வியாழன், 12 மே, 2011

கடல் முற்றுகை போராட்டம்; பாஜகவின் 'தமாஷ்'

மிழக முதல்வர் வீடு முற்றுகை, மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முற்றுகை, உள்துறை  அமைச்சர் வீடு முற்றுகை,  இவ்வாறு பிரச்சினையோடு சம்மந்தப்பட்ட நபர் அல்லது சம்மந்தப்பட்ட இடம் முற்றுகை என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் மதவாத பாஜகவோ சம்மந்தமில்லாமல் ஒரு இடத்தை அதாவது கடலை முற்றுகையிடப் போகிறதாம். ''தமிழக மீனவர்களை தாக்கப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதாக கட்சி சார்பில் மே மாதம் கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு நடந்து வருகிறது. மீனவர் மீதான தாக்குதலை தடுக்க முன்பு ஆண்ட பாஜகவாகட்டும் இன்று ஆளும் காங்கிரஸ் ஆகட்டும், தமிழக ஆட்சியாளர்களாகட்டும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையே. ஒரு மீனவர் கொல்லப்பட்டால் உடனே முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், தமிழ் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதும் பின்பு அந்த பிரச்சினையை அடுத்த மீனவர் சிங்களரால் கொள்ளப்படும் வரை மறந்துவிடுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதை மாற்றி மத்திய மாநில அரசுகள் தமது கடும் முயற்ச்சியின் மூலம் மீனவர்கள் நலன் காக்கப்பட ஆவன செய்யவேண்டும் என்பதிலும், மீனவர்களை கொல்லும் சிங்கள அரசை வன்மையாக கண்டிக்கவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
 
அந்தவகையில் மீனவர்களை கொள்ளும் சிங்கள அரசை கண்டிக்க நினைக்கும் பாஜகவின் முடிவு வரவேற்க தக்கது. ஆனால் அதற்கு என்ன செய்யவேண்டும்? இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தி தமது எதிர்ப்பை பதிவு செய்தால் அதில் அர்த்தமிருக்கும். அல்லது அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது எனில், எங்கு போராட்டம் நடத்த அரசு அனுமதிக்குதோ அங்கு நடத்துவது ஒருவகை. ஆனால் சம்மந்தமில்லாமல் கடலை போய் முற்றுகையிடுவேன் என்பது எந்தவகை அறிவுடமை? கடலா மீனவர்களை தாக்கியது? மீனவர் பிரச்சினையை வச்சு பாஜக  காமெடி கீமடி பண்ணலையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக