வெள்ளி, 14 அக்டோபர், 2011

காவலரை மிரட்டும் காவி சு.சாமி


முஸ்லிம்களுக்கு எதிரான மததுவேஷ கருத்துக்களை உதிர்த்த அரசியல் கோமாளியும், காவி சிந்தனையாளருமான ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி
மீது கடந்தவாரம் மதஉணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
 
வழக்கமாக அடுத்தவர் மீது உப்புச் சப்பில்லாத வழக்குகளை தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி, ''நல்ல பாத்துக்கங்க; அரசியலில் நானும் இருக்கேன்''' என காமெடி செய்துவரும் இந்த சு. சாமிக்கு தன் மீதே வழக்கு போடப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீது வழக்கு பதிவு செய்த டில்லி போலீசாரை மிரட்டும் வகையில், ''என் மீது டில்லி போலீசார் போட்ட வழக்கின் நகலி என்னிடம் இன்னும்  தரவில்லை.நகல் கிடைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
 
சு.சாமியின் இந்த மிரட்டலை, போலீசைத் தானே மிரட்டியுள்ளார் என்று சட்டம் சும்மா இருக்குமானால், நாளை இவர் நீதிமன்றத்தையும் மிரட்டினாலும் ஆச்சர்யமில்லை. எனவே இவர் போன்ற மததுவேஷ புல்லுருவிகள் மீது  சட்டம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக