வெள்ளி, 16 டிசம்பர், 2011
'நச்'சுன்னு ஒரு கேள்வி!
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்; கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இப்போது சொல்கிறேன். வீடு பறிப்பு வழக்கில் என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே கொடுத்துக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா?
புறக்கனிக்கப்பட வேண்டியது தினமலரா? மூட நம்பிக்கையா?
ஜெயலலிதாவின் விளையாட்டுப் பொம்மைகளா மந்திரிகள்?
மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மத்திய மந்திரிக்கு அழகா?
கைதியை விடுதலை செய்த பாகிஸ்தான்; கண்டுகொள்ளாத இந்தியா!
வியாழன், 8 டிசம்பர், 2011
நலம் பெற துஆ செய்யுங்கள்!
பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டு ஊர் திரும்பிய அதிரையை சேர்ந்த சகோதரர்கள் பசீர் மற்றும் சாகுல் ஹமீது இருவரும் வாகன விபத்தில் சிக்கி, பசீர் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களை சகோ: கோவை ஜாபர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து சென்றனர் மேலும் இந்த சகோதரர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது. Thanks&Regards
M.NOORULAMEEN
இதஜ'வின் டிசம்பர் ஆறு ஆர்ப்பாட்ட செய்தி பத்திரிக்கைகளில்[part 2]
--
M.NOORULAMEEN
--
M.NOORULAMEEN
புதன், 7 டிசம்பர், 2011
செவ்வாய், 6 டிசம்பர், 2011
19 ஆண்டுகளாக குறையாத உணர்ச்சி; ஐ.என்.டி.ஜே. ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சி!
திங்கள், 5 டிசம்பர், 2011
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் புதிய கிளை!
தலைவர் -எம்.ஜமால் முஹம்மத்
துணைத்தலைவர் - சீமான் அலி
செயலாளர்- தவ்பிக் ரஹ்மான்
துணைசெயலர்- எஸ்.காதர் மைதீன்
பொருளாளர்-நூர் முஹம்மத்
மாணவர் அணி - யாசிர் அரபாத்
மீனவர் அணி-நைனா முஹம்மத்.
டிஎன்டிஜேவின் அயோக்கியத்தனம்.
வெள்ளி, 2 டிசம்பர், 2011
வியாழன், 1 டிசம்பர், 2011
முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!
முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!
முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.
சில பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.
வேறு சில பகுதிகளில் ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]
முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;
ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]
ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]
எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
சரத்பவார் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார்...?
அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!
ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
மனிதன் அறிவை மங்கசெய்யும் அனைத்து பொருட்களும் போதை பொருட்களே; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விவாத முடிவு!
நல்லசாமியின் கூற்றை மறுத்த குமரி அனந்தனோ, ''கள்ளும் இனிது, காமமும் இனிது என்று திருவள்ளுவர் கூறவில்லை. கள்ளைவிட காமம் இனிது. கள்ளை குடித்து கெட்டு போகாதீர்கள். காதலியின் காதல், காமம் இனிது என்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். மது என்பது மருத்துவரின் அறிவுரைப்படி மருந்தாக மட்டுமே இருக்க வேண்டும். மருந்தே விருந்தாக ஆகிவிடக் கூடாது. நம் அனைவரின் நோக்கம் முழுமையான மது விலக்காகவே இருக்க வேண்டும் என்று மடக்கி திருக்குறள் பற்றிய நல்லசாமியின் அறியாமையை விவரித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.[புகாரி]