வெள்ளி, 29 ஜூன், 2012

கொடுமைக்கார மாமியார் நரேந்திரமோடி- குஜராத்தை கலக்கும் போஸ்டர் யுத்தம்.


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடிக்கும், மாநில பாரதீய ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கும் பகை இருந்து வருகிறது. குஜராத்தில் மோடியை பிடிக்காதவர்கள் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்களாக மாறி மோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்கள் குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், டெல்லியிலும் மோடிக்கு எதிராக பேனர் மற்றும் சுவரொட்டி வைத்திருந்தனர். அதில், குறுகிய மனப்பான்மை உடையவர் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) வர முடியாது என்று மோடியை மறைமுகமாக தாக்கி இருந்தனர்.

போஸ்டர் யுத்தத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை சஞ்சய் ஜோஷி கேட்டுக் கொண்டார். எனினும் போஸ்டர் யுத்தம் ஓயவில்லை. சுவரொட்டி போர் தொடர்கிறது.

நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரித்து இப்போது போஸ்டர்கள் ஒட்டுப்பட்டுள்ளன. பழம்பெரும் நடிகைகளாக லலிதா பவார், சசிகலா ஆகியோர் புகைப்படங்களுடன் பெண் வேடத்தில் நரேந்திர மோடியின் படமும் போட்டு, போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது. லலிதா பவார், சகிகலா இருவரும் பெரும்பாலான படங்களில் கொடுமைக்கார மாமியாராக நடித்துள்ளனர். இவர்கள் தந்திரமாக செயல்பட்டு, குடும்பங்களை பிரிக்கும் மோசமான பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இவர்களின் புகைப் படங்களுடன் மோடியின் பெண் வேடபோட்டாவையும் இடம்பெறச் செய்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

மோடியை மாநில பாரதீய ஜனதாவின் கொடுமைக்கார மாமியாராகவும், கட்சியில் பிளவை ஏற்படுத்து பவராகவும் மறைமுகமாக தாக்கி அச்சியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர், ரேஸ் கோர்ஸ் ரிங்ரோடு, தாகூர் ரோடு, ராஜ்கோட் மேயர் வீடு அருகில் மற்றும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி; விடுதலை. ஜூன் 29-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக