உஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆன்-லைன் மூலம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 66 சதவீத பாகிஸ்தான் மக்கள், பின்லேடன் கொல்லப்பட்டதை நம்ப வில்லை என்று கூறி உள்ளனர்.
கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 75 சதவீதம் பேர், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தியதை ஏற்கவில்லை. 2001-ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பின்லேடன் என்பதை 25 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக