சனி, 2 ஏப்ரல், 2011

குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இதஜவின் இரத்ததான முகாம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அணியணியாய் அணிவகுத்துவந்த அவதூறு அலைகளை வென்று, அல்லாஹ்வின் அருளால் அரபகங்களிலும் தடம்பதித்துள்ள  நமது இந்தியதவ்ஹீத் ஜமாஅத்தின்  குவைத் மண்டலம் சார்பாக  01 -04 -2011 வெள்ளிக்கிழமையன்று  இரத்ததான முகாம் சிறப்புடன் நடைபெற்றது. ஜாப்ரியா இரத்தவங்கியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் துணைத்தலைவர் புஹாரிஹசன் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நமது அமைப்பின் ஆதரவாளர் மும்பையை சேர்ந்த சகோதரர் ஷாஹித் அன்ஸாரி அவர்கள் இரத்தம் தந்து முகாமை தொடங்கி வைத்தார்கள். இரு முஸ்லிமல்லாத சகோதரர்கள் உள்ளிட்ட 57 சகோதரர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள். இறுதியில் குருதிகொடை வழங்கிய முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஜாஹித் அன்ஸாரி அவர்கள் மூலம்  திருக்குர்ஆன் பரிசளிக்கப்பட்டது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
-அன்புடன் முகவைஅப்பாஸ்,
மண்டலத் தலைவர் இதஜ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக