வெள்ளி, 4 நவம்பர், 2011

மரியம் பிச்சையின் மகன் திருச்சி மாநகராட்சி துனைமேயர்.

றைந்த மரியம்பிச்சை வென்ற திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் மரியம்பிச்சையின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாற்றமாக சம்மந்தமில்லாத ஒருவரை நிறுத்திய ஜெயலலிதாவின் செயல் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிய நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சியின், 27வது வார்டில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பளித்தது. தேர்தலில் ஆசிக் மீரா வெற்றி பெற்று, கவுன்சிலராகவும் பதவியேற்றார். ஆசிக் மீராவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தது அதிமுக.  திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள, 65 கவுன்சிலர்களில், 42யை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், துணைமேயர் பதவிக்கு போட்டியின்றி ஆசிக் மீரா தேர்ந்தேடுக்கப்பட்டார். ஆசிக் மீரா துணை மேயரானத்தின் மூலம் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வு மறையும் என முதல்வர் கருதுகிறாரோ?
 


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக