சனி, 8 அக்டோபர், 2011

குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

 குஜராத்தில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடு முழு வதும் உள்ள மக்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த துடன் போராட்டங்கள், தர்ணாக்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு.

மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார்.

குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என் றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், தங்களுக்கு எதிரான நபர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய் யும் பாரதிய ஜனதாவின் தத்துவார்த்தத்தை  நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

ஓய்வு பெற்றகுஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.சிறீகுமார் கூறு கையில், குஜராத்தில் மோடி அரசின் நட வடிக்கை மிக மோச மான வன்கொடுமை ஆகும். 2002 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னர் மோடி அரசு காவல்துறை உள்பட அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக 2 ஆவது சாட்சி நபராக சந்தீப்பட் உள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் ஆதார மாகத் திகழ்ந்தவரான ஹரன் பாண்ட்யா என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. 

நன்றி; விடுதலை 08 அக்டோபர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக