சனி, 31 மார்ச், 2012

ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!

ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!

உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும். இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.


இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;


நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;


ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

அபூ சுப்யான்;இல்லை.
[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7

முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?

நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி

வியாபாரத்திலும் பொய் கூடாது;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி

வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?

எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சஹாபாக்கள்;

தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.

'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். நூல்;புஹாரி,எண் 4673


மற்றொரு ஹதீஸில்;
அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான். 

'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.(திருக்குர்ஆன் 09:117-119) நூல்; புஹாரி, எண் 4678


கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?

பொய்யர்களுக்கு தண்டனை;


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். 

நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,

என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பொய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!

குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம்!

சத்தியத்தில் உறுதியாய்....சமூகத்தில் இணக்கமாய்....என்ற தாரக மந்திரத்துடன் குர்'ஆன்-சுன்னா வழிகாட்டுதல் அடிப்படையில் அனைத்துப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்திவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக, மக்களின் நலனுக்கு எதிரான அணுஉலைக்கு எதிராக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, 30 -3 -2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6:30 மணிக்கு குவைத் மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு குவைத் மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அன்வர் பாஷா அவர்கள் வரவேற்புரை வழங்க, மதிமுகவின் தமிழர் மறுமலர்ச்சிப் பேரவையின் தோழர்கள்  சத்தியன் ,ராவணன்,விஜயன் , தமிழ்நேசன் விழிப்புணர்வுக் கையேடு ஆசிரியர் சகோதரர். அ.அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாய்மண் கலை இலக்கியப் பேரவை தோழர் : அன்பரசன் , குவைத் தமிழர் கூட்டமைப்பு தோழர் செந்தில்குமார் , தமுமுகவின் சார்பாக மருத்துவர் அலி ஆகியோர் அணுஉலைக்கு எதிரான தங்களின் கருத்துக்களை பதிவு செய்தார்கள். மருத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக அணுஉலையின் பாதகங்களை அலசப்பட்டது. அதோடு, கூடங்குளம் திறந்தால் தமிழகம் ஒளிரும் என்ற விசமப்பிரச்சாரத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. 

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கருத்துக் கேட்பு படிவம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்பட்டது.  கூடங்குளம் அணுஉலை அவசியம் என்று கருதியவர்கள் கூட இந்த கருத்தரங்கம் வாயிலாக தெளிவடைந்ததாக சிலர் கருத்து தெரிவித்திருத்தனர்.  ஒரு இஸ்லாமிய அமைப்பு பொதுவான ஒரு மக்கள் நலப் பிரச்சினையை கையிலெடுத்து களமிறங்கியதை பாராட்டியிருந்தனர். இறுதியாக மண்டலச் செயலாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 30 மார்ச், 2012

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம்.

தமிழ்நாட்டில் புதிய மின்சார கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம் வருமாறு:

வீடுகளில் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் 1 ரூபாய் 10 காசு.
மேலும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் மாதாந்திர நிலைக்கட்டணமாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு 1 ரூபாய் 80 காசு.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 50 காசு வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோரிடம் மாதாந்திர நிலைக்கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படும்.

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 முதல் 500 யூனிட் வரையிலான அடுத்த 300 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் மாதாந்திர நிலைக்கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும்.

வழிபாட்டு தலங்களை பொறுத்த மட்டில், 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2.50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 120 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 

குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.50 வீதமும், 501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். 

விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் கிடையாது. அதாவது 500 யூனிட் வரை இலவச மின்சாரம். 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் யூனிட்டுக்கு 4 ரூபாய்.

100 யூனிட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 4 ரூபாய் 30 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். 
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். 

உயரழுத்த இணைப்புகள்: (அடைப்புக் குறிக்குள் தற்போதைய கட்டணம்)
உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4) வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.4.00).

தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4.50) ஆகவும், வர்த்தகம் மற்றும் இதர வகைகளுக்காக கட்டணம் யூனிட்டுக்கு 7 ரூபாயாகவும் (ரூ.5.80), ரெயில்வேக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த மின்சார கட்டண உயர்வு நாளை (ஏப்ரல் 1ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. 31.3.2013 வரை இந்த கட்டண உயர்வு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். 

நன்றி;தினத்தந்தி.

வியாழன், 29 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் இதுவரை நாம் கேட்ட எந்த கேள்விக்கும் அறிஞர் பீஜே பதிலளிக்கவில்லை என்பதை நமது தொடரில் மேற்கோள் காட்டியுள்ளோம். நமது இரண்டாவது தொடரின் இறுதியாக,  ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். என்றும், அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்'' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு வாரம் கழிந்தும் நமது இந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவர் அந்த இரு தாயிகளின் பெயரை சொல்லவேண்டும். சொல்லவில்லையானால் இவரது அனுமதியின் பெயரில் தான் அந்த தாயிகள் இருவரும் வெளிநாட்டில் வசூல் வேட்டையாடினார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்து இந்த வெளிநாட்டு நிதி விசயத்தில் அறிஞர் பீஜேயின் இன்னொரு முரண்பாட்டைப் பார்ப்போம்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் பீஜேயை நோக்கி, ''அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் இயங்கியபோது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராக செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைத்திலுள்ள லஜ்னத்துல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சித்து முடியாமல் போனது. இதுகுறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப்பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு சீ...சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.'' என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

நன்றாக கவனிக்க வேண்டும். மவ்லவி இஸ்மாயில் ஸலபி தனது விமர்சனத்தின் முக்கிய அம்சமாக,

  • வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
  • இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
  • அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

இதுதான் இஸ்மாயில் சலபியின் விமர்சனத்தின் முக்கிய அம்சமாகும். 

இதற்கு மறுப்பு எழுதிய அறிஞர் பீஜே, '' இஸ்லாமிய கல்விச்சங்கத்தின் நிறுவனரான ஹாமித்பக்ரியும், அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ்வும், 'தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்றபோது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப், ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதங்கள் கேட்டனர். இதில் எனக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிரவாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.'' என்று பீஜே பதிலளித்துள்ளார். 

பீஜேயின் இந்த பதிலில் இருந்து நாம் கேட்கும் கேள்விகள்;

  1. தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
  2. [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
  3. ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
  4. நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
  5. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
  6. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
அறிஞர் பீஜே மவுனம் கலைந்து மக்கள் தெளிவடையும் வகையில் பதிலளிப்பாரா?
தொடரும் அருளாளன் நாடினால்...

அரசுப் பள்ளிக்கூடங்கள் நக்சலைட்டுகளை உருவாக்குதாம்; சொல்கிறார் ஸ்ரீ ஸ்ரீ.

எல்லா சாமியார்களும் தங்களை சாமான்ய மனிதரிலிருந்து வேறுபடுத்திக் காட்ட தங்களின் பெயருக்கு முன்னால் ஒரு 'ஸ்ரீ' சேர்ந்தால், சாமியார்களில் தான் மாறுபட்டவர் என்று காட்ட தன் பெயருக்கு முன்னால் இரண்டு 'ஸ்ரீ' போட்டு வலம் வருபவர் ரவிசங்கர். இந்த ஸ்ரீ ஸ்ரீரவி சங்கர் சமீபத்தில் பேசும் போது, 'இந்தியாவில் அரசு பள்ளிக்கூடங்களில் கழிவறை வசதி இல்லை. பள்ளிக்கூடங்கள் எல்லாம் நக்சலைட்டுகள் வளரும் கூடாரம் ஆகி விட்டன' என்று பேசியது புதிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.

அரசு கல்வியகங்கள் நக்சல்கள் வளரும் கூடாரங்கள் என்று குற்றம் சாட்டும் இந்த ரவிசங்கர், எந்த வகையில் அங்கு பயில்பவர்கள் நக்சல்களாக மாறுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களை நக்சல்களாக மாற்றுகிறது என்று சொல்ல வருகிறாரா? அல்லது அரசு கல்வியகங்களின் நிர்வாக முறை நக்சல்களை வளர்க்கிறது என்று சொல்லவருகிறாரா? அப்படி பார்த்தால் இந்த ஸ்ரீ ஸ்ரீ தமிழகத்தில் பாபநாசம் என்ற ஊரில் பிறந்தவர் தானே! இவர் எந்த காண்வென்டில் படித்தார்? அரசு பள்ளியில் இவர் படித்திருந்தால் இவரது இப்போதைய பேச்சின்படி இவரும் ஒரு நக்சலாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? ஆனால் இவர் வாழும்கலை எனும் பெயரில் கோடிகளில் புரளும் கோமகனாக அல்லவா கோலோச்சுகிறார். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் பற்றி பேசும் இவர், வாளோடும், துப்பாக்கியோடும், குண்டாந்தடிகளோடும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பயிற்சி[?] வகுப்பு பற்றி பேசியதாக பார்க்க முடியவில்லையே? ஏன் அணிந்திருக்கும் ஆடையின் நிறம் ஒன்று என்பதால் வந்த பாசமோ?

இதற்கிடையில் நான் அவ்வாறு பேசவில்லை என்று இந்த ஸ்ரீ ஸ்ரீ மறுத்தாலும், ''ஸ்ரீரவி சங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் ஜனாதிபதிகள், பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏராளமான பிரபலங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?' என்று கேட்டு மத்திய மனித வளத்துறை மந்திரி கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள செய்தி, இந்த ஸ்ரீ ஸ்ரீ இவ்வாறு பேசியுள்ளார் என்பதற்கு சான்றாக திகழ்கிறது. இனியாவது இந்த ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ போன்ற சாமியார்கள், தங்களை சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாக காட்டுவதற்காக இதுபோன்று பரபரப்பாக பேசுதல், உண்ணாவிரத நாடகம் ஆடுதல் இதையெல்லாம் விட்டு விட்டு, சேர்த்து வைத்துள்ள கோடிகளை மக்கள் நலனுக்கு செலவு செய்வதன் மூலம் தங்களை பரிசுத்தப்படுத்த முன் வரட்டும்.

புதன், 28 மார்ச், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

சத்தியத்தில் உறுதியாய்....                          சமூகத்தில் இணக்கமாய்....

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம்!
 
நாள் : 30 -3 -2012 வெள்ளிக்கிழமை 
நேரம்; மாலை சரியாக 6:30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]
இடம் : மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]
 
தலைமை; முகவைஅப்பாஸ்-மண்டலத்தலைவர் இதஜ.

முன்னிலை; முஹம்மது சேட்-மண்டலப்பொருளாளர் இதஜ.
                            மீரான்-மண்டலத் துணைச் செயலாளர் இதஜ.
வரவேற்புரை; ஜாஹித் பிர்தவ்ஸ்-மண்டலத் துணைத்தலைவர் இதஜ.

கருத்துரை வீச்சு;
 
தோழர்;  சத்தியன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )

தோழர்; ராவணன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )

தோழர்; விஜயன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )

சகோதரர். அ.அமானுல்லாஹ், ஆசிரியர் -தமிழ்நேசன்.

தோழர் : அன்பரசன்  (தாய்மண் கலை இலக்கியப் பேரவை )

தோழர்; நெறியாளன் (தாய்மண் கலை இலக்கியப் பேரவை )

தோழர்; செந்தில்குமார் (குவைத் தமிழர் கூட்டமைப்பு)

இவர்களுடன் KIFF அமைப்பின் பிரதிநிதிகள்.

நன்றியுரை; சாதிக் சதாம்- மண்டலத் துணைச் செயலாளர் இதஜ.

அணுஉலை ஒழிப்போம்;                            ஆபத்தை தவிர்ப்போம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 .


சனி, 24 மார்ச், 2012

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம்.

சென்னை, மார்ச்.25
ஹஜ் பயணம் செல்பவர்கள் வசதிக்காக, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் ஏற்பாட்டில், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, ஒரே இடத்தில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு வசதியாக, சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் செய்திருந்தார். இந்த முகாமை தொடங்கிவைத்து, பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் பேசும்போது கூறியதாவது:

ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை என்றபோதிலும், ஹஜ் புனித பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இன்று இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் பயணம் செல்வோர் அதிக ஆர்வத்துடன் வந்துள்ளதால், 
31ந் தேதி(சனிக்கிழமை)யும் இதுபோன்று சிறப்பு முகாம் நடைபெறும். இது அல்லாமல், சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவலகத்தில், 31ந் தேதி வரையில், தினசரி மிகக்குறைந்த அளவில் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார்.

செய்தி நன்றி;தினத்தந்தி.

செக் மற்றும் டிடி.,களின் ஆயுள்காலம் மூன்று மாதம் மட்டுமே!

வங்கி ‌செக் மற்றும் டிடி., ஆகியவற்றிற்கு ரிசர்வ் வங்கி புதிய தடை விதித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 1 தேதி முதல் கையெழுத்திடப்பட்ட செக் மற்றும் டிடி., ஆகியன 3 மாதங்களுக்கு மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செக்களை தவிர்ப்பதற்காக ரிசர்வ் இந்த முடிவை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செக் மற்றும் டிடி ஆகியவை 6 மாதம் வரை செல்லும் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.  


குவைத்தில் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி 'பைத்துல் ஜகாத்' துவக்க விழா; ஐ.என்.டி.ஜே. பங்கேற்பு!

குவைத்தில் அய்யம்பேட்டை  சக்கராப்பள்ளி பைத்துல் ஜகாத்' துவக்க விழா 23 -3 -2012 வெள்ளியன்று மாலை மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல நிர்வாகிகள் முகவைஅப்பாஸ் மற்றும் சாதிக்சதாம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜகாத்தின் அவசியம் குறித்து இதஜ குவைத் மண்டலத்தலைவர் முகவைஅப்பாஸ் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 23 மார்ச், 2012

பரபரப்பான செய்திகளுடன் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்






அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் அன்று ஆகுமானது என்று சொன்ன பீஜே அவர்கள், இன்று மனோஇச்சை பாலிஸி பேசி வெளிநாடு நிதி பெறமாட்டோம் என்று சட்டம் போட்டுக்கொண்டு தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தை பின்பற்றச் செய்கிறார் இது முரணில்லையா? என்று கேட்டோம். இன்றுவரை இதற்கு பீஜே பதில் சொல்லவில்லை. 

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வஹீ அடிப்படையிலான கட்டளைகளை மட்டுமே பின்பற்றுவோம். அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் சொன்னதை ஏற்கமாட்டோம் என்று சொன்ன பீஜே, அல்லாஹ்வின் வஹீ அடிப்படியில் ஆகுமான ஒன்றை, இவரது சொந்த கற்பனையில் உதித்த சட்டங்களை சொல்லி புறந்தள்ளுவது மட்டும் முரணில்லையா? என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. 

மார்க்க அடிப்படையில் ஆகுமான நிதியை, அதுவும் ஆகுமானதுதான் என்று இவரே ஒத்துக்கொண்ட நிதியை பெற்று நலப்பணிகள் செய்பவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று இவர் விமர்சிப்பது சரியா என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. ஆனால் பீஜேயாகிய நீங்கள் அரபு நாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்று ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துள்ளார். இதிலிருந்து தான் முரண்பட்டு நிற்பதை அவரே ஏற்றுக்கொண்டு விட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

உணர்விலும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், நீங்கள்[பீஜே] அரபுநாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்ற கேள்வி-பதிலை பதிவு செய்துள்ள பீஜே, வழக்கம் போல இதிலும் முரண்பட்டு தன்னை அடையாளம் காட்டத் தவறவில்லை. அதைப் பார்ப்பதற்கு முன்னால் அந்த பதிலில், ''அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பினேன் என்பதும், திர்மிதி நூலுக்கு அரபுமொழியில் மதிப்புரையும் முன்னுரையும் வாங்கினேன் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே பதிலளித்ததும் புளித்துப் போனதுமாகும்.''' என்று கூறியுள்ளார். ஒரு விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்டவர் பதிலளித்த பின்பும் அதை மறுநாளோ அல்லது மறு வாரமோ, மறு மாதமோ, மறு ஆண்டோ கிளப்புவது புளித்துப் போன விஷயம் என்றால், அதே உணர்வில் இவர் பதிலளித்த அதே எடிசனில் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ் சம்மந்தமாக ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்ட பாக்கரும்-ஜவாஹிருல்லாஹ்வும் முன்பே பதிலளித்துள்ள நிலையில், மீண்டும் கிளப்புவது மட்டும் புளித்துப் போனதாக இவருக்குத் தெரியவில்லையா? உணர்வில் மட்டுமல்ல. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் மேற்கண்ட இருவர் பற்றி இவராலும், இவரது ஜமாத்தினராலும் அந்த விமர்சனம் வைக்கப்படுகிறதே. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் இன்னும் புளிப்புத் தட்டவில்லையா? அல்லது அடுத்தவர் பற்றிய விமர்சனத்தை நான் ஆயுளுக்கும் செய்வேன்.ஆனால் என்னைப் பற்றிய விமர்சனத்தை நான் பதில் கொடுக்கும் பதிலை ஏற்றுக் கொண்டு உடனே கைகழுவி விடவேண்டும் என்கிறாரா? ஒரு விமர்சனத்திற்கு பதில் கொடுப்பது மட்டும் போதுமானதன்று. கொடுக்கும் பதில் வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைத்து நொறுக்கும் வகையில் இருக்கவேண்டும். அப்படி இல்லாத நிலையில் அறிஞர் பீஜேயின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் 'கை நிறைய கழுதை விட்டை' என்றாகிவிடும். அந்த வகையில் தான் பீஜே குறித்த விமர்சனங்களுக்கு அவரால் அளிக்கப்படும் பதில்கள் இருக்கின்றன. எனவே தான் அவரைப்பற்றிய விமர்சனங்கள் புதிய புதிய கோணங்களில் அவரைத் தாக்குகின்றன என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் என்று காட்டுவதற்காக கடும் பிராயசித்தம் செய்து முயற்சித்துள்ளார் பீஜே. இந்த இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் பீஜேயின் முரண்பட்ட கருத்தை முதலில் பார்ப்போம். 'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்று ஒரு நீண்ட கட்டுரையை தனது இணையதளத்தில் 19 .10 .2010 அன்று வெளியிட்டார். அதில், 

''ஆனால் இவர்[ஹாமித்பக்ரி] தவ்ஹீத் ஜமாத்திற்கு தலைவராக இருந்துகொண்டே, இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில் லட்டர் பேட் அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக தமிழகம் முழுக்க வசூல் வேட்டையில் இறங்கினார். சம்பளம் கொடுக்கக் கூட நிதி இலலமல் தவ்ஹீத் ஜமாஅத் தள்ளாடும் நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தனது லட்டர் பேடு சங்கத்திற்கு நிதி திரட்ட பயன்படுத்திக் கொண்டார். தனக்கு மட்டுமே சொந்தமான லட்டர் பேட் இயக்கத்தின் பெயரால் எவ்வளவு நிதி திரட்டினாலும்  யாரும் அதைக் கேட்க முடியாது என்பதுதான் இதற்கு காரணம்.'''என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக கவனியுங்கள். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான ஹாமித்பக்ரி அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்துகொண்டே தனக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற லட்டேர்பேடு சங்கத்தை உருவாக்கி, தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை பயன்படுத்தி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். தனக்கு மட்டுமே சொந்தமான இயக்கம் என்பதால் யாரும் நம்மிடத்தில் கேளிவி கேட்க முடியாது என்ற துணிவில் ஹாமித்பக்ரி இப்படி வசூல்வேட்டை நடத்தினார் என்பது மேற்கண்ட பீஜேயின் வாக்குமூலம் சொல்கிறது.  இந்த வாக்குமூலம் வாயிலாக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது மோசடி வசூல் செய்வதற்காக ஹாமித்பக்ரி தனக்கு மட்டும் சொந்தமாக உருவாக்கிக் கொண்ட ஒரு சங்கம் என்று பீஜே கூறுகிறார். இதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு அடுத்த செய்திக்கு வாருங்கள்;

'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்'  என்ற அதே கட்டுரையில், ''இந்த விஷயம் [ஹாமித்பக்ரியின் வசூல் மோசடி] தெரிந்தவுடன் அவரை [ஹாமித்பக்ரியை] தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து நான், லுஹா, சைபுல்லாஹ் ஹாஜா, அலாவுதீன் அடங்கிய குழுவில் கடுமையாக விசாரணை  நடத்தினோம்.  ஜமாஅத்தின்  பெயரால்   கள்ள வசூல் செய்வதற்கா உம்மை தலைவராக நாங்கள்  நியமித்தோம்? என்று கடுமையாக கண்டித்தேன். எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகத்தை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தோம். என் வாழ்நாளில் நான் அதிகமாக கோபப்பட்ட சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று என்கிறார் பீஜே

பீஜேயின் இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்றை ஹாமித்பக்ரி அவர்கள் தொடங்கியதே இவருக்கு தெரியாதது போன்றும், அந்த சங்கத்தின் பெயரால் தமிழகம் முழுக்க ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தி அமுக்கியபின் தான் இவருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரியவந்தது போன்றும் உடனடியாக கண்கள் சிவக்க, லுஹா, சைபுல்லாஹ், அலாவுதீன் போன்ற சகாக்கள் சகிதம் ஹாமித்பக்ரியை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதாக கூறுகிறார் பீஜே. இதில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தை உருவாக்கி வசூல் மோசடி செய்தது ஹாமித்பக்ரி மட்டுமே என்றும், ஹாமித்பக்ரி மட்டுமே இந்த சங்கத்தின் ஏகபோக உரிமையாளர் என்ற கருத்தையும், ஆழமாக பதிவு செய்கிறார் அறிஞர் பீஜே. இதையும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டு அடுத்து வாருங்கள்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் மறுக்கு மறுப்பு என்ற கட்டுரை ஒன்றை பீஜே எழுதுகிறார். அதில், ஹாமித்பக்ரி அவர்கள் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை தனது உணர்வு பதில்கள் பகுதியிலும் பதிவு செய்துள்ளார்.

ஹாமித் பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தனது முந்தைய வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்று ஹாமித்பக்ரியின் ஏகபோக நிறுவனம் என்று சொன்ன பீஜே, அந்த ஏகபோக நிறுவனம் சார்பாக ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தியபோது, பக்ரியை விசாரணை நடத்திய குழுவில் சைபுல்லாஹ்வும் இருந்தார் என்று சொல்லியுள்ள பீஜே, இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் எனக் கூறியுள்ளார். அப்படியானால் ஹாமித்பக்ரியின் வசூல் மோசடியில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் என்று ஆகிவிடுமே? பிறகு எப்படி சைபுல்லாஹ் அவர்கள், ஹாமித்பக்ரி மீதான இந்த விசாரணையில் அங்கம் வகிக்க முடியும்? தானும் அங்கம் வகிக்கும் ஒரு சங்கத்திற்காக வசூல் செய்ததற்காக சைபுல்லாஹ் அவர்கள் ஹாமித்பக்ரியை எப்படி கண்டிக்க முடியும்? இஸ்லாமிய கல்விச் சங்கம் வசூல் செய்தது தவறு என்றால், ஹாமித்பக்ரியை கடுமையாக எச்சரித்ததாக கூறும் பீஜே, அதே சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களை பற்றி வாய் திறக்காதது முரணில்லையா? ஹாமித்பக்ரி அவர்கள் தமிழகம் முழுக்க வசூல் செய்தது அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வரா பீஜே? மேலும் இச்சங்கம் வசூல்  செய்தது தவறு என்றால், உடனடியாக இச்சங்கத்தை கலைக்கவேண்டும் என்று ஹாமித்பக்ரிக்கு உத்தரவிட்டாரா பீஜே? இல்லையே? ஹாமித்பக்ரியின் இந்த வசூல் மோசடி சங்கத்தில் இருந்து சைபுல்லாஹ் அவர்களை உடனடியாக விலகச் சொன்னாரா பீஜே? இல்லையே? அப்படியானால் இச்சங்கம் ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்காக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது பொய் என்பது உறுதியாவதோடு, இச்சங்கம் பீஜேயின் பார்வையில்தான் செயல்பட்டுள்ளது. அதை பீஜேயும் அங்கீகரித்துதான் செயல்படச் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதோடு இச்சங்கத்தில் ஹாமிபக்ரி, சைபுல்லாஹ் என்ற இரு அறிஞர்கள் மட்டும் தான் அங்கம் வகித்தார்கள் என்று பீஜே சொல்லத் தயாரா? அப்படி பீஜே சொல்லும் பட்சத்தில் இந்த சங்கத்திற்கும், அனைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு இருந்த உறவு சந்தி சிரிக்கும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து இச்சங்கம் சார்பாக வெளிநாட்டில் வசூல் செய்யப்பட்டதில் பீஜேவுக்கோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ சம்மந்தமில்லை என்ற பீஜேயின் பொய்யை அலசுவதற்கு முன்னால், மேலே நாம் சொல்லியுள்ள பீஜேயின் முரண்பாடுகளுக்கும் பொய்களுக்கும் பீஜே பதில் சொல்லவேண்டும். அடுத்து, அன்பளிப்பு சம்மந்தமான கேள்விக்கு பதில் கூறிய பீஜே அதில், ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்.

தொடரும் அருளாளன் நாடினால்...

இது தண்டனையா? அல்லது அறியாமையா?

ரு மனிதன் ஒரு கொலை செய்தாலும், ஒரே நேரத்திலோ பல்வேறு காலகட்டங்களிலோ பல கொலைகள் செய்தாலும் அவனுக்கு அதிகபட்சமாக ஒரே ஒரு மரணதண்டனை தான் விதிக்கமுடியும். இதனால் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் கொலைக்கு கொலை என்ற சட்டத்தை வழங்கி அவனுக்கு மரணதண்டனை விதிப்பதோடு, மறுமையில் அவனது கொலைகள் பற்றி விசாரிக்கப்படும் என்று சொல்கிறது. கொலைக்கு கொலை என்ற இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்பவர்கள் இதை விட ஒரு சிறந்த சட்டத்தை ஒருபோதும் கொண்டுவரமுடியாது. ஆனால் அறிவுக்குப் பொருந்தாத, நகைப்பிற்குரிய சட்டத்தை சளைக்காமல் செயல்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் இப்போது நாம் பார்க்கவிருக்கும் செய்தி;

கவுதமாலா நாட்டில் 1960ல் தொடங்கி சுமார் 36 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது லாஸ்டோஸ் இராஸ் என்ற இடத்தில் 1982ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 201 பேர் சம்மட்டியால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தமான நடவடிக்கையில் அமெரிக்காவில் லாஸ் ஏன்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெட்ரோ பிமென்டெல் (வயது 55) உள்பட 20 வீரர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது இவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

இந்த வழக்கில் பெட்ரோ பிமென்டெலுக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது பிமென்டெலுக்கு ஒவ்வொரு கொலைக்கும் 30 ஆண்டுகள் (201 கொலை) வீதம் 6,030 ஆண்டுகளும், மனித உரிமையை மீறியதற்காக 30 ஆண்டு என மொத்தம் 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு உண்மையில் அறிவுப்பூர்வமானதா? அனைத்துக் கொலைகளுக்கும் தண்டனை விதிப்பது பெரிதல்ல. ஆனால் அந்த தண்டனை ஆண்டுகள் முழுவதும் அவன் உயிர்வாழ வேண்டுமே? இன்றைய மனிதன் ஆயுள்காலம் மிக மிக அதிகபட்சமாக 150 ஐ தாண்டுவதில்லையே! பிறகு எப்படி  6,060 ஆண்டுகள் அவன் சிறையில் கழிப்பான்? ஒருவேளை அவன் செத்த பின்னும் பிணத்தை சிறையில் வைத்து நாட்களை கழிப்பார்களோ என்னவோ? இதைவிட அவனை ஒருமுறை தூக்கிலிடுவது தான் சிறந்த தண்டனையாக இருக்கமுடியும். இது ஒருபுறமிருக்கட்டும். 201 பேர் படுகொலைக்கு காரணமானவருக்கு 6,060 ஆண்டுகள் தண்டனை என்றால், பல்லாயிரம் மக்களின் படுகொலைக்கு காரணமான முதலாம் புஷ், இரண்டாம் புஷ், கிளிண்டன், ஒபாமா, சர்கோஸி, கேமரூன், உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கும், இவர்களுக்கு ஒத்து ஊதிய முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தண்டனை விதிப்பது? எனவே, மனிதனைப் படைத்த இறைவன், மனிதர்களின் இயல்பை உணர்ந்து போடும் சட்டத்திற்கு மாற்றமாக, மனிதன் தனது மூளையில் உதித்ததை சட்டமாக்கினால் இப்படித்தான் முட்டாள் தனங்கள் அரங்கேறும் என்பதை சொல்லவும் வேண்டுமோ? 

ஞாயிறு, 18 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
''நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்னதற்கு மாற்றமாக, இன்று 'பாலிசி' பேசி முரண்படுகிறார். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லையே இரண்டாகப் பிரித்து, வஹீ அடிப்படையில் அவர்கள் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும், நபியவர்கள் நேரம்போகாமல் பேசிய[?]வைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற கொள்கையுடைய அறிஞர் பீஜே, வஹீ அடிப்படையில் வெளிநாட்டு நிதி கூடும் என்று சொன்ன தீர்ப்புக்கு மாற்றமாக, பாலிசி எனும் தனது கருத்தை சட்டமாக்கி அதை தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தின் சட்டமாக்கி, தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களை பின்பற்றச் செய்கிறார் என்ற நமது கருத்துக்கு சம்மந்தப்பட்ட அறிஞர் பீஜே பதில் சொல்லவில்லை. ஆனால் அவரது இயக்கத்தினர் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து நேரடியாக 'பஸ்'ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க மேற்கண்ட அல்ஜன்னத் பதிலில், 
எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்ற தனது கூற்றிற்கு மீண்டும் முரண்பட்டு தான் அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு பொய்யர் தான் என்று பீஜே நிரூபிப்பதை கீழே படியுங்கள்;

''இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக்கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைபிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் நான் இருந்தபோது, அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் நான் இருந்தேன். நான் என்னளவில் அத்தகைய உதவியை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபிகள் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்த காலகட்டத்தில் எதாவது [வெளிநாடுகளில்] உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.எழுதியும் இருக்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன.கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார். நாளடைவில் பணமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை[ வெளிநாட்டு நிதி] வெறுக்கலானேன். லிங்க்;

மேற்கண்ட பீஜேயின் இந்த வாக்குமூலம் மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கு அவர் எழுதிய மறுப்பில் இருந்து எடுத்ததாகும். இந்த வாக்குமூலத்தில், ஜாக்கில் இவர் இருந்தபோது ஜாக் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளது. அதை இவரும் சரிகண்டு அந்த அமைப்பில் இருந்துள்ளார். அந்த ஜாக் வாங்கும் வெளிநாட்டு சல்லிக்காக, இவரும் ஒத்து ஊதும் வகையில் இவருக்குப் பிடிக்காத சலபிக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். கஷ்டப்படும் பலருக்கு வெளிநாட்டு நிதியை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார். பல கடிதங்களும் வரைந்துள்ளார். இப்படி தான் வாங்காவிட்டாலும் தனது இயக்கம் வாங்கியதை சரிகண்ட இவர், அதற்காக இவரது கொள்கைக்கு முரண்பட்ட சலபியையும் சரி கண்டு அவர்களின் மேடையில் முழங்கிய இவர், மற்றவர்களுக்காக வெளிநாட்டு நிதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்த இவர், இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு, மற்றவர்களை அரபு நாட்டு சலிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது கேளிக்கூத்தல்லவா? ஜாக் பெற்ற சல்லிக்காக இவர் சலபிக்கூட்டத்தில் மாரடித்தார் என்று சொல்லலாமா? இதைஎல்லாம் விட ஜாக் வெளிநாட்டு நிதி பெற்று வந்த நிலையில், இவர் ஜாக்கில் இருந்த நிலையில், அல்ஜன்னத் பத்திரிக்கையில் பீஜே ஆசிரியராகவும், கமாலுத்தீன் மதனி வெளியீட்டாளர் ஆகவும் இருந்த காலகட்டத்தில் கேட்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய மேற்கண்ட கேள்விக்கு, எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்களுக்கு வரவில்லை என்பதன் அர்த்தம், எனக்கு அதாவது பீஜே எனும் எனக்கு வரவில்லை என்று அர்த்தம் என்று வார்த்தை ஜாலம் காட்டமுடியாது. அப்படி பீஜே தனிப்பட்ட தனக்கு வரவில்லை என்றால், 'நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு நிதி வாங்கவில்லை. ஆனால் நான் சார்ந்துள்ள ஜாக் அமைப்புக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியை தனது அமைப்பு வாங்கிய நிலையில் அதை மறைத்து எங்களுக்கு அப்படி பணம் எதுவும் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ள இவரைத் தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை தூய வடிவில் சொல்ல துவங்கப்பட்ட அல்ஜன்னத்தில் அதன் ஆசிரியரான இவரே ஒரு பொய்யராக இருந்துள்ளார். இவர் நினைத்தால் எதை மறைக்கவும் எத்தனை பொய்யும் சொல்லத் தயங்காதவர் என்று அறிந்துகொள்ளுங்கள். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மீண்டும் இந்தியா வர முயற்சிக்கும் 'சாத்தான்'ருஷ்டிக்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு!

 
சாத்தானின் கவிதைகள் என்ற நூல் எழுதிய சல்மான் ருஷ்டி எனும் 'சாத்தான்'ருஷ்டி, ஒரு  மாதம் முன்பாக,   ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூ  ரில் நடந்த இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு முஸ்லிம்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக, அவரது ஜெய்ப்பூர் வருகை ரத்து செய்யப்பட ஒடி மறைந்தார் ருஷ்டி.

இந்நிலையில், இன்று [மார்ச். 18 ]டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு பேசுகிறார் என்ற தகவலறிந்த முஸ்லிம்கள்,அவரது டெல்லி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி ஜும்மா மசூதியில் தொழுகைக்கு பின்பு, வாசலில் கூடி நின்று முஸ்லிம்கள் சல்மான்ருஷ்டிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் சல்மான் ருஷ்டியை பங்கேற்க அனுமதிக்க வேண் டாம் என்றும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சல்மான் ருஷ்டி பங்கேற்பதில் மாற்றம் எதுவும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சி நடக்கும் தாஜ் பேலஸ் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சல்மான்ருஷ்டி கலந்து கொள்வதால், அவர் பங்கேற்க மறுத்து டெல்லி வருகையை ரத்து செய்து விட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த சாத்தான் ருஷ்டி வருகையினால் இந்தியாவிற்கு எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை. மேலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த சாத்தான் ருஷ்டி மீதான முஸ்லிம்களின் கோபம் தணியப்போவதில்லை. ஏனெனில் இந்த சாத்தான் ருஷ்டி, முஸ்லிம் சமுதாயத்தை இழிவு படுத்தியிருந்தால் கூட முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உலக முஸ்லிம்களின் வேதம் மட்டுமல்ல; உலகப் பொதுமறையான குர்'ஆனை இழிவு படுத்தி, அந்த குர்'ஆனை கொண்டுவந்த முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் நபி [ஸல்] அவர்களை இழிவுபடுத்தி, உலகமுஸ்லிம்களின் அன்னையர்களை இழிவுபடுத்திய இந்த சாத்தான் ருஷ்டியை ஒருபோதும் உண்மை முஸ்லிம்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. அதனால்தான் இந்த சாத்தான் ருஷ்டி எப்போது இந்தியா வருவதாக இருந்தாலும் கொதித்தெழுகிறார்கள் முஸ்லிம்கள். இதை மத்திய மாநில அரசுகள் கண்கூடாக கண்டும், சில நேரங்களில் ருஷ்டியின் வருகைக்கு தடை விதிப்பதும், பிறகு சில நாட்களில் மாதங்களில் மீண்டும் அனுமதிக்க முயற்சிப்பதும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும். சமீபத்தில் ஜெய்ப்பூரில் ருஷ்டிக்கு தடைவிதித்ததற்கு உ.பி.தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குவங்கியே காரணம் என்று சிலரால் குற்றம் சாட்டப்பட்டது. உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸை புறக்கணித்துள்ள நிலையில், ருஷ்டிக்கு மீண்டும் அனுமதி என்பது மத்திய காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.  இதுதான் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உ.பி.யில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட படுதோல்வி மத்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் இறைவன் நாடினால்.

தேர்வு பயம் போக்க ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்: பிரிட்டனில் தடைச்செய்த விளம்பரம் இந்தியாவில் நீடிப்பு!


imagesCAFQDBJO

புதுடெல்லி:தேர்வு காலம் துவங்கிய உடனே தொலைக்காட்சியிலும், இன்னும் பிற ஊடகங்களிலும் மிகச்சிறந்த புத்தி சக்தியும், ஞாபக சக்தியையும் வாக்குறுதி அளித்து பிரபல பானங்களான காம்ப்ளானும், ஹார்லிக்சும் பரப்புரைச் செய்யும் விளம்பரம் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்பே தடைச் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு காலம் துவங்கிய உடனே வழக்கமாக மாணவ, மாணவிகளுக்கு உருவாகும் கவலை, பயம், தைரியம் இழத்தல் ஆகியவற்றை மாற்றுவதற்கு இவ்விரு பானங்களையும் நிரந்தரமாக அருந்தினால் போதும் என்ற விளம்பரத்தை ஹார்லிக்சும், காம்ப்ளானும் அளித்து வருகின்றன.

நம்பமுடியாத ஆய்வுகளை முன்னிறுத்தி இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்வதாக கண்டுபிடித்ததை தொடர்ந்து பிரிட்டனில் அட்வர்டைசிங் ஸ்டாண்டர்ட் அதாரிட்டி 2008-ஆம் ஆண்டு ஹார்லிக்ஸ் விளம்பரத்திற்கு தடை ஏற்படுத்தியது. தினமும் 2 தடவை ஹார்லிக்ஸ் குடித்தாலே போதும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பது ஹார்லிக்ஸின் கண்டுபிடிப்பாகும்.

பிரிட்டனில் சேனல்கள் வழியாக பிரச்சாரம் செய்த 'taller, sharper, stronger' என்ற விளம்பரம் தடைச் செய்யப்பட்டது. ஆனால், ஹார்லிக்ஸ் நிறுவனம் அளித்த விளக்கம் என்னவெனில், 'இது பிரிட்டனில் நுகர்வோரை நோக்கமாக கொண்டு அளிக்கப்பட்ட விளம்பரம் அல்ல என்றும், இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் தவறுதலாக பிரிட்டனில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக' கூறியது.

அதேவேளையில் இந்தியாவில் இவ்விளம்பரம் பல வருடங்களாக தொடர்கிறது. வரலாறு, புவியியல், கணக்கு ஆகிய பாடங்களை சாத்தான்களாக சித்தரித்து இந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. தேர்வுக்காக உங்கள் குழந்தைகள் படித்தது மறந்துபோனால், அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவாகும். இதற்கு தீர்வு காண தினமும் குறைந்தது 2 தடவை குழந்தைகளுக்கு காம்ப்ளான் கொடுக்கவேண்டும் என்பது அந்நிறுவனத்தின் விளம்பரத்தின் கருத்தாகும். இதைப்போன்றே ஹார்லிக்ஸ் விளம்பரத்திலும் பாடங்களை பூதங்களாக சித்தரித்து தேர்வு பயத்தை போக்க தினமும் 2 கப் ஹார்லிக்ஸ் குடிக்க உபதேசிக்கின்றார்கள்.

விஞ்ஞானத்திற்கு முரணான, நம்பமுடியாத போலியான ஆய்வுகளை காட்டி வளர்ச்சியடைந்த நாடுகளில் தடைச் செய்யப்பட்ட இத்தகைய விளம்பரங்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நுகர்வோரின் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றை முதலீடாக கொண்டு அவர்களின் தலையில் கட்டிவைக்கும் செயலை இத்தகைய விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக ஃபுட் சேஃப்டி அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் முன்னாள் உறுப்பினர் பிஜோன் மிஷ்ரா கூறுகிறார். காம்ப்ளான் தயாரிப்பாளரான ஹெயின்ஸ் இந்தியா இதுக்குறித்து எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

ஆனால், விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விளம்பரம் அளிக்கப்படுவதாகவும், தயாரிப்பை சந்தைக்கு கொண்டுவருவதற்கு முன்பு பல ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும் ஹார்லிக்ஸின் உரிமையாளர்களான க்ளாஸ்கோ ஸ்மித்க்ளைன் கன்ஸ்யூமர் ஹெல்த் கெயர் மார்கடிங் இயக்குநர் ஜெயந்த் சிங் கூறுகிறார்.

அதேவேளையில், இத்தகைய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது என்றும், இவை ரகசியமாகவும், சிறிய அளவிலான பொருட்களிலும் நடத்தப்படுகின்றன என்றும், பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது அதன் முடிவு வித்தியாசமாக அமையும் என்றும் மிஷ்ரா கூறுகிறார்.

எவ்வளவு பெரிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தாலும், இத்தகைய விளம்பரங்களை வளர்ச்சி அடைந்த நாடுகள் அனுமதிக்காது என்று மிஷ்ரா மேலும் தெரிவித்தார்.

source ;http://www.thoothuonline.com .

சனி, 17 மார்ச், 2012

சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''ஒருவர் பல லட்சம் செலவு செய்து பள்ளிவாசல் கட்டுகிறார். அப்பள்ளிக்குத் தம் பெயரை வைக்க விரும்புகிறார். மார்க்கம் அதை அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு அல்ஜன்னத் மார்ச் 95 அல்ஜன்னத் மாத இதழில் பதிலளித்துள்ள அறிஞர் பீஜே, ''பள்ளிவாசல்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.[72 ;18 ] என்ற வசனத்தை முன்வைத்து, ஒரு மனிதரோ ஒரு கூட்டத்தாரோ தம் சொந்த செலவில் பள்ளிவாசலைக் கட்டினாலும் அதில் அவருக்கோ அக்கூட்டத்திற்கோ தனி உரிமை ஏதுமில்லை' என்று கூறிவிட்டு, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானது என்ற எண்ணத்தில் இன்னாருடைய பள்ளி என்று பெயர் சூட்டகூடாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். பல்வேறு பள்ளிவாசல்கள் உள்ள ஊர்களில் ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசலை அடையாளம் காண்பதற்காக பெயர் சூட்டினால் அதில் தவறேதுமில்லை என்கிறார். அதோடு பள்ளிவாசலை கட்டியவரே தன் பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என்று ஆசைப்படுவது அவரது நோக்கத்தின் தூய்மையின்மையைக் காட்டுகின்றது என்றும் கூறுகிறார்.

ஒருவர் தன் சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டினாலும் அதில் அவருக்கு எந்த உரிமையுமில்லை. எந்த அளவுக்கென்றால் தான் கட்டிய அப்பள்ளியில் தனது பெயரை சூட்டக்கூட உரிமையில்லை என்பது அறிஞர் பீஜே அவர்களின் பதிலின் சாரம்சமாகும். அப்படியே இந்த பதிலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசலுக்கு பொருத்திப் பார்ப்போமா? எஸ்.பி. பட்டினத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை நிறுவி அதை மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்து அந்த பள்ளியில் பல ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வருகையில், திடீரென்று ஏதோ தனது சொத்தை விற்பதுபோல் பள்ளிவாசலை அறிஞர் பீஜே அவர்களின் ஜமாத்திற்கு பத்திரம் முடித்து கொடுக்கிறார்கள். அதை பீஜேயும் ஏற்றுக் கொள்கிறார். அதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையில் தொழுகை நடந்துவந்த பள்ளி பூட்டப்பட்டு இன்று பாழடைந்த மண்டபமாய் காட்சி தருகிறது. ஒருவர் தன் சொந்த செலவில் கட்டிய பள்ளிக்கு தன் பெயர் வைப்பதற்கு ஆசைப்பட்டால் அங்கே அவரது நோக்கம் தூய்மையற்றது என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று, அல்லாஹ்வுக்காக மக்களின் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பள்ளியை ஒரு சொத்தைப் போல் பாவித்து அந்த தம்பதி எழுதித் தர முன்வந்தபோது, 'நீங்கள் என்றைக்கு அந்த பள்ளியை மக்களின் தொழுகை பயன்பாட்டுக்கு விட்டுவிட்டீர்களோ அதற்கு  பின்னால் அப்பள்ளி மீது உங்களுக்கு கடுகளவும் உரிமையில்லை. அதை நீங்கள் எங்களுக்கோ வேறு யாருக்கோ நீங்கள் பத்திரம் முடித்து தரமுடியாது. அப்படி நீங்கள் பத்திரம் முடித்து தந்தால், நீங்கள் அந்த பள்ளியை உங்கள் சொந்த சொத்தாக கருதியுள்ளீர்கள் என்று அர்த்தம்.  அப்பள்ளியை கட்டிய உங்களின் நோக்கம் தூய்மையற்றதாகிவிடும் என்று தடுத்தாரா பீஜே? இல்லை. அப்பள்ளியை தனது ஜமாஅத் சொத்தாக்கி கொண்டார். இது பீஜேயின் முரண்பாடில்லையா? மேலும் தொழுகை நடைபெற்று பிறகு பூட்டப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீட்போம் என்று சொல்லும் பீஜே, அல்லாஹ்வை வாங்கிய பள்ளியை பூட்டப்படுவதற்கு காரணமாகி நிற்கிறாரே! இது அல்ஜன்னத்தில் அவர் சொன்ன பதிலுக்கு முரணில்லையா? முதலில் இந்த எஸ்.பி.பட்டினம் பள்ளி மீதான தனது ஜமாஅத்தின் உரிமையை விலக்கிக் கொண்டு அப்பள்ளியை திறந்து அல்லாஹ்வை வழிபடச் செய்து தனது செயலுக்கு பரிகாரம் தேடட்டும்.

மஸ்ஜித் நிலத்தை திருப்பித் தருமா டிஎன்டிஜே? நியாயம் கேட்கும் நரிப்பையூர் ஜமாஅத்! - நேரடி ரிப்போர்ட்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பையூர் முஸ்லிம்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாக "ஹாட் டாபிக்ஆக இருக்கிறது அந்த விவகாரம்!

ஹனஃபி ஜமாஅத்திற்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டிஎன்டிஜே)திற்கு மோசடியாக விற்பனை செய்திருக்கிறது ஒரு குடும்பம்மோசடியாக நிலம் விற்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்த நிலையிலும் அதனை திருப்பி ஒப்படைக்காமல் ஹனஃபி ஜமாஅத்தோடு மல்லுக் கட்டி வருகிறது உள்ளூர் டிஎன்டிஜேமாநிலத் தலைமையும் இந்த விஷயத்தில் இது நாள்வரை மௌனம் காத்தே வருகிறதுஇந்த விவகாரத்தில்தான் நரிப்பையூர் முஸ்லிம்கள் மத்தியில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

உண்மை நிலவரத்தை அறிய நாம் விசாரணையில் இறங்கி னோம்நரிப்பையூரில் இருக்கும் ஷாஃபி ஜமாஅத்தும் ஹனஃபி ஜமாஅத்தும் சேர்ந்து கடந்த 7 வருடங்களுக்கு முன் தட்சிணாமூர்த்தி என்பவரிடமிருந்து 58 செண்ட் நிலத்தை கிரையம் செய்து வாங்கியிருக்கிறன்றன.

வாங்கிய நிலத்தை இரண்டு ஜமாஅத்துகளும் சரிபாதியாக பங்கு பிரித்துக் கொள்வது என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்இதன்படி ஹனஃபி ஜமாஅத் தலைவர் ஜலாலுத்தீன் மற்றும் ஷஃபி ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோரது பெயரில் வாங்கப்பட்டிருக்கும் இந்த நிலத்திற்கு பத்திரச் செலவு உட்பட 1 லட்சத்து 64 ஆயிரத்து 165 ரூபாய் ஹனஃபி ஜமாஅத் சார்பிலும்இதே அளவு தொகை ஷாஃபி ஜமாஅத் சார்பிலும் கொடுக்கப்பட்டு மொத்தம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 330 ரூபாய் மதிப்பில் 9-12-2005 அன்று சாயல்குடி பதிவாளர் அலுவலகத்தில் இரு ஜமாஅத் தலைவர்கள் பெயரில் கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரிப்பையூர் கிராம சர்வே எண்287/3ஏவில் அடங்கும் இந்த நிலத்தின் கிரையப் பத்திரம் 6 பக்கங்களைக் கொண்டதால் அதில் 1,3,5 ஆகிய பக்கங்களைக் கொண்ட முத்திரைத் தாள்கள் ஜலாலுத்தீனிடமும் 2,4,6 ஆகிய பக்கங்களைக் கொண்ட முத்தி ரைத் தாள்கள் முஹம்மது இப்ராஹிமிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், 2009ம் வருடம் ஜலாலுத்தீன் மரணமடைந்து விடுகிறார்இவரது நான்கு பிள்ளைகளில் மூவர் வெளிநாட்டில் இருக்க... இன்னொரு மகனான கலீல் ரஹ்மான் மட்டும் நரிப்பையூரில் தன் தாயார் மக்தூம் பீவியுடன் இருக்கிறார்.

உள்ளூர் டிஎன்டிஜேவில் கலீல் ரஹ்மான் உறுப்பினராக இருப்பதால் அவரது வேண்டு கோளின்படிமேற்படி நிலத்தின் தாய்ப்பத்திரங்கள் இரண்டு ஜமாஅத் நிர்வாகங்களில் இருக்கும் நிலையில்போலியான ஆவணங்களைத் தயாரித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு 29 செண்ட் நிலத்தை 13ஆயிரத்திற்கு விற்பனை செய்திருக்கிறார் ஜலாலுத்தீனின் மனைவியான மக்தூம் பீவி.

டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு விற்கப்பட்ட இந்த சொத்திற்கான கிரையப் பத்திரம் நரிப்பையூர் டிஎன்டிஜேவின் தலைவராக உள்ள ஹுமாயூன் கபீர் என்பவர் பெயரில் பதிவாகியுள்ளது.

ஜலாலுத்தீன் ஹனஃபி ஜமாஅத்தின் தலைவராக இருந்து மேற்படி நிலத்தை வாங்கிய காலத்தில் ஹனஃபி ஜமாஅத்தின் துணைப் பொருளாளராக இருந்துள்ளார் ஹுமாயூன் கபீர்இவருக்கு அப்போது ஹனஃபி ஜமாஅத்திற்கு சொத்து வங்கிய கணக்கு விபரங்கள் நன்றாகத் தெரியும் என்றும் இவர் தற்போது டிஎன்டிஜேவில் இருக்கிறார் என்றும் சொல்கின்றனர் ஹனஃபி ஜமாஅத்தினர்.

ஜமாலுத்தீன் குடும்பத்திற்கும் டிஎன்டிஜேவிற்குமிடையில் திரைமறைவில் நடந்த இந்த விவகாரம் தெரியாத நரிப்பையூர் ஹனஃபி மற்றும் ஷாஃபி ஜமாஅத்தினர் பட்டாவை புதுப்பிக்க சாயல்குடி பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோதுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.

ஹனஃபி ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் வில்லங்கம் போட்டுப் பார்க்கஜமாஅத் சொத்துகள் களவாடப்பட்ட விஷயம் அறிந்த இரண்டு ஜமா அத்துகளும் அதிர்ச்சியடைந்துள்ளனஇதனையடுத்துமக்தூம் பீவி மற்றும் டிஎன்டிஜேவினர் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இரு ஜமாஅத்தினரும்!

இந்த தகவல்களைத் திரட்டிக் கொண்ட நாம்இதில் உண்மைத் தன்மையை அறிய ஹனபி ஜமாஅத்தின் பிரதிநிதியாக இருந்து இந்த விவகாரத்தை டீல் பண்ணி வரும் சீனி முஹம்மது என்பவரிடம் பேசினோம்.

""சர்வே எண் 287/3-ல இருக்குற நிலம் ஹனஃபிஷாஃபி ஜமாஅத்துக்குச் சொந்தமானதுதான்ரெண்டு ஜமாஅத்தும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை கொடுக்குற ஐடியாவுல அந்த இடத்தை வாங்கியிருக்குஅந்த திட்டம் சில காரணங்களால் நின்னுபோச்சு.

இந்த சொத்து வாங்குனது 2005... ஹனஃபி ஜமாஅத் தலைவர் ஜலாலுத்தீன் மரணித்து விட்ட பின் சமீபத்துல அந்த இடத்தை டிஎன்டிஜேவிற்கு13 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செஞ்சு கொடுத்திருக்காங்க ஜலாலுத்தீனோட மனைவி மக்தூம் பீவிஇதற்கு உள்ளூர் டிஎன்டிஜேவுல இருக்குற ஜலாலுத்தீன் மகன் கலீல் ரகுமானும்டிஎன்டிஜே கிளைத் தலைவர் ஹுமாயூன் கபீரும் பின்னணியில செயல்பட்டிருக்காங்க.

இந்த ஹுமாயூன் கபீர் ஹனஃபி ஜமாஅத்துல துணை பொருளாளராக இருந்தவருஇவரு பேர்லதான் கிரையம் பண்ணி டிஎன்டிஜேவுக்காக எழுதிக் கொடுத்திருக்காங்க.

இதுல வாரிசு சர்டிபிகேட் கூட முறைப்படி எடுக்கலைரெண்டு பேரு (ஜமாஅத்சேர்ந்து வாங்குன இடத்தை முறைப்படி பிரிக்கலைஇதெல்லாம் செஞ்சா வெளியே தெரிஞ்சுடும்னு களவாடனுங்கிற எண்ணத்துலஜலாலுத்தீனோட வாரிசுகள் எல்லாம் சேர்ந்து அவங்க தாயார் மக்தூம் பீவிக்கு பவர் கொடுத்ததா டாக்குமெண்ட் ரெடி பண்ணியிருக்காங்க.

இந்த பவர் கூட முறைப்படி இல்லஏன்னா ஜலாலுத்தீனோட மூத்த மனைவிக்கு பிறந்த ரெண்டு பிள்ளைகள்ல முஹம்மது இப்ராஹிம்ங்கிறவரு இறந்து போயிட்டாருஅவரோட வாரிசுகளுக்கும் தெரியாம இந்த "பவர் கேம்நடந்திருக்கு.

இந்த நிலைமையில பிப்ரவரி 8ம் தேதிதான் இந்த இடம் சம்பந்தமா இவங்க போலியான பத்திரம் தயார் பண்ணியிருக்கி றது தெரிய வந்துச்சு.முறைப்படி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண் ணுனோம்.

இந்தப் பிரச்சினை சம்மந்தமா ஆரம்பத்துல ஹுமாயூன் கபீரோட உறவினர் மூலமாவே நான் விசாரிச்சேன்அப்போ, ""இந்தப் பிரச்சினை சீனிக்கு சம்பந்தமில்லாததுஅவனை அதுல தலையிட வேண்டாம்னு சொல்லுஅவன்தான் இந்தப் பிரச்சினையை கிளறுறான்னு...'' பதில் சொல்லியிருக்காரு ஹுமாயூன் கபீர்.

இதனால உள்ளூர் டிஎன்டிஜே கிட்ட நியாயம் கிடைக்காதுன்னு மாவட்டமாநில டிஎன்டிஜேவுக்கு கடிதம் எழுதினேன்இஸ்லாமிய மார்க்க சட்டப்படி இந்த இடம் ஹனஃபி ஜமாஅத்துக்குத்தான் சொந்தம்னு சொல்லி அதுக்குண்டான "சப்போர்டிவ் எவிடென்ஸ்எல்லாம் சேர்த்து அனுப்பி வைத்தேன்.

இது சம்பந்தமா தொடர்ந்து டிஎன்டிஜே மாநில பொதுச் செயலாளர் கோவைரஹ்மத்துல்லாஹ்கிட்ட பலமுறை பேசினேன்அதோட மாநில நிர்வாகிகள் எல்லோரிடமும் பேசினேன்அதுல மாநிலச் செயலாளர் மாலிக் கொஞ்சம் நியாய உணர்வோட பேசினாரு.

அவரு எல்லா ஆதாரங்களையும் பார்த்திருக்காருஅவரு என்ன சொன்னாருன்னா... ""தம்பி.. அநியாயமான முறையில அபகரிச்சு இருந்தா உடனே கொடுத்துத்தான் ஆகனும்ஆனா இதுல நான் தலையிட முடியாதுகோவை ரஹ்மத்துல்லாஹ்தான் விசாரிக்கனும்''னு அமைதியான முறையில தன் ஆதங்கத்தை வெளியிட்டாருபாவம்அவருக்கு அங்கே பேசறதுக்கு வாய்ப்பு இல்லைபோல...!! என்று நீண்ட விளக்கம் கொடுத்து நிறுத்திய சீனியிடம்,

""டிஎன்டிஜே மாநிலப் பொதுச் செயலாளர் என்ன சொன்னார்?'' என்று நினைவூட்டினோம்.

""அவருநீங்க மாவட்டத்தை தொடர்பு கொள்ளுங்கன்னாருஅப்ப, "என்னங்கதலைமைக்கு தொடர்பு கொள்ளாம மாவட்டம் எப்படி வாங்கியிருக்கும்'னு நான் கேட்டப்ப... இல்ல பாய்... எங்ககிட்ட காட்டுன டாக்குமென்ட் ஃபேவரா இருக்குற மாதிரி தெரிஞ்சுச்சுஅதனாலத்தான் நாங்க வாங்கியிருக்கோம்னாரு ரஹ்மத்துல்லாஹ்.

அதுக்கு நான், ""அது ஃபேவர் இல்லபோலியா கிரியேட் பண்ணப்பட்டிருக்குநீங்க நேரில் வந்து பார்வையிடுங்கவிசாரிங்க...''ன்னு சொன்னதுக்கு, ""நீங்க யாருங்கநீங்க சொல்றதையெல்லாம் நான் எப்படி நம்ப முடியும்?''னாருஅப்ப நான்டிஎன்டிஜேவுல இருக்குறவங்கெல்லாம் உண்மையைத்தான் பேசுவாங்களாஅதுல திருடன் இருக்க மாட்டானாஇல்லைன்னா டிஎன்டிஜே ஜமாஅத்துக்கு வெளியில இருக்குறவங்க எல்லாம் திருடங்களா?பொய்யைத்தான் பேசுவாங்களா?ன்னு கேட்கஅப்படியே வாக்குவாதம் ஏற்பட்டவுடனே... ""நான் டிரைன்ல போய்ட்டிருக்கேன்நீங்க எங்க மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மான்கிட்ட பேசிக்குங்க...''ன்னு போனை கட்பண்ணிட்டார்...'' என்று சொன்ன சீனி தொடர்ந்து,

""அப்புறம் நானும் ஹனஃபி ஜமாஅத் செயலாளரும் போய் டிஎன்டிஜே மாவட்ட நிர்வாகிகள்ட பேசுனோம்2 மணி நேரத்துக்கு மேல நடந்த பேச்சுவார்த்தையில, ""நாங்க ஒத்துக்க மாட்டோம்யார் சொத்து கொடுத்தாலும் வாங்குவோம்னு சொன்னாங்க அவங்க.

நாங்க டாக்குமெண்ட்களை காட்டியும் நீங்க ஏத்துக்க மாட்டேங்கிறீங்கநரிப்பையூருக்கு நீங்க வாங்கஎல்லா செலவையும் நானே ஏத்துக்குறேன்.அங்க வந்து ஊர்காரங்க எல்லார்டயும் விசாரிங்கஇந்த சொத்து யாருடையதுஎப்படி கை மாறுச்சுயாருக்குச் சொந்தமானதுன்னு விசாரிச்சுப் பாருங்க!நாங்கதான் பொய் சொல்றோம்னு நினைச்சா... ஊர்காரங்க எல்லாருமா பொய் சொல்லுவாங்கஅப்படின்னு சொன்னதும்எங்களுக்கு இது பொய்யின்னு தெரிஞ்சுச்சுன்னா... உடனே நாங்க நிலத்தை கொடுத்திடறோம்சம்பந்தப்பட்ட கிளை நிர்வாகிகளை டிஎன்டிஜேவை விட்டும் நீக்கிடறோம்னு சொன்னாங்க!

உடனே நாங்க, ""நீங்க அப்படி நியாயத்தை விளக்கிட்டீங்கன்னா எங்க செலவுலேயே டிஎன்டிஜேவுக்கு நன்றி தெரிவிச்சு ஊர் பூராவும் போஸ்டர் ஒட்டுறோம்னு சொன்னோம்அவங்க 4 நாள் டைம் கேட்டாங்க4 நாள் பத்து நாளாச்சுஅவங்களைக் காணோம்போன் பண்ணி கேட்டா, ""நான் மாநிலத்தை கேட்டிருக்கேன்மாநிலம்தான் பதில் சொல்லனும்''ங்கிறார் மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மான்மறுபடியும் மாநிலத்துக்கு போன் பண்ணி கோவை ரஹ்மத்துல் லாஹ்கிட்ட கேட்டா... நீங்க மாவட்டத்துக்கிட்டதான் கேட்கனும்ங்கிறாரு அவருஇவங்கள்ட கேட்டா மாநில தலைமைகிட்ட கேளுங்கிறாங்க... மாநிலத் தலைமைகிட்ட கேட்டா மாவட்டத்துக்கிட்ட கேளுங்கிறாங்க...'' என்று நிலத்தை மீட்கதான் எடுத்த முயற்சிகளை விரிவாக விளக்கிய சீனி,

""நிலப் பிரச்சினையில் டிஎன்டிஜே கிளைதான் தப்பு பண்ணியிருக்குன்னு அவங்க தலைமை மேல நம்பிக்கை வச்சு அவங்ககிட்ட போனா... கிளை மட்டும் இல்ல தலைமையும் அடுத்தவங்க சொத்தை அபகரிக்குற போக்குலதான் இருக்குன்னு தெரியுது...'' என்றவரின் குரல் சற்றே உயர்ந்தது.

""நடுநிலையா இருக்கும் முஸ்லிம் சமுதாய மக்கள் டிஎன்டிஜேவுக்கு ஆதரவு வழங்கக் கூடாது. ""நபி (ஸல்அவர்களின் பேரன் பைத்துல்மால்(பொதுச் சொத்துபொருள்ல இருந்து ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டப்போ... நபி (ஸல்அவர்கள் அதை துப்பச் சொன்ன ஹதீஸை டிஎன்டிஜே தலைவர் பீ.ஜேஎவ்வளவு அழுத்தம் கொடுத்துப் பேசுறாருஅவரு உண்மையிலேயே இஸ்லாமிய அடிப்படையிலதான் வாழறேன்குர்ஆன் ஹதீஸைஸத்தான் சொல்றேன்னு இமயம் டி.வி.யில் தோன்றி சொல்வதற்கும்ஊர் ஊரா போய் பிரச்சாரம் பண்றதுக்கும் நினைச்சார்னா எங்க ஹனஃபி ஜமாஅத்தோட சொத்தை திருப்பிக் கொடுத்துட்டு பிரச்சாரம் பண்ணட்டும்அதுவரைக்கும் அவருக்கோடிஎன்டிஜேகாரங்களுக்கோ பிரச்சாரம் பண்ணுற அருகதையே இல்லைஇதை என் கருத்தாவே போடுங்க...'' என வெடித்தார் சீனி முஹம்மது.

இந்தப் பிரச்சினை குறித்து டிஎன்டிஜேவினர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் காதரியா-வை தொடர்பு கொண்டோம்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நாம், ""ஹனஃபி ஜமாஅத்திற்கு சொந்தமான நிலத்தை டிஎன்டிஜே வாங்கியிருப்பதாகவும் அது தொடர்பாக உங்க மாவட்ட நிர்வாகிகளோடு பேசியபின்தவறாக இருந்தால் திருப்பிக் கொடுத்து விடுவோம்தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உங்கள் தரப்பில் வாக்களித்ததாகவும் ஆனால் அதன்படி இதுவரை நடந்து கொள்ளவில்லை என்றும் சீனி முஹம்மது சொல்கிறாரே உண்மையா?இப்பிரச்சினையில் உங்கள் தரப்பு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது?'' என்ற கேள்விகளை முன் வைத்தோம்.

""அந்த இடம் மாநிலத்துப் பேர்லதான் எழுதிக் கொடுத்திருக்காப்லஅதுல என்னன்னு இன்னும் ஒழுங்கா விபரம் தெரியலமாநிலத்துக்கிட்டதான் கேட்கனும்அவங்க (எதிர் தரப்புவந்து சொல்றதையெல்லாம் கேட்க முடியுமா நம்மமாநிலம் என்ன சொல்லுதோ அதன்படித்தான் செய்ய முடியும்?''என்று சொன்னவரிடம்,

""ஹனஃபி ஜமாஅத்தோட சொத்துதான் அந்த நிலம் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் காட்டினார்களா?'' என்றோம்.

""அப்படியொன்னும் காட்டல...'' என்று மறுத்த காதரியா, ""நீங்க எங்க மாவட்டத் தலைவர்கிட்ட பேசுங்க என்றார்.

நாம் மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மானிடம்காதரியாவிடம் கேட்ட அதே கேள்விகளோடு இந்தப் பிரச்சினையில் உங்கள் தரப்பு எந்த பதிலையும் சொல்லாமல் அலைகழிப்பதாக சீனி முஹம்மது குற்றம் சுமத்துகிறாரே என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டோம்.

""அவரை கூட்டிக்கிட்டு நீங்க நேரா எங்ககிட்ட வாங்கபக்கத்துல வச்சுக்கிட்டு கேளுங்க...'' என்றார் அனீஸ்.

அந்த நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்பதற்கான டாக்குமெண்ட் ஆதாரங்களை ஹனஃபி ஜமாஅத்தினர் உங்களிடம் காண்பித்தார்களா? -அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

""அப்படி ஒண்ணும் காமிச்ச மாதிரி தெரியலைஒரேயொரு மெயில் பண்ணியிருந்தாங்க...'' என்றவர், ""எதுக்காக எங்ககிட்ட நீங்க கேட்குறீங்க...?''என்றார். ""மக்கள் ரிப்போர்ட் செய்திக்காகத்தான்...'' என்று நாம் சொன்னதும்,

""மக்கள் ரிப்போர்ட்ல செய்தி போடறதுக்கு நான் ஒண்ணும் சொல்ல முடியாதுமக்கள் ரிப்போர்ட்டுக்கு நான் ஏன் சொல்லனும் நியூசு?அவங்களுக்கு (ஹனஃபி ஜமாஅத் தரப்பிற்குதேவைன்னா அவங்கள வரச் சொல்லுங்கவேற பத்திரிகையை கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்கநீங்க அவங்க (ஐஎன்டிஜேபத்திரிகையில இருந்துக்கிட்டு கேட்டா எப்படி பதில் சொல்றது?'' என்றவரிடம் ""இது பத்திரிகை தர்மம்உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள் அதை அப்படியே வெளியிடுவோம்...'' என்று நாம் வலியுறுத்தியபோது, ""பதில் சொல்ல மறுத்துட்டாருன்னு போடுங்க...'' என்று கோபத்துடன் லைனை துண்டித்தார் அனீஸ் ரஹ்மான்.

ஹனஃபி ஜமாஅத் தலைவர் குப்பைத் தம்பியிடம் பேசினாம். ""நாங்கள் எல்லா ஆவணங்களையும் காண்பித்தோம்அவர்கள் பொய் சொல்கிறார்கள்.எங்கள் தகப்பனார் சொத்து நாங்கள் அதை டிஎன்டிஜேவிற்கு எழுதிக் கொடுத்திருக்கோம்அதில் என்ன தப்பு என்கிறார்கள் ஜலா லுத்தீன் குடும்பத்தினர்...'' என்று கூறிய அவர், ""நிலத்தை திருப்பி கொடுத்துடனும்னு அவங்க பேசிக்கிற மாதிரி ஒரு செய்தியும் வருது தம்பி...'' என்றார் நம்மிடம்!

நிலத்தை ஜமாஅத்துக்கு விற்பனை செய்த தட்சிணாமூர்த்தியோ, ""நான் ஜமாஅத்திற்காகத்தான் விற்றேன்ஜலாலுத்தீனுக்கு அல்லஇதை எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்வேன்...'' என்கிறார்.

இந்நிலையில் நியாயம் கேடடுப் போராடி வரும் ஹனஃபி ஜமாஅத்தினர்மாவட்ட காவல்துறைமாவட்ட ஆட்சியர்தென் மண்டல ஐ.ஜி.டி..ஜி.,முதல்வரின் தனிப் பிரிவு என பல மட்டதிலும் புகார் மனு அனுப்பி விட்டுக் காத்திருக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நரிப்பையூர் ஹனஃபி ஜமாஅத்தின் செயலாளர் சிக்கந்தர் அனுப்பியுள்ள புகார் மனுவில், ""நாங்கள் அப்படித்தான் செய்வோம்நாங்கள் பண பலம்ஆள் பலம் உள்ளவர்கள்உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்மீறி எங்களைத் தொந்தரவு செய்தால் கொலை செய்யாமல் விடமாட்டோம்...'' என்று நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படித்தவுடன் நமக்கு திருவிடைச்சேரி சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஃபைஸ் கீழை அபு முஜாஹித் 

 

டிஎன்டிஜேவிற்கு "குட்பை'

நரிப்பையூர் டிஎன்டிஜே கிளையின் பொருளாளராக கடந்த சில நாட்களுக்கு முன்புவரை யூசுஃப் கனி என்பவர் இருந்துள்ளார்இவர் பொருளாளராக இருந்த நிலையிலேயே கிளைத் தலைவராக இருந்த ஹுமாயூன் கபீர் தற்காலிக பொருளாளராக மாற்றப்பட்டு இவரது பெயரில் 29 செண்ட் நிலம் கிரையம் செய்யப்பட்டிருக்கிறது.

கிரையப் பதிவுகள் முடிந்தவுடன் தலைவராக மீண்டும் ஏற்றம் பெற்றிருக்கிறார் ஹுமாயூன்அசல் பொருளாளரான யூசுஃப் கனிக்கு நிலம் தொடர்பான எந்த விஷயமும் தெரியாதாம்பிச்சினை வெடித்த பின்தான் இவருக்கு தெரிந்திருக்கிறதுநிலம் குறித்து சக நிர்வாகிகளிடத்தில் கேட்டிருக்கிறார்சில நியாயங்களையும் கேட்டு விட்டு ""இனியும் நான் இங்கு இருக்க மாட்டேன்...'' என்று டிஎன்டிஜேவிற்கு குட்பை செல்லிவிட்டாராம்.

 

 

நீதிக்கான போராட்டத்தில்...

நீதி கேட்டு பல்வேறு வகையில் போராடிவரும் நரிப்பையூர் ஹனஃபி ஜமாஅத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைமையையும் அணுகி எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்அநியாயத்தை தட்டிக் கேட்கும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் உங்கள் தலைவர் எஸ்.எம்பாக்கர் வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைக்க... கடந்த 4ம் தேதி நரிப்பையூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் எஸ்.எம்பாக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான்,  மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹியித்தீன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய தேசியத் தலைவர் எஸ்.எம்பாக்கர்நில அபகரிப்பு தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் கூறும் எச்சரிக்கைகளை எடுத்து விளக்கியதோடு,சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நிலத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்நீதிக்கான இந்தப் போராட்டத்தில் ஐஎன்டிஜே ஹனஃபி ஜமாஅத்திற்கு துணை நிற்கும்இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடினயாக தலையிட்டு ஆர்.டி.விசாரணைக்கு உத்தரவிட்டு பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயல வேண்டும்இந்த நிலம் தொடர்பான பிரச்சினையில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களைத் திரட்டி வீரியமான போராட்டங்களை ஐஎன்டிஜே முன்னெடுக்கும்...'' என்றெல்லாம் பேசினார்

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வாரஇதழ்.