வெள்ளி, 8 ஜூன், 2012

INTJ மின்வாரிய i முற்றுகை அறிவிப்பால் காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்!


 INTJ  மின்வாரிய முற்றுகை அறிவிப்பால் 
காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்! 

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதை சரி செய்ய வேண்டிய மின் வாரியம் போதிய பணியாளகள் இல்லை! பொறுப்பான அதிகாரிகள் இல்லை என பொறுப்பை தட்டிக் கழிப்பதும், மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் சென்று கத்துவதும்  காவல் துறை வந்து மக்களை சமரசம் செய்வதும தொடர் கதையாகிப் போனதால் திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இன்று வெள்ளிக்கிழமை இன்று எஸ்.எம்.பாக்கர் தலைமையில் ஆர்பாட்டத்தை அறிவித்து இருந்தது! 

இந்த ஆர்பாட்ட அறிவிப்பை கண்டு காவல் துறை அதிகாரிகள் உளவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனை அடிப்படையில் 'புதுக் கோட்டை இடைத் தேர்தல் முடியட்டும் எங்களுக்கு பத்து நாள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்து தருகிறோம்!  நாங்கள் உங்கள் தலைவரை சந்தித்து உறுதி அளிக்கிறோம்! உங்கள் பள்ளிவாசலுக்கே வந்து உங்கள் நிர்வாகிகளை அழைத்து சென்று மின்வாரிய உயர்அதிகாரிகளை சந்திக்க வைத்து பிரச்சனையை முடித்து தருகிறோம் எனக் கேட்டதை அடுத்து கிளை நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

இதை அடுத்து திருவல்லிக்கேணி ஐ.என்.டி.ஜேமர்கசுக்கு வந்த காவல் துறை அதிகாரிகள் எஸ்.எம்.பாக்கரிடம் இந்தப் பிரச்சனையை சரி செய்வதாக வாக்களித்தனர்.அவர்களிடம் கடந்த ஆட்சியில் இதே பிரச்சனைக்காக கொட்டும் மழையில் ஆயிரக்கனகானவர்கள் கலைஞர் வீட்டை முற்றுகையிடம் அளவிற்கு சென்றதை எடுத்து சொல்லி அந்த நிலைக்கு மக்களை தள்ள வேண்டாம் ! எனக் கூறினார.பின்னர் காவல் துறை அதிகாரிகளுக்கு திருமறைக் குரான் தமிழாக்கம் வழங்கப்ப்ட்டது! பின்னர் மாவட்ட நிர்வாகிகள் சிக்கந்தர் மற்றும் முனுசு ஆகியோரடங்கிய குழு காவல் துறை அதிகாரிகளோடு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசியது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்ட அறிவிப்பால் காவல் துறை அதிகாரிகள் மர்கசுக்கு வந்த இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது!அல்ஹம்து லில்லாஹ்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக