சனி, 30 ஜூன், 2012

ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் அவரொரு சூப்பர் ஸ்டார்..!

ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் அவரொரு சூப்பர் ஸ்டார்..!

நாமெல்லாம் காமெடி செய்யும் பவர் ஸ்டார், நிஜமாகவே சூப்பர் ஸ்டாராக மாறிக் கொண்டிருக்கிறார்.

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு மருத்துவமனை சமீபத்தில் திறந்து இருக்கிறார்கள் .அதில் 24 மணிநேரமும் நல்ல சிகிச்சை அளிக்கபடுகிறது.... மேலும், எல்லா வசதிகளும் உள்ள அந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்கு நியாயமான தொகை வாங்குகிறார்கள் என்பதைகேள்விப்பட்டு அதன் உரிமையாளர் யார் என்று விசாரித்ததில் அது "பவர் ஸ்டார் " Dr ஸ்ரீநிவாசன் என்று சொன்னார்கள் .

சும்மா பெயருக்கு முன்னால் "Dr" வைத்து பிலிம் காட்டுபவன் போலில்லாமல் ... உண்மையான Doctor என நிருபித்து விட்டீர்கள்..

நல்லதை யார்செய்தாலும் வரவேற்போம் .

இவரைநம்பி பல குடும்பங்கள் பிழைக்கின்றன .இவர் காமெடியன் அல்ல உண்மைகதாநாயகன்...

மியான்மரில் தீவிரவாதிகளின் மதவெறி.


யா அல்லாஹ்! மியன்மார் நாட்டில் எமது முஸ்லிம் சமூகம் உனது உதவியை நாடி 

நிற்கிறது. பௌத்த பேரினவாதிகளின் மீது உனது சாபம் உண்டாகட்டும். ஆமீன்.
 








வெள்ளி, 29 ஜூன், 2012

மதானிக்கு எதிராக ஜோடிக்கப்படும் வழக்கு!


கோவை சிறையில் 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் விடுதலையான அப்துல் நாசர் மதானியை பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புபடுத்தி கைது செய்த பெங்களூரு காவல்துறை அவரை பெங்களூரு சிறையில் அடைத்து வைத்திருக்கிறது.

மதானி நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு போடும்போதெல்லாம் பிணை கிடைக்கவிடாமல் செய்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளதோ அத்தனையையும் பிரயோகிக்கிறது பெங்களூரு காவல்துறை.

கடந்த வாரம் மீண்டும் பெங்களூர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு செய்திருந்தார் மதானி. இந்த விசாரணையின்போது மதானிக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வாக்கு மூலங்களைத் தந்து பிணை கிடைக்கவிடாமல் செய்து விட்டது பெங்களூரு காவல் துறை.

மதானிக்காக அவரது சொந்த வழக்குரைஞரான உஸ்மான் மற்றும் பிரபல வழக்குரைஞர்களான ஜவஹர்லால் குப்தா, சாந்தி பூஷன், சுஷீல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகி மதானி மீது போடப்பட்டது பொய் வழக்கு என பல மணி நேரங்கள் வாதாடினர். ஆயினும் மதானியின் பிணை குறித்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது பெங்களூரு நீதிமன்றம்.

மதானி வழக்கை 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட'த்தின் (UAPA) கீழ் கொண்டு வந்திருக்கிறது பெங்களூரு காவல்துறை. அரசுத் தரப்பு வழக்குறிஞராக முன்பு இருந்த ருத்ரசுவாமி ராஜினாமா செய்ததற்கும் புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மதானி வழக்கில் UAPA-வைக் கொண்டு வந்திருக்கிறது காவல்துறை.

புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்ற பின் மதானியின் வழக்கறிஞர் குழுவிற்கு பிரதிகளை கொடுக்காமல் புதிய டாக்கு மெண்ட்டுகளை இந்த வழக்கில் தாக்கல் செய்திருக்கிறார்.

இப்படி மதானி வழக்கில் UAPAவைக் கொண்டு வந்தது அர்த்தமற்றது என்றுதான் மேற்சொன்ன மதானியின் வழக்குரைஞர் குழு நீதிமன்றத்தில் வாதங்ளை வைத்தி ருக்கிறது.

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு குறித்த வழக்கே புனையப்பட்டது என்ற நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஏனை யோர், நீதிமன்றத்தின் மீது எங்க ளுக்கு நம்பிக்கையில்லை என விசாரணையின்போது தெரிவித் திருந்தனர். அப்போது மதானி மட்டும் அமைதியாக இருந்தார். மதானியின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது,

"இந்த நீதிமன்றம் குற்றம்சாட் டப்பட்டிருப்பவர்களுக்கு நீதி வழங்கும் என்கிற மாதிரியான தோற்றத்தை கூட ஏற்படுத்தத் தவறிவிட்டது. இருப்பினும் இந்த நீதி மன்றத்தின் மீதான நம்பிக் கையை நான் இழந்து விட வில்லை என்பதை நான் கண்டிப் பாகச் சொல்வேன்..." என பதில ளித்திருக்கிறார். அதே சமயம், மேல் முறையீடு செய்யப் போவதாக வும் மதானி அறிவித்திருக்கிறார்.

மதானி மீது பெங்களூரு போலீஸ் பொய் வழக்குகளை ஜோடித்திருக்கிறது என்பதற்கு சில லாஜிக்கான பாயிண்டுகள் போதுமானதாக இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியிருந்து பெங் ளூரு தொடர் குண்டு வெடிப் புக்கு மதானி சதித் திட்டம் தீட்டி னார் என்பதுதான் பெங்களூரு காவல்துறை கூச்சநாச்சமில்லா மல் மதானி மீது வைக்கும் குற்றச் சாட்டு. ஆனால் உண்மை நிலை யென்னவென்றால்... கோவை சிறையிலிருந்து 10 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் மதானி விடுதலையானபோது, மதானிக்கு இரண்டு காவல்துறை அதிகாரிக ளைக் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மதானியுடனே எப்போதும் இருப்பவர்கள் இந்த பாதுகாப்பு அதிகாரிகள். அதோடு, கேரள போலீஸ் வேறு மதானியை மிக நெருக்கமாக கண்காணித்து வரு கிறது. இந்த நிலையில் மதானி எப்படி குடகு பகுதிக்கு தனியா கச் சென்று பெங்களூரு குண்டு வெடிப்பை நடத்த சதித் திட்டம் தீட்ட முடியும்?

இத்தனை பாதுகாப்பிலி ருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்பித்து, கேரள மக்களிடம் மதானி பரிச்சயமான வர் என்ற வகையில் அவர்களின் பார்வைக ளுக்கும் படாமல் அதுவும் சக்கர நாற்காலியில் நடமாடும் ஒருவ ரால் குடகு பகுதிக்குச் சென்று சதித் திட்டத்தில் ஈடுபட முடி யுமா?

பச்சைக் குழந்தைக்கும் தெரியும் இந்த அறிவு பெங்களூரு காவல்துறைக்கு இல்லாமல் போனது ஆச்சர்யம் என்று சொல் வதா? அறிவு கெட்டத்தனம் என்று சொல்வதா? இதுபோன்ற கேள்விகளுக்கு பெங்களூரு காவல் துறையினரிடத்தில் இதுவரை பதிலில்லை.

பதிலில்லாத இந்தக் கேள்வி கள் மதானியை விடுதலை செய்து விடுமா? விடுதலை செய்துவிட முடியாது. ஏனெனில் சாதாரண வழக்குகளில் குற்றம்சாட்டப்பட் டால் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு விசா ரணை அமைப்புகளுக்கு உண்டு.

ஆனால், தடா, பொடா, UAPA போன்ற கறுப்புச் சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றம்சாட்டப்பட் டால்... தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கே உண்டு.

அதே சமயம், நீதிமன்றங்கள் பொதுவாகவே போலீஸôருக்கு முன் கொடுக்கப்படும் சாட்சி வாக்குமூலங்களை ஆதாரங்க ளாக ஏற்றுக் கொள்வது கிடை யாது. ஆனால் சிறப்பு நீதிமன்றங் கள் இதுபோன்ற வாக்குமூலங் களை ஏற்றுக் கொள்கின் றன.

ஆக, கறுப்புச் சட்டங்களின் எல்லாமே பழி வாங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. போலீஸ் எது சொன்னாலும் உண்மை. அதை பொய் யென நாம்தான் நிரூபிக்க வேண் டும்.

தனக்கு பிடிக்காதவனை இவன் குண்டு வைத்தான் என்று போலீஸ் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனெனில் போலீஸ் பொய் சொல்லாது. அவ்வளவு நல்லவர்கள் நமது நாட்டு போலீசார்! இதற்கு பெயர் ஜனநாயகம்... மக்க ளாட்சி... மதச் சார்பின்மை... நம்புங்கள்.

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,

Ø  ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?

Ø  இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?

Ø  இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?

Ø  உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கத்தை 29 -6 -2012 வெள்ளியன்று நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தூர் ஜாஃபர்-[மண்டல செய்தி தொடர்பாளர்] தலைமையேற்க, மண்டலத்தலைவர் ஜாஹித்பிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலச் செயலாளர் அபுஷிபா வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான், முகவை எஸ்.அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக மண்டலத் துணைச்செயலாளர் முபாரக்பாஷா நன்றியுடன் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ். 


இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்!



நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக
கூறினார்.

மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.




by ISLAMIYA pengal
http://www.facebook.com/page.islamiyapengal
 — with Mohamed Ibrahim Ahk

பெண்களை குறை கூறும் ஆண்மக்களே!?!?! இது உங்களுக்காக!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!

[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.

''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.

அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.

o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.

o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.

o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.

இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான 'அல் அஹ்ஸாப்' – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.

இதோ அந்த திருவசனம்;

"நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்." (33:35)

இதில் ஒன்பதாவதாக "தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்" என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.

திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.

ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, "யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்" என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.

ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது "எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது" என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.


இறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்

கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.

அதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.

இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.


கற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்

o அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம்.

ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை தெளிவு படுத்துகிறார்கள்.


பார்வை

இவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

"நபியே! முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)

இந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா?!


ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"அலீயே! யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே! ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல." 

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.

ஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.

வீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து "எங்களின் தந்தை உங்களை அழைத்தார்" என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.

நடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.

ஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு "நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்" என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.

ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

"உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்" என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

"புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது" என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

வல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ஜஸாக்கல்லாஹு கைர் மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி.

__._,_.___
Recent Activity:
OPINIONS SHARED BY GROUP MEMBERS DO NOT REPRESENT THE VIEWS OF THE MODERATORS.

.

__,_._,___

முக்கிய ஆவணங்கள் கீழே கிடந்தால்...



உபயோகமான செய்தி. பகிர்ந்து கொள்ளுங்கள்..

 
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்கலான, ஓட்டுனர் உரிமம், வங்கி பாஸ்புக், வாக்காளர், அடையாள அட்டை, முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உக்ள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விடவும்
அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். 
உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். மற்றவர்களுக்கு உதவ நிச்சயம் இதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
 
`பண்ருட்டி MK முபாரக் அலி.




வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்.


நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா? போலியானதா என கண்டுபிடிக்க ஒரு நொடி போதுமே!


நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா? போலியானதா என கண்டுபிடிக்க இணையதளத்தில்
http://verifymymedicine.com/
என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து அதில் Authentication Code என்ற காலத்தில் மருந்து அட்டையில் உள்ள ஒன்பது இலக்க குறியீட்டு எண்ணை டைப் செய்து பின்னர் Authenticate என்பதை கிளிக் செய்தால் நீங்கள் வாங்கிய மருந்தின் வரலாறு உங்களுக்கு வந்துவிடும். 

sms இல் தகவலறிய;

Authentication Code நம்பரை டைப் செய்து 9901099010 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். பண்ணவும்.


நீங்களும் சோதித்து அறியலாமே!


குறிப்பு; இந்தியாவிற்கு மட்டும்.

கொடுமைக்கார மாமியார் நரேந்திரமோடி- குஜராத்தை கலக்கும் போஸ்டர் யுத்தம்.


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடிக்கும், மாநில பாரதீய ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கும் பகை இருந்து வருகிறது. குஜராத்தில் மோடியை பிடிக்காதவர்கள் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்களாக மாறி மோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்கள் குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், டெல்லியிலும் மோடிக்கு எதிராக பேனர் மற்றும் சுவரொட்டி வைத்திருந்தனர். அதில், குறுகிய மனப்பான்மை உடையவர் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) வர முடியாது என்று மோடியை மறைமுகமாக தாக்கி இருந்தனர்.

போஸ்டர் யுத்தத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை சஞ்சய் ஜோஷி கேட்டுக் கொண்டார். எனினும் போஸ்டர் யுத்தம் ஓயவில்லை. சுவரொட்டி போர் தொடர்கிறது.

நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரித்து இப்போது போஸ்டர்கள் ஒட்டுப்பட்டுள்ளன. பழம்பெரும் நடிகைகளாக லலிதா பவார், சசிகலா ஆகியோர் புகைப்படங்களுடன் பெண் வேடத்தில் நரேந்திர மோடியின் படமும் போட்டு, போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது. லலிதா பவார், சகிகலா இருவரும் பெரும்பாலான படங்களில் கொடுமைக்கார மாமியாராக நடித்துள்ளனர். இவர்கள் தந்திரமாக செயல்பட்டு, குடும்பங்களை பிரிக்கும் மோசமான பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இவர்களின் புகைப் படங்களுடன் மோடியின் பெண் வேடபோட்டாவையும் இடம்பெறச் செய்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

மோடியை மாநில பாரதீய ஜனதாவின் கொடுமைக்கார மாமியாராகவும், கட்சியில் பிளவை ஏற்படுத்து பவராகவும் மறைமுகமாக தாக்கி அச்சியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர், ரேஸ் கோர்ஸ் ரிங்ரோடு, தாகூர் ரோடு, ராஜ்கோட் மேயர் வீடு அருகில் மற்றும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி; விடுதலை. ஜூன் 29-2012

சிந்திக்க ஒரு செய்தி....


வண்டியை திருடியவரை கைகால் வெளங்காம ஆக்குற சக்தி வெட்டுக்காளியம்மனுக்கு இருக்குதுன்னா கோயில் உண்டியலை திருடுபவர்களை வெட்டுக் காளியம்மன் ஒன்னும் செஞ்சதாகதெரியலையே.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி 

நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ 

அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. 

தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!

http://www.thoothuonline.com/16000-muslims-still-displaced-in-gujarat/

24 Jun 2012 victims in relief camps living between existence and denial

அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது.

அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், சாக்கடை வசதி எதுவும் இல்லாமல் முற்றிலும் சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விஷயத்தில் மோடி அரசு முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

குப்பை மேடுகளுக்கு அருகே 10 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜன்விகாஸுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஜன்விகாஸ் ஏற்பாடுச் செய்த இன்ஸாஃபி தகர்பர் என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது துயரமான வாழ்க்கையைக் குறித்து விவரித்தனர்.

தங்களின் புகார்களை கூட கேட்க அதிகாரிகள் தயாரில்லை என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாமா பானு அன்ஸாரி கூறினார்.

நிரம்பி வழியும் சாக்கடைகளில் கழிவு நீர் தங்களின் காலனிக்கு வருவதாகவும், சாக்கடையில் ஒரு குழந்தை சிக்கி இறந்ததாகவும், தொற்று நோய்களும், இதர நோய்களும் பரவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இல்லை என்பதை நம்பச்செய்ய முயற்சிக்கும் அரசு, உண்மைகளின் பால் கண்ணைத் திறக்கவேண்டிய நேரம் இது என்று பீப்பிள்ஸ் யூனியன்  ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்) செயலாளர் ரோஹித் பிரஜாபதி தெரிவித்தார்.

தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அகதிகள் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மூவ்மெண்ட் ஃபார் செகுலர் டெமோக்ரஸியின் பிரகாஷ் ஷா, ஜன்விகாஸ் சி.இ.ஒ விஜய் பார்மர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் அகதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் என்.ஜி.ஓக்கள், முஸ்லிம் ஜீவகாருண்ய அமைப்புகள் ஆகியன நிர்மாணித்த தற்காலிக மையங்களில் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.


முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்

கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.

கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.

780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.

இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.

துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.

இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?

இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.

ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு

இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:
1. அரபுகளின் கிளைஞர்கள்
2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.
3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.

ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.

ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள். இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.

கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.

ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.

ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.

அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,
2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.
4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.
5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.
6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.
8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.
9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.

விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.

இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.

இந்திய முஸ்லிம்களின் நிலை
ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது.
இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.

முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.

ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.

இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.

பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.

இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.

ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.

விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.

ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!

வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.

இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!

- முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது,
- முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
- காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்.
- மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
- அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
- வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
- முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
- முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.
- முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.
- முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.

இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!

- வி.டி. இராஜசேகர் -

 

-- 

                

வியாழன், 28 ஜூன், 2012

களவாணி ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!


ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஓர் இலகுவான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முறை:
உங்கள் மொபைல் போனில் [PDS] இடைவெளி [மாவட்ட குறியீடு] இடைவெளி [கடை எண்] என டைப் செய்து 9789006492 என்ற எண்னுக்கோ அல்லது 9789005450 என்ற என்ணுக்கோ எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.
மாவட்ட இலக்கம், கடை இலக்கம் என்பவற்றை உங்கள் ரேஷன் கார்டில் இருந்து அறிந்துகொள்ள வழிமுறை கீழே உள்ளது.
என்ன… களவாணி ரேஷன் கடைக்காரனுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியா…!
நன்றி; அஹ்மது இமாம்,.

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


குவைத் மண்ணில் வாழும் தமிழர்களே! 

Ø  ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?

Ø  இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?

Ø  இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?

Ø  நாம் பணியாற்றும் கம்பெனிகளில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

Ø  குற்றச் செயல்களை தவிர்ந்துகொள்வது எப்படி?

Ø  உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

ஆகிய தலைப்புகளில் விளக்கவுரை நிகழ்த்தவுள்ள சகோதரர்கள்;

 

சிறப்புரை:  மவ்லவி. எஸ். ஜமாலுத்தீன் ஃபாஸி., [இஸ்லாமிய அழைப்பாளர்]

 

அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான்.

ஜாஹிர் ஹுசைன்

 

முகவை எஸ்.அப்பாஸ்.

 

நாள் : 29-6 -2012 வெள்ளிக்கிழமை

 

நேரம்; மாலை சரியாக 7:00 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

 

இடம் : தஞ்சை உணவகம்-பார்ட்டி ஹால்[மிர்காப்]

 

தலைமை; கூத்தூர் ஜாஃபர்-[மண்டல செய்தி தொடர்பாளர்]

 

முன்னிலை; சாதிக்சதாம்-[மண்டலப் பொருளாளர்.]

 முஹம்மது சேட்-[மண்டலத் துணைச் செயலாளர்]

 மீரான்-[மண்டலத் துணைச் செயலாளர்.] 


கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ்- [மண்டலத்தலைவர்]

 

வரவேற்புரை; முபாரக் பாஷா -[மண்டலத் துணைச் செயலாளர்]

 

நன்றியுரை; அபுஷிபா- [மண்டலச் செயலாளர் ]

 

Ø  அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)

குவைத் மண்டலம்

தொடர்புக்கு; 60002975,65653431,97659759 ,55811252 ,97102763 ,99817230 ,97145046