பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மரணப்படுக்கையில் போராடும் கோவை சிறைவாசி அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி குவைத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் !!!
அபுதாஹீரின் பரோல் ஆணைக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவரை உடனடியாக பரோலில் விடுமாறு மாநில தலைமைச் செயலா ளருக்கும் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தமிழக அரசு அபுதாஹீரின் விசயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் தமிழக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் அபூதாஹீரை மனிதநேய அடிப்படையிலும் சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையிலும் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறன்றன. அந்த வரிசையில் அபுதாஹீரின் விடுதலை வேண்டி கடல் கடந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 11-01-2013 வெள்ளியன்று குவைத் தலைநகர் மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில், மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அரங்கத்தில் வைத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், tmmk&mmk இஸ்லாமிய மாணவர் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, காயிதே மில்லாத பேரவை, இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் இந்தியா பிரண்டிநிட்டி ஃபார்ம், ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
கலந்து கொண்ட ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளும் அபுதாஹிரை விடுதலை செய்யவேண்டும், அதற்காக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி, தமிழக அரசை வலியுறுத்தி பல வீரியம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்காக குவைத்தில் இருக்கும் தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள் தாங்கள் சார்ந்து இருக்கும் அமைப்பு மற்றும் கட்சிகளை வலியுறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது,
அதை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஈமெயில் அல்லது FAX அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக