வெள்ளி, 20 மே, 2011

ஆ.ராசாவை தொடர்ந்து திகார் சிறைச்சாலை நோக்கி கனிமொழி&சரத்குமார்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். இவ்வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில்,
 
''கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். மேலும் இருவரையும் 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் கனிமொழி எம்.பி.யையும், சரத்குமாரையும் இன்று மாலை 4 மணிக்கு கைது செய்து, திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் கனிமொழி திகார் சிறையில் பெண்களுக்கான தனி அறையில் அடைக்கப்படுவார்.
 
உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கணும்.. தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும் என்பது தானே உலக நியதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக