திங்கள், 6 ஜூன், 2011

மக்களுக்காக அதிகாரிகளை தேடிச்செல்லும் எம்.எல்.ஏ.,

ரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் சுந்தர்ராஜ். இவர் தனது தொகுதிக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும், அரசு திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய வேண்டும், மக்களும் அரசு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவாய், மின்சாரம், பொதுப் பணித்துறை போன்ற அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்கிறார். அவரது இந்த அணுகுமுறை அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல தன்னை நாடி வரும் மக்களிடமும் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரைகளை கடைபிடித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பொதுமக்கள் அவர் மீது நம்பிக்கையுடன் உள்ளனர்.  

நன்றி;தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக