ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

எங்களுக்குத் தெரியாமல் கண்காணிப்புக் குழு தலைவரை நியமிப்பதா? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் சாட்டையடி!


புதுடில்லி, பிப்.25- குஜராத்தில் நடந்த 22 மோதல்கள் (என்கவுன் டர்கள்) தொடர்பான விசாரணையை கண்காணிப்பதற்காக அமைக் கப்பட்ட குழுவுக்கு, எங்களை ஆலோசிக்காமல், புதிய தலைவரை நியமித்தது ஏன்?' என, அம் மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில் 2002 - 2006 வரையிலான காலத்தில், காவல்துறை யினரால் 22 மோதல்கள் நடத்தப்பட்டன. இவை போலி மோதல்கள் என புகார் தெரிவிக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான கண்காணிப்புக்குழு அமைக் கப்பட்டது.

இந்நிலையில், தன் உடல் நிலையைக் காரணம் காட்டி, கண்காணிப்புக் குழுவில் தொடர முடியாது என, நீதிபதி ஷா, சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்றம் முன் னாள் நீதிபதி கே.ஆர். வியாஸ் என்பவரை, கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமித்து, குஜராத் அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப் பித்தது.

இதற்கிடையே, குஜ ராத்தில் நடந்த மோதல் கள் (என்கவுன்டர்கள்) குறித்து, சி.பி.அய்., அல்லது தனி அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, மூத்த செய்தியாளர் பி.ஜி.வர்கீஸ், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் ஆகியோர், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் அப் தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோரைக் கொண்ட பெஞ்ச், இந்த மனுக் களை விசாரித்தது.

அப்போது நீதிபதி கள் கூறியதாவது: குஜராத் மோதல்கள் தொடர்பான வழக்கு,  விசாரணைக்கு வரும் என உங்களுக்கு (குஜ ராத் அரசு தரப்பு வழக்கறிஞர்) தெரியும். அப்படியிருந்தும், கண்காணிப்புக் குழுவுக்கு, புதிய தலைவரை நியமிப்பது குறித்து, எங்களுக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? எங்களை ஆலோசிக்காமல் புதிய தலைவரை எப்படி நியமித்தீர்கள்? இந்த விவகாரத்தை தேவையில்லாமல் சிக்கலாக்கியுள்ளீர்கள். புதிய தலைவரை நியமிப் பதற்கு முன், உச்சநீதி மன்றத்தை  அணுகியிருக்க வேண்டும். இதனை எங்களின் கவனத்துக்குக் கொண்டு வராதது ஏன் என்றனர்.

குஜராத் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறுகையில், கண்காணிப்புக் குழு வின் இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்றம், கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, புதிய தலைவரை நியமிக்கும் உத்தரவு, அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது' என்றார். குஜராத் அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், வரும் 27ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

நன்றி;விடுதலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக