சனி, 16 ஜூன், 2012

நித்தியானந்தா VS சதானந்த கவுடா!

பிடதி ஆசிரம சொத்து சேதம் ஏற்படுத்தியதற்காகவும் தனக்கு அவப்பெயர் உண்டாக்கியதற்காகவும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா 10 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று நித்யானந்தா தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, மக்களுக்காக இதுபோன்ற ஆயிரக்கணக்கான வழக்குகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நித்யானந்தா தொடர்பான ஆதாரங்களயும் சாட்சிகளையும் வைத்து போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். சட்டம் ஒழங்கு சீர்கெடும் பட்சத்தில் நித்யானந்தா மட்டுமல்ல, யார்மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், மக்களின் விருப்பத்துக்கு இணங்க, நித்யானந்தா சிறை வாழ்வுக்குத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சபாஷ் மிஸ்டர் சதானந்தா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக