திங்கள், 9 ஏப்ரல், 2012

குஜராத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 23 பேர் குற்றவாளிகள்.

ஆமதாபாத், ஏப்.9: 
குஜராத்தின் ஓடே கிராமத்தில் 2002-ம் ஆண்டு 23 பேரை எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 46 பேரில், 23 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த தனி நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 23 பேரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. 
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

கோத்ரா கலவரத்துக்கு பின்பு நடைபெற்ற 9 படுகொலை சம்பவ வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அதில் இந்த படுகொலை வழக்கும் ஒன்றாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக