வெள்ளி, 29 ஏப்ரல், 2011

'ஆள் இல்லா வீட்டில் திருடுவான் திருடன்; ஆள் இல்லா விமானம் மூலம் அப்பாவிகள் உயிரை திருடுகிறது அமெரிக்கா.

ப்கானிஸ்தான் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் ஆக்கிரமிப்பு போர் நடத்திய வேளையில், ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் தந்தவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த, ஆப்கனிஸ்தான் எல்லையை ஒட்டிய வசிரிஸ்தான் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள். பொறுக்குமா அமெரிக்காவுக்கு..? இந்தப்பகுதியில் தாலிபான் மற்றும் அல்-காயிதாவினர் பதுங்கியிருக்கிறார்கள் என்று புருடாவிட்டு அவ்வப்போது இப்பகுதிமீது தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா.

கடந்த 2008 ம் ஆண்டுமட்டும் சுமார் 30 ஏவுகணை தாக்குதலை இப்பகுதியில் அமெரிக்கா நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இப்பகுதிகளில் தாக்குதலை நடத்த தவறவில்லை அமெரிக்கா. இத்தாக்குதல்களில் பலர் பல்வேறு காலகட்டங்களில்  கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் 22 -4-2011 அன்று  அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நேற்று குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசின.
இரண்டு விமானங்கள் மூலமாக 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுனர்.. அதில் 3 பேர் பெண்கள். இந்த தகவலை, பாகிஸ்தானின் உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட பகுதியில் அமெரிக்கா கூறுவது போன்ற தீவிரவாதிகள் இருந்தாலும், பாகிஸ்தான் மூலம் நடவடிக்கை எடுப்பதுதான் நியாயமானது. நியாய/ அநியாயங்கள் அமெரிக்காவிற்கு பொருந்தாது என்பதுபோல் எந்த நாட்டின்மீதும் நினைத்த நேரத்தில் தாக்குதல் நடத்துவதும், அதை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன் என புரியவில்லை. 'ஆள் இல்லா வீட்டில் திருடுவான் திருடன்; ஆள் இல்லா விமானம்  மூலம் அப்பாவிகள் உயிரை திருடுகிறது அமெரிக்கா. ஒருபுறம் பாகிஸ்தானை நேச நாடாக கைகுலுக்கிக் கொண்டு, மறுபுறம் மறைமுக போர் தொடுக்கும் அமெரிக்காவின்  செயல், அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் சிந்தனை மாறாது என்பதுபோல் உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக