வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

என் படத்தையும்(டேம் 999) வெளியிட அனுமதிக்க வேண்டும்; இயக்குனரின் நியாயமான கோரிக்கை!

"விஸ்வரூபம் திரைப்படத்தின் தடை நீக்கம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டதால் என் படத்தையும் வெளியிட வேண்டும்" என்று 'டேம் 999' பட இயக்குனர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சட்ட ஒழுங்கு காரணமாக தமிழக அரசு தடை விதித்திருந்த விஸ்வரூபம் திரைப்படம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டு நேற்று வெளியானது. இந்த நிலையில் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை உச்சகட்ட பதட்டத்துடன் நடந்துகொண்டிருந்த போது வெளிவந்த 'டேம் 999' படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. அப்போதும் 'சட்டம் - ஒழுங்கு' பாதிக்கப்படும் என்று காரணம் முன் வைத்து தமிழக அரசு தடை வாங்கியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேம் 999 பட இயக்குனர் சோஹன் ராய், " சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறி டேம் 999 படத்திற்கு தடை வாங்கினார்கள். இப்போது கமல் படத்திற்கும் அதே காரணத்தால் தடை கேட்டு பிறகு தடையை நீக்க சம்மதித்து விட்டார்கள். இப்போது என் படம் தமிழகத்தில் தடை செய்யப் பட்டதால் எனக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே என் படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடையயும் தமிழக அரசு நீக்க வேண்டும்" என்று இயக்குன சோஹன் ராய் கூறியுள்ளார்.


Read more about www.inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக