சனி, 10 செப்டம்பர், 2011

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல்குரு கடும் கண்டனம்

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து,  பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவரது அறிக்கையில்,  ''டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது...' என்று கூறியுள்ளார்.

அப்சலின் அறிக்கையை படிக்கும் போது, தீவிரவாதத்தையோ, அப்பாவிகள் கொல்லப்படுவதையோ  அவர் விரும்பக்கூடியவர் அல்ல என்பதை உணர்த்துகிறது. ஆயினும் அவர் நாடாளுமன்றத் தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளியாக கருதப்படுகிறார். அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு பற்றிய தனது தீர்ப்பின் போது உச்சநீதிமன்றம், ''மரணதண்டனை விதிக்கப்பட்டால் தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்'' என்று கூறித்தான் அப்சலுக்கான மரணதண்டனையை உறுதிப்படுத்தியதேயன்றி, அப்சலுக்கெதிரான  வலுவான சான்றுகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் உலகறியும். எனவே உண்மை எல்லா நேரமும் உறங்காது. உண்மை ஒருநாள் விழிக்கும்; அப்போது உண்மைக் குற்றவாளிகள் உலகின் பார்வையிலிருந்து மறையமுடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக