சனி, 19 பிப்ரவரி, 2011

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி!

بسم الله الرحمن الرحيم
குவைத் மண்டலத்தில் வாரம் தோறும் நடைபெற்றுவரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 18 -02 -2011 வெள்ளி மாலை ஏழு மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஏ.கே.ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், 'மவ்லிது மார்க்கமாகுமா?  என்ற தலைப்பில் பேசினார்.

அவர் தனது உரையில், நபிகளாரை நம் உயிருக்கும் மேலாக  மதிக்கவேண்டும். அப்போதுதான் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமுடியும் என்று கூறிவிட்டு, நபிகளாரை மதிப்பது- நேசிப்பது என்பது யாரோ எழுதிவைத்த குர்'ஆன்- ஹதீசுக்கு முரணான  கவிதையை பாடுவதல்ல. மாறாக, நமது ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய பிரகாரம் அமைத்துக் கொள்வதுதான் என்று விளக்கினார். மேலும் சுப்ஹான மவ்லிது உள்ளிட்டவைகளில் உள்ள மார்க்க முரணான விஷயங்களையும் பட்டியலிட்டு பேசியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக