நன்றி; தினத்தந்தி
சனி, 28 மே, 2011
வெள்ளி, 27 மே, 2011
வியாழன், 26 மே, 2011
பசுக்களை பாதுகாப்பது சாத்தியமில்லை- பணக்கார கோயிலின் பரபரப்பு முடிவு!
உலகில் பெரும்பான்மை நாடுகளில் பெரும்பான்மை மக்களால் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாட்டிறைச்சியை குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நீங்கலாக, மற்றவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகவும், ஏழைகள் வாங்கும் விலையிலும் கிடைக்கிறது. மாட்டிறைச்சிக்காக வயதான மாடுகளும், பால் கறவை முடிவுற்ற மாடுகளும், உரிமையாளர்களால் பராமரிக்க முடியாத நிலையில் விற்கப்படும் மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மாடுகளை விற்பதையும், மாட்டிறைச்சி உண்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சர்ச்சையாக்குவது சங்பரிவார்களின் வேலையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட, ''பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று பா.ஜ.க. கூறியிருந்தது.
இந்த அளவுக்கு பசுநேசனாக இவர்கள் தங்களை காட்டிக் கொள்வது பசுக்களின் மீதுள்ள கருணையால் அல்ல. இவ்வாறு சொல்வதின் நோக்கம், முஸ்லிம்கள் மற்றும் பிராமணரல்லாத சமூக மக்கள் பசுவை இறைச்சியாக பயன்படுத்துவதாலும், முஸ்லிம்கள் தியாகத்திருநாளின்போது குர்பானி கொடுப்பதாலும், இதை தடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இது ஒருபுறமிருக்க பசுக்கள் மீது இவர்களுக்கு உண்மையில் பரிவு இருக்குமென்றால் யார் பசுக்களை விற்க எண்ணுகிறார்களோ அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கி செலவு செய்து பாதுகாக்கட்டுமே! யார் தடுத்தார்கள்? அதுமட்டுமன்றி சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலையோரம் 'கவர்ச்சி படங்களை' தின்று உயிர் வாழும் பசுக்களை தேடி சென்று உணவளிக்கட்டுமே! மேலும், கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்டு சிலகோவில்களில் உரிய பராமரிப்பின்றி பசுக்கள் செத்து மடிவதாகவும், திருட்டுத்தானமாக 'கசாப்பு' கடைக்கு விற்பதாகவும் சிலமாதங்களுக்கு முன் ஒரு இதழ் செய்தி வெளியிட்டது. இந்த பசுநேசர்கள் முதலில் கோவில் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கட்டுமே! இதையெல்லாம் இவர்கள் செய்யமாட்டார்கள்.
மேலும், பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல என்று உலகிலேயே பணக்கார கடவுளான[!]திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து பசுதானத்திற்கு இடைக்கால 144 போட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
''திருப்பதி கோவிலுக்கு, கோதானம் வழங்க பிரார்த்தித்துக் கொள்ளும் பக்தர்கள் வழங்கிய பசுக்கள், 900 வரை உள்ளன. இவற்றில் தற்போது, 140 பசுக்கள் மட்டுமே பால் கொடுக்கின்றன. பசுக்களை வளர்த்து பராமரிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது. இந்த பசுக்களால், நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. திருமலை கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களின் பூஜைக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. கோசாலையில் பசுக்களை பராமரிக்க, 10 பேர் வரை கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இங்கு ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிலிருந்து தினமும் 20 டேங்க் வரை பசுக்களின் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் பசுக்களினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு நான்கு பசுக்கள் இறந்தன.எனவே, கோதானமாக அளிக்கும் பசுக்களை பெற்றுக்கொள்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.
தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் குவியும் திருப்பதி தேவஸ்தானத்தால் கூட பசுக்களை பராமரிக்க முடியவில்லை என்றால், அன்றாடங்காய்ச்சியான பாமரன் பால் வற்றிப்போன மாட்டை வைத்து கடடியழ வேண்டும் என சங்கபரிவார் சொல்வது தவறு என விளங்குகிறதல்லவா? எனவே இனியாகினும் பசுவை வைத்து அரசியல் செய்வதை சங்பரிவார கூட்டம் நிறுத்திக்கொள்ளுமா? செத்த பசுவின் தோலை உரித்த மனிதனை கொல்லும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமா? மனிதனுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் அனுபவிப்பதை தடுக்கும் மனித உரிமை மீறலை சங்பரிவார் கைவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!
வீட்டிற்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடும் ஆளும் வர்க்கம்!
ஐக்கிய தேசிய புரட்சி முன்னணி தலைவர் ராஜ் குமார் மெகேன் பெயரும், பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அவர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்.
இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!
புதன், 25 மே, 2011
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்; முதல்வரின் மனநிலையில் இல்லை மாற்றம்!
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய், 24 மே, 2011
மானம் போச்சு; மாம்பழமும் போகுமா?
திங்கள், 23 மே, 2011
மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபுவாரிய அமைச்சரான மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார். மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி,அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன். அவரது இக்லாஸான அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!அவரது பாவங்களையும் மன்னிப்பானாக! முஸ்லிம் சமுதாயத்திற்கு ஜெயலலிதா வழங்கிய ஒரே அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரியம்பிச்சையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும்,நிம்மதியையும் தந்தருள்வானாக!
-முகவைஅப்பாஸ்.
வெள்ளி, 20 மே, 2011
ஆ.ராசாவை தொடர்ந்து திகார் சிறைச்சாலை நோக்கி கனிமொழி&சரத்குமார்!
மம்தாவின் அரசியல் பண்பாடு; ஜெயலலிதாவுக்கு ஒரு முன்மாதிரி!
மேற்கு வங்க முதல்வராக வெள்ளிக்கிழமை [20 -05 -11 ]திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார். மேற்கு வங்க வரலாற்றில் முதல்வராக பதவியேற்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். மேலும் இவர் யாரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினாரோ அந்த முன்னாள் முதல்வருக்கு பதவியேற்பு விழாவிற்கு நேரடி அழைப்பு விடுத்ததன் மூலம் ஒரு சிறப்பிற்குரிய பண்பையும் மம்தாபானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.
வியாழன், 19 மே, 2011
மக்களை முட்டாளாக்க நினைத்த 'முக்காலி' சாமியார்!
நீங்கள் கூறியப்படி இந்த சிலை இங்கு இருந்தால் நீங்கள் எடுத்து தாருங்கள் ரூ.ஒரு கோடி தருகிறோம். இல்லையென்றால் 'பிராடுதனம்' செய்த முக்காலி சாமியாரை சும்மா விடமாட்டோம் என கூறினர். கூட்டத்தில் நின்ற சிலர் முக்காலியோடு சேர்த்து சாமியாரை மரத்தில் கட்டுங்கள் என கூச்சலிட அந்த இடமே பரபரப்பானது.
மும்பையின் நீரோ யார்?
ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை கேட்டிருக்கிறோம். இதேபோல், மும்பையிலும் ஒரு நீரோ வசிக்கிறார் என்பதை நினைக்கும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது. சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தான், அந்த நீரோ.
மகாராஷ்டிராவில் உள்ள ஜாய்ட்பூரில், போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து, சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, சமீபத்தில் அறிக்கை விட்டார், உத்தவ். அறிக்கை விட்ட கையோடு, கேமராவும், கையுமாக, ம.பி., மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். அங்குள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், அவர் மிகவும், "பிசி'யாக இருந்தபோது, ஜாய்ட்பூரில், போலீசாருக்கு எதிரான போராட்டம், உச்சக் கட்டத்தை அடைந்தது. இரு தரப்புக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு, தீ வைப்பு, அடிதடி சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவங்கள் எதுவுமே தெரியாதது போல், விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், ஆர்வமாக இருந்தார் உத்தவ். இது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது."இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது...?' என, கிண்டலாக கேட்கின்றனர், மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் கூறுகையில், "உத்தவ், இதுபோல் செயல்படுவது, இது முதல் முறையல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன், பலத்த மழை காரணமாக, மும்பை நகரமே, தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. அப்போது, உத்தவ் என்ன செய்தார் தெரியுமா? ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், நண்பர்களுடன் உல்லாசமாக தன் பிறந்த நாளை கொண்டாடினார்' என, விரக்தியுடன் கூறினர்.
நன்றி;தினமலர்
அத்துமீற சொல்வதுதான் ஆதித்தனார் வழியா?
உஸாமா பின் லேடனை கொல்வதற்காக, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அடாவடித்தனம் உலக அளவில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை ஏதோ புத்திசாலித் தனமான வீரமிக்க செயல் என்று சிலர் பாராட்ட முற்படுகின்றனர். அதில், அதிகாலையில் அகிலத்தின் செய்திகளை அனைவரும் அறிய ஆதித்தனார் அவர்கள் தந்த அற்புதமான நாளிதழான தினத்தந்தி முன்னிலை வகிக்கிறது.
'கடந்த 7 -5 -2011 அன்று தலையங்கம் தீட்டியுள்ள தினத்தந்தி, 'தாவூத் இப்ராஹீம், ஹபீஸ் சயீத், மவ்லானா மசூத் அசார்,மற்றும் பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் முழு ஆதரவில் தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கே தெரியாமல் அந்த நாட்டிற்குள் நுழைந்து உஸாமா பின் லேடனின் கதையை முடிக்க அமரிக்காவால் முடிகிறபோது, அண்டை நாடான இந்தியா ஏன் தூங்கிக் கொண்டிருகிறது? நமது நாட்டில் நாச வேலைகளை செய்த இந்த நாசகாரர்களை பிடிப்பதற்கு அமெரிக்காவின் அதே பாணியை நாம் பின்பற்றினால்தான் என்ன? என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வி' என்று எழுதியுள்ளது தினத்தந்தி.
தினத்தந்தி இதன் மூலல்ம் சொல்லவருவது, அமெரிக்காவின் பாணியில் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை பிடித்து வாருங்கள் என்பதுதான். தாவூத் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் தீவிரவாதிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களை முறைப்படி கைதிகள் பரிமாற்றம் அல்லது குற்றவாளிகள் பரஸ்பரம் ஒப்படைப்பு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேசி இந்தியா கொண்டுவரவேண்டும் என்று தினத்தந்தி கூறினால் அது பாரட்டிற்குரியதாகும். ஆனால், ஒருவன் தனக்கு வேண்டிய பொருள் அடுத்த வீட்டில் பதுங்கியுள்ளது என்று கூறிக்கொண்டு அண்டை வீட்டில் வீட்டாரின் அனுமதியின்றி நுழைந்தான் என்பதற்காக அவன் செய்த அதே முட்டாள்தனத்தை அதாவது யார் வீட்டிலும் யாரும் நுழையலாம் என்ற சித்தாந்தத்தை ஒரு பத்திரிக்கை ஆதரிப்பதுதான் பத்திரிக்கை தர்மமா? இவ்வாறு ஒவ்வொரு நாடும் செய்ய முனைந்தால் உலகம் நிம்மதியாக இருக்குமா? நாடுகள் பாதுகாப்புக்குத்தான் உத்தரவாதம் இருக்குமா? ஒரு பத்திரிக்கையின் எழுதுகோல் எந்த அளவுக்கு நீதியின் பக்கம் நிற்கவேண்டும் என்பதற்கும் ஒரு நாடு தவறு தவறு செய்தால் அதை தட்சான்யமின்றி சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கும் மற்றொரு பத்திரிக்கையையின் தலையங்கத்தையே தினத்தந்தியின் பார்வைக்கு தருகிறோம்.
லிபியாவில் நடந்துவரும் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிக்கு நடுவே, அப்பாவிகளை கொள்வதாக கூறி லிபியா மீது அநியாய தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள். இதுகுறித்து தினமணி நாளிதழ் கடந்த மார்ச் 12 அன்று, 'அந்நியர் புகலென்ன நீதி? என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் ஒரு பகுதி கீழே;
''லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?
நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா? என்று நடுநிலையுடன் கேட்கிறது தினமணி.
அமெரிக்காவின் பாணியில் அத்துமீறுவதுதான் வீரம் என்றால், தர்மம் என்றால் காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினையில், அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதையும் தினத்தந்தி சரியே என தலையங்கம் வடிக்குமா என்பதே சாமான்ய மக்களின் இப்போதைய கேள்வி. எனவே தீவிரவாதிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் கடுகளவும் கடுகின் முனையளவும் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்கான வழி என்பது நேர்மையானதாக இருக்கவேண்டும். அத்தகைய வழியைத் தான் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைகள் முன் வைக்கவேண்டும். அதை விடுத்து குறுக்கு வழியை ஊக்கப்படுத்தி குறுகிய மனப்பான்மையுடன் வெளியிடும் செய்தியை தினத்தந்தி நிறுத்திக் கொள்வதுதான் அய்யா ஆதித்தனார் அவர்கள், அந்த நாளிதழை தொடங்கிய நோக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை வாஞ்சையுடன் கூறிக்கொள்கிறோம்.
ஊழலின்றி அரசியல் 'நோ';உண்மையை போட்டுடைக்கும் குமாரசாமி!
படித்து விட்டீர்களா? இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் உங்கள் 'சமுதாய மக்கள் ரிப்போர்ட்' வார இதழ்.
புதன், 18 மே, 2011
முதல்வரின் கோபம் கட்டிடத்தின் மீதா? கோபாலபுரத்தார் மீதா?
திங்கள், 16 மே, 2011
நரேந்திரமோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை இதஜ புறக்கணித்து!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை, இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிகழச்சியினை புறக்கணித்தது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.[அல்-குர்'ஆன்; 5 ;2 ]
வியாழன், 12 மே, 2011
அச்சப்பட்டால் ஆட்சி செய்ய முடியாது; எடியூரப்பா அரசுக்கு உச்சநீதிமன்றம் சாட்டையடி!
அடிப்படை வசதியான சாலை அமைப்பதற்கு கூட நிலத்தை கையகப்படுத்த முடியாது என மாநில அரசு ஒப்புக்கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. இது பொது விவகாரம். அதிகாரத்தில் இருந்து கொண்டு எந்த பணிகளையும் அரசு செய்யவில்லை. இதனால், 'கோமா' நிலையில் இருப்பது போன்று நீங்கள் காணப்படுகிறீர்கள் என்று சாடியுள்ளனர்.
எங்களின் வன்முறையை காட்சிப் பொருளாக்குவதா? குதிக்கும் இந்துமுன்னணி!
மதானி வலையில் சிக்க மறுக்கும் 'ஜாமீன்'
'புஸ்'வானமான புகார்கள்!
அமெரிக்காவின் அடிச்சுவட்டில் முதல்வரின் அறிக்கை?
சோதனை மேல் சோதனை; மக்கள் ஆசி வேணும்- மோடி புலம்பல்!
கடல் முற்றுகை போராட்டம்; பாஜகவின் 'தமாஷ்'
உஸாமாவின் மரணத்தை மக்கள் நம்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு!
சிங்கத்தின்[உஸாமா] மரணமும்; சீறிப்பாயும் கேள்விகளும்!
என்ன! தலைப்பை பார்த்த உடனே உஸாமாவை 'சிங்கம்' என்றெல்லாம் புகழ்கிறார்களே என்று எண்ணி விட்டீர்களா? நாம் அவரை புகழவில்லை. அவரது பெயரின் தமிழாக்கம் தான் அது. இறைவன் அவரது பெயரிலேயே வீரத்தை அமைத்து விட்டான். இப்ப விசயத்திற்கு வருவோம்.
என்னைக் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள் என்று காட்டு பகுதியிலிருந்து தலை தெறிக்க ஓடி வந்தான் ஒருவன். அவனிடம் விசாரித்தபோது என்னை புலி விரட்டி வருகிறது என்றான்,. மக்களும் அவன் சொன்ன பகுதியில் சென்று பார்த்து விட்டு புலி எதுவும் இல்லை என திரும்பினார்கள். மக்களை பார்த்து சிரித்தான் அவன். ஏன் சிரிக்கிறாய் என வினவியவுடன், 'நான் உங்களை ஏமாற்ற பொய் சொன்னேன் என்றான். மீண்டும் சில தினத்தில் அவனே காப்பாற்றுங்கள் என்ற கூவலோடு ஓடிவந்தான். இவன் பொய்யன் என்பதால் மக்களும் அவன் சொன்னதை நம்பி உதவிக்கு செல்லவில்லை. இறுதியில் உண்மையிலேயே புலியால் தாக்கப்பட்டு அவன் செத்தான் என்று சிறார்களுக்கு கதை சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதுபோலத்தான் உஸாமா விசயத்தில் அமெரிக்காவின் நிலையும் உள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் உஸாமா வேட்டையை தொடங்கிய அதிபயங்கரவாதி அமெரிக்கா, உஸாமா கொல்லப்பட்டுவிட்டார் என பலமுறை சொன்னது. ஆனாலும் இப்போது அதிபர் அறிவித்தது போல் உறுதியாக அறிவிக்காமல் செய்தியை பரப்பியது. உஸாமா கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறிய அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் 'அமெரிக்கா மீது புனித போர் அறிவித்து உஸாமா ஒலிநாடா வெளியிட்டார் என்று செய்தி வெளியாகும். இவ்வாறான குழப்பத்தினால் உஸாமா, பாகிஸ்தானில் உள்ள அப்போதாபாத்தில் வைத்து அமெரிக்கா காமாண்டோ படையால் கொல்லப்பட்டு விட்டார் என்று ஒபாமா உறுதியாக அறிவித்தாலும் அவரது அறிவிப்பை பெரும்பான்மை மக்கள் இந்த நொடி வரை சந்தேகத்துடனே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு காரணம் உஸாமா மரணம் குறித்த அமெரிக்காவின் முன்னுக்குப் பின் முரணான சந்தேகத்திற்குரிய தகவல்கள்.
ஆரம்பமே அபத்தம்;
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள அப்போதாபாத் எனும் நகரில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக உஸாமா தனது ஒன்று- இரண்டு- மூன்று மனைவிகளுடன் பல பிள்ளைகளுடனும் வசித்து வந்தார் என்று கூறுகிறது அமெரிக்கா. ஒரு காட்டுக்குள் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்த சாதாரண சந்தனக் கடத்தல் வீராப்பன் கூட தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் வசிக்காதபோது, தனது ஜாகையை அவ்வப்போது மாற்றி தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநில அதிரடிப்படைக்கு பல ஆண்டுகள் அல்வா கொடுத்திருக்கும் போது, அமெரிக்கவால் 25 மில்லியன் டாலர் தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள தேடப்படும் குற்றவாளியான உஸாமா, மக்கள் வசிக்கும் பகுதியில் மனைவி மக்கள் சகிதமாக ஐந்தாண்டுகள் ஒரே வீட்டில் வசித்தார் என்பது அறிவுக்கு பொருந்துகிறதா? இதுதான் உண்மை என்று அமெரிக்கா கூறுமானால் பாகிஸ்தானில் நினைத்த நேரத்தில் மாமியார் வீட்டில் நுழைவது போல் நுழைவதும், நினைத்தவுடன் பாகிஸ்தான் பகுதிகளில் விமானத்தாக்குதல் தொடுப்பதும் என்று ஏறக்குறைய தனது நாடுபோல் பாகிஸ்தானை கையாண்ட அமெரிக்காவிற்கு உஸாமா ஐந்தாண்டுகள் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உஸாமா விசயத்தில் தனது தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயாரா?
அடுத்த நாட்டுக்குள் திருடனாய் நுழைந்த அமெரிக்கா;
அமெரிக்காவின் கூற்றுப்படி அப்போதாபாத் வீட்டில் உஸாமா இருந்ததை ஒரு பேச்சுக்கு சரிகன்டாலும், அமெரிக்கா செய்யவேண்டியது என்ன? பாகிஸ்தான் அரசுடனும், இராணுவத்துடனும் இந்த விஷயத்தை பகிர்ந்து அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் ஒத்துழைப்புடன் உஸாமா தங்கியிருந்த இடத்தில் தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் உலக ஜனநாயகம் பேசும் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் கள்ளத்தனமாக பாகிஸ்தானுக்குள் ஹெலிகாப்டர் மூலம் நுழைந்து தாக்குதல் தொடுத்து உஸாமாவை கொன்றது பாகிஸ்தானின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போலவும், நான் நினைத்த நாட்டில் நினைத்த நேரத்தில் நுழைய எவரிடத்திலும் அனுமதி கேட்கவேண்டியதில்லை என்ற அமெரிக்காவின் ஆணவமும் இதில் வெளிப்படவில்லையா? அமெரிக்காவின் இதே பாணியில் ஒவ்வொரு நாடும் தான் தேடும் தீவிரவாதிகள் அடுத்த நாட்டில் இருக்கிறார்கள் என கருதி அத்துமீறி நுழையத் தொடங்கினால் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியுமா? உதாரணத்திற்கு இந்தியாவில் போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான வாரன் ஆண்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்துள்ளது. அவரை மீட்கிறேன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் தொடுத்தால் அதை அமெரிக்கா அங்கீகரிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது. அப்படியானால் அமெரிக்காவிற்கு ஒரு நீதி? மற்ற நாடுகளுக்கு ஒரு நீதியா? ஒரு நாட்டிற்குள் மாற்றொரு நாடு நுழைந்து தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நாடுகளுக்கு மத்தியில் குற்றவாளிகள் பரிமாற்றம் ஒபபந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்கா பாணியை எல்லா நாடுகளும் கடைபிடிக்க தொடங்கினால் இந்த ஒப்பந்தங்கள் அவசியமில்லையே? மேலும் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறுவது அந்நாட்டின் சட்டாம்பிள்ளைத் தனத்தை காட்டவில்லையா? இந்த ஒரு விசயத்திற்காக மட்டுமே அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டாமோ? அப்படி ஐ.நா. செய்யத் தவறினால் அமெரிக்காவின் இந்த செயலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்றுதானே அர்த்தம். ஐ.நா. அங்கீகரித்த செயலை அனைத்து நாடும் செய்யலாம் என்று தானே அர்த்தம். அப்படியானால் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அத்துமீறலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்ற வாசலை திறந்து விடுகிறதா?
சுட்டுப் பிடித்தார்களா? பிடித்து சுட்டார்களா?
உஸாமா அவர்கள் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட அமெரிக்க கமாண்டோ படைகளை எதிர்த்து உஸாமாவின் பாதுகாவலர்கள் தாக்குதல் தொடுத்ததாகவும் நாற்பது நிமிடங்கள் இரு தரப்புக்கும் தாக்குதல் நடந்ததின் முடிவாக வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் அங்கே உஸாமா கொல்லப்பட்டு கிடக்கவே அவரது உடலை எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த ஹெலிகாப்டரில் சென்று விட்டதாக கூறியது அமெரிக்கா. மேலும், வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜே கார்னே கூறும்போது, ''பின்லேடன் சரண் அடையாவிட்டால் சுட்டுக்கொல்ல சிறப்பு அதிரடிப்படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க படையிடம் பின்லேடன் சரணடைந்திருந்தால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய நீதியை அவரே தேடிக்கொண்டார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா சரணடையவில்லை எனவே அவரை சுட்டுக்கொன்றோம் என்கிறது அமெரிக்கத் தரப்பு. ஆனால் உஸாமா அவர்களின் மகள் கூறியதாக வந்துள்ள செய்தியில்,''3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா பிடிக்கப்பட்ட பின்பே வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுகிறதா இல்லையா?
உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயக்கம் ஏன்?
உஸாமா அவர்கள் கொல்லப் பட்டவுடன் ஒரு புகைப்படம் உலகம் முழுக்க வலம் வந்தது. அந்த புகைப்படம் உண்மைதானோ என்று மக்கள் நம்பத் தலைப்பட்ட வேளையில், அதில் அமெரிக்கா செய்துள்ள தில்லாலங்கடி வேலையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது பிரிட்டிஷ் பத்திரிக்கையான 'கார்டியன்'. ''அப்படம் இரு படங்களின் கலவை. 1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின் லாடினின் உண்மை படமும், இறந்த வேறொருவர் படமும், இணைக்கப்பட்டு இறந்த பின் லாதின் படம் என வெளியிடப்பட்டுள்ளது என்று போட்டுடைத்தது. இப்பத்திரிகை இந்த தகவலை தரும்வரை இந்தபடம் தான் உசாமாவுடையது என காட்ட அமெரிக்காவும், அதன் அடிவருடி பத்திரிக்கைகளும் பலத்த சிரத்தை மேற்கொண்டன என்பதை கவனிக்க வேண்டும். இதற்கிடையில் உஸாமாவின் உண்மையான புகைப்படத்தை இந்த நொடி வரை வெளியிடாத அமெரிக்கா, அதற்கு கூறும் காரணமும் நகைப்பிற்குரியது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உஸாமாவின் புகைப்படம் குறித்து கூறும்போது, ''ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நிலையில், அவனது உடல் மிகவும் கோரமாக இருந்தது. இதனால்தான், அவனது போட்டோ வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உஸாமாவின் புகைப்படத்தை திட்டவட்டமாக வெளியிடப் போவதில்லை என்று ஒபாமாவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் லியான் பெனிட்டா, ''உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பின்லேடன் மரணப் புகைப்படங்களை வெளியிடுவது அவசியம் என்று கூறிய பின்னும், உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயங்குவதன் மூலம் உஸாமாவின் மரணம் சந்தேகத்தை எழுப்புகிறதா? இல்லையா? சொல்ல முடியாது. இதற்கு பின்னால் ஏதேனும் 'மார்பிங்' போட்டோவை காட்டி இதோ! உஸாமா என்று அமெரிக்கா சொல்லக்கூடும்.
உஸாமாவின் முழு உடலை உலகுக்கு காட்டாமல் மறைத்ததேனோ?
ஈராக் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைன் அவர்களை பதுங்கு குழியில் இருந்து கைது செய்து வெளியே எடுத்ததில் தொடங்கி, அவரை நீதிமனறத்தில் நிறுத்தி தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்து முதல் அந்த தண்டனை நிறைவேற்றும் காட்சிவரை உலக மக்களின் பார்வைக்கு வைத்து அவரது மரணத்தை சந்தேகமற நிரூபித்த அமெரிக்கா, அதே பாணியில் தன்னால் சுட்டுக்கொல்லப் பட்டதாக கூறப்படும் உஸாமா அவர்களின் முழு உடலை உலக மக்களுக்கு காட்டாமல் மறைத்தது ஏனோ?
உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதை உலகிற்கு அறிவித்த ஒபாமா, ''கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பின்லாடன் இருக்குமிடம் தெரிந்தது. பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடம் ஒன்றில் அவர் இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் ஒபாமா. உஸாமா இருக்கும் இடம் பற்றி எட்டு மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிந்தும் அவரை உடனடியாக பிடிக்காமல் இப்போது கொன்றதாக கூறுவதுதான் உஸாமாவின் மரணத்தில் உச்சகட்ட சந்தேகத்தை எழுப்புகிறது.
இதுதான் சொகுசு மாளிகையோ?
உஸாமா அவர்கள் தங்கியிருந்த மாளிகை உயர்தர வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகை என்று அமெரிக்கா தரப்பு செய்தி பரப்புகிறது. ஆனால் அவர்கள் காட்டும் அந்த வீட்டை பார்த்தால் சாமான்ய மக்கள் வாழும் வீடு போன்றே உள்ளது. மேலும் அந்த வீட்டில் தொலைக்காட்சியோ, இன்டெர் நேட்டோ, தொலைபேசியோ கூட இல்லை என்று செய்திகள் கூறுகின்றன. உஸாமா உயர்தர சொகுசு மாளிகையில் வசித்தார் என்று சொல்வதன் மூலம் அவர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாரேயன்றி அவர் மக்களுக்காக அனைத்தையும் துறந்த தியாகியல்ல என்று காட்ட முனைகிறது அமெரிக்கா. இதன் மூலம் மலைகளிலும் மடுக்களிலும் கஷ்டப்படும் போராளிகள் உள்ளத்தில் உஸாமா மீது ஒரு தப்பெண்ணத்தை விதைத்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணுகிறதோ அமெரிக்கா?
இறுதியாக உஸாமா அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம். உஸாமா இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று நாம் சொல்லவரவில்லை. அதே நேரத்தில் அவர் கொல்லப் பட்டுவிட்டார் என்ற அமெரிக்காவின் வாதம் பலவீனமாக இருக்கிறது என்பதே நமது நிலையாகும். இருப்பினும் உஸாமாவை கொன்றதாக அமெரிக்கா கூறுவதற்கு ஒருவேளை கீழ்கண்ட காரணம் இருக்குமோ;
- உஸாமாவை கொன்ற ஹீரோவாக தன்னை காட்டி 2012 ல் நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அரியாசனத்தை கைப்பற்றும் நோக்கமோ?
- ஆப்கான்-ஈராக் மீதான நீண்டநாள் போரின் மூலம் நாட்டு மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை மறைத்து, அந்த போர் தொடங்கப்பட்ட நோக்கத்தை உஸாமாவை கொன்றதன் மூலம் சாதித்ததாக காட்டிக் கொள்வதற்காகவோ?
- சமீபத்திய லிபியா மீதான தாக்குதல்; மற்றும் அரபு நாட்டு உள் விவகாரங்களில் தலையீடு போன்றவற்றின் மூலம் ஏற்பட்ட சரிவை சரிக்கட்டுவதற்காகவோ?
ஒரே ஒரு ஆறுதல் செய்தி;
அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
செவ்வாய், 10 மே, 2011
உஸாமாவுக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை...?
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். நூல்;புகாரி எண்; 1245
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
இன்றைய தினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். நூல்; புகாரி 1320
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் ஒரு மனிதர் எங்கு இறந்தாலும் அவருக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என கூறுகின்றனர். ஆனால் அபிசீனியா மன்னருக்கு ரஸூல்[ஸல்] அவர்கள் தொழுகை நடத்தியதற்கு காரணம், அவர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் மரணித்துவிட்டார். எனவே அவருக்காக தொழுகை நடத்துங்கள் என்ற நபியவர்களின் கூடுதல் விளக்கம் அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் உஸாமா அவர்களுக்கு காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்த இயலாது.
அதே நேரத்தில் உஸாமாவுக்கு தொழுகை நடத்தியவர்கள் ஒரு காரணம் சொல்லலாம். கொஞ்சம் கூட இரக்கமின்றி உஸாமாவின் உடலை கடலில் வீசிய அமெரிக்கா, உசாமாவுக்காக ஜனாஸா தொழுகை நடத்தியிருக்காது. எனவே மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அவருக்காக நாம் தொழுகை நடத்தலாம் என்று கூறக்கூடும். இதை ஒரு வாதத்திற்கு சரிகன்டாலும் உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அன்றைய தினமே பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஜமாத்து உத் தாவா அமைப்பின் சார்பாக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட காஃயிப் ஜனாஸா தொழுகை உசாமாவுக்காக நடத்தப்பட்டு விட்டது. அதோடு அவரது ஜனாஸாவிற்கான கடமை முஸ்லிம்கள் மீது முடிந்து விட்ட நிலையில் அதற்கு பின் வேறு வேறு பகுதிகளில் நடத்தியது எந்த ஆதாரமும் அற்றதாகும்.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்