
வியாழன், 31 மே, 2012
புகை நமக்கு பகை!
ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும்.
ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.
அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.
* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]
மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]
நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா? சிந்திக்க வேண்டும்.
புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)
சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தின் கவனத்திற்கு;
ஒரு மக்கள் நலன் நாடும் அரசின் நோக்கம் அரசு கஜானாவை நிரப்புவதில் மாத்திரம் இருக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புகை- போதை ஆகியவற்றின் மூலம் மக்களை நாசமாக்கி, அவர்களின் பொருளாதரத்தை திருடும் அரசு, அந்தப்பணத்தில் இலவசங்களை அளிப்பதினால் எந்த புண்ணியமும் இல்லை. எனவே உணமியில் அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையிருக்குமானால், 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வது , பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[3]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சமூகத்தை சீரழிக்கும் குற்றவாளிகள் முதல், மத்திய நடுவன் அரசு தொடங்கி, மாநில அரசு வரை நடுங்குவது நீதிமன்றங்களைப் பார்த்துத் தான் என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் சில தீர்ப்புகள் அறிவுப்பூர்வமாகவும், சில தீர்ப்புகள் கேலிக்குரியதாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளில் நமது பார்வையை செலுத்துவோம்.
இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் போலீசார் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: ரம்மி சீட்டாட்டம், மனிதனின் திறமையை பரிசோதிக்கும் ஒரு விளையாட்டாகத்தான் உள்ளது. திறமைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் ரம்மி விளையாடும்போது அதில் போலீசார் தலையிடக் கூடாது. அதற்கு போலீசாருக்கு உரிமை இல்லை. ஆனால் திறமையை சோதிக்கும் அதே ரம்மி ஆட்டத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பணம் வைத்து விளையாடும்போது, அதை ஒரு சூதாட்டத்துக்கான ஆட்டமாகவே கருத வேண்டும். அதுபோன்ற நிலையில் சூதாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ளவும், பணம் வைத்து ரம்மி ஆடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த ரம்மி விசயத்தில் நீதிபதிகளுக்கே முரண்பட்ட பார்வை இருப்பதையும், உச்சநீதி மன்றம் ஒருவகையான தீர்ப்பும் உயர்நீதிமன்றம் ஒருவகையான தீர்ப்பும் வழங்கியுள்ளதைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் பணம் வைத்து விளையாண்டால் தான் தவறு என்று சொல்லி ஆதரவு அளிக்கும் அளவுக்கு ரம்மி மனிதனுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய ஒன்றா? ரம்மியாக இருந்தால் என்ன? வேறு வகை சூதாட்டமாக இருந்தால் என்ன? மொத்தத்தில் சூதாட்டம் என்பதே மனிதகுலத்திற்கு கேடுதானே! சூதாட்டங்களால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை? சூதாட்டத்தால் ஏற்பட்ட சண்டைகள் எத்தனையோ? இதெல்லாம் நீதிமான்கள் அறியாத ஒன்றா? நீதிமான்கள் செய்யவேண்டியது என்ன? ஒரே தீர்வு சூதாட்டத்திற்கு தடைவிதிப்பதுதான்.
இதோ சூதாட்டம் பற்றி திருமறை குர்ஆன் வழிகாட்டுகிறது;
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே
பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத்
தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? [அல்-குர்ஆன் 5 ;91 ]
ரம்மி ஆட்டத்தில் நீதிபதிகள் ஆட்டத்தை [தடுமாற்றத்தை] பார்த்த நாம், அடுத்து பார்க்க விருப்பது பரபரப்பான ஓரினச் சேர்க்கை சம்மந்தமானதாகும். ஆதிமனிதனை படைத்த கடவுள் அந்த மனிதன் மகிழ்வுற இன்னொரு ஆன் மகனை படைக்கவில்லை. மாறாக அங்கே ஒரு பெண்ணைப் படைத்து அந்த பெண்ணை ஆதிமனிதனுக்கு ஜோடியாக்கி, அவர்களை இன்புற்று வாழச் செய்து அவ்விருவர் மூலமாக மனித சமுதயத்தை பல்கிப் பெருகச் செய்தான். ஒரு ஆனும் பெண்ணும் இணைவதுதான் இயற்கை. ஆனும் பெண்ணும் இணையும் வகையில் தான் அவர்களின் உடலமைப்பும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் இவைகள் கூட ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டு, அவைகள் கூட எதிர்பாலினத்தில் தான் இன்புற்று மகிழ்கின்றன. ஒரு ஆன் சிங்கம் இன்னொரு ஆன் சிங்கத்தை உறவுக்கு பயன்படுத்தியதாக காண முடியாது. காரணம் அவைகள் இயற்கையை மீறவில்லை. ஆனால் மனிதன் எங்கும் எதிலும் புதுமையாக செய்வேன் என்று கிளம்பி இன்று நாகரீகம் என்ற பெயரில் ஒருபால் உறவு எனும் ஓரினச்சேர்க்கையில் வந்து நிற்கிறான். இந்த ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது மட்டுமன்றி, மனிதனை அழித்தொழிக்கும் கொடிய எயிட்ஸ் நோய் போன்றவற்றை பரப்பும் காரணியாக உள்ளது.
ஒரு சாமான்ய மனிதன் தவறு செய்தால் அவனை அந்த தவறிலிருந்து தடுத்து நிறுத்தும் கடிவாளம் போடவேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த ஓரினச் சேர்க்கை விசயத்தில் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓரினச் சேர்க்கை குற்றம்தான்' என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் '(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது' என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாதங்கள் வயப்பட்டு நீதிபதிகளின் கண்டனத்திற்கு இலக்கான மத்திய அரசு, இறுதியில் ஒரு வழியாக,
ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன?
இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.
ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது.
தீர்ப்புகள் வரும்....
ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன?
இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.
ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது.
தீர்ப்புகள் வரும்....
சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்கப்படும்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.
''மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள்; இந்த பழமொழியில் நமக்கு உடன்பாடில்லை. ஆயினும் பெற்றெடுத்த பெற்றோருடன், படைத்த இறைவனுடன் வைத்து மதிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் உயர்வான இடத்தில் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறோம். இதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு குழந்தை பால்குடி மறக்கிறதோ இல்லையோ, அடுத்து அந்த குழந்தைகளை பெற்றோர் நம்பி ஒப்படைப்பது ஆசிரியர்களிடம் தான். ஒரு குழந்தை பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுடன் கழிக்கும் நேரம் தான் அதிகம். குழந்தையை வார்த்தெடுக்கும் சிற்பியாக பெற்றோர்கள் கருதுவது ஆசிரியர்களைத்தான். இந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்கள், தங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள், தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளை அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை நாசம் செய்யும் வேலையை நாள் தவறாமல் செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம்.
தம்மிடம் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் வரம்பு மீறுவது, பணிய மறுத்தால் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுவது, ஒருமுறை வலையில் வீழ்த்தி விட்டால் அதை சொல்லி மிரட்டியே தொடர் கற்பழிப்பில் ஈடுபடுவது, டியூசன் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தனது வீட்டிற்கு மாணவிகளை வரவழைத்து, தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, மாணவியர் தங்கும் விடுதிகளிள் ரகசிய கேமராக்கள் மூலம் மாணவிகளின் குளியலறை வரை கண்களை நுழைப்பது. இவ்வாறு ஆசிரியர்கள் என்ற பெயரில் சிலர் காமகொடுரர்களாகவே வலம் வந்தாலும், பெரும்பாலான பிள்ளைகள் இவர்களின் இந்த இழிசெயலை வெளியே சொல்வதில்லை. துணிந்து சில பிள்ளைகள் சொல்வது மட்டுமே வெளியுலகிற்கு வருகின்றது.
இவ்வாறான இழிசெயலை செய்யும் ஆசிரியர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான தண்டனை கிடைப்பதில்லை. துறைரீதியான சில கண்துடைப்பு விசாரணைகள்; நடவடிக்கைகள் என்ற அளவில் தான் உள்ளன. இது தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு தெம்பை தருவதாக இருப்பதாக மக்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அரசு அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டு பெற்றோர் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.
தமிழக அரசு 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும். இவ்வாறு, சபிதா கூறியுள்ளார்.
இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் தனியார் கல்வியகத்தின் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கருதப்படுகிறது. சமூக சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான இந்த தண்டனை என்பது ஏட்டளவில் இருந்துவிடாமல், செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதோடு, அத்தகையோருக்கு பள்ளியில் அனைத்து மாணவ-மாணவியர் முன்னிலையில் கசையடி வழங்கினால்தான் அவர்களும் திருந்துவார்கள்; இந்த தண்டனையைப் பார்க்கும் ஏனைய இதுபோன்ற எண்ணமுள்ள ஆசிரியர்களுக்கும் புத்தி வரும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். ஆசிரியர் என்ற பெயரில் இழிசெயலை செய்வதை தடுக்க ஆர்வப்படும் அரசு, அத்தகைய தவறுக்கு வழிகோலும் காரணிகளை களைய முற்படவேண்டும். ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக பயிலும் வகையில் பள்ளிகள் கட்டப்பட்ட வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியரையும், பெண்களுக்கு பெண் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் முட்டுக்கால் அளவுக்கு ஸ்கர்ட்டும், இறுக்கமான சிறிய அளவிலான சட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் மாற்றப்பட்டு அவர்களின் முழு உடலமைப்பும் மறையும் வகையிலான சீருடை வழங்கப்பட வேண்டும். மாணவியை வகுப்பறையில் சக மாணவியர் சகிதமாக இருக்கும் நிலையிலன்றி, வேறு எங்கும் ஆசிரியர் தனிமையில் சந்திப்பது தடுக்கப்பட வேண்டும். மாணவியை விசாரிப்பதாகவே இருந்தாலும் தனிமையில் ஆசிரியர் விசாரணை நடத்தக் கூடாது. இவ்வாறான இன்னும் சில கட்டுப்பாடுகளை அரசு அமுல்படுத்தினால் குற்றங்கள் குறையவும், பெற்றோர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவும் வாய்ப்பு உண்டாகும். அரசு கவனிக்குமா?
செவ்வாய், 29 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மத்திய அரசு வழங்கிய சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) ஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணய்யா தொடர்ந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகளான மதன் பி லோகுர், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச் இவ்வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பு:
மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக மத்திய அரசு கையாளுகிறது.
மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பிக்கவில்லை.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜொராஸ்டிரர்கள் ஆகியோர் ஒரேதன்மை கொண்ட இனக் குழுக்களாக இயங்கவில்லை. அவர்கள் பலவகையான குழுக்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் கூறினர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே நடைபெற்றிருக்கும் மாணவர் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிருஷ்ணய்யா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி கூறினார்.
இதற்கிடையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வெள்ளி, 25 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
வியாழன், 17 மே, 2012
பதவி என்றால், இவர்களுக்கு இஸ்லாம் இரண்டாம் பட்சம் தானோ?
புதன், 16 மே, 2012
செவ்வாய், 15 மே, 2012
வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை.
திங்கள், 14 மே, 2012
நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[2]
நரேந்திரமோடி ஆட்சியில் குஜராத் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்; பா.ஜனதா முன்னாள் முதல்மந்திரி குற்றச்சாட்டு.
சனி, 12 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

வெள்ளி, 11 மே, 2012
அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யும் செய்யும் அகிலேஷின் முடிவும்; ஆர்.எஸ்.எஸ்'ஸின் புலம்பல்களும்!
முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம்; சொல்கிறார் ராமகோபாலன்.

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[1]
விளைநிலத்தின் வரப்புச் சண்டைக்காக கோர்ட்டு படியேறிய பங்காளிகள் இருவர், வயலையே விற்று கோர்ட்டுக்கு செலவு செய்த பின்னும் கூட தீர்ப்பு வந்தால் ஆச்சர்யமே என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு பின் வரும் சம்பவத்தை பார்ப்போம்.
கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, அந்த வழியாகச் சென்ற, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். கடற்கொள்ளையர்கள் என, தவறாக நினைத்து, மீனவர்களை சுட்டு விட்டனர். இந்த சம்பவத்தில், படகிலிருந்த 11 மீனவர்களில், தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஜலஸ்டின், 45, மற்றும் அஜீஷ் பிங்கி, 25 ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் லத்தோர் மற்றும் ஜரோன் ஆகியோர் பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க, இத்தாலி வெளியுறவு இணை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர், இந்திய நிர்வாகத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. மேலும், இவ்வழக்கு இந்திய தண்டனை சட்டப்படி, கேரளாவில் நடைபெறும் என்றும், தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் கேரளா மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை சந்திக்க, அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள், பலியான மீனவர்கள் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இத்தாலிய பாதுகாவலர்களின் குடும்பத்தினர், இத்தாலிய நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் பலியான தமிழக மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் குடும்பத்தினரும், பலியான மீனவர்கள் குடும்பத்தினரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதையடுத்து, இத்தாலிய பாதுகாவலர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என, ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்த, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர், "இத்தாலியர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கையும் நடத்தப் போவதில்லை என்றும், அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டோம்' என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இத்தாலிய பாதுகாவலர்களுக்கு எதிரான, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி, இத்தாலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, மீனவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற, கேரள ஐகோர்ட் அனுமதி அளித்தது. தங்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர, இத்தாலிய நிர்வாகத்தினர் சம்மதித்து விட்டதால், தாங்கள் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என, மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கோபிநாதன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இத்தாலியர்கள் இருவரும் விரைவில் விடுதலையாகலாம் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இவ்வழக்கில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் பெற அனுமதித்த கேரள நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
இந்தப்பிரச்சினையில் கேரளா உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதா என்பதை பார்ப்பதை விட, நியாயப்படி சரியானதா என்று பார்த்தால் சரிதான். ஏனென்றால் சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், கொலையாளிகளிடம் இழப்பீடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறிய நிலையில், அந்த வழக்கை நடத்தியே தீருவோம் என்று கேரளா நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? யாருடைய புகாரின் பேரில், யாருடைய நலனுக்காக இந்த வழக்கு பதியப்பட்டதோ, அவர்களே நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை மன்னித்து விட்ட பின்னால், நீதிமன்றங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? கேரளா நீதிமன்றத்தின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப உள்ளது. இறைவன் கூறுகின்றான்;
ஈமான் கொண்டோரே! கொ லைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். இருப்பினும் [கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
[2 ;178 ]
இந்த இறை வசனத்தில் கொலைக்கு கொலைதான் தீர்வு என்று சட்டம் சொல்லும் இறைவன், கொலை செய்தவனை, கொலையுண்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால், அந்த வாரிசுகளுக்கு உரிய இழப்பீட்டை கொலை செய்தவன் நியாயமான முறையில் வழங்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். ஒரு கொலையாளியை தண்டிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கொலையுண்டவரின் குடும்பத்திற்கே இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் இத்தாலி கொலையாளிகளை கொலையுண்டவரின் குடும்பமே மன்னித்து விட்டதால் அதை கேரளா உயர்நீதிமன்றமும் அங்கீகரித்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு கொலைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணக் கூடாது என்பது ஒரு அறிவுப்பூர்வமான வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கில் கொலையுண்டவரின் வார்சுகள் நீதிமன்றத்தை அணுகியே இதற்கு தீர்வு கண்டுள்ளனர். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. மேலும், ஒரு பொருளுக்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு விபத்திற்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு உயிர் விசயத்தில் இழப்பீடு வாங்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுவது புதிராக உள்ளது. மேலும், இந்த விசயத்தில் தம்மைப் போலவே சட்டம் படித்த கேரளா நீதிபதிகளை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் விசயத்தில் என்ன செய்திருக்கிறது?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து கொள்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளது.
இந்த மூவர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு ஏற்கனவே தமிழகத்தின் கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து, அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி, பின்பு உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கு நாள் குறித்த பின்னால், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு; அதான் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், ஒரே வழக்கில் எத்தனை முறை சுழற்ச்சி விசாரணை; எத்தனை முறை தீர்ப்பு? ஒரு பிரதமர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாத நிலை உள்ள நாட்டில், கொலைக்கு நஷ்டஈடு பெற்றுக்கொண்டு விரைவான தீர்வு காண மக்கள் முயற்ச்சிப்பதில் என்ன குறை காண முடியும்?
ராஜிவ்காந்தி கொலையாளிகள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டதால் அவர்களுக்கு இதுவே ஒரு தண்டனை; இனியொரு தண்டனை விதிக்க முடியாது என்று சொன்னால், இந்த தாமதத்திற்கு யார் காரணம்? ஜனாதிபதியல்லவா? கொலையுண்டவர்களுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனம் அல்லவா? இப்படி ஜவ்வாக ஒரு வழக்கு இழுபடுவதைத் தான் உச்சநீதிமன்றம் விரும்புகிறதா? அல்லது இஸ்லாம் சொல்லும் வழிமுறையை பின்பற்றி கொலையுண்டவன் குடும்பத்தாரிடம் கருத்துக் கேட்டால் ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடுமே! மேலும், இருபது ஆண்டுகள் கண்ணித்தீவாக நீளும் இந்த கொலைவழக்கில் வெறுமனே ராஜீவ் மட்டும் தான் கொல்லப்பட்டாரா? ராஜீவோடு சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டார்களே! அவர் தம் குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்று என்றாவது நீதிமன்றங்கள் கவலைப்பட்டதுண்டா? ஆண்டுக்கணக்கில் நீளும் இந்த வழக்கால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நயாப்பைசா பிரயோஜனம் உண்டா? இல்லை. அதே நேரத்தில் இந்த கைதிகளை பாதுகாக்க, இவர்களின் வழக்கை நடத்த என்று பலகோடிகள் மக்களின் வரிப்பணம் பாழானது தான் மிச்சம். இதையெலாம் உணர்ந்துதானோ என்னவோ, அந்த இரு மீனவ குடும்பத்தினர் உடனடி நிவாரணத்திற்கு வழிகண்டு விட்டனரோ!
எனவே, கொலையுண்டவனுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கும் சட்டம், கொலையுண்டவனின் குடும்பம் மன்னித்தால் அதை எதிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை தானே! எனவே குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்கினால் வழக்குகள் தேங்குமா? வரிப்பணங்கள் பாழாகுமா? சிந்திப்போம்- சீர்திருத்தம் செய்வோம். சட்டங்கள் நீதியை நிலைநாட்டவே என்பதை உணர்வோம்.
தீர்ப்புகள் வரும்....