செவ்வாய், 3 மே, 2011

பறவைகள் மீதும் பரிவு காட்டும் இதஜ- தினமணி செய்தி!

ந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் தொடர்பாளர் முனீர் தனது நண்பர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். ""கோடை வந்துவிட்டது. நமக்குத் தாகம் எடுப்பதுபோலப் பறவை இனங்களுக்கும் தாகம் எடுக்கும் என்பதை நாம் உணர வேண்டாமா? வீட்டுக்கு வீடு பறவைகளுக்கான ஒரு சிறிய தொட்டியில் தண்ணீர் ஊற்றி வையுங்களேன்...'' என்கிறது அந்தக் குறுஞ்செய்தி.

 ÷இதயத்தில் ஈரமுள்ளவர்கள் நண்பர் முனீரின் வேண்டுகோளைப் பின்பற்றுங்களேன். எனது வீட்டில் பறவைகளுக்காகத் தண்ணீர் தொட்டி, மொட்டை மாடியில் வெயில் விழாத இடத்தில் வைக்கப்பட்டுவிட்டது முனீர்...!
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக