திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ராமதாஸ் வழியை கட்சிகள் கடைபிடிக்கலாமே?

ரு காலத்தில் பண்டிகை காலங்களில் மட்டும் வெடித்த பட்டாசுகள் பின்னாளில்  அரசியல்வாதிகள் கைக்கு மாறி, மாநில முதல்வர் முதல் ஏரியா கவுன்சிலர் வரை வரவேற்புக்கு அச்சாரமாக ஆகிவிட்டது. தமது தலைவரை வரவேற்க பல மீட்டர் நீளம் உள்ள சரவெடிகளை தொண்டர்கள் வெடிக்கச்  செய்கிறார்கள். இதனால் அப்பகுதி குப்பை கூளமாக காட்சியளிப்பதுடன், காற்றும் மாசுபட்டு மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாக ஆகிவிடுகிறது. ஆனால் தொண்டர்களோ- தலைவர்களோ இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் பாமக நிறுவனர்  ராமதாஸ் சற்றே வித்தியாசமாக பட்டாசு வெடித்த தனது கட்சியினருக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
 
பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ராமதாசை கட்சி நிர்வாகிகள்
பட்டாசுகளை வெடித்து வரவேற்றுள்ளனர். "பட்டாசுகளை வெடித்து, காசை கரியாக்கியது யார்?' எனக் கேட்ட ராமதாஸ்,  "பட்டாசு வெடித்ததற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் தான் கூட்டத்தில் பேசுவேன்' என கூறி, அதை பெற்றுக் கொண்ட பிறகே அவர் கூட்டத்தில் பேசினார் என்று செய்திகள் கூறுகின்றன.
 
ராமதாசின் இந்த கடுமையான நடவடிக்கை அவரது கட்சியினரை பக்குவப் படுத்தும். இனிமேல் பட்டாசு வெடிப்பதிலிருந்து அவர்களை தடுக்கும். இதே வழிமுறையை மற்ற கட்சிகள் பின்பற்றி காசைக் கரியாக்கும் செயலை தடுக்கலாமே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக