வெள்ளி, 29 ஜூலை, 2011

பட்டினியால் மடியும் பிஞ்சுகள் : "ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்'

இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. சோமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன. இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.
இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, "யுனிசெப்' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, "யுனிசெப்' வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் "யுனிசெப்' அறிவித்துள்ளது.
நன்றி;தினமலர்.


குறிப்பு; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உட்பட தமிழகத்தில் இயங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தாங்கள் வசூலிக்கும் ஃபித்ரா தொகைகளை உண்மையிலேயே  வறுமையில் வாடும் இந்த மக்களுக்கு அனுப்ப முயற்ச்சிக்கலாமே!

அப்துல்கலாமின் அன்பான கவனத்திற்கு....

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு சிந்தனை சிற்பி. அவரது திறமைகள்- ஆய்வுகள்-கண்டுபிடிப்புகள் உலக அளவில் இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித்தந்தவையாகும். ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின், ஓய்ந்துபோய் ஒதுங்கிவிடாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து வருகிறார். அப்துல்கலாமின் சந்திப்பு மாணவ-மாணவிகள் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. 
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இவ்வாறான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில், ஒரு பெண் எழுந்து, 'எனக்கு எப்போதுமே ஊக்கம் அளிக்கும் மிகப்பெரிய சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால், உங்களை நான் கட்டி அணைக்கலாமா?' என கேட்க,  அப்துல் கலாம் புன்சிரிப்புடன் ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அப்துல் கலாமை அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இச்செய்தி உண்மையானால் இதுபோன்ற நிகழ்வுகளை அப்துல்கலாம் அவர்கள் தவிர்ப்பதே  அவரது மதிப்பிற்கும், அவர் சார்ந்த மார்க்கத்திற்கும் ஏற்றதாகும். ஏனெனில், அப்துல்கலாம் அவர்களை விட, அகிலம் அழியும் வரை எவராலும் தொடமுடியாத சாதனை படைத்த இறைத்தூதர்[ஸல்] அவர்கள் வாழ்க்கையை புரட்டினால், அங்கே அந்நியப் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு அவர்களின் ஒரு அழகிய முன்மாதிரி கிடைக்கிறது.
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், 'நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.[புகாரி]
இந்த பொன்மொழியை அப்துல்கலாம் அவர்கள் கவனத்தில் கொள்வது அவருக்கு இன்னும் நன்மதிப்பை பெற்றுத்தரும் என்பதை சகோதர வாஞ்சையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் துணிச்சலான நடவடிக்கை; கலைஞரும் கையிலெடுப்பரா?

நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் திமுகவினரே பெரும்பாலும் சிக்குகின்றனர். இந்த வழக்கில் திமுக முன்னாள்  அமைச்சர்களே முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டு படியேறும் நிலையில், புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது தொடுக்கப்பட்ட நிலமோசடி புகார் பொய்யானது என்று காவல்துறை கூறுகிறது. அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் மீதும் இத்தகைய நில மோசடி குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நில்லையில்,
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் 24-வது வட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.இதே வழக்கில் சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.நிலம் மோசடி புகாரில் சிக்கியுள்ள இந்த 2 பேரையும் கட்சியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கி உள்ளார். இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார். இதே போல் ஜெயலலிதா மீதான நில ஆக்கிரமிப்பு குற்றசாட்டு வழக்கையும் விரைந்து முடிந்து அவர் தன்னை தூய்மைப்படுத்துவது தான் சிறந்தது.
மேலும், எதிர் முகாமான திமுகவில், இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்று தனது கட்சி வழக்கறிஞர் பிரிவுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இவை யாவும் திமுகவை பழி வாங்கும் நடவடிக்கை என்று நாள்தோறும் சொல்லி வருகிறார். வெறுமனே திமுகவினர் மட்டுமே கைது செய்யப்பட்டால் அரசியல் வழக்கு என்று சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் அதிமுக என அனைத்துக் கட்சியினரும் சிக்குகிறார்கள். இதில் திமுகவின் சதவிகிதம் அதிகமாக உள்ளது என்பதற்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளிட முடியாது. மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனது கட்சியினரை நீக்கிய ஜெயலலிதாவை போன்று அதிரடியாக கருணாநிதியும்  நீக்கவேண்டும். 'உங்கள் மீதான புகாரை சட்டரீதியாக சந்தித்து அதில் வெற்றி கண்டு கழகத்தில் மீண்டும் இணையுங்கள்' என்று சொல்லவேண்டும். அவ்வாறு  சொல்லும் துணிவு கருணாநிதிக்கு இல்லையெனில், குறைந்தபட்சம் வழக்கு முடியும் வரை இடை நீக்கமாவது செய்யலாம். அதைவிடுத்து கட்சி வழக்கறிஞர்கள் மூலம் உதவுவதும், ஒரு மத்திய அமைச்சரே இவ்வழக்கில் கைதாகியுள்ளவர்களை சிறையில் சந்திப்பதும், இத்தகைய நிலமோசடி விஷயங்களுக்கு திமுக தலைமையே ஆதரவு அளிக்கிறதோ என்ற என்னம் பொதுமக்கள் மனதில் எழாமல் இல்லை. கலைஞர் புரிந்து கொண்டு சுதாரித்தல்  நன்று.  

பயங்கரவாதி, "மனிதன்' அல்ல; உண்மையைச் சொன்ன மோடி!

மீபத்தில் மும்பையில் நடந்த தொட குண்டுவெடிப்பையடுத்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சில கருத்துக்களை சொல்லியுள்ளார். அவை அனைத்தும் அக்கப்பூர்வமான கருத்துக்கள். அவற்றை படித்தால் பயங்கரவாதம் விஷயத்தில் மோடியின் ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் மோடி சொல்லும் ஆலோசனையை மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கினால் என்னாகும் என்பதை கடைசியாக பார்ப்போம். இப்போது மோடியின் வார்த்தைகளிலிருந்து....
 ""மத்திய அரசின் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து விட்டது. அதனால், இந்தியாவில், விரும்பும் இடத்தில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர், மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மத்திய அரசு, பயங்கரவாதிகள் விஷயத்தில் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதனால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து, விரும்பும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன். மதக் கலவரங்களை ஒடுக்க சட்டம் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுகிறது. அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகள், உறுதியான நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளன. இவ்வகையில், இந்தியாவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக, கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதம் கட்டுக்குள் வரும்' என்று  நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன் என்று சொல்லும் மோடி, தனது வார்த்தையை தனக்கே பொருத்திப் பார்ப்பாரானால், ஏனைய பயங்கரவாதிகளை விட இவருக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணலாம். ஏனெனில் தனது சொந்த மாநிலத்து மக்களையே கருவறுத்த பயங்கரவாதிதான் இவர். அதுமட்டுமன்றி அது பற்றிய ஆவணங்களும் இவரது அரசால் அளிக்கப்பட்டுள்ளன என்றால் இவர் பயங்கரவாதியா? அல்லது மகாத்மாவா? மோடி சிந்திக்கட்டும்.
மேலும் மோடியின் ரத்த கறைபடிந்த கையை கண்ட மற்றொரு மனிதகுல விரோத நாடான அமெரிக்காவே, 'எங்கள் நாட்டுக்கு வந்து விடாதே' என்று மோடிக்கு விசா மறுப்பதில் இருந்து மோடியின் பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ளலாம். எனவே மத்திய அரசு மோடியின் அறிவுரையை அமுல்படுத்த தொடங்கினால், முதலில் நடவடிக்கைக்குரியவர் மோடியாகவும்,  அடுத்து பயங்கரவாதத்தை ரதயாத்திரை மூலம் தொடங்கி வைத்தவர்களும் பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுமான  அத்வானி  உள்ளிட்டோரும், அடுத்தபடியாக பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சங்க்பரிவார கும்பலுமாகத்தான் இருக்கும் என்பதை மோடி மறந்து விடக்கூடாது. மேலும் மத்திய அரசு உடனடியாக மோடியின் ஆசையை நிறைவேற்றவேண்டும். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனாலும்  மத்திய அரசு மவுனம்  காக்கின்ற காரணத்தால்,  பயங்கரவாதிகளே பயங்கரவாதம் என ஓலமிட்டு காமெடி செய்கிறார்கள். என்னத்த சொல்றது?  

ரூ.1800 கோடி சுரங்க ஊழல்: 'எடி'யின் தலையில் இறங்கிய இடி!

ர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காலம் முதலே பதவி நாற்காலியின் ஆட்டத்தை நிறுத்த அரும்பாடுபட்டு வருபவர் முதல்வர் எடியூரப்பா. சொந்த கட்சி உறுப்பினர்களால் குடைச்சல், ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை, ஆளுநருடன் மோதல், இதுபோக தன் மீது அவ்வப்போது ஊழல் குற்றசாட்டை அடுக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் சத்த்தியம் செய்யும் நாடகங்கள் என எப்போது பார்த்தாலும் எடியூரப்பாவின் நிலை கத்தி மேல் நடப்பது போன்றே இருந்து வந்த நிலையில், அடுத்து அவர் தலையில் இடியாக இறங்கியுள்ளது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு. சுரங்க தொழிலை ரெட்டி சகோதரர்களுக்கு  ஏகபோக குத்தகைக்கு விட்டது போல் கண்டும் காணாமல் இருந்தார் எடியூரப்பா. இந்த சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், லோக் ஆயுக்தா நீதிபதியுமான  சந்தோஷ் ஹெக்டே தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், 
''கடந்த 2009  மார்ச் முதல் 2010 மார்ச் வரையிலான 14 மாதங்களில் சட்ட விரோத சுரங்க தொழில் மூலம் மிகப் பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ.1800 கோடிக்கு மேல் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த தொகை அரசின் கஜானாவுக்கு வர வேண்டியவை. ஆனால் அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டது. இதன் மூலம் அரசுக்கு அவர்கள் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த ஊழிலில் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மந்திரிகள் மற்றும் சுரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருக்கின்றன. இதற்கு தேவையான வலுவான மற்றும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.இந்த முறைகேட்டுக்கு எடியூரப்பா தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.  
இந்த செய்தி பாஜக தரப்புக்கு பேரிடியாக இருந்தது. காரணம் ஆ. ராசா, தயாநிதி மாறன் போன்ற மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சசாட்டுக்கள் எழுந்தவுடன், அவர்கள் பதவி விலகவேண்டும் என அதிகமாக குதித்தது பாஜக கட்சி. இந்நிலையில் தனது கட்சி  மாநில முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டால் எடியூரப்பாவை பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்பிய நிலையில், பாஜக எடியை பதவி விலக சொன்னதையொட்டி எடியூரப்பா பதவி விலகுகிறார். எடிக்கு இப்படி அறியாப் புறத்திலிருந்து  ஒரு இடி இறங்கும்; அது பலமுறை அரும்பாடுபட்டு காப்பாற்றிய பதவிக்கு வேட்டு   வைக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

இதஜ'வின் சமுதாய மற்றும் அழைப்புப் பணிகள்.

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்[29-7-2011]

மறுமையை நினைவுபடுத்திய மண்ணறை சந்திப்பு.

சனி, 23 ஜூலை, 2011

சென்னையில் மதுக்கடை முற்றுகை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள புகழ் பெற்ற ஸித்திக்  சரா எனும் புகழ் பெற்ற பள்ளிவாசல் உள்ளது! வெளி மாநிலத்தில் இருந்து வரும் முஸ்லிம்கள் மிகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதியும் கொண்ட இந்த பள்ளிவாசல் அருகில், வழி பட்டு தளங்களுக்கு அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது எனும் உச்ச நீதி மன்ற நெறி முறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது! 

இதை அகற்றக் கோரி மஸ்ஜித் நிர்வாகமும் பகுதி மக்களும் பல புகார்கள் அளித்தும் எந்தப் பலனும் இல்லாததால் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அணுகினர்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்ட்ரல் கிளை மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பலன் இல்லாததால் 
நேற்று ஜும்மா தொழுகைக்குப் பின் மதுக்கடை முற்றுகை அறிவித்தனர்.

மதியம் சுமார் 3 மணிக்கு போராட்டத்தை அறிவித்திருந்தாலும் காலை முதலே மதுக்கடை அடைக்கப் பட்டு போலிஸ் படை குவிக்கப் பட்டு இருந்தது! கைது நிச்சயம் எனத் தெரிந்தும் ஏரளமான ஆண்களும் பெண்களும் குவிந்தனர்.   கூட்டம் சேருவதைக் கண்ட 
காவல் துறை மூன்று மணிக்கு முன்னரே கைது நடவடிக்கையை துவங்கினர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை போது செயலர் இக்பால் , மாநில செயலாளர் பிர்தவ்ஸ் , இணையதுல்லாஹ் 
வட சென்னை  மாவட்ட நிர்வாகிகள் யூசுப் , அன்சாரி, புஹாரி, இஸ்மாயில் சென்றால் கிளை நிர்வாகி பாவா உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கைதாகி மண்டபம் ஒன்றில் வைக்கப் பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.        


வெள்ளி, 22 ஜூலை, 2011

இதஜ சார்பாக கல்வி உதவி!

இதஜ குவைத் மண்டல வாராந்திர பிரசுரம்.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

நட்பும் அதன் ஒழுக்கமும்

ல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி.

அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்

ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088)

நட்பை வளர்த்தல்; (1) ஸலாம் கூறுதல்
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)

உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.

(2) அன்பைத் தெரிவித்தல்;

நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.
அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980

(3) சந்தித்தல்;


ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை எதிர்பார்த்திருக்கும்படிச் செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்று கேட்டார். அதற்கவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போது அந்த மலக்கு அந்தச் சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டியதிருக்கிறதா? (அதற்காக அவரிடம் செய்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 4656)

இந்த ஹதீஸில் கிடைக்கும் செய்திகள்:
1) நல்ல நட்பு என்பது உலக லாபத்திற்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக என இருப்பது.
2) நட்புக் கொண்டவர்களிடையே சந்திப்புகள் நடக்க வேண்டும்
3) ஒருவர் மீது தூய்மையான அன்பு கொண்டால் அதற்காக அல்லாஹ்வும் நம்மீது அன்பு கொள்கிறான்.

நட்பின் கடமைகள்; (அ) உதவி செய்தல்
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262,

பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

(ஆ) நல்வழிப்படுத்துதல்
உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார். அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)

அநியாயம் செய்வது தன் நண்பன் என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல. மேலும் தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால் அது ஒருபெரிய பாவமாகிவிடும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்; ''உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் – இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)
நண்பர்களின் தீமைக்கு துணைபோனவர்கள் எல்லாம் 'உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்' என்று ஒருவரை ஒருவர் பழித்து எதிரிகளாகிவிடுவர்.

தீய நட்பை முறிக்க வேண்டும்
திருத்தினாலும் திருந்தாத தீய நண்பனிடமிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.

ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)

தூய நட்புக்கான கூலி; அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்காக நேசிக்கக் கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மின்பர்கள் (மேடைகள்) இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் ஷுஹதாக்களும் கூட விரும்புவார்கள்.

(அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி 2312)

நல்லோரை நேசிப்போம்!
நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 5703)

அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)

(நன்றி;சகோதரர். அப்துர்ரஹ்மான் மன்பஈ, இயக்குனர், அஹ்லுஸ் ஸுன்னா இஸ்லாமிய ஆய்வு மையம்


கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

மிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ''ஜெயலலிதா ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணிசார்பில் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளதோடு, தி.மு.க. ஆட்சியில் இது போன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இருமுறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சியில் தவறு செய்பவர்களை உடடியாக கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து திருந்துவதற்கு வாய்பளித்தாக காட்ட முனைகிறார். கருணாநிதி அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒருவன் சிகரெட் அடிக்கிறான் என்றால் அவனை சில  முறை எச்சரித்து திருத்த முயற்சிக்கலாம். ஒருவன் தண்ணி அடிக்கிறான் என்றால் அவனுக்கும் எச்சரிக்கை செய்து திருந்த வாய்ப்பளிக்கலாம். ஆனால் ஒருவன் அடுத்தவனை மிரட்டியோ, அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ ஒருவனுடைய இடத்தை ஆக்கிரமித்தால், அல்லது அடிமாட்டு விலைக்கு வாங்கினால் பாதிக்கப்படவன் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றால், அவனுக்கு உரிய நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அபகரிப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது அவனை அழைத்து , ''இந்த ஆளு நிலத்த அபகரிச்சதோட நிறுத்திக்க; இனிமே யாரு நிலத்திலயாச்சும் கை வச்ச... ''ன்னு எச்சரித்து விட்டுறனுமா? என்ன சொல்ல வர்றீங்க கலைஞரே! 
 
அடுத்து, ''நம்முடைய கழகத் தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.  நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!''என்று கலைஞர் விரகிதியோடு கூறுவதை பார்க்கும் போது, ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் கழகம் கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை. அல்லது கழகத்தின் பணி மந்தமாக  உள்ளது  என்பதைத்தான் கலைஞரின் வழக்கறிஞர்கள் அணி குறித்த கண்ணோட்டம் சொல்லாமல் சொல்கிறது.
 
எது எப்படியோ, மத்திய அரசால் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே போக, மாநில அரசின் நடவடிக்கையால் கழக உறுப்பினர்கள் உள்ளே போக, கலைஞர் வார்த்தையில் சொன்னால் திமுகவுக்கு இது மீண்டும் ஒரு 'எமெர்ஜென்சி' தான். இதிலிருந்து கழகம் மீளுமா? கரையுமா என்பதுதான் இப்போது மக்களின் கூரிய பார்வையின் தேடலாக உள்ளது.
 
 

குடிமக்கள் அரசா? 'குடிமகன்' களின் அரசா?

க்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரிவிதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசுகளோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமன்றி உலக வங்கியிலிருந்து பெரும் கடன்களின் மூலம் கிடைக்கும் தொகைகளை தேவையற்ற இலவசங்களை வழங்குவதற்கும், தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்றவைகளுக்கும், ஆடம்பர அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றன. இவைகளில் அரசின் கஜானா காலியாகி விடுவதால், நாட்டின் மூலாதாரப்  பணிகளுக்கு மேலும் கடன்களை வாங்குவதோடு, டாஸ்மாக் எனும் சாராய வியாபாரத்தை செய்தும் கஜானாவை நிறைக்கிறது. 
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மாஸ்மாக் அரசு நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும், தற்போது சரக்குகளின் விலையையும் உயர்த்தி 'குடிமகன்' களை குடிக்காமலேயே தள்ளாட வைத்துள்ளது.  குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆப் பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.   இந்த விலை உயர்வினால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையப்போவதில்லை. மாறாக குடும்பத்திற்கு குடிமகன்கள் வழங்கும் தொகைதான் குறைய வாய்ப்புண்டு. அடுத்து இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவெனில், நாடெங்கும் பூரண  மதுவிலக்கு வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய நலன் நாடும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களுக்கும் குரல் கொடுத்து வரும் நிலையில்,
 
மேலும் 280 மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும்,  இது தவிர எலைட் ஷாப் எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்கவுள்ளதாகவும், இவைகளில் பார் வசதியுடன் உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மதுவகைகள் விற்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
 
ஏற்கனவே பெட்டிக்கடைகள் போல் அரசின் மதுக்கடையான டாஸ்மாக் மலிந்து பரவிக்கிடக்கும் நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்துவது மக்கள் நல அரசுக்கு நல்லதல்ல. தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, இந்த குடி மூலம் அதே தாலி கீழே இறங்குவதற்கு காரணமாகவுள்ள மதுக்கடையை அதிகரிப்பது அநீதியாகும். நாட்டின் குடிமக்களை காக்க வேண்டிய அரசு 'குடிமகன்கள்' அரசாக மாறுவது அரசுக்கு நிரந்தர அவப்பெயரையே பெற்றுத்தரும் என்பதை ஆளும் அரசு உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழகத்தில்  அமுல்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற முதல்வர் முன்வரலாமே!

கட்டி கட்டியாக தங்கம்; கடவுளைக் காட்டி பயமுறுத்தும் மதவாதம்!

லக பணக்கார கடவுள்[?] என்று சொல்லப்படும் திருப்பதியாரையே திரும்பி பார்க்க வைத்தவர் பத்மநாப சுவாமி. தனது ஸ்தலத்தின் ரகசிய அறைகளில் தனது செலவுக்கு[?]கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை 
அடுக்கி வைத்தவர். ஒருவர் கோர்டில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் தான் பத்மநாப சுவாமி கோயிலில்  பதுக்கி வைக்கப்பட்டுவைகள் பட்டவர்த்தனமாக வெளியானது.  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், மரகத ஆபரணங்கள், நாணயங்கள், சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 அறைகளில் இவ்வளவு பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் 6-வது கடைசி அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆபத்து என்பதை, எச்சரிப்பதாக இந்தப் படம் இருக்கலாம் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின் அதனைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரகசிய அறையைத் திறப்பது தொடர்பாக திருவாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த ராம வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அந்த பாதாள அறையைத் திறக்க வேண்டாம் என்பதைக் குறிக்கும் வகையில்தான் அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அறையைத் திறந்தால் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அதனையும் மீறி திறக்க வேண்டுமென்றால், "தேச பிரசன்னம்' பார்க்க வேண்டும். அதன் பின்னரே அறையைத் திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திறந்த ஐந்து அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ஆபரணங்கள் அரசுக்கு சொந்தமா? அல்லது குறிப்பிட்ட வம்சத்திற்கு சொந்தமா என பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், ஆறாவது அறையில் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறதோ என உலகமே எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அறையை திறப்பதை தடுக்கும் நோக்கில்தான் மேற்கண்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். சின்ன பிள்ளைகள் எதாவது சேட்டை பண்ணினால் 'சாமி கண்ணை குத்தீரும்' என்று மாற்று மதத்தவர்கள் சொல்வதை பார்த்திருக்கிறோம். அதைபோல் அந்த அறையை திறக்காதீர்கள்; தெய்வ குற்றமாகிவிடும் என்று பயம் காட்டப்படுகிறது. அப்படி தெய்வத்திற்கு[?] கோபம் வருமென்றால் ஏற்கனவே ஐந்து அறைகள் திறக்கப்பட்டபோது வரவில்லையே ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா இது மூட நம்பிக்கை என்று?

பத்மநாப சுவாமி கடவுளென்றால் அந்த கடவுளுக்கு நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் குறைவின்றி நிறைவாக  நடந்து வரும் நிலையில், உபயோகமின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை சேமிக்க ஆசைப்படுவது ஏன்? அவைகளை ஏழைகளுக்கு வழங்குவதுதானே நியாயமாக  இருக்கும்? மேலும், அந்த கால அரசர்கள் அன்னியர்கள் படையெடுப்பால் தங்கள் நாட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பதுக்குவதற்கு பாதுகாப்பான இடமான கோயில்களில்  பதுக்கி இருக்கலாம். இந்த பத்மநாபா  சுவாமி கோயில் ஆபரணங்களும் அந்த வகையை சார்ந்ததா என்பதை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து அரசு கஜானாவில் சேர்க்க முயற்சிக்க  வேண்டும். அவைகளை ஏழைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த  வேண்டும் என்பதே பக்திக்கு அப்பாற்பட்ட நடுநிலை மக்களின் மன நிலையாக உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ளுமா?  

 

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்;
''முதல்வர் பதவியேற்றவுடன் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதல் வேலை என ஜெயலலிதா சூளுரைத்தார். கடந்த 60 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 60 கொலைகள், 120 வழிப்பறி கொள்ளைகள் மற்றும் 8 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்?

வியாழன், 21 ஜூலை, 2011

இதஜ மாநிலத் தலைமையகத்தில் ரமலான் தொடர் சொற்பொழிவு!


INTJ திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் மர்கசில் ரமலான் முழுதும் தொடர் சொற்பொழிவு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
INTJ திருவல்லிக்கேணி மர்கசில் வருகின்ற ரமலான் முழுதும் கடந்த ஆண்டுகளைப் போலவே இப்தார்  இரவுத்  தொழுகை கடைசி  பத்து  நாட்களில்  விடிய  விடிய நிகழ்சிகள்  ஏற்பாடு  செய்யப்  பட்டுள்ளது !  இதில்  ரமலான் முழுதும் சிறப்பு  சொற்பொழிவாக 
 அறியப்படாத சஹாபாக்களும்  
அவர்தம்  தியாக  வரலாறுகளும்  '
 எனும்  தலைப்பில்  சகோதரர்  செங்கிஸ்  கான்  உரை  நிகழ்த்துகிறார் .

இதைப்  போன்று  பெண்களுக்கான  இரவுத் தொழுகை மற்றும் சொற்பொழிவு சேப்பாக்கம்  ஆயிஷா  நசிர்  மதரசாவில்  நடை  பெற  உள்ளது. இன்ஷா அல்லாஹ்.

துபாய் சத்வா& அஸ்கான் பள்ளியில் INTJ நிகழ்ச்சி!

INTJ  மாநில நிர்வாகிகளின் துபாய் வருகையின் பொது   சத்வா  கிளை  சார்பில்  அங்குள்ள  பள்ளிவாசல்  ஒன்றில்    நிகழ்ச்சி நடை பெற்றது. எஸ்.எம்.பாக்கர் , செங்கிஷ்கான்  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் இளையான்குடி ஜாவித் , எ.எஸ்.இப்ராகிம் துபாய் மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் , முஹம்மத் மேலும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

INTJ அஸ்கான் கிளை சார்பில் இ.டி.எ .அஸ்கான் பள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் அழைப்பு பனி ஏன் எதற்கு ? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிரை ஜமால் , பொறையாறு ஜக்கரிய. மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் மற்றும் . செய்யத் சாஜித்  உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதன், 20 ஜூலை, 2011

குழப்பவாதியின் தூண்டுதலை அன்பால் முறியடித்த இதஜ தலைவர்கள்!

குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது! 

இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது ! 

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப் பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ் கான் கட்டுப்படுத்தி , அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா ?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார் ? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ் கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   சலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!

அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் 
மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.

கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! இன்ஷா அல்லாஹ்!           


குழப்பவாதியின் தூண்டுதலை அன்பால் முறியடித்த இதஜ தலைவர்கள்!

குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது! 

இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது ! 

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப் பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ் கான் கட்டுப்படுத்தி , அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா ?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார் ? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ் கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   சலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!

அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் 
மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.

கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! 
இன்ஷா அல்லாஹ்!           

ஞாயிறு, 17 ஜூலை, 2011

குவைத் intj நிர்வாக சீர்திருத்தம்...

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டல  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தேசியத் தலைவர் பாக்கர் தலைமையில், மாநிலப் பொருளாளர் அபூபக்கர் தொண்டியப்பா மற்றும் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோர் முன்னிலையில், அல் ஹயாத் ஹோட்டலில் வெள்ளியன்று [15 -07 -2011 ௦]சிறப்புடன் நடைபெற்றது.
 
பின்பு அமைப்பை சூழ்ந்துள்ள சதிகளை முறியடிக்கும் வகையில், அமைப்பை வீரியமாக கொண்டு செல்லும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு பின் வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
  • மண்டலத் தலைவர்/செய்தி தொடர்பாளர்; முகவைஅப்பாஸ்.
  • துணைத்தலைவர்;                  ஏ.கே. ஜாஹித் ஃபிர்தவ்ஸ்
  • செயலாளர்             ;                  புகாரி ஹசன்
  • பொருளாளர்           ;                  ராஜ் முஹம்மத்
  • துணைச்செயலாளர்கள்;         

முபாரக் பாஷா,   சாதிக்சதாம், மீரான், முஹம்மது சேட், அபுதாகிர்.

தொடர்புக்கு;

65653431 , 65120393 ,  97465872 , 97659759 , 65727633 ,

97102763 , 55890813 , 65731568

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

 
 


குவைத்தில் இதஜ'வின் நிகழ்ச்சி; தவ்ஹீதின் எழுச்சி!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
ளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வரலாறு காணாத  அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் கிளப்பிய அனலோடு, அவதூறுவாதிகளின் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பொறாமை அணல் மூச்சும் அணிசேர 50 டிகிரியை தாண்டியது வெப்பத்தின் அளவு.
 
இத்தகைய பொறமை அனலுக்கு  காரணம் என்ன? சுனாமி அலையையும் விஞ்சிய அவதூறு அலைகளில் இவர்கள் பதர்களைப் போல் அடித்து செல்லப்பட்டு  விடுவார்கள் என்று சிலர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி, இந்தியா-இலங்கை மட்டுமன்றி துபாய்-குவைத் என அரபகங்களிலும் ஆலவிருட்சமாய் இதஜ வளர்ந்து நிற்பதே இதற்கு காரணம்.
 
இந்நிலையில் குவைத் மண்டலம் சார்பாக இதஜ தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் இருவர் பங்கேற்கும் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி முறையே ஜூலை 14 -15 -16 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்று நினைத்த சில குறுமதியாளர்கள்,  நிகழ்ச்சிக்காக  ஒட்டப்பட்ட பிரசுரங்களில் பெரும்பகுதியை கிழித்தார்கள்.  எத்தனையோ மார்க்க விரோத நிகழ்ச்சிகள் குறித்த நோட்டீஸ்களை கண்டுகொள்ளாத இவர்கள், தவ்ஹீத் பிரச்சார நிகழ்ச்சி நோட்டீசை கிழித்தெறிந்ததன் மூலம் தங்களின் தவ்ஹீத் முகமூடியையும் கிழித்துக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 
இதற்கிடையில், 14 ம்  தேதி வியாழன்று மாலை ஆறு மணி அளவில் குவைத் விமான நிலையம் வந்திறங்கிய தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநில பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோரை வரவேற்ற மண்டல நிர்வாகிகள், அவர்களுக்கு ஓய்வளிக்க விரும்பாமல் நேரடியாக நிகழ்ச்சியின் களத்திற்கு கொண்டு வந்தார்கள்.
 
முதல் நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள மண்ணு-சல்வா உணவகத்தின் முதல் தளத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின்  மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையேற்க, மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ அவர்களின் முதல் உரையுடன் தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். அவர்கள் தங்களின் உரையில், ''எங்களது தாஃவா இலக்கு என்பது முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதே. திருமறையை சேர்ப்பிப்பதே. அந்த தாஃவா களத்தில் எங்களுக்கு போட்டியாக எவரும் இல்லை கிறிஸ்தவர்களை தவிர. எனவே அவதூறுகள் குறித்தெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை'' என்று முத்தாய்ப்பாக முன்வைத்தார்கள்.
 
நிகழ்ச்சியில் ஐந்து பேர் கலந்து கொண்டாலே அதிசயம் என்று ஆணவம் பேசியவர்களின் முகத்தை கறியை பூசும் வகையில் அரங்கம் நிறைந்ததோடு, மக்கள் நிற்கும்  அளவுக்கு அல்லாஹ் மக்களை கொண்டுவந்தான். இறுதியாக மண்டல துணைச்செயலாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் முதல்நாள் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
 
இரண்டாம் நாள் 15 ம்  தேதி வெள்ளிக்கிழமை 'சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதய விழிப்புணர்வு கருத்தரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள ஷாலிமார் உணவகத்தின் முதல் தளத்தில் மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில், மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது.
 
ஆரம்பமாக KIFF அமைப்பின் பிரதிநிதி அப்துல் அஜீஸின் உரையை தொடர்ந்து, தமுமுக பொதுச் செயலாளர் முஜிபுர்ரஹ்மான், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ, தமிழ்முஸ்லிம் கலாச்சார பேரவையின் காப்பாளர் முஹம்மது பாரூக் ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து தேசியத்தலைவரின் சிறப்புரையுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பின்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
இந்நிகழ்ச்சியிலும் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டதோடு, இடமின்றி திரும்பி சென்றனர். பெண்களுக்கு தனி இடம் உண்டு என நாம் அறிவிக்காத நிலையிலும் பெண்கள் சிலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
 
மூன்றாம் நாள் நிகழ்ச்சி 16 ம் தேதி ஷுஹதா பகுதியில் அமைந்துள்ள யூசுப் அல் கலீபி மஸ்ஜிதில் மண்டல துணைச்செயலாளர் மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் அபூபக்கர் மற்றும் செங்கிஸ்கான் உரையாற்றினர். இப்பகுதி தமிழ் சகோதரர்கள் கணிசமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளின் இதர நிகழ்வுகள்;
  • ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், சுளைபிஹாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அடக்கஸ்தலம் சென்ற நிர்வாகிகள்,  அங்கு ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர்.
  • 16 ம் தேதி மதியம் 2 மணி அளவில் குவைத்தில் இயங்கும் தமிழ் முஸ்லிம் கலாச்சார பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இதஜ நிர்வாகிகளுக்கான கவுரவிப்பு நிகழ்ச்சியில் தேசியத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பாக்கர் உரையாற்றினார்.
  • 15 ம் தேதி நடைபெற்ற இதஜ'வின் கருத்தரங்கில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  1. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும்.
  2. குவைத் இந்திய தூதரகத்தில் தமிழில் வழிகாட்டியை நியமிக்கவேண்டும். அதோடு தமிழில் அறிவிப்பு பலகைகள் இடம்பெற செய்யவேண்டும்.
  3. சிறிய குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு இந்திய வெளியுறவுத் துறையும்- குவைத் தூதரகமும் முயற்ச்சிக்க வேண்டும்.
  4. ஒப்பந்தப்படி இந்திய பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பதை இந்திய தூதரகம் நேரடியாக கம்பெனிகளுக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும்.
  5. மத்திய அரசு உடனடியாக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
  6. தமிழகத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும்.
  7. தமிழகத்தில் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்க காவல்துறையில் தனிப் பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
  8. தமிழகத்தில் முஸ்லிம் அமைச்சர்களை அதிகப்படுத்த வேண்டும்.
  9. இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும்.
  10. பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பளித்து, இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதோடு அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும்.
-முகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ-குவைத்.





















 

ஞாயிறு, 10 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;.   (3:110)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
 
நாள்; 16 -07 -2011 சனிக்கிழமை  மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்]
இடம்;  மஸ்ஜித் யூஸுப் அல் கலீபி.
சாரா- 1 , கத்தா- 4 .
புதிய மக்பர் மற்றும் புதிய ஜம்மிய்யா அருகில்,
ஷுஹதா ஏரியா.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள்.  மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள். மாநிலச்செயலாளர் இதஜ.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக!                                                                 அல்லாஹ்வின் அருள் பெருக!! 
 
அழைப்பின்  மகிழ்வில்;   جمعية التوحيد-الهند‎ ‎
இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; தொடர்புக்கு; 65653431,97659759 ,65120393 ,
97102763 ,97465872 ,55890813 .

வெள்ளி, 8 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;.   (3:110)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
[முதல் நாள் நிகழ்ச்சி]
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
 
நாள்; 14 -07 -2011 வியாழக்கிழமை மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்] இடம்; மண்ணுசல்வா உணவகம் முதல்தளம். மிர்காப்.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள்.  மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள். மாநிலச்செயலாளர் இதஜ.
சகோ; அப்துல்காதிர் மன்பஈ.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
[இரண்டாம் நாள் நிகழ்ச்சி]
மாபெரும் சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
 
நாள்; 15 -07 -2011 வெள்ளிக்கிழமை  மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்]
இடம்; நியூ ஷாலிமார் உணவகம் முதல்தளம். [ரவுண்டானா மஸ்ஜித் அருகில்] மிர்காப்.
 
உரையாற்றுவோர்;
 
சகோ; அப்துல்காதிர் மன்பஈ. அவர்கள்- அழைப்பாளர் இஸ்லாமிய வழிகாட்டி மையம்.
தலைப்பு; மதுவும்-சூதாட்டமும்.
 
சகோ; முஹம்மது பந்தர் R . முஹம்மது பாரூக் அவர்கள்- காப்பாளர் TMCA  மற்றும்  தலைவர் காயிதே மில்லத் பேரவை. 
தலைப்பு; வட்டியும்- சுரண்டலும்.
 
சகோ; அப்துல் அஜீஸ் அவர்கள்- KIFF
தலைப்பு; ஆபாசமும்-விபச்சாரமும்.
 
சகோ; முஜிபுர்ரஹ்மான் அவர்கள்- பொதுச்செயலாளர் தமுமுக.
தலைப்பு; லஞ்சமும்-ஊழலும்.
 
இவர்களுடன் சகோ; எஸ்.எம். ஹைதர்அலி அவர்கள். சேர்மன் டிவிஎஸ் கார்கோ.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள் மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள்.  மாநிலச்செயலாளர் இதஜ.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக!                                                                 அல்லாஹ்வின் அருள் பெருக!! 
 
அழைப்பின்  மகிழ்வில்;   جمعية التوحيد-الهند‎ ‎
இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; தொடர்புக்கு; 65653431,97659759 ,65120393 ,
97102763 ,97465872 ,55890813 . 


__._,_.___

வெள்ளி, 1 ஜூலை, 2011

'அவன்-இவன்' பாலா மீது மீண்டும் புகார்.

மீபத்தில் வெளியான, "அவன் இவன்' படத்தில்,
குர்பானி கடமையை இழிவுபடுத்திய இயக்குனர் பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம், தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலர் சீனி அகமது, நகர் தலைவர் ஜெய்லானி ஆகியோர் கடந்த 27 ம் தேதி புகார் மனு அளித்தது நினைவிருக்கலாம்.

இப்போது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனரிடம்  கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

 
சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.  
 
எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

குவைத் இதஜ'வின் வாராந்திர பிரசுரம்! [01-07-2011]