கர்நாடக சட்டப் பேரவையில் சிந்தகி வட்டத்தில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஆளும் பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாச காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் என்ற செய்தி நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு ஊடகங்களிலும் இந்த அசிங்கம் வெளியாகி இந்தியாவின் மானம் இந்த போலி தேசபக்தர்களால் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் மட்டமான ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் குறைந்த பட்சம் பொதுமக்கள் மத்தியிலாவது தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்ள முயற்சிப்பான். ஆனால் இந்த மதவாத பாஜக அமைச்சர்களோ பொது இடத்தில் அதுவும் சட்டமன்றத்தில் சரசக் காட்சியை ரசிக்கிறார்கள் என்றால் இவர்களை விட கேடுகெட்ட ஒரு கூட்டம் உண்டா? இந்த லட்சணத்தில் கொஞ்சம் கூட உறுத்தல் இன்றி, ''கர்நாடக சட்டசபையில் அமைச்சர்கள் மூன்று பேர், ஆபாசப் படத்தை பார்த்ததோடு நிறுத்தி கொண்டார்களேயொழிய, வேறு எந்த வகையான தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்று கோவா மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., தலைவருமான மனோகர் பரிக்கர் வக்காலத்து வாங்கியுள்ளார். இவர்கள் தான் தேசபக்தர்களாம். மக்கள் விழித்துக் கொண்டு இதுபோன்ற காவிக்கறையோடு, ஊழல், ஆபாசக் கறைகளையும் கொண்ட இந்த 'ஆக்டோபஸ்' கட்சிகளை புறந்தள்ளுவது நாட்டிற்கு நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக