சனி, 2 பிப்ரவரி, 2013

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 3 வது கலந்தாய்வுக் கூட்டம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 3 வது  கலந்தாய்வுக் கூட்டம் 3.01.2013 அன்று மிர்காப்பில் உள்ள மண்ணு சல்வா உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஜமாத்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமர்வில் ததஜ அமைப்பின் சார்பிலும் இஸ்லாமிய தாவா செண்டர் சார்பிலும் தலா ஒரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டமைப்பில் அலசப்பட்ட கருத்துக்களை அவதானித்த அவர்கள், தங்களின் தலைமையிடம் கலந்து பேசி, கூட்டமைப்பில் இணைவது  பற்றி தெரிவிப்பதாக கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்த அமர்வில் கூட்டமைப்பிற்கான பொது செயல்திட்டம் வரையறுக்கப்பட்டு நிரந்தர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் போல இங்கும் வலுவான கூட்டமைப்பாக இது திகழ பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவன்;
குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக