வியாழன், 3 பிப்ரவரி, 2011

[இதஜவின் சமூகத்தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] ஆபாசம் அது ஆபத்து!!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, 
 04 -02 -2011 வெள்ளியன்று நமது மண்டலம் சார்பாக விநியோகம் செய்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு;

 
 
ஆபாசம் இன்றைக்கு அவசியப் பொருளோ என அஞ்சும் அளவுக்கு மனிதனின் வாழ்வில் இரண்டற கலந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் முழம் கணக்கில் கட்டப்பட்ட சேலை, பின்னர் மீட்டர்களாகி, மிடிகளாகி, இப்போது இரு கச்சைகளில் நிற்கிறது. ஒரு பெண் சற்றே அரைகுறை ஆடையணிந்து தெருவில் வந்தால், ஆபாசம் என அலறுபவர்கள் கூட, இரு கச்சைகளுடன் ஒரு பெண் திரையில் வந்தால் 'கலை' என்கிறார்கள். ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டால், அவளை 'பரத்தை' என்பவர்கள் கூட, பரந்த திரையில் 'படுக்கையறை' காட்சிவரை நடிப்பவரை பாராட்டி பதக்கம் அளிக்கின்றனர். ஆக ஆபாசம் பெயர் மாற்றப்பட்டு சேட்டிலைட் வழியாக நமது வரவேற்பறையில் வந்து அமர்ந்துவிட்டது.  இத்தகைய ஆபாசத்தின் நுழைவாயில் தவறான பார்வையாகும். முடிவு விபச்சாரமும்- பரிசு எயிட்ஸ் ஆகவும் உள்ளது.
 
இந்த எயிட்ஸை ஒழிக்க, பலகோடி மில்லியன் ரூபாய்கள் உலக அளவில் செலவிடப்பட்டும், அரசும்,தன்னார்வ அமைப்புகளும் பெருமுயற்சி செய்தும் இந்த எயிட்ஸால்  பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டேதான் உள்ளது.கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 650 க்கும்  மேற்பட்டோர் எயிட்ஸ் நோயில் பலியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு பேர் எனில், ஒட்டுமொத்த தமிழகத்தில், ஒட்டுமொத்த இந்தியாவில், ஒட்டுமொத்த உலகில் எயிட்ஸ் நோயால் மரணிப்பவர் பற்றிய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என நமக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.  பொதுவாக,ஒருவிசயத்தை நாம் தடுக்கவேண்டுமெனில், அதன் ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அல்லாமல் மேல் கிளைகளை வெட்டுவதால் எவ்வித பயனும் இல்லை. அதுபோல்தான் இந்த எய்ட்ஸ் ஒழிக்கப்படவேண்டுமென்றால்,அதற்கு  விழிப்புணர்வு பிரச்சாரங்களோடு, எய்ட்ஸ்க்கு நுழைவாயிலாக உள்ள கீழ்கண்ட விசயங்கள் தடுக்கப்படவேண்டும்.  எய்ட்ஸ் நிரந்தரமாக உலகிலிருந்து துடைத்து எறியப்பட்ட வேண்டுமென்றால்,

  • சின்னத்திரையிலும்,வண்ணத்திரையிலும் வரும் ஆபாச காட்சிகள் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும்.
  • ஆபாச உடைஅணிந்து நடிக்கும் நடிகைகள் மீதும் அவ்வாறு நடிக்கவைத்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மீதும் விபச்சார தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடரவேண்டும்.
  • ஆபாசகாட்சிகளை[கவனித்தவுடன்] கத்தரி போட மறக்கும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு கத்தரி போடவேண்டும்.[அதாவது பணி நீக்கம் செய்யவேண்டும்]
  • ஆபாச பாடல் எழுதும் பாடலாசிரியர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும்.
  • மஞ்சள் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு,தியேட்டர் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • ஆபாச படங்கள், செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டவேண்டும்.
  • இந்தியாவில் அனுமதி பெற்றும் பெறாமலும் நடத்தப்படும் அனைத்து விபச்சார விடுதிகளும் மூடப்பட்ட வேண்டும். விபச்சாரம் செய்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • விபச்சார தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும் காவல்துறை 'கருப்பு ஆடுகள் 'மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விபச்சாரிகளை கைதுசெய்தவுடன் அந்தசெய்தியை,'அழகிகள் கைது' என்று போடாமல் விபச்சாரிகள் கைது என்று போடவேண்டும்.
  • கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டேட்டிங், லவ்வர்ஸ்டே,வீக்எண்டு கொண்டாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்.
  • பீச்,பார்க் உள்ளிட்ட போது இடங்களில் சில்மிசங்களில் ஈடுபடும் காதலர்கள்[?] மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விடுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி அறை ஒதுக்குவதை தடுக்கவேண்டும்.
  • பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் வகையில் பள்ளி,கல்லூரி ஆண்டு விழாக்களில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது நிறுத்தப்படவேண்டும்.
  • நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
  • திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி என்றபெயரில் நடத்தப்படும் ஆபாச கச்சேரிகள் நிறுத்தப்படவேண்டும்.
  • மொபைல் போனில்,கிசுகிசு வேண்டுமா?ஹாட் ஜோக் வேண்டுமா? என்று கேட்கும் மொபைல் நிறுவனங்களிடம் எச்சரிக்கவேண்டும்.மொபைல், இன்டர்நெட் முலம் ஆபாசத்தை பரப்பும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேற்குறிப்பிட்ட விசயங்களை தடுக்காமல் இன்னும் எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போன்று ஆகுமே தவிர, எயிட்ஸை ஒழிக்கமுடியாது.
எனவே இந்த ஆபாசத்தை நுனிமுதல் அடிவரை கிள்ளி எறிகிறது மார்க்கம்;
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.[24 ;30 ,31]
 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[17 ;32 ]
 
எனவே ஆபாசத்தையும், அதன் பரிசான எயிட்சையும்  அடியோடு ஒழிப்போம்.
 
சமுதாய நலன் நாடி வெளியிடுவோர்;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக