வியாழன், 13 அக்டோபர், 2011

சாட்சிகளை மிரட்டிய சங்கராச்சாரி...???

சங்கரராமன் கொலை வழக்கில்

ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி அளித்தேன்

தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்
சென்னை, அக்.13
ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலை வழக்கில் முரண் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தேன் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவரது மனைவி மனு கொடுத்துள்ளார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கரராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வழக்கை புதுச்சேரி செசன்சு கோர்ட்டு விசாரித்து வருகிறது. சாட்சி விசாரணையில் பலர் முரண் சாட்சி (பல்டி) அளித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கோர்ட்டின் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேரம் பேசியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு சங்கரராமனின் மனைவி பத்மா மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:&
2009&ம் ஆண்டில் சாட்சி விசாரணைக்காக என்னை புதுச்சேரி கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். Ôசங்கரராமனை பார்த்து பேச வேண்டும்Õ என்று கொலைக்கு முந்தைய நாள் என் வீட்டுக்கு வந்து விசாரித்த சிலரை நான் கோர்ட்டில் அடையாளம் காட்டினேன். சாட்சி சொல்லிவிட்டு மதிய உணவுக்காக அமர்ந்திருந்தேன்.அப்போது 3 பேர் என்னிடம் வந்தனர். உண்மையை பேசினால் உனது மகன், மகளை ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்து விடுவோம். அவர்களின் உடல் கூட உனக்குக் கிடைக்காது என்று மிரட்டினர். பின்னர் மதியத்துக்கு மேல் நடந்த குறுக்கு விசாரணையில் உண்மையை சொல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் முரண் சாட்சியாகிவிட்டது. இதுபோல்தான் பணம் கொடுத்தும், மிரட்டியும் பலர் முரண் சாட்சி அளித்துள்ளனர். எனது மருமகனும் மிரட்டப்படுகிறார். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நன்றி; தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக