வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்-இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள்

ராமநாதபுரம்,ஏப்.8
தமிழகத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தவ்ஹீது ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தவ்ஹீது ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
துணை ராணுவ படை
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் அ.தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழக போலீசாரை தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கி விட்டு முழுவதுமாக துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும்.
கலவரம் ஏற்பட்டால் கண்டதும் சுட அதிகாரம் வழங்க வேண்டும். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அவர் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். தேர்தல் ஆணையம் தற்போது தான் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியுள்ளது.
வருகிற 13ந்தேதி வன்முறையின் உச்சக்கட்டம் தமிழகத்தில் கட்ட விழ்த்து விடப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடைய சாதிக்பாட்சா வழக்கில் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்தான் முக்கிய காரணம். உளவுத்துறை ஆளும் கட்சிக்கு அரசு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.
மழைநீர் சேமிப்பு
ஆனால் ஆளும் கட்சியாகவே செயல்பட்டதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது போல சோலார் மின் திட்டத்தையும் செயல்படுத்துவார். தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் முசம்மில்ஹார், மாவட்ட செயலாளர் இம்பாலா அலா வுதீன், மாநில செயலாளர் முகைதீன் ஆகியோர் உடனி ருந்தனர்.
 
நன்றி;தினமலர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக