வெள்ளி, 10 ஜூன், 2011

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!

ட்டமியற்றும் அவையான சட்டமன்றத்தில் சமுதாயத்தின்  குரல் எதிரொலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி, தேர்தல் களப்பணியாற்றி மமக மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்டது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். அந்தவகையில் சட்டமன்ற மமக கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமுதாயத்தின் குரலை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.
 
வியாழன்று சட்டசபையில்  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவர் பேசியது:

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

 இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.

 திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார். அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.
தொடர்ந்து பேராசியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். 
 
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் சட்டமன்றப் பணியை பாராட்டும் அதே வேளையில், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்துவது  பற்றி  அவர் பேசியதாக செய்திகள் வெளியாகாதது  சற்றே வருத்தமளிப்பதாக
உள்ளது. எனினும் வருங்காலத்தில் இன்னும் வலுவாக சமுதாயத்தின் கருத்தை பதிவு செய்வார் என நம்புகிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக