செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மத்திய அமைச்சர் ரங்கசாமியுடன் INTJ நிர்வாகிகள் சந்திப்பு!

டந்த 6 ந் தேதி பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் ஐ.என்.டி.ஜே நிர்வாகிகளான தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணைத்தலைவர் முஹம்மது முனீர், பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக், மாநிலச்செயலாளர் அபு பைசல், மற்றும் புதுவை ஐ.என்.டி.ஜே நிர்வாகிகளான ஜாபிர், பீர் முஹம்மத் ஆகியோர் சந்தித்து மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மதக்கலவர சட்ட மசோதாவிற்கு ஜமாத்தின் ஆதரவை தெரிவித்ததோடு, அச்சட்டத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர். மேலும் ரங்கநாத் மிஸ்ரா  கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு  வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கையையும் முன்வைத்தனர். 
அனைத்தையும் கவனமாகக் கேட்ட அமைச்சர் நாராயண சாமி, பிரதமரிடத்தில் ஐ.என்.டி.ஜே வின் கோரிக்கைகள் குறித்து எடுத்துச் சொல்வதாக உறுதியளித்தார்.அவரிடமிருந்து விடை பெறுவதற்கு முன்..அவருக்கு தேசியத் தலைவர் எஸ்.எம்.  பாக்கர், திருக்குரான் தமிழாக்கத்தை வழங்கினார்.அதை மகிழ்வோடு மத்திய அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக