வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் . நிரந்தரமா தடை பண்ண வேண்டிய படம்…

விஸ்வரூபம்


வாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி. சேகர் என்ற நண்பர் எழுதியது:

கடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை..

அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம்..

அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது.

தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை.. எனக்கு வேறு வழியில்லை..

என்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் வாங்கிட்டார், நம்ம 50 வருஷமா குட்டிக்கரணம் அடிச்சும், குரங்கு வேஷம் போட்டும் வாங்கமுடியலையேன்னு தனியா உட்கார்ந்து கமல் யோசிச்சிருப்பார் போல..

அமெரிக்காகாரனை எது பண்ணா இம்ப்ரெஸ் ஆவான், எதுக்கு அவன் ஆஸ்கர் கொடுப்பான்…அவனுக்கு இருக்கிற ஒரே ப்ரச்னை தாலிபான் மற்றும் அதன் தீவிரவாதம்.அதுலேருந்து அவனையும் அமெரிக்காவையும் காப்பாத்தற மாதிரி படம் அடுத்தா அவன் இம்ப்ரெஸ் ஆவான். சரி அதுக்கு எப்படி கதை தயார் பண்றது.

எப்படி இந்தியாவுக்கும் தாலிபானுக்கும் முடிச்சு போடறது..? ஒரு இந்தியனா நம்ம எப்படி அமெரிக்காவை காப்பாத்த முடியும்..?

அதுக்கு ஒரு இந்தியன் தாலிபானுக்கு தற்செயலா போய் விக்ரம் பட ஸ்டைல அங்க நடக்கிறதை கண்டுபிடிச்சு உளவு சொல்ற மாதிரி வைக்கலாம்.. ஓகே. காஸ்மீர் தீவிரவாதியா போகலாம். லாஜிக்கும் செட் ஆகும்..

நடுநடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, அவங்க பண்ற கொடும்தண்டனை முறைகளையும் அவங்ககிட்ட இருக்கிற பழமைவாததனத்தையும் காட்டலாம்.. ஓகே..

இதுக்கு நம்ம ஊர் முஸ்லிம் மக்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?? அது யாருக்கு வேணும்.. அதான் உன்னைபோல ஒருவன்லேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டாச்சுல்ல.. அதே மாதிரி இதிலேயும் தப்பிச்சுக்கலாம்..

100கோடிக்கு மேல இருக்கிற நம் நாட்டில் சகோதர பாசத்தோட பழகுற நம்ம முஸ்லிம் மக்களின் கோபம் பெரிதா, இல்லை ஆஸ்கர் பெரிதா.?
எனக்கு ஆஸ்கர்தான் பெரிதென்று கமல் முடிவு பண்ணிட்டார் போல..!

சரி உலகத்தில நடக்கிறத்தான படத்தில வைக்கிறேன்.. சரி வைங்க.. அதை எதுக்கு இந்தியாவில ரிலிஸ் பண்றீங்க..

எங்கோ உலகத்தின் மூலையில சில லட்சம் சொச்சத்தில இருக்கிற ஒரு காட்டுமிராண்டி கூட்ட்த்தைப்பத்தி படம் எடுத்து 16 கோடிக்கு மேல இருக்கிற இந்தியாவில ஏன் ரிலீஸ் பண்ற..?

அமெரிக்காவில எடுத்து அங்கயே ரிலிஸ் பண்ண வேண்டியதுதான…?

படம் பார்த்துட்டு போற எல்லாருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சிட்டு நடந்து போறவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்தில இருக்கு..

போதும்.. இதுக்கு மேல நெகடிவ் விளம்பரம் பண்ண விரும்பலை..

விஸ்வரூபம் . நிரந்தரமா தடை பண்ண வேண்டிய படம்…

போங்கடா…போய் புள்ளைக்குட்டிங்களை படிக்க வைங்க..மதக்கலவரத்தை தூண்டாதீங்க..

15 வருஷமா பழகிட்டுருந்த முஸ்லிம் நண்பனை இந்த பட்த்துக்காக பகைச்சிக்கிட்ட்துதான் மிச்சம்.. ஸாரி நண்பா. மன்னிச்சுடு..

source;http://charuonline.com/blog/?p=177

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக