வியாழன், 12 மே, 2011

'புஸ்'வானமான புகார்கள்!

தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் எதிரணியில் உள்ள அரசியல் கட்சியை நார்நாராக கிழித்தது. இதில் தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது தேர்தல் கமிஷனிடம் புகார் வந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முதல்அமைச்சர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததாக தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.
அதேபோன்று துணை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாக அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் கூறப்பட்டது.
 
இந்த புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த்  தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசிற்கு 3 பேரும் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார்கள். அந்த விளக்க கடிதங்களை தமிழக தேர்தல் கமிஷன் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தன. அந்த விளக்கங்களை தலைமைதேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் 2 தேர்தல் அதிகாரிகள் 3 தலைவர்களின் விளக்கத்தினை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விளக் கங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேர் மீதும் கூறப்பட்ட தனிப்பட்ட விமர்சன புகார்கள் தொடர்பாக மேல்நடவடிக்கை எடுப்பது இல்லை என மத்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்து இந்த முடிவு பற்றி தமிழக தேர்தல் கமிஷனுக்கு மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கும் தெரிவித்து உள்ளது. 
பெரிய தலைவர்கள் சமந்தப்பட்ட பெரிய அளவிலான புகார்களே 'புஸ்'வானமான  பின், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதியப்பட்ட சுமார் 62 ,000௦௦௦ வழக்குகளின் ஆயுள் கெட்டியாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக