சனி, 28 ஏப்ரல், 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இலங்கையில் தம்புள்ளா பகுதில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா, புத்தமத பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், அந்த மஸ்ஜிதை இடம் மாற்றத் துடிக்கும் ராஜபக்சே அரசைக் கண்டித்தும் நேற்று [28 -4 -12 ] சனிக்கிழமை மாலை 4 .30 மணியளவில், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரக  முற்றுகைப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இப்போராட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், செங்கிஸ்கான், ஆபூபக்கர் தொண்டியப்பா, அபூ பைசல், இக்பால் ஆகியோர் தலைமை தாங்கினார். 

ஆக்ரோசமாக கிளம்பிய அடலேறுகளின் ஆர்ப்பரிப்புக்குப் பின் காவல்துறை கைது செய்து ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் அடைத்தது. பின்னர் மாலை ஆறு மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக