திங்கள், 12 மார்ச், 2012

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க 'வெறிநாய்' சுட்டு 15 அப்பாவிகள் பலி.

ஆப்கானிஸ்தானில் கண்டகாரில் நேட்டோ படை முகாம் உள்ளது. அங்கிருந்த அமெரிக்க படையை சேர்ந்த வீரர் ஒருவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் துப்பாக்கியுடன் முகாமை விட்டு வெளியேறினார். அருகில் இருக்கும் நஜீபான், அல்கோசை ஆகிய 2 கிராமத்திற்குள் சென்று வெறிபிடித்தவனை போல துப்பாக்கியால் பொதுமக்களை சரமாரியாக சுட்டான். பிறகு அவன் ராணுவ முகாமுக்கு திரும்பினான்.

இந்த சம்பவத்தில் ஹாஜிசமாத் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும், மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். பலியானது எத்தனை பேர் என்பதை அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. நேட்டோ அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் விசாரணை நடைபெறும். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

செய்தி நன்றி;தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக