வியாழன், 6 அக்டோபர், 2011

''என்னையும் கொன்றிருப்பார்கள்;புறமுதுகிட்டு ஓடிய யோகா புலம்பும் அவலம்.

ழலுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் என்று சரடு விட்டு ஒரு போராட்டத்தை தொடங்கிய ராம்தேவ், நாட்டுக்காக  உயிரை துறக்கும் அளவுக்கு துணிந்தவரா? என்றால் இல்லை என்பதை அவரது வார்த்தையே அவரது உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டி  விட்டது.
 
 கடந்த ஜூன் 5ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து, அவர்களை விரட்டியடித்தனர். அப்போது, போலீசார் நடவடிக்கை எடுத்த நேரத்தில், ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ், கோழைத்தனமாக பெண் வேடத்தில் ஓடிவிட்டார்.
 
ராம்தேவ் சீடர்களில் ஒருவரான ராஜ்பாலா என்ற பெண், போலீசார் தடியடியில் காயமடைந்து, டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இறந்தார். இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ராம்தேவ், ""ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, நான் தப்பி ஓடியது சரியே. அப்படி ஓடியிருக்காவிட்டால், ராஜ்பாலா போல என்னையும் போலீசார் கொன்றிருப்பர். அன்று ஓடியிருக்காவிட்டால், இன்று உங்கள் முன் நின்றிருக்க முடியாது,'' என்று கூறியுள்ளார்.
 
சாகும்வரை உண்ணாவிரதம் என்றவர், உயிரை துச்சமென மதித்தது உண்மையானால் என் உயிர் போனாலும் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்று  கூறியிருந்தால் கொஞ்சமேனும் இவரை தைரியசாலி என கருதலாம். ஆனால் போலீஸின் கையில் லத்தியை பார்த்தவுடன் பெண் வேடத்தில் ஓடியதோடு மட்டுமல்ல, அவ்வாறு நான் ஒடியிருக்காவிட்டால் என்னையும் போலீசார் கொன்றிருப்பார்கள் என்று கூறி தனது கோழைத்தனத்தை  மறைத்து அனுதாபம் தேடப்பார்க்கிறார். இந்த யோகா ராம்தேவ் யோகாவில் மட்டுமல்ல. வாயிலும் பல வித்தைகளை கற்றுள்ள வாய்ச்சொல் வீரர் என்பது தெளிவாக  தெரிகிறது. ஆனாலும் காவிக்கு மயங்கும் மக்களுக்கு விளங்கவா போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக