திங்கள், 9 மே, 2011

குவைத்தில் 'நரேந்திர மோடிக்கு எதிரான கண்டனக் கூட்டம்...

குவைத்தில் தமுமுக சார்பாக, தமிழ் அமைப்புகள் பங்குபெற்ற 'நரேந்திர மோடிக்கு எதிரான கண்டனக் கூட்டம் 06 -05-11 வெள்ளியன்று  மாலை 7 மணிக்கு 'மண்ணு-சல்வா' உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கண்டன உரையாற்றுவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தமுமுக அழைப்பு விடுத்ததையொட்டி, நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் உரையாற்றினார். அவர் தனது உரையில், கோத்ரா ரயில் எரிப்பில் முஸ்லிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை விவரித்ததுடன், அதையொட்டி மோடி வகையறாக்கள் நடத்திய முஸ்லிம் இன சுத்திகரிப்பை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார்.  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள்  அமைப்பினர் அறிவழகன் மற்றும் மகிழன் ஆகியோருக்கும், பெரியார் நூலகம் செல்லப்பெருமாள் அவர்களுக்கும், ம.தி.மு.கவின் மறுமலர்ச்சி பேரவையின் நிர்வாகி சத்யா அவர்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருக்குர்'ஆன் வழங்கப்பட்டது. இதஜ வின் இந்த தாஃவா முயற்சிக்கு தமுமுக குவைத் மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு  இதஜ குவைத் மண்டலம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக