உங்களை வெல்ல முடியாது என்பதை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள். மக்கள் தங்களின் வரிப்பணம் அரசால் எந்த வகைக்கு செலவிடப்படுகிறது என்பதை கண்காணித்து கேள்வி கேட்காத வரைக்கும் உங்களையும் ஜெயலலிதாவையும் திருத்துவது கடினமே.


திங்கள், 11 பிப்ரவரி, 2013


சினிமா வில்லன்கள் பாணியில் மிரட்டி ஒரு அப்பாவியை குற்றவாளியாக்கிய வெட்கங்கெட்ட அதிகார வர்க்கம்!


எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு     அமெரிக்காவின் 'ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை 'தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...  சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத   அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு   தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.  அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?  அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.  அப்படியெனில் அந்த அப்சல் யார்?  அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. 'ஜம்மு காஷ்மீர் விடுதலஇயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு   இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை   உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.  அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த 'கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.  வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென   கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?  உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...  நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் 'முஸ்லிம் அய்க்கிய முன்னணி'   உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப்   போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, 'ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப்   பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப்   படையினர் எனக்கு 'சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.  எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப்   என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க   வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய்   லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.  நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.  வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?  சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: 'ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து   கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்   கொல்லப்பட்டனர்).  நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர்   பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத்   தெரிந்த அனைத்தையும் கூறினேன்.  ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக்   கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான்   பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.  மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை   பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை   அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?  எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு   வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட   அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக   இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.  சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?  உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய   பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.  தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?  பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த   செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...  எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை   விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை   விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.  தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?  எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது   பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.  தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?  தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?  நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...  உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின்   ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?  ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு   மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.  காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)  நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?  அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட   வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.  - by பூங்குழலி-தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம
எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

அமெரிக்காவின் 'ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை 'தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?

அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.

அப்படியெனில் அந்த அப்சல் யார்?

அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. 'ஜம்மு காஷ்மீர் விடுதலஇயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன்.

அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர்.

உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.
அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த 'கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.

வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?

உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...

நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் 'முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது.

முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர்.

நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, 'ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு 'சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர்.

நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன். எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர்.

22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது.

துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.

நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.

வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?

சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: 'ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).

நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.

ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.

மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?

எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார்.

நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?

பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான்.

அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன.

உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...

எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.

தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.

தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?


தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?
நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...
உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?


ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.

காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)

நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?

அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

- by பூங்குழலி-தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம
 

சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!


சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!

 

Download SocButtons

டந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச் சிறுமி, ஏறத்தாழ பத்துமாத காலம் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்து 22.10.2012 அன்று மரணமடைந்தாள்.

இந்தச் செய்தி முதன்முதலாக பிபிஸீயின் மத்தியக் கிழக்குச் செய்திப் பிரிவில் 31.1.2013இல் சில சேர்க்கைகளுடன் வெளியிடப்பட்டது.


அந்தச் செய்திக்கு மேலும் கண்ணும் காதும் மூக்கும் இன்ன பிறவும் சேர்த்து, பல ஆங்கில இதழ்கள் வெளியிட்டன. குறிப்பாக, கல்ஃப் ந்யூஸ் இதழின் 3.2.2013 தேதியிட்ட செய்தியில், "தன் சொந்தப் பிள்ளைகளை ஒரு தகப்பன் கொலை செய்தால் அவனை தண்டிக்க முடியாது என்பது சவூதி அரபியாவில் நடப்பிலுள்ள சட்டமாகும்" எனும் தவறான கருத்தைச் சேர்த்து வெளியிட்டது.

"
சவூதி அரபியாவின் சட்டம்" என்று கல்ஃப் ந்யூஸ் வெளியிட்ட செய்தியை "ஷரிஆ சட்டம்" என்பதாக மாற்றி, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் செய்து நமது தமிழ் அறிவுசீவிகள் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளினர். அவர்களுள் இஸ்லாத்தை எதிர்த்து நிற்பதைக் குலத் தொழிலாகச் செய்துவரும் திண்ணை வார இதழ் தனது 3.2.2013 பதிப்பில் "5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை" எனும் தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதே செய்தி, தினமலர் நாளிதழின் 4.2.2013 அன்று "மகளை கற்பழித்து கொன்றவருக்கு தண்டனை குறைப்பு: பெண்கள் எதிர்ப்பு" எனும் தலைப்பில் வெளியாகியிருந்தது.

இவை மட்டுமல்லாது 'கோடங்கி' எனும் ஒரு பாவனைப் பகுத்தறிவாளர், "மகளைக் கொன்ற மதவாதி; பணம் கொடுத்தால் விடுதலை" என்று தலைப்பிட்டு இஸ்லாமியக் காழ்ப்பைக் கக்கியிருந்ததோடு, It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son." (At-Tirmidhi) என்ற ஒரு அரைகுறைத் தகவலை வெளியிட்டிருந்தார்.

பொய்யான தகவலைப் பரப்புகிறோம் என்ற சிந்தனையின்றி அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ரிப்பீட் அடித்தது ஒரே செய்தியைத்தான். அவற்றுள்:

1. ஃபய்ஹான் அல் காமிதி என்பவன் இஸ்லாமிய மதபோதகன்.
2.
அவன் தொலைக்காட்சிகளில் தோன்றி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்பவன்.
3.
தன் சொந்த மகளின் உடலின் 'எல்லா பாகங்களிலும்' வல்லுறவு கொண்டான்.
4.
மகளை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவளின் தாயாரும் தன் முன்னாள் மனைவியுமான பெண்மணிக்கு $50,000 அபராதம் செலுத்தியபின் சுதந்திரமாக உலா வருகிறான்.
5.
சொந்தப் பிள்ளைகளைக் கொன்றால் தந்தையைப் பழிக்குப்பழி எனும் தண்டனை இஸ்லாத்தில் கிடையாது.

ஆகிய தவறான ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி, தம் மனம்போன போக்கில் எழுதி மாய்ந்து போயினர்.

ஃபய்ஹான் அல் காமிதி என்பவன், இறந்தவர்களைக் குளிப்பாட்டும் தொழிலாளி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்ற ஃபய்ஹான், மதபோதகன் அல்லன். சிறுவயதில், தான் சீரழிக்கப்பட்டதையும் போதைக்கு அடிமையாகிக் கிடந்து, இஸ்லாத்தின் போதனைகளால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததையும் தொலைக்காட்சி அமர்வுகள் சிலவற்றில் விவரித்திருக்கிறான்.

அவனுடைய ஐந்து வயது மகள், எவராலும் வல்லுறவு செய்யப்படவில்லை என்பதை மருத்துவ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. "என் மகள், தன் சொந்தத் தகப்பனால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டாள்; அவள் வல்லுறவு செய்யப்படவில்லை. இறந்துவிட்ட என் மகளை ஊடகங்கள் மானபங்கப் படுத்தவேண்டாம்" என்று சிறுமி லமாவின் தாய் ஸயீதா முகம்மது அலீ குமுறுகிறார்.

ஊடகங்களின் பொறுப்பற்ற இழிநிலையை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. நீதித்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் ஃபஹத் அல் பூக்ரான், "இன்னும் விசாரணையே முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கும் வழக்கில், தீர்ப்பு வெளியாகிவிட்டதாக அச்சு/மின் ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் திரித்துக் கூறுகின்றன" என்று மறுப்புக் கூறுகிறார்.


Saudi Arabia's justice ministry has denied reports that a father who allegedly raped and tortured his five-year-old daughter Luma to death had been set free after having to pay diya (blood money).

"The media reports published in newspapers and posted on electronic websites and social networks on the court verdict in the Luma case are not true," Fahad Bin Abdullah Al Bokran, the ministry spokesperson, said.

"The case is still being heard at the court and no sentence has been issued yet. The father is still in prison and we expect a ruling soon after all aspects related to the case are examined," he said in remarks published by the Saudi media on Thursday.

Fahad Bin Abdullah Al Bokran


சொந்த மகளை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் காமிதி இன்னும் சிறையில்தான் இருக்கிறான். வருகின்ற 13.2.2013இல் விசாரணை நடைபெறவுள்ளது எனும் செய்தியையும் கல்ஃப் ந்யூஸ் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம், தமது முந்தைய செய்தியில் பிழை இருப்பதைக் கண்டு, வெட்கப்படாமல் உண்மை நிலையை வெளியிட்டுள்ளது கல்ஃப் ந்யூஸ்.

ஆனால், தவறான தகவல்களைப் பதிந்த எந்த ஊடகமும் எந்தப் பதிவரும் இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்.

"
இந்த வழக்கில், குழந்தையின் தாயான, தன் மனைவிக்கு அவர் ரத்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுவரை அவர் சிறையிலிருந்த காலமே போதுமானது என்றும், சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இஸ்லாமிய சட்டங்களின்படி, தன் சொந்த குழந்தைகளை கொன்ற தந்தை மற்றும் மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை ஏதும் விதிக்கப்படாது. அதற்கு பதிலாக, கொலையாளி, கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு, இழப்பீட்டுத் தொகையாகப் பணம் வழங்க வேண்டும். இது, 'ரத்த இழப்பீடு' என்று அழைக்கப்படுகிறது" என்று அவிழ்த்துவிட்ட தினமலர் நாளிதழில் இதுவரை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் கண்டித்த இந்தச் செய்தி வெளிவரவில்லை.

பொதுவாகவே, உலக அளவில் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிராக எதையாவது அவ்வபோது கக்கிக்கொண்டிருப்பதையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. அதிலும் தமிழகத்திலுள்ள தினமலர் நாளிதழைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இஸ்லாத்துக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதற்கு ஏதாவது கிடைத்தால் அவ்வாய்ப்பை அது தவறவிடுவதே இல்லை. நாளிதழ்கள் படிக்கும் பழக்கமுடைய பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த உண்மை ஏற்கனவே நன்கு தெரியும். ஆகவே, தினமலரில் வரும் செய்திகள், அதுவும் இஸ்லாம் அல்லது முஸ்லிம்களை மையப்படுத்தி வரும் காழ்ப்புணர்வுச் செய்திகளை இப்போதெல்லாம் எவரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனால், மேற்கண்ட இச்செய்தியினை அவ்வளவு இலகுவாக புறம்தள்ளி சென்றுவிடமுடியாது. ஒற்றைப்பார்வையில், மிகக் கொடூரமாக பச்சிளம் குழந்தையை வன்புணர்ந்து கொலை செய்த இஸ்லாமிய மதப்போதகருக்குத் தண்டனை என்ற பெயரில் வெறும் 4 மாத சிறைவாசமும் ரத்தப்பணமும் மட்டும் விதித்து விடுதலை செய்துள்ளது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்தான் என்ற மிகப் பாரதூரமானதொரு அவதூறு இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் சாதாரண பாமரனுக்கும் இஸ்லாத்தின்மீது, "இவ்வளவு கேவலமான மார்க்கமா இஸ்லாம்? ஆணாதிக்கத்தின் உச்சத்தில் உள்ளதே இஸ்லாம்?" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும் ஆபத்து உள்ளது.

ஆகவே, இச்செய்தி உண்மைதானா? தினமலர் குறிப்பிடுவது போன்றதொரு சட்டம் இஸ்லாத்தில் உள்ளதா? சவூதியின் ஷரீஆ நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வெளியிட்டதா? ஆகிய விஷயங்களைத் தேடிப் பயணித்தபோது, இச்செய்தியில் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதனைத் தெளிவாக பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஃபய்ஹான் அல் காமிதி குறித்த விவரங்கள் இதோ:

சிறுவயதில் தாயை இழந்து, மோசமான தந்தையிடமிருந்து பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்த ஃபய்ஹான், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சரியான கவனிப்பு இல்லாமல் வளர்ந்த ஃபய்ஹான், சிறு வயதிலேயே போதைப்பொருள், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் இளம்வயதிலேயே சிறை சென்ற அவர், தன் 24ஆம் வயதில் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிவோரால் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு மனம் திருந்தி, போதைப் பொருளுக்கு அடிமையானோரை அதிலிருந்து விடுவிப்பதற்கான பயிற்சி கொடுப்பவராக மாறியுள்ளார். இவரின் முயற்சியால், சிறையில் போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடந்த பலர் மனம் திருந்தியுள்ளனர். இதில் பிரபலமான அவர், தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது போதைப் பொருளின் தீமைகள் குறித்துத் தொடர் பேச்சுகளும் பேட்டிகளும் வழங்குபவராக மாறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், எகிப்தில் பிறந்து 25 ஆண்டுகாலம் சவூதியில் வசித்துவருபவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவருமான ஸயீதா முஹம்மது அலீ என்பவர் ஃபய்ஹானைப் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்தான் கொல்லப்பட்ட சிறுமியான லமாவின் தாயார். இனி அவரின் வாயாலேயே ஃபய்ஹான் குறித்து அறிவோம்:

"மார்க்கத்தில் சிறந்த நல்லதொரு ஒழுக்கச்சீலர் எனவும் மரணமடைந்தவர்களைச் சுத்தம் செய்து அவர்களை அடக்கம் செய்யும் உயரிய சமூகப்பணியினை மேற்கொள்பவர் என்றும் ஃபய்ஹான் குறித்து எனக்கு விவரங்கள் சொல்லப்பட்டன. அதன் அடிப்படையில் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவருடைய குணத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. என்னை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தினார். பிறருக்கு வெளியே நல்லுபதேசம் செய்வதற்கு நேர் எதிரான குணங்களையே என்னிடம் காண்பித்தார். மார்க்கக் கடமைகளை அவர் சரியாக பேணுவதில்லை. கடமையான நோன்புகளைக்கூட ரமளானில் அவர் விட்டுள்ளார்.

போதைப்பொருட்களை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். அதற்கு மேலும் அவருடன் இருப்பது என் வாழ்வுக்கு நல்லதல்ல என முடிவு செய்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன். ஃபய்ஹானும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்குப் பிறந்த குழந்தை லமாவை, அவளுடைய 7 வயதுவரை நானே பராமரித்துக்கொள்ள நீதிமன்ற உத்தரவைப் பெற்று நானே வளர்த்து வந்தேன். முறைப்படி மாதத்தில் இரு வாரங்கள் மட்டும் லமா ஃபய்ஹானுடன் இருக்கவேண்டும்.

அவ்வாறு கடந்த முறை அவரிடம் லமாவை விட்டபோது, என் மகளைத் திரும்ப என்னிடம் தரமுடியாது என அவர் மறுத்தார். திரும்பத் திரும்ப என் மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நீதிமன்ற உத்தரவை நினைவூட்டினேன். இந்நிலையிலேயே சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ரியாத் காவல்துறையினரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. லமாவுக்கு விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையில் 10 மாதம் தொடர் சிகிட்சையில் இருந்த லமா, சிகிட்சை பலனில்லாமல் 2011 டிசம்பரில் மரணமடைந்தாள். தன் தந்தையின் பொறுப்பில் இருந்த வேளையில் குழந்தை பாதிக்கப்பட்டதால், அதன்பேரில் காவல்துறை ஃபய்ஹானையும் அவரின் புது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரின் புது மனைவி கர்ப்பமாக இருந்ததால், கைது செய்யப்பட்ட இரு வாரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்"

மேற்கண்டவாறு லமாவின் தாயார் கூறுகிறார். அவருடைய பேட்டியினை முழுமையாகக் கீழே காணலாம்:


Dim lights Embed

"கொலைக்குக் கொலை" என்று விதித்துள்ள இஸ்லாம், கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் மன்னித்தால் மட்டும் கொலையாளி, "இழப்பீட்டு பணம்" கொடுத்து விடுதலை செய்யப்படலாம் என்கிறது. மேலும், இந்தத் தண்டனை விசயத்தில், ஏழை - பணக்காரன், வலியவன் - எளியவன் என்ற எந்தப்பாகுபாடும் இஸ்லாம் காட்டவில்லை. மாறாக, அவ்வாறு காட்டக்கூடாது என்றே கடுமையாக கட்டளையும் இடுகிறது. தன் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவதுதான் தீர்ப்பு என்று வலியுறுத்தும் நபிமொழியில்கூட, முந்தைய சமுதாயங்கள் தம்மிடையே கவுரமான நிலையிலுள்ள வலியவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயல்படுத்திய காரணத்தாலே அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதோடு, அவ்வாறு சட்டத்தில் பாகுபாடு கூடாது; அனைவருக்கும் சமமான நீதிதான் இஸ்லாம் என்பதை மிகக் கண்டிப்புடன் வலியுறுத்துகிறது.

இறைச்சட்டங்களை நடைமுறைபடுத்தக் கூறும் இறைவசனங்கள்கூட, குற்றவாளி யூதனோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சமமான நீதியே காட்டவேண்டுமெனவும் கட்டளையிடுகிறது.

இவ்வாறு இஸ்லாத்தில் மிகத்தெளிவாக தண்டனை சட்டம் இருக்கும்போது, "ஒருவன் தன் மனைவியையோ தன் குழந்தையையோ கொன்றால் அவனுக்கு மரணதண்டனை இல்லை" என இஸ்லாம் கூறுவதாகத் திரிப்பது அப்பட்டமான அவதூறும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அக்கிரமச் செயலுமாகும்.

இச்செய்தியினை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வந்தவர்களுள் ஒருவரான கோடங்கி எனும் பதிவர், திரிமிதீயில் பதிவான கீழ்க்கண்டதொரு அரைகுறைச் செய்தியினை மேற்கோள்காட்டி இஸ்லாம் அவ்வாறு கூறுவதாகப் பழி சுமத்துகிறார்.

It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son" (At-Tirmidhi).

"
எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்படக்கூடாது" என நபியவர்கள் கூறியதாகக் குறிப்பிடும் மேற்கண்ட திர்மிதீயின் பதிவு குறித்து, அது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். பலர் என்பதில் இமாம் திர்மிதீயும் அடக்கம். இந்தச் செய்தியைத் தமது 1399ஆவது பதிவில் வைத்திருக்கும் இமாம் திர்மிதீ அவர்கள், "இது பலவகையிலும் குழறுபடியான செய்தி" என்ற முக்கியக் குறிப்புடன்தான் அதை வைத்திருக்கிறார் (இணைப்பு).


 

مسألة: التحليل الموضوعي
بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ ابْنَهُ يُقَادُ مِنْهُ أَمْ لَا

1399
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشَمٍ قَالَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنْ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ مِنْ أَبِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُرَاقَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ رَوَاهُ إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مُرْسَلًا وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْأَبَ إِذَا قَتَلَ ابْنَهُ لَا يُقْتَلُ بِهِ وَإِذَا قَذَفَ ابْنَهُ لَا يُحَدُّ

சவூதியின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களான முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித் , முஹம்மது பின் ஸாலிஹ் அல் உதைமீன் ஆகியோர் மேற்காணும் செய்தி குறித்து ஆழமாக ஆய்ந்து அதைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர். கூடுதலாக இமாம் அல் அஸ்கலானீ அவர்கள் "இது தள்ளுபடியாவதற்கு எல்லா வகையிலும் பொருத்தமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்

ஒரு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) என்றால் அதற்கான முதலாவது சான்றாதாரம் இறைமறையாகும். இறைமறை கூறுகிறது:

வேதம் வழங்கப்பட்டோர்க்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45).

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.(4:93)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. (2:178).

"எந்தப் பாவத்திற்காக அச்சிறுமி கொல்லப்பட்டாள்?" (81:9).

ஃபய்ஹானுக்கு என்ன தண்டனை?

ஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லாமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

Regards,

Shadhuly A. Hassan

Admn. & Mgmt. Assistant

Modern Machinery Co. Ltd.

Riyadh, Saudi Arabia

Tel: 00966-1-4030745     Fax: 00966-1-4036410

Mobile: 00966-504259841





--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.