சனி, 26 பிப்ரவரி, 2011

குவைத் மண்டலத்தில் நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி!

குவைத் மண்டலத்தில் வாரம் தோறும் நடைபெற்றுவரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 25 -02 -2011 வெள்ளி மாலை ஏழு மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஏ.கே.ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், சுவனம் நபிவழியில் மட்டுமே என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையில், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்' என்ற நபிமொழியை மைய்யமாக வைத்து, நபிவழியில் தொழுவதை விடுத்து, இமாம்கள் காட்டிய வழியில் தான் தொழுவோம் என்று அடம்பிடிப்பவர்களை நாளை மறுமையில் இமாம்கள் கரையேற்றுவார்களா?  மாறாக, தொழுகை உள்ளிட்ட நமது ஒவ்வொரு அமலையும் நபிவழியில் அமைத்துக்  கொண்டால்தான் சுவனம் பெறமுடியும் என்று விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக